Jump to content

ஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்


Recommended Posts

புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. 

https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, manimaran said:

புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. 

https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

 

இதனை தயாரித்தது, நளினி சிவதாசன்.

பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது குடும்பத்திற்குள் ஆபிரிக்கவம்சவழியில்தான் ஒருவர் இல்லாமல் இருந்தது, இரண்டு வருடங்களுக்கு முன் கென்யா இனத்தவர் ஒருவர் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால்... பல்லினத்தவர் உடைய குடும்பம் ஆகிவிட்டோம்.  

நாங்கள் எங்களுக்குள்ளேயே யாழ்பாணி என்றும், பிரதேசங்களின் பெயர் கொண்டும் மனம் நோக கதைக்கும் போது, இவர்களை விட்டு வைப்போமா?

எனது தனிப்பட்ட கருத்து,  ஒரு குடும்பத்தில்/உறவில்  முதன்முதல் தனது இனத்திலிருந்து வெளியே போகும் அல்லது தனது கலாச்சாரத்திலிருந்து வெளியே போகும் ஒருவரே அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்குவார்.. அது கல்யாணம் தொடங்கி விவாகரத்து வரை...

Link to comment
Share on other sites

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது.

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இனத்திற்குள்ளேயே சாதி குறைந்தவர் என்று ஒரு பகுதியினரை மனம் நோக செய்து துன்புறுத்தி இன்பம் காணும் எம்மவர்களிடம் இப்படியான செயல்கள் எதிர்பார்க்க கூடியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, manimaran said:

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

மற்றைய இனங்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியமுற்படுவதில்லை என்பது  ஒரு வகையில் உண்மையே. எங்களில் அனேகமானோருக்கு, (முதலாவது, இரண்டாவது generation) வேற்று இனத்தில் நெருங்கிய நட்புக்கள் அதிகம் இருந்திருக்காது, அவர்களுடன் பழக சந்தர்ப்பங்களை அதிகம் நாடியிருப்போமோ தெரியாது.

எனது மேலதிகாரி ஒரு ஜோர்டன் இனத்தவர்,  அவர் ஒரு முறை கூறினார், " உங்களது நாட்டவருக்கு அவர்களது பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பல்கலைகழகல்வி பட்டங்களை சேர்ப்பதில்தான் அதிக நாட்டம், ஆனால் public speaking, interaction with others இல்லாமல் பயன் இல்லை என்று.".

இப்படி பல...

எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள என தெரிந்தால் நாங்கள் மாறுவோமா?, மற்றைய இனங்களை மதிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு எமக்கு மட்டுமல்ல... தாழ்ந்தவன் என நாம் நினைக்கும் அடுத்தவனுக்கும் உண்டு.

அதாவது, எம்மை கூலிகள் என்று கறுப்பர்கள் சொல்வதும், நாம் பாக்கிகள் என்று சொல்லும் பாகிஸ்தானியர்கள் எம்மை கறுப்பு இந்தியர்கள் என்று சொல்வதும் உள்ளது.

நம்மவர்கள் தாம் வெள்ளை, கறுப்பு, இந்தியர்களில் படிப்பில் முன்னே இருப்பவர்கள், சீனருடன் போட்டி போடுபவர்கள் என்ற இறுமாப்பு உண்டு.

ஆனாலும், குடும்ப உறவுகளில் உண்டாகும் சிக்கலினாலே, வெள்ளையர்கள் பின் தங்குகிறார்கள் என்று உணர்வதில்லை.

எமது அடுத்த தலைமுறை கறுப்பரிடையே மணம் செய்யலாம்.

ஒரு வெள்ளையின ஆணை ஒரு தமிழ் பெண் கலியாணம் செய்து, பிள்ளை பிறந்து இருக்கிறது. அவரது மாமா, மாமி அழைப்பில் 31க்கு போய், தமிழில் கதைக்க அவர் குந்தி இருந்து இரண்டு பக்கமும் பார்க்க, அவருக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க.... மிகவும் அந்நியத்தனமாக இருந்தது. கஷடம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

Link to comment
Share on other sites

30 minutes ago, colomban said:

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

கொழும்பான், இரண்டும் ஒன்று தான்! உங்களைக் குழப்பும் வித்தியாசமென்னவென்றால், மேற்கு நாடுகளில் துவேசத்தை வெளிக்காட்டினால் சட்டத்தினால் வால் நறுக்கி விடுவர்! சிறி லங்கா போன்ற நாடுகளில் சட்டம் இல்லை, அதனால் தான் தமிழர், முஸ்லிம்கள் மீது துவேசம் வன்முறையாக மாறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 17:25, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. டது;தமறை 

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

வெள்ளை துணியில் ஒரு துளி கறுப்பு பட்டிருந்தாலும் கறைதான் நானும் லாசப்பல் கடை வீதி எனும் பெயரில் ஒரு வீடியோ பார்த்தன் நம்ம ஊரைப்போலவே இருந்துச்சு. நம்மவர்கள் தேங்காய் , முதல் மாம்பழம் வரைக்கும் கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொத்துவில் உல்லை கடற்கரைக்கு சென்றேன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நம்மவர்கள் சாப்பிட்ட  பேப்பர் குப்பைகளை அந்த இடத்திலே போட்டு விட்டு சென்றார்கள் ஆனால் அதன் பிறகு வந்தசிங்கள குடும்பம் அதை சுற்றம் செய்து விட்டு அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள் நம்மவர்களுக்கு ஓர் இடத்திலிருந்து கடந்து சென்றால் போதும் என்ற நினைப்பு மட்டுமே

காப்பிலி என ஓர் இனத்தை அழைப்பது தவறு சிலோன் தமிழர்களை திருத்த ஏலாது நம்ம வீடு முற்றத்தத்திலே ஆயிரம் குப்பைகள் இருக்கு அதை கூட்டி துடைத்து துப்பரவு செய்ய வழியில்லை ஆனால் அடுத்தவன் முற்றத்தை குப்பை என்பது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

 

இதில் இருவகை காப்பிலிகள் உள்ளது. முதலாவது, நைஜீரியா, கென்யா, உகண்டா,புருண்டி கானா போன்ற நாடுகளை சேர்ந்த காப்பிலிகள் இவர்கள் முரடர்கள் குழப்படிகாரர்கள். 

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

 

4 hours ago, கற்பகதரு said:

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

 

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 

Link to comment
Share on other sites

19 minutes ago, colomban said:

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

கரிபியன் தீவுகளின் பூர்வீக மக்கள் ஐரோப்பியர் கொண்டு வந்த நோய்களாலும், ஐரோப்பிராலும் முற்றாகவே கொன்றொளிக்கப்பட்டு விட்டார்கள். இன்றைய கரிபியன் தீவு மக்கள் அங்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களும், கூலிகளாக கொண்டுவரப்பட்ட தமிழர்களும் வேலைக்கு வந்த ஐரோப்பியர்களும் கலந்து உருவான மக்கள். அவர்களின் வரலாற்றை இணையத்தில் படித்து பாருங்கள். நான் பல கரிபியன் தீவுகளுக்கு போய் வந்திருக்கிறேன். சிலர் எனது அயலவராகவும் இருந்திருக்கிறார்கள். 

19 minutes ago, colomban said:

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 

நாம் சிங்களவரை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுவதற்கு எம்மை அவர்கள் “கள்ளத்தோணிகள்” என்று சொல்வதும் ஒரு காரணம்.

சோனகர் என்று இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையான சோனகரை அழைப்பது, தமிழரை “தமிழர்” என்று அழைப்பது போலாகும். “சோனி” என்று அழைப்பது அவர்களை புண்படுத்துவதாக அமையும். “வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை” என்று எழுதி இருக்கிறீர்கள். அது உண்மை. வட‌க்கு தமிழர்கள் தம்மையே மதிப்பது குறைவு. இனத்துவேசமும், சாதி வெறியும் வடக்கு தமிழரிடம் நிறையவே உண்டு. வடக்கு தமிழரின் சமுக உளநோய்களை தீர்ப்பது கடினமானது, ஆனால். இதற்கான முயற்சிகள் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, colomban said:

நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 

யாழ்பாண தமிழர்களிடம் மோசமான இனதுவேசம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பர்கள் மீதான எங்கள் மக்களின் வித்தியாசமான பார்வையென்பது மற்றவர்களை கொஞ்சம் எங்களை விடக் குறைவாகப் பார்க்கும் ஒரு பொதுவான மனநிலையின் அங்கம் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் ஜோர்ஜ் fப்லொய்ட் கொலைக்கான துலங்கலைக் கூட சிலர் நக்கலாக cynical ஆகப் பார்த்ததைக் கண்டேன். 

தோல் நிறம் முக்கியம் என்று நம்பும் ஒரு முட்டாள் வெள்ளைக்காரன், எங்கள் மண்ணிறத்தோலைப் பார்த்து எமக்கும் அநீதி செய்வான் என்று புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2020 at 03:45, ரதி said:

அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

 

நீங்கள் சொல்வது உண்மை தான். நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...நான் எழுதியது எனக்கு தெரிந்த இங்கிருக்கும் கறுப்பினத்தவரை பற்றித் தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 16:25, tulpen said:

 ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது.

முந்தைய யுகோஸ்லேவியாவின் எந்த பகுதி?

 

On 14/7/2020 at 16:25, tulpen said:

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. 

 

நான் அறிந்த வரை சுவிஸ் இல் உள்ள தமிழர்கள், யுகோ என்று தள்ளிவைப்பது அவர்களின் (அருவருக்க வைக்கும்) பழக்க வழக்கங்களினால், தம்மிலும் குறைவு அல்லது இழிந்தவர்கள் என்பதால் அல்ல.   

உ.ம். swiss நாட்டவரிடம் ஓர் பொதுவான பார்வை உண்டு, தமிழர்கள் சுவிஸ் கலாசாரத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் சில விதி விலக்குகள் உடன்.

ஆனால், யுகோ பிரிந்து வாழ்கிறார்கள்.

சுவிஸ் இல் உள்ளூர் மற்றும் கிராம நிகழ்வுகள் ஓர் கலாசாரமாக உண்டு. அவற்றில் தமிழர்கள் பிரசன்னமும் பங்கும் இருக்கும், யுகோ ஐ தேடியும் காணமுடியாத நிலை என்று.

நீங்கள் சுவிஸ் இல் இருப்பவர். உங்களின் புரிதல் இந்த அடிப்படையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 17:38, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

விசுகர்! யூகோஸ்லாவியாவிலும் பல பின் தங்கிய இடங்கள் உண்டு.எமது ஊர்களை விட மோசமானதாக இருக்கும்.சில  இடங்களில் கால் வைக்கவே கூசும்.

வெளியிலை பாக்க எல்லாம் பியூட்டி புஃல். உள்ளுக்கு போனால்தான் தெரியும் கூத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.