Jump to content

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Istanbul-museum-reverts-to-mosque-720x450.jpg

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதியாக மாறியது.

பின்னர், 1934இல் துருக்கிய குடியரசின் ஸ்தாபக தந்தை அடதுர்க்கின் கீழ் ஒரு அருங்காட்சியகமாக மாறியது.

ஆனால், இந்த வார தொடக்கத்தில் துருக்கிய நீதிமன்றம் ஹாகியா சோபியாவின் அருங்காட்சியக நிலையை இரத்துச் செய்தது. அதனை மசூதியாகத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என அறிவித்தது.

இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/இஸ்தான்புல்லின்-ஹாகியா-ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாப்பரசர்கள் தொல்லை தாங்க ஏலாமல் கிடக்குது.

துருக்கியர் (முகம்மதியர்) கையிலிருக்கும், புனிததலம் ஜெரூசலத்தினை பிடியுங்கள் ஜரோப்பிய கிறிஸ்தவர்களே என்றார்... பதினொன்றாம் நூறாண்டில் ஒரு பாப்பரசர்.

பல நூறாண்டுகள் நீடித்த சிலுவை யுத்தம் ஆரம்பித்தது. ஜெரூசலம் யூதர்கள் கையில் சிக்கும் வரை தொடர்ந்தது.

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

38 minutes ago, Nathamuni said:

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

 

சண்டை பிடித்து... ஜெரூசலத்தினை பிடித்த பிறகு இப்ப என்ன வேணுமாம்?

கோணேஸ்வரம்.... கோகர்ண... கதை மாதிரி தானே.

Link to comment
Share on other sites

8 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

 

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

பிரச்சணை ஒண்டும் இல்லை பாருங்கோ...

நானும் இந்த தேவாலய சரித்திரம் வாசித்தனான்.... நடந்தது பிழை தான்.

இதை பத்தி குறை சொல்ல போப்பருக்கு அருகதை இல்லை. காரணம் சிலுவையுத்தம்.

கிறிஸ்தவ இஸ்லாமிய சிலுவையுத்தம் இன்றும் வேறு விதத்தில் தொடர்கிறது.

அதுதான்  எனது பாயிண்ட்....

இதை தவறு என்று பேசவேண்டியது, கிறிஸ்தவ நாடுகளின் ராஜதந்திரம். போப்பர் அல்ல....

98 வீதம் முஸ்லீம் மக்கள் உள்ள நாட்டில், மத வாத அரசியல் தேவையில்லையே. (கிறிஸ்தவர் 0.8%)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரச்சணை ஒண்டும் இல்லை பாருங்கோ...

நானும் இந்த தேவாலய சரித்திரம் வாசித்தனான்.... நடந்தது பிழை தான்.

இதை பத்தி குறை சொல்ல போப்பருக்கு அருகதை இல்லை. காரணம் சிலுவையுத்தம்.

கிறிஸ்தவ இஸ்லாமிய சிலுவையுத்தம் இன்றும் வேறு விதத்தில் தொடர்கிறது.

அதுதான்  எனது பாயிண்ட்....

இதை தவறு என்று பேசவேண்டியது, கிறிஸ்தவ நாடுகளின் ராஜதந்திரம். போப்பர் அல்ல....

98 வீதம் முஸ்லீம் மக்கள் உள்ள நாட்டில், மத வாத அரசியல் தேவையில்லையே. (கிறிஸ்தவர் 0.8%)

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

இதுவும் வரலாறுதானே. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

 

 

மிகவும் உண்மை. 

நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். 

இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும்.

இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

 

மிகவும் உண்மை. 

நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். 

இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும்.

இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.

அரசன் எவ்வழி,  குடிகள் அவ்வழி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

 

உண்மையை தெரிவித்திருக்கிறீர்கள் 👍

எர்டோகன் தன்னை ஒரு முஸ்லிம் மதவாத  ஆட்சியை நிறுவ போகும் தலைவராக  காட்டி மக்களிடம் செல்வாக்கை பெற நினைக்கிறார்.

18 hours ago, தமிழ் சிறி said:

வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை ஆதரித்து அவர்களிடம் அதிகாரம் வந்தால் நல்லுர் கோயிலுக்கும் Hagia Sophia ன் நிலை தான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-5.jpg

துருக்கியிலுள்ள புகழ்பெற்ற ‘ஹாகியா சோபியா’ இஸ்லாமிய வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இன்று திறக்கப்பட்டது.

குறித்த மாளிகை அருங்காட்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் துருக்கிய நீதிமன்றம் அதனை மசூதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸ்தான்புல்லில் மக்கள் திரண்டுள்ளனர்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers.jpg

ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 1934 இல் ஒரு அருங்காட்சியகமாக பதிவிட்டது.

இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை இரத்துச் செய்து, மசூதியைத் தவிர வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடியாது எனவும் அது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், உலகப் புகழ்பெற்ற இந்த ஹாகியா சோபியா மாளிகையை ஜூலை 24ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-3.jpg

இதன்படி, இன்று இந்த மாளிகை தொழுகைக்காக அனுதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் ஆயிரம் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஏனையவர்கள் மாளிகைக்கு வெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த மாளிகையை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஹாகியா சோபியா, கிறிஸ்தவ தேவாலயமாக கட்டப்பட்டது என்பதுடன் இது கட்டப்பட்டு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-6.jpg

https://athavannews.com/துருக்கியிலுள்ள-புகழ்பெ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிக்கபபட்டுவரும் பாலஸ்தீனமும் இநதத் துருக்கியின் அடாவடியை ஆதரித்தே நிற்கிறது.  உலகமே ஆக்கிரமிப்பாளர் கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அங்கு நீதியென்பதை தேடுவதே மடமைத்தனமாகும். அது சீனா முதல் அமெரிக்காவரை விதிவிலக்கல்ல. ஒரு ஆக்கிமிப்பாளனால் இன்னொரு ஆக்கிரமிப்பாளனை நோக்கி வினா எழுப்ப முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.