Jump to content

லக்‌ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லக்‌ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை

July 12, 2020

suresh-.png

 

சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார்” எனத் தெரிவித்திருக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று உரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில் மாலை 7 மணிக்கு இடம்பெற்றது.

 

meet-12.jpg

 

இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் வேட்பாளர்களான முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின், க.சிவாஜிலிங்கம், ந.சிறீகாந்தா, த.சிற்பரன், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

அங்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டதன் காரணத்தால் தான் இந்த புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாகக் காரணம். தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்ட முடியவில்லை. தந்தை செல்வா காலத்தில் அறவழிப் போராட்டம் 30 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது. எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னரே தனி நாட்டு தவிர மாற்றுவழி இல்லை என வட்டுக்கோட்டை தீர்மானம் உருவாகிய போது தந்தை செல்வா கூறியிருந்தார்.

 

meet-13.png

 

அதனைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் 35 வருடங்களாக நடைபெற்றது. ஆனால், அதுவும் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் தமிழ் மக்களுக்கான தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச ரீதியாக ஆதரவுகள் உள்ளன ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால், தமிழ் இனப்பிரச்சினைக்கான எந்த முடிவையும் எட்டவில்லை.

 

இப்போது சுமந்திரன் கடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்க இருக்கின்றோம். நல்ல அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு அதற்காக பேரம் பேசுவதற்கு எங்களுக்கு ஒரு வலுவான பாராளுமன்றகுழு தேவை என்று கூறியிருந்தார். அரசாங்கத்துடன் தாங்கள் பேசி தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறியவர்கள் இன்று பேரம் பேசி அமைச்சுப்பதவிகளை பெறுவதற்கு ஆசைப்படுகின்றார்கள்.

சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார்.

அது மட்டுமல்லாமல், தழிழரசுக் கட்சியினுடைய மாதர் பேரவையினுடைய தலைவி ஒரு பாரிய குற்றச்சாட்டை தன்னுடைய கட்சி மீது சுமத்தியிருந்தார். கனடாவில் இருந்து 21 கோடி ரூபா அனுப்பப்பட்டதாகவும், அந்தப் பணம் கணவனை இழந்த பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத பெண்களுக்கான பணம் என்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது வங்கியிலும் பணம் இல்லை. எந்த ஆவணங்களும் கிடையாது. திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் குகதாசன் கனடாவில் இருந்து வந்து போட்டியிடுகின்றார். அவர் தனது கணனியில் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருக்கின்றார். சுமந்திரன் தான் அந்த பணத்தை கொண்டு வந்ததார் எங்கே போனது அந்தப் பணம் என்று கேட்டதற்கு மாவைசேனாதிராஜாவும் கட்சியின் செயலாளரும் இணைந்து அந்தப் பெண்ணிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்த விசாரணையும் இன்றி கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

ஒன்றரை வருடமாக கஜேந்திரகுமாருடன் பேசியிருந்தோம் எமது கூட்டணியில் இணையும்படி ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. கூட்டாக இணைந்தால் தான் எதனையும் பெற முடியும். தேர்தலின் பின்னர் இன்னும் எமது கூட்டணி விரிவுபடுத்தப்படும். தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய பாரிய கூட்டணியாக இது மாற்றுவதற்கான முயற்சிகளை செய்வோம்” என்று கூறினார்.

 

http://thinakkural.lk/article/54061

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுதான் சிங்களத்திற்கு வலை சுருட்டி எலும்பு துண்டுகளுக்கு அலைகின்றார். போரட்டத்தையே கொஞ்சைப்படுத்துமளவுக்கு எலும்புகள் வீசப்பட்டிருக்கு🤔

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

லக்‌ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை

சுரேஷ் தனது ஆசைகளை கூறாது வெறுமனே சுமந்திரன் பற்றி கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.