Jump to content

ஆயுள் தாண்டி வாழும் வித்தை: உடலுறுப்பு தானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் தாண்டி வாழும் வித்தை: உடலுறுப்பு தானம்

கடைசித் தருணங்கள்..

C/F/19: "முன் ஆசனத்தில் ஆசனப் பட்டி அணியாமல் இருந்திருக்கிறார். விபத்தில் தூக்கி வீசப் பட்டு தலைக் காயம், அனுமதிக்கப் பட்ட பின்னர் சடுதியான மூளை இறப்பு. இறந்த நேரம்...."

B/M/45: "மயங்கிய நிலையில் வீட்டின் படுக்கையறையில் காணப்பட்டவரை, அவசர சேவையினர் உயிர்ப்பிக்க முயற்சித்தனர். இதயத் துடிப்பு மீண்டது, மருத்துவமனையில் மூளை இறப்பு உறுதி செய்யப் பட்டது. இறந்த நேரம்..."

H/M/23: "GSW (gunshot wound). அனுமதிக்கப்பட்ட நேரம் 2.20; இறப்பு உறுதி செய்யப்பட்டது 07:20 ..."

என்னுடைய ஆய்வுப் பணிகளின் முக்கியமான அங்கம், இறந்த மனிதர்களிடமிருந்து கிடைக்கும் சுவாசப் பைகளை உடலுக்கு வெளியே சிறிது நாட்கள் உயிருடன் வைத்து அதன் மூலம் சுவாச நோய்கள் தொடர்பான ஆய்வுகள் செய்வது. மேலே நீங்கள் காண்பது கடந்த ஆண்டில் நாம் கையாண்ட 3 சுவாசப் பைகளின் சொந்தக் காரர்களின் இறுதிக் கணத்தை விபரிக்கும் மருத்துவக் குறிப்புகள். இந்த நல்ல மனிதர்களின் இறுதிக் கணங்கள் பல்வேறு மாதிரியாக இருந்தாலும் ஒரு விடயத்தில் இவர்கள் ஒரே குடையின் கீழ் வருகிறார்கள்: உடல் உறுப்பு தானம் என்பதே அந்த மாபெரும் மனித நேயக் குடை!

உட ல் உறுப்பு தானங்கள் உயிர் காக்கின்றன...

உடல் உறுப்பு தானங்களால் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களின் உயிர்கள் காக்கப் படுகின்றன. மேலே நான் குறிப்பிட்டிருப்பது போல, ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறு எண்ணிக்கையான சுவாசப் பைகள் வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 2000 வரையான சுவாசப் பைகள் பல்வேறு சுவாச நோய்களால் பாதிக்கப் பட்டோரில் உறுப்பு மாற்ற சிகிச்சை மூலம் பொருத்தப் படுகின்றன. வாழ்வதற்கு சில மாதங்களே வழங்க பட்ட நிலையில் இருக்கும் நோயாளிகள் நாடுகளின் உறுப்பு மாற்ற சேவையில் பதிந்து விட்டுக் காத்திருந்து இந்த உறுப்புகளைப் பெற்றுக் கொள்வர். இந்த உறுப்பு மாற்றங்கள் ஊழலுக்குட்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மேற்கு நாடுகளில் இந்த காத்திருப்புப் பட்டியல் கணிணி மயப் படுத்தப் பட்டிருக்கிறது. காத்திருக்கும் நோயாளியின் நோய்த் தீவிரம், வயது, போன்ற காரணிகளைக் கொண்டு கணிணியே தானம் கிடைத்த  உறுப்பை  யார் பெறுவர் என்று தீர்மானிக்கிறது. அதன் பிறகு மருத்துவர்களின் பணி ஆரம்பிக்கிறது. 

இறந்த பின் செய்யும் உடலுறுப்புத் தானங்களுக்கு உங்கள் அனுமதியைக் கொடுப்பது இலகுவானது. பல நாடுகளில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் போதே இந்த முடிவை நீங்கள் எடுத்து அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். பல நாடுகளில் மரணமானவரின் உரிமையுடைய உறவினரே இந்த முடிவை இறப்பிற்குப் பிறகு எடுக்க முடியும். 

இவையெல்லாம் மரணத்தோடு தொடர்பு பட்ட somber ஆன விடயங்கள், முடிவுகள்! ஆனால், உறுப்பு மாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு உயிர் கொடுக்கும் வழியாக எம்மை உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்து கொள்வது சிறப்பான செயல்! 

இறக்காமலே உயிர் காக்கும் தானங்கள்

இதயம், சுவாசப்பைகள், ஈரல் , தோல், கருப்பை, .இப்படியான உறுப்புகள் இறந்த பின்னர் தானமாகக் கொடுக்கப் படுகின்றன. ஆனால் உயிரோடிருக்கும் போதே நாம் தானம் செய்யக் கூடிய எங்கள் உடற்கூறுகளும் இருக்கின்றன, அவையும் பல்லாயிரம் பேர்களின் உயிரை உடல் நலத்தை காக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. 

மிக இலகுவான தானம்..இரத்த தானம்.

அனேகமாகனோர் இலகுவாகச் செய்யக் கூடிய இரத்த தானம் உறுப்பு மாற்றம் எனக் கொள்ள முடியாவிட்டாலும் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு உடற்கூற்றுத் தானம். விபத்துக்குள்ளாகி இரத்த இழப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இரத்தத்தை ஈடு செய்ய  இரத்தம் பயன்படுவதை அனைவரும் அறிவோம். உண்மையில் தானமாகக் கிடைக்கும் இரத்தத்தில் இருந்து அதன் கூறுகளைப் பிரித்தெடுத்து பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் வழக்கப் படுகின்றன. உதாரணமாக குருதியுறைதலில் குறைபாடுடைய நோயுடையோரில் குருதிப் பெருக்கைக் கட்டுப் படுத்த, இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிறு தட்டுகளைப் (platelets) பிரித்தெடுத்து ஏற்றுவதன் மூலம் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து உயிரோடு மீண்டு தம் குடும்பங்களுடன் சேர்கின்றனர். எனவே உங்கள் இரத்தக் கொடை என்பது ஒரு வலுவான உயிர்காப்பு மருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

என்பு மச்சை தானம்

எங்கள் என்புகளின் நடுவே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு இழையம் என்பு மச்சை (bone marrow). மச்சையில் இருக்கும் பல்வேறு கலங்கள் எங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகளை உருவாக்குவதால் உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத பணியைச் செய்கிறது. 1986 இல், சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் அணு ஆலை வெடிப்பில், அதற்கு மிக அருகில் இருந்த பலர் இரண்டு மூன்று நாட்களில் இறந்து போனார்கள். அணுசக்திக் கதிர்வீச்சு, அவர்களில் என்பு மச்சையைத் தாக்கித் துடைத்தழித்து விட்டமையே அவர்களின் சடுதியான மரணத்திற்கு காரணம். மச்சையின் இன்றியமையாத தன்மையை எடுத்துக் காட்டும் உதாரணம் இது.  சில நோய் நிலைகளில் மச்சையின் தொழில்பாடு பாதிக்கப் படும் போது இரத்தப் புற்று நோய் வகைகளும், இரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். இத்தகைய நோயாளிகளின் உயிர்காக்க தானமாகக் கொடுக்கப் படும் மச்சை பயன்படுகிறது. 

மச்சை தானம் செய்யும் நடைமுறை ஏனைய உறுப்புகளை விட வித்தியாசமானது. இதற்கென இருக்கும் ஒரு அமைப்பில் (registry) உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் பதிவாளர்களுக்கு டி.என்.ஏ யைப் பரிசோதிக்கும் வசதியை அந்த அமைப்பு செய்து கொடுக்கும். இந்த டி.என்.ஏ தகவலை வைத்துக் கொண்டு தேவையான நேரம் உங்களைத் தொடர்பு கொள்வர். 

பிறக்கும் போதே ஆரம்பிக்கும் தானம்: தொப்புள் கொடி தானம்

சிசுவை தாயோடு இணைக்கும் தொப்புள் கொடி (umbilical cord) ஒரு அதிசயமான உறுப்பு. தொப்புள் கொடியினுள் காணப்படும் இரத்தம் (cord blood) உட்பட்ட இழையங்களில், என்பு மச்சைக்கு ஈடான வலுவுள்ள கலங்கள் காணப்படுகின்றன. கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் இந்த தொப்புள் கொடியை தானமாக வழங்கும் ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. சில இரத்தப் புற்று நோய்களில் நோயாளிகளின் இரத்த உற்பத்தியைப் புதுப்பிக்க இந்த தொப்புள் கொடி இரத்தத்தின் கலங்கள் பயன்படுத்த பட முடியும். தொப்புள் கொடி தானத்தின் இன்னுமொரு நன்மை, பிறக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தில் தேவையேற்படின், இவ்வாறு சேமிக்கப் பட்ட தொப்புள் கொடியின் இரத்தத்தையே சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். Autologous transplant எனப்படும் இத்தகைய உடற்கூறு மாற்றச் சிகிச்சையில் ஏனைய உறுப்பு மாற்றச் சிகிச்சைகளில் இருக்கும் பக்க விளைவுகள் இல்லை.

உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் தொப்புள் கொடி தானம், பிற்காலத் தேவைக்காக தொப்புள் கொடி இரத்தத்தைச் சேமித்தல் என்பன பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொடரும் கணங்கள்..

மேலேயுள்ள எந்த வகையான உடலுறுப்பு/உடற்கூறு தானமும் இன்னொரு உயிரின் ஆயுள் நீட்சிக்கு உதவுவதால், உங்கள் ஆயுளின் எல்லை கடந்து வாழும் ஒரு வழியாக இந்தத் தானங்கள் இருக்கின்றன. எனவே மரணம் முற்றுப் புள்ளி வைக்காத வாழ்வு உங்களுடையது!
 

-ஜஸ்ரின் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிண்ணா..நேரம் கிடைக்கும் போது மேலும், பல தகவல்களை எடுத்து வருவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன நாட்கள் யோசிப்பது பதியவேண்டுமென்று, அப்படியே நாள் பின் தள்ளி போய்விட்டது, இன்று  உங்கள் பதிவை பார்த்தபின்,  இனி பிற் போடக்கூடது, பதிந்துவிட்டேன் 

You have chosen to donate all your organs.

Your new physical card will arrive within four weeks.

 

 

Link to comment
Share on other sites

15 hours ago, Justin said:

மேலேயுள்ள எந்த வகையான உடலுறுப்பு/உடற்கூறு தானமும் இன்னொரு உயிரின் ஆயுள் நீட்சிக்கு உதவுவதால், உங்கள் ஆயுளின் எல்லை கடந்து வாழும் ஒரு வழியாக இந்தத் தானங்கள் இருக்கின்றன. எனவே மரணம் முற்றுப் புள்ளி வைக்காத வாழ்வு உங்களுடையது!

-ஜஸ்ரின் 

நல்லதொரு ஆக்கம் யஸ்ரின் அண்ணா!  நாம் இறந்தபின்பு எமது உறுப்புக்களை நெருப்புக்கும் புழு பூச்சிகளுக்கும் இரையாக்காமல் அவற்றை தானம் செய்து பல உயிர்களை வாழவைக்கமுடியும்.

இங்கு Health Card apply பண்ணும் போதும் எமக்கு தானம் செய்ய விருப்பமா என்று கேட்பதால் பலர் எழுதி கொடுத்துள்ளார்கள். எமது health card ன் பின் பக்கத்தில் Donor என்று போட்டுவிடுவார்கள். மிகவும் வரவேற்கபடவேண்டிய விடயம்.

நாம் இல்லாமல் போனபின்பு எமது தானத்தால் ஒரு சிலருக்கு வாழ்வு கிடைக்குமென்றால் அதைவிட மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதில் வரப்போகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் Justin அண்ணா, பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

 

நல்லதொரு பதிவு. சாரதி பதிவுபத்திரம் செய்யும் போது பதிந்ததாக ஞாபகம். ஆனால் இந்த திரியை பார்த்தவுடன் மீண்டும் பதிந்துள்ளேன். நன்றிகள் 

https://www.organdonation.nhs.uk/register-your-decision/register-your-details/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயலில் காட்டியவர்களுக்கும் வாசித்தவர்களுக்கும் நன்றி.

விழிப்புணர்வை  ஏற்படுத்துவதே நோக்கம். இந்த என்பு மச்சை தானத்தைப் பொறுத்தவரை தென்னாசியர்கள் தானம் செய்யப் பதிந்து கொள்வது அமெரிக்காவில் மிகவும் குறைவு, ஏனைய மேற்கு நாடுகளில் எப்படி எனத் தெரியாது. இதனால் தென்னாசியர்களுக்கு என்பு மச்சை தானம் தேவைப் படும் போது 100 வீத பொருத்தம் உடைய கொடையாளிகளைக் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது. எனவே இயலுமானோர் 18 முதல் 44 வயதானோர் பதிந்து கொண்டால் எங்கள் சமூகத்தில் தேவை வரும் போது உயிர் காக்கலாம்.

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்ரின். மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் எழுதிக் கொடுத்து விட்டேன்.பயன்படுத்துவதும் விடுவதும் உடலை பொறுப்பு எடுப்பவரகளைப் பொறுத்தது.😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.