Jump to content

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை

July 13, 2020

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

sasiklala-nataraj-300x200.jpg
 

அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் அந்த வகையிலேயே நான் பரப்பபுரை நிகழ்வுகளில் பங்கேற்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையிலும் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் முயற்சிக்கு தடைகள் விதிக்கப்படுகின்றது .
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருவரை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
 

http://thinakkural.lk/article/54409

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

சசிகலாவை பகடைக் காயாக பயன்படுத்தி ரவிராஜ் அனுதாப வாக்குகளைப் பெற்று அம்பிகாக்களையும் நளினிகளையும் நுழைக்கும் சர்வாதிகார தமிழின விரோதி சுமந்திரனின் திட்டங்களை இப்போதாவது சசிகலா உணர்ந்துள்ளது நல்லது. அத்துடன் சசிகலா முகப் புத்தக **** சயந்தனுடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

23 hours ago, கிருபன் said:

நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னுக்கு பின் முரணாகவே கருத்து இருக்குது!
இப்பவே கைதேர்த்ந்த சடையல்காரியா இருக்கா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.