Jump to content

வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா?

July 13, 2020

10.png
 

2020 தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்த நிலையில் மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

அந்த வரிசையில் வடக்கு அரசியல் மீது அவதானத்தைச் செலுத்தினால் அங்கும் இந்த இரண்டாம் அலை அரசியல் சூழலே நிலவுவதாக உணரமுடிகிறது. கட்சிகளையும் கொள்கைகளையும் அதன் பேசுபொருட்களையும் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். அது குறித்தே இங்கேயும் அவதானத்தைச் செலுத்தாமல் அங்கே போட்டியிடும் கட்சிகள் என்ன பேசுகின்றன என்பது பற்றி அவதானிக்கலாம்.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசு கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழர் சமூக ஜனநாயக கட்சி ( ஈ.பி.ஆர்எல்.எப் வரதர் அணி) ஐக்கிய தேசிய கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளை சிதறடிப்பற்கென இறக்கிவிடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் (வடக்கின் பாஷையில் ஒட்டுக்குழுக்கள்) இப்படி பல அணிகள் களமிறங்கி உள்ளன. இதற்கிடையே “ஆவா” குழுவும் தமது அரசியலை முன்வைக்கும் நிலை வந்துள்ளது.

 

ஒட்டுக்குழு சுயேச்சைக்குழுக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளுக்கும் ஓர் அரசியல் கொள்கைக் கோட்பாடு இருக்கின்றது எனலாம். ஆனால் எந்தளவு தூரம் அவை மக்கள் நலன் சார்ந்ததாக அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக உள்ளது? அல்லது அதற்கேற்ப இற்றைப்படுத்தப்படுகிறது? அதேநேரம் இளைய சமுதாயத்தை உள்வாங்கி முன்செல்கிறது? என்பதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

இப்போதைய ஆளுந்தரப்பின் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் அமைச்சுப் பதவி வகித்ததன் மூலம் ஒரு ஆறுதல் அரசியலை வடக்கிலே முன்னெடுத்துள்ளார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லோருமே அரசின் எதிரணி என்று இருந்திருந்தால் அரசாங்கத்தின் சேவைகளை, அபிவிருத்திகளை வடக்கு நோக்கிக் கொண்டு வருவதிலும் வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும். அதனை டக்ளஸ் சரிவர முன்னெடுத்தார் எனலாம். ஆனால் அந்த பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க அவருக்கு அடுத்ததாக வடக்கில் ஒருவரை அவர் வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதற்கு பதில் இல்லை. அவரை அடுத்த நிலையில் இருக்கும் எஸ்.தவராசாவும் ஓய்வு வயதை நோக்கிச் செல்கையில் சரிபிழைகளுக்கு அப்பால் டக்ளசின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவது யார்? இப்போதைய அரசு இனவாதப் போக்கோடு பௌத்த பேரினவாத கருத்தாக்கத்தை புராதன தடயங்கள் மீது கட்டமைக்க உருவாக்கியுள்ள செயலணியில் வடக்கு- கிழக்கு தமிழர் தரப்பில் ஒருவர் இல்லாத நிலையை கூட போக்கும் வல்லமை டக்ளசிடத்தில் இல்லாதிருப்பது வருத்தத்துக்கு உரியது. அவரது அமைச்சரவை பலம் இழக்கப்பட்டால் அடுத்த கட்டத்தில் அல்லது டக்ளசுக்குப் பின் ஈ.பி.டி.பி யின் நிலை என்னவாகும் என்பது பெருங்கேள்வியே.

 

இதே நிலைமையை ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் விஜயகலாவின் எதிர்கால அரசியலும் கேள்விக்கு உள்ளாகிறது. இந்தமுறை ஐக்கிய மக்கள் சக்தியும் களம் இறங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி வந்தால் அமைச்சுப் பதவியினைக் கொண்டு செய்யக்கூடிய குறைந்தபட்சமும் குறையவே வாய்ப்புள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி க்கு அங்கே தலைமை கொடுக்கும் கணேஷ் வேலாயுதமும் புதியவரல்ல. அவரும் தமிழ்த்தேசிய தரப்புதான்.

அடுத்தது அங்கஜன் தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என சொல்லிக்கொள்ளும் மொட்டு அணி. டக்ளஸ் – விஜயகலா விடக்கூடிய இடத்தை அமைச்சுப்பதவியினூடாக இட்டு நிரப்புவார் என எதிர்பார்க்க கூடியவர். 2018 ல் 52 நாள் அரசாங்கத்தில் இவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த முறை தோல்வி கண்ட பிறகு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தமுறை அந்த வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது மக்களே வாய்ப்பு வழங்குவார்களா எனத்தெரியாது. ஏனெனில் “ ஆவா” குறூப் என அழைக்கப்பட்ட வாள்வெட்டு வன்முறைக் குழு அவருடன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.”ஆவா” எனும் சிங்களச் சொல்லின் அர்த்தமே “வந்துவிட்டார்கள்” என்பதுதான்.

 

அவர்களின் தலைவர் என அறியப்படும் அருண் சித்தார்த் இப்போது வடக்கு அரசியலில் பேசு பொருள் ஆகி இருக்கிறார். இப்போது சுமந்திரனுக்கு அடுத்ததாக இவரது உரையாடலே அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர் இருக்கும் இடம் சிக்கலானதுதான் என்றாலும் இவர் பேசும் விடயங்களும் மொழி ஆளுமையும் அவதானத்தைப் பெறுகின்றது. சுமந்திரனைப் பேட்டி கண்டு சர்ச்சையை ஏற்படுத்தி அதே சிங்கள ஊடகவியலாளரான சமுர்தித்தவை அருண் சித்தார்த் எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சுமந்திரனை பேட்டி காணும்போது அவர் அளித்த பதில் நிதானமானது என்றாலும் காரமானதாக இருக்கவில்லை. ஆனால், அருண் நிதானத்துடன் காட்டமாகவும் பதில் அளிக்கிறார். அதுவே அவர் குறித்த அவதானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருவகையில் சுமந்திரனும் , அருணும் பேசுபொருள் ஆவதற்கு காரணம் என்ன என பார்ப்பதற்கு இந்த கட்டுரையின் இறுதி பந்தியையும் நீங்கள் வாசிக்க வேண்டும்.

அதுதான் “தமிழ்த்தேசியம் எனும் தலைப்பில் உரையாற்றுக” எனும் தலைப்பில் ஒரே வகுப்பின் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி வைப்பதுபோல் மூன்று அணிகள் பேசித் திரிவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (சுமந்திரன் தவிர்த்து), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்றாக இருந்து மூன்றாகப் பிரிந்து சண்டை இட்டுக் கொள்கின்றனவே தவிர பேசும் பொருள் ஒன்றையே சுற்றி, சுற்றி வருவதாகவே தெரிகிறது. அவர்களின் சிந்தனையில் மாற்றம் வந்திருப்பதாக தெரியவில்லை. ஆட்களில் மாற்றம் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. மாவை முதல் கஜேந்திரன் வரை எல்லாமே 25 – 50 வருடமாக பார்த்த அதே முகமும் பேச்சும். விக்கினேஷ்வரன் புதிதாக வந்த பழையவர். சமயத்தில் “சண்டையைவிட்டுட்டு அமைதியா இருங்கோ பிள்ளைகள்” என ஆசிரியர் வகுப்பறை மாணவர்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு மக்கள் செல்கின்றனர். ஒரே விஷயத்தையே மக்களிடம் மாறி மாறி முன்வைக்கிறார்கள். இளைய சமூகத்தை நோக்கிய ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வடக்கில் இளையவர்கள் இல்லையா என்ன ?

இவர்களுக்கு மாற்றமாக அதாவது தமிழ்த் தேசியத்துக்கு மாற்றாகவும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து போட்டியிடும் பேசும் தரப்பாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி (சுயேச்சைக் குழு) பறக்கவிடும் பட்டமும் நூலறும் நிலையிலேயே பறக்கிறது. அந்த மாற்று அணியில் கூடவா இளையவர்கள் இல்லை. அந்த அணிசாரந்த கலை – இலக்கிய அமைப்புகளில், கூட்டங்களில் வாய்கிழிய அரசியல் பேசும் இளைய “தோழர்கள்” தேர்தல் காலத்தில் எங்கே ஓடிவிடுகிறார்கள். பாவம் எத்தனை நாளைக்குத்தான் சி.கா.செந்திவேல் இந்த கைவண்டியை இழுப்பார். கம்பியுட்டர் சமூகம் கொஞ்சம் களம் இறங்கினால், அவர்களின், புனிதம் கெட்டுவிடப் போகிறதா என்ன?

இப்படி அரசியல் அல்லாத தளத்தில் அரசியல் பேசிவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போவதால்தான் உங்கள் கவிதைகளுக்கான பாடுபொருட்களாகும் சாதியமும், தமிழ்த் தேசியமும், ஆவா போன்ற வன்முறைகளும் கூட அரசியல் களங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி சுமந்திரன் அளவுக்கு “ஆவா அருண்” பேசுபொருள் ஆவதற்கு அவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் நின்று மாறுபட்ட புதிய கருத்துக்களைச் சொல்ல முனைகிறார்கள் என்பதுதான் அர்த்தம். அவர்களது உரைகள், கருத்துகள் மீதான விமர்சனம் இருந்தாலும் அவற்றைத் துணிந்து ஒரு மாற்றுக் கருத்தாக அவர்கள் முன்வைப்பதை மக்கள் பார்க்கிறார்கள்.

மாற்று சிந்தனைகளுடன் வடக்கின் அரசியலை முன்வைக்காது முன்செல்லும் வடக்கின் பெரும்போக்கு அரசியலும் கொரொனாவின் இரண்டாவது அலை போன்றதுதான். அதாவது ஏற்கனவே வந்த கொரொனாவேதான் திரும்பவும் வரும். வடக்கு மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
 

http://thinakkural.lk/article/54312

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.