Jump to content

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை

July 13, 2020

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

sasiklala-nataraj-300x200.jpg
 

அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் அந்த வகையிலேயே நான் பரப்பபுரை நிகழ்வுகளில் பங்கேற்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையிலும் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் முயற்சிக்கு தடைகள் விதிக்கப்படுகின்றது .
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருவரை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
 

http://thinakkural.lk/article/54409

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

சசிகலாவை பகடைக் காயாக பயன்படுத்தி ரவிராஜ் அனுதாப வாக்குகளைப் பெற்று அம்பிகாக்களையும் நளினிகளையும் நுழைக்கும் சர்வாதிகார தமிழின விரோதி சுமந்திரனின் திட்டங்களை இப்போதாவது சசிகலா உணர்ந்துள்ளது நல்லது. அத்துடன் சசிகலா முகப் புத்தக **** சயந்தனுடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

23 hours ago, கிருபன் said:

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னுக்கு பின் முரணாகவே கருத்து இருக்குது!
இப்பவே கைதேர்த்ந்த சடையல்காரியா இருக்கா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.