Jump to content

1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்

sumo-1.jpg

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழரசுக்கட்சி ஊடாகக் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளள், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஒருவரே கையில் எடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் சுமந்திரன் மீதும் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறித்த விடையம் தொடர்பில் தன்மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாகவும் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அவர்களுக்கு எதிராக 1000கோடி ரூபா நஷ்ட்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

https://www.vanakkamlondon.com/sumanthiran-11-07-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கோடிக்கு எத்தனை பூச்சியம் என்று எண்ணி முடிப்பதற்குள் விமலேஸ்வரி காந்தரூபன் போய்ச்சேர்ந்துவிடுவா. பிறகென்னெண்டு வழக்கு நடாத்துவது 😂😂

விமலேஸ்வரி போட்டதும் ஒரு டமார வெடி சுமந்திரன் விட்டதும் பண்டார வெடி. சத்தம் மட்டும்தான் வரும். 😀

தேர்தல் முடியும்வரை நாங்கள் சிரிப்போம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்

sumo-1.jpg

சிங்கன் காசு விசயத்திலையே கண்ணாயிருக்கிறான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிங்கியும் தான்.

பங்கு பிரிப்பில் பிரச்சனை போலும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

ஆயிரம் கோடிக்கு எத்தனை பூச்சியம் என்று எண்ணி முடிப்பதற்குள் விமலேஸ்வரி காந்தரூபன் போய்ச்சேர்ந்துவிடுவா. பிறகென்னெண்டு வழக்கு நடாத்துவது 😂😂

விமலேஸ்வரி போட்டதும் ஒரு டமார வெடி சுமந்திரன் விட்டதும் பண்டார வெடி. சத்தம் மட்டும்தான் வரும். 😀

தேர்தல் முடியும்வரை நாங்கள் சிரிப்போம். 😜

ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?

ஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம்.

இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது  ""தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்"" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ ? 

அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். 

தேர்தல் முடிந்த பின்னர் விமலேஸ்வரி காந்தரூபன் இந்த விடயத்தை பெரிதாக்கி உண்மையைக் கண்டறிவாரோ ? இல்லையென்றால் அவர் கொழுத்தியது வெடிதானே 😀

இலங்கை மத்திய வங்கியிடமே ஆயிரம் கோடி பணமில்லை. அப்படியிருக்க சுமந்திரன் அவரிடம் ஆயிரம் கோடி கேட்டால் அவர் பணத்திற்கு எங்கே போவார் 😂 

இப்போது கூறுங்கள் யாருடைய வெடி பெரியது  😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

ஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம்.

இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது  ""தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்"" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ ? 

ஏன்  யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ?

முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது  உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல  கோபிக்க கூடாது .

47 minutes ago, Kapithan said:

அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். 

நீங்கள்  யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

1) ஏன்  யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ?

2) முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது  உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல  கோபிக்க கூடாது .

3) நீங்கள்  யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு  நன்றி 

1) இதில் எங்கே ஐயா அரசியல் இருக்கிறது 😂😂

2) 🤥......😧......🙄......😴

3) ""நூல்""என்பதற்குள் இத்தனை விடயங்களா 😳😳😳

ஆழ்ந்த நித்திரையை அனுபவியுங்கள் (Good night (இதற்கும் வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாதல்லவா 😀) )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.