Jump to content

விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை

bussi.jpg?189db0&189db0

 

விவசாயப் பயிர்கள் ஏற்றுமதியின்போது பூரணப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கண்டி – ஹசலக பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மிளகை மீள் ஏற்றுமதி செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மிளகு விதைகள், மிளகுத் தூள் அல்லது வேறு பூரணப்படுத்தப்பட்ட விவசாய பொருட்களாக மாற்றி அதனை ஏற்றுமதி செய்யமுடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெறுமதி சேர் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அதிக அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

https://newuthayan.com/விவசாய-ஏற்றுமதிகளுக்கு-ம/

 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு எப்போது?

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு எப்போது?

கோத்தாவின் ஆலோசனை வெற்றிகரமாக நிறைவேறி அரசு பெரும் இலாபம் ஈட்டும்போது 1000 என்ன 10000 கேட்டாலும் கொடுப்பதற்கு அவர் அனுமதி வழங்குவார். எங்கள் சம் போல் அடுத்த பெளர்னமி, வெசாக் என்று அவர் கூறவில்லையே..! 😌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.