Jump to content

உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்..

5moneydollar-30-1464610651.jpg

உலகமே இன்று கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன. சொல்லப்போனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அறிக்கை ஒன்று கூறியது.

இப்படி இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிப்பு, விற்பனை முடக்கம், ஏற்றுமதி செய்ய இயலாமை என பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்களின் கடன் அளவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மணிகன்ட்ரோல் செய்தி ஒன்றில், நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய கடன் அளவு 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் அவர்கள் கொரோனா வைரஸினால் முடங்கிப் போன தங்களது வர்த்தகத்தினை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து நிதியினை உயர்த்த முயற்சித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து 900 சிறந்த நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. முன்னோடியில்லாத மொத்த உலகளாவிய கார்ப்பரேட் கடன் 12 சதவீதம் அதிகரித்து 9.3 டிரில்லியன் டாலராக இது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக நடுத்தர நிறுவனங்களில் இந்த விகிதம் உச்சம் தொட்டு வருகின்றது.

இது கடந்த ஆண்டே 8 சதவீதம் கூர்மையான உயர்வைக் கண்டது. இந்த நிலையில் இவைகள் பல நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பங்குகளை திரும்ப வாங்குதல் மற்றும் டிவிடெண்டுக்காக நிறுவனங்கள் முன்பு கடன் வாங்கின. ஆனால் நடப்பு ஆண்டில் இது வேறு விதமாக இருக்கும். பல காரணங்களுக்காக இருக்கும். கொரோனா எல்லாவற்றையும் மாற்றியுள்ளது என Janus Henderson நிறுவனத்தின் போர்ட்போலியோ மேனேஜர் சேத் மேயர் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் கடந்த ஜனவரி மற்றும் மே வரையிலான காலத்தில் பத்திர சந்தைகள் மூலம் 384 மில்லியன் டாலர் திரட்டின. சமீபத்திய வாரங்களில் குறைந்த கடன் மதிப்புடைய நிறுவனங்கள் கூட நிதியினை திரட்டி வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மிகவும் நம்பகமான நிறுவனங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் கடன் சந்தைகள் மூடப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளிடமிருந்து அவசரகால பெரு நிறுவன கடன் வாங்கும் திட்டங்களால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

புதிய கடன் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள், ஏற்கனவே கடந்த 2014ல் இருந்ததை விட கிட்டதட்ட 40 சதவீதம் அதிகம் கடன்பட்டுள்ளன. மேலும் கடன் வளர்ச்சியானது லாபத்தினையும் விஞ்சிக் காணப்படுகிறது.

இந்த லிஸ்டில் அமெரிக்கா கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனில் கிட்டதட்ட 3.9 டிரில்லியன் டாலர் கடன்பட்டுள்ளன. அதோடு சுவிட்சர்லாந்தினை தவிர, மற்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கடன் விரைவான அதிகரிப்பைக் கண்டன.

https://tamil.goodreturns.in/news/coronavirus-impact-worldwide-corporate-debt-may-increase-in-2020-019749.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.