Jump to content

ஆபிரிக்க மக்கள் மீதான எம்மவர் இனத்துவேசம்


Recommended Posts

புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. 

https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, manimaran said:

புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. 

https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

 

இதனை தயாரித்தது, நளினி சிவதாசன்.

பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது குடும்பத்திற்குள் ஆபிரிக்கவம்சவழியில்தான் ஒருவர் இல்லாமல் இருந்தது, இரண்டு வருடங்களுக்கு முன் கென்யா இனத்தவர் ஒருவர் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால்... பல்லினத்தவர் உடைய குடும்பம் ஆகிவிட்டோம்.  

நாங்கள் எங்களுக்குள்ளேயே யாழ்பாணி என்றும், பிரதேசங்களின் பெயர் கொண்டும் மனம் நோக கதைக்கும் போது, இவர்களை விட்டு வைப்போமா?

எனது தனிப்பட்ட கருத்து,  ஒரு குடும்பத்தில்/உறவில்  முதன்முதல் தனது இனத்திலிருந்து வெளியே போகும் அல்லது தனது கலாச்சாரத்திலிருந்து வெளியே போகும் ஒருவரே அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்குவார்.. அது கல்யாணம் தொடங்கி விவாகரத்து வரை...

Link to comment
Share on other sites

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது.

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இனத்திற்குள்ளேயே சாதி குறைந்தவர் என்று ஒரு பகுதியினரை மனம் நோக செய்து துன்புறுத்தி இன்பம் காணும் எம்மவர்களிடம் இப்படியான செயல்கள் எதிர்பார்க்க கூடியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, manimaran said:

மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம். மற்றைய இனங்கள் தொடர்பான போதிய விழிப்புனர்வின்மை ஒரு காரணமாக இருக்கலாம். 

மற்றைய இனங்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியமுற்படுவதில்லை என்பது  ஒரு வகையில் உண்மையே. எங்களில் அனேகமானோருக்கு, (முதலாவது, இரண்டாவது generation) வேற்று இனத்தில் நெருங்கிய நட்புக்கள் அதிகம் இருந்திருக்காது, அவர்களுடன் பழக சந்தர்ப்பங்களை அதிகம் நாடியிருப்போமோ தெரியாது.

எனது மேலதிகாரி ஒரு ஜோர்டன் இனத்தவர்,  அவர் ஒரு முறை கூறினார், " உங்களது நாட்டவருக்கு அவர்களது பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பல்கலைகழகல்வி பட்டங்களை சேர்ப்பதில்தான் அதிக நாட்டம், ஆனால் public speaking, interaction with others இல்லாமல் பயன் இல்லை என்று.".

இப்படி பல...

எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள என தெரிந்தால் நாங்கள் மாறுவோமா?, மற்றைய இனங்களை மதிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு எமக்கு மட்டுமல்ல... தாழ்ந்தவன் என நாம் நினைக்கும் அடுத்தவனுக்கும் உண்டு.

அதாவது, எம்மை கூலிகள் என்று கறுப்பர்கள் சொல்வதும், நாம் பாக்கிகள் என்று சொல்லும் பாகிஸ்தானியர்கள் எம்மை கறுப்பு இந்தியர்கள் என்று சொல்வதும் உள்ளது.

நம்மவர்கள் தாம் வெள்ளை, கறுப்பு, இந்தியர்களில் படிப்பில் முன்னே இருப்பவர்கள், சீனருடன் போட்டி போடுபவர்கள் என்ற இறுமாப்பு உண்டு.

ஆனாலும், குடும்ப உறவுகளில் உண்டாகும் சிக்கலினாலே, வெள்ளையர்கள் பின் தங்குகிறார்கள் என்று உணர்வதில்லை.

எமது அடுத்த தலைமுறை கறுப்பரிடையே மணம் செய்யலாம்.

ஒரு வெள்ளையின ஆணை ஒரு தமிழ் பெண் கலியாணம் செய்து, பிள்ளை பிறந்து இருக்கிறது. அவரது மாமா, மாமி அழைப்பில் 31க்கு போய், தமிழில் கதைக்க அவர் குந்தி இருந்து இரண்டு பக்கமும் பார்க்க, அவருக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க.... மிகவும் அந்நியத்தனமாக இருந்தது. கஷடம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

Link to comment
Share on other sites

30 minutes ago, colomban said:

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

இங்கு இனத்துவேசம் எனப்படும் வார்த்தை ஏன் பாவிக்கப்டுகின்றது?

சிங்களவன் எம்மீது காட்டுவது இனத்துவேசம். ஆனால் நாம் காப்பிலிகள் மீது காட்டுவது இனத்துவேசமா? 


எனக்கு இது இரண்டிட்ட்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழர்கள் காப்பிலியை இனத்துவேசமாக நடத்தியதில்லை. இது ஒரு இனகுழுமத்தை அழைக்கப்பயன்படும் பெயரே தவிர வேறொன்றுமில்லை.
 

கொழும்பான், இரண்டும் ஒன்று தான்! உங்களைக் குழப்பும் வித்தியாசமென்னவென்றால், மேற்கு நாடுகளில் துவேசத்தை வெளிக்காட்டினால் சட்டத்தினால் வால் நறுக்கி விடுவர்! சிறி லங்கா போன்ற நாடுகளில் சட்டம் இல்லை, அதனால் தான் தமிழர், முஸ்லிம்கள் மீது துவேசம் வன்முறையாக மாறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 17:25, tulpen said:

கடந்த 70 வருடங்களாக இனத்துவேசத்தால் பாதிக்கபட்ட தமிழர்களிடம் இனத்துவேசம் மிக அதிகமாக உள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அவரது நாட்டை கூறாமல் “காப்பிலி”, “கறுவல்”,  என்றும், சீன இனத்தவரை “சப்பட்டை” என்று மனம் கூசாமல் இழி சொற்களால் அழைப்பது சாதாரணமாக தமிழர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பிரான்சில் அல்ஜீரிய  நாட்டவரை மிகச் சாதாரணமாக “அடை”, என்ற இழி சொல்லால் தமிழ்  குடும்பங்களால் அழைக்கப்படும். புள்ளைகளுக்கும் அவ்வாறே பழக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது. எமது நாட்டை விட பொருளாதார முன்னேற்றத்தில்  சிறந்ததாக இருந்ததோடு அவர்கள் தமது  நகரங்களை  தமிழர்களை  விட எத்தனையோ மடங்கு சுத்தமாகவும் பராமரிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ ஐரோப்பாவில் சின்ன யாழ்பபாணம் என்று அழைக்கப்படும் லா சப்பலையே வெத்திலை துப்பலுடன் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். அதற்குள் மற்ற இனத்தவரை இழிவாக நினைப்பு வேறு. டது;தமறை 

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

வெள்ளை துணியில் ஒரு துளி கறுப்பு பட்டிருந்தாலும் கறைதான் நானும் லாசப்பல் கடை வீதி எனும் பெயரில் ஒரு வீடியோ பார்த்தன் நம்ம ஊரைப்போலவே இருந்துச்சு. நம்மவர்கள் தேங்காய் , முதல் மாம்பழம் வரைக்கும் கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொத்துவில் உல்லை கடற்கரைக்கு சென்றேன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நம்மவர்கள் சாப்பிட்ட  பேப்பர் குப்பைகளை அந்த இடத்திலே போட்டு விட்டு சென்றார்கள் ஆனால் அதன் பிறகு வந்தசிங்கள குடும்பம் அதை சுற்றம் செய்து விட்டு அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள் நம்மவர்களுக்கு ஓர் இடத்திலிருந்து கடந்து சென்றால் போதும் என்ற நினைப்பு மட்டுமே

காப்பிலி என ஓர் இனத்தை அழைப்பது தவறு சிலோன் தமிழர்களை திருத்த ஏலாது நம்ம வீடு முற்றத்தத்திலே ஆயிரம் குப்பைகள் இருக்கு அதை கூட்டி துடைத்து துப்பரவு செய்ய வழியில்லை ஆனால் அடுத்தவன் முற்றத்தை குப்பை என்பது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பல பேர் நினைப்பது கறுப்பர்கள் என்றால் கள்ளங்கள்,ரவுடிகள் .பொல்லாதவர்கள் ,பயங்கரமானவர்கள் என்று[ எல்லா மக்களிலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்என்பதை மறந்து விடுகிறார்கள் .]...அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

 

இதில் இருவகை காப்பிலிகள் உள்ளது. முதலாவது, நைஜீரியா, கென்யா, உகண்டா,புருண்டி கானா போன்ற நாடுகளை சேர்ந்த காப்பிலிகள் இவர்கள் முரடர்கள் குழப்படிகாரர்கள். 

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

 

4 hours ago, கற்பகதரு said:

தமிழர்களை “கள்ளத்தோணிகள்” என்று இலங்கையிலும், “கூலிகள்” என்று உலகளாவிய அளவிலும் அழைப்பதை ஒரு இனக்குழுமத்தை அழைப்பதற்கான பெயர்களே என்றும், அதில் இனத்துவேசம் இல்லை என்றும் கொள்ளலாமா? “காப்பிலி” என்ற சொல்லின் மூலம், வரலாறு, அப்படி தம்மை அழைப்பது பற்றி ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை அறிந்து பாருங்கள். அந்த சொல்லும் கள்ளத்தோணிக்கும் கூலிக்கும் நிகரானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

 

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 

Link to comment
Share on other sites

19 minutes ago, colomban said:

இரண்டாவது வகை பர்படொஸ், வேஸ்ட்  இன்டிஸ் தீவுகளை சேர்ந்த்வர்கள் இவர்கள் காப்பிலி அல்ல கரீபியன் தீவுகளை சேர்ந்தவர்கள் தோல் நிறம் /தலைமுடி சிறிது வித்தியாசம் காணலாம்.  இவர்கள் ஒரளவு டிசன்டான நன்கு படித்தவர்கள் கூட்டம். அனால் ஜமைக்காகாரர்கள் கரிபியர்களக இருந்தாலும் சிறிது குழப்படிகாரர்கள்.

கரிபியன் தீவுகளின் பூர்வீக மக்கள் ஐரோப்பியர் கொண்டு வந்த நோய்களாலும், ஐரோப்பிராலும் முற்றாகவே கொன்றொளிக்கப்பட்டு விட்டார்கள். இன்றைய கரிபியன் தீவு மக்கள் அங்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களும், கூலிகளாக கொண்டுவரப்பட்ட தமிழர்களும் வேலைக்கு வந்த ஐரோப்பியர்களும் கலந்து உருவான மக்கள். அவர்களின் வரலாற்றை இணையத்தில் படித்து பாருங்கள். நான் பல கரிபியன் தீவுகளுக்கு போய் வந்திருக்கிறேன். சிலர் எனது அயலவராகவும் இருந்திருக்கிறார்கள். 

19 minutes ago, colomban said:

நல்லது ஜூட் அப்படியென்றால். நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 
 

நாம் சிங்களவரை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுவதற்கு எம்மை அவர்கள் “கள்ளத்தோணிகள்” என்று சொல்வதும் ஒரு காரணம்.

சோனகர் என்று இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையான சோனகரை அழைப்பது, தமிழரை “தமிழர்” என்று அழைப்பது போலாகும். “சோனி” என்று அழைப்பது அவர்களை புண்படுத்துவதாக அமையும். “வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை” என்று எழுதி இருக்கிறீர்கள். அது உண்மை. வட‌க்கு தமிழர்கள் தம்மையே மதிப்பது குறைவு. இனத்துவேசமும், சாதி வெறியும் வடக்கு தமிழரிடம் நிறையவே உண்டு. வடக்கு தமிழரின் சமுக உளநோய்களை தீர்ப்பது கடினமானது, ஆனால். இதற்கான முயற்சிகள் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, colomban said:

நாம் ஏன் சிங்கள்வர்களை இனத்திதுவேசம் பிடித்தவர்கள் என்று கூறுகின்றோம்? 
வட‌க்கு தமிழர்கள் , மட்டக்களப்பு தமிழர்க்ளையோ / இந்திய வம்சாவளி தமிழர்களையோ மதிப்பதில்லை அதேபோல் முஸ்லீம்களை சோனி என்று அழைத்தல் இவைகளும் ஒருவகையில் இனத்துவேசம் அல்லவா? 

யாழ்பாண தமிழர்களிடம் மோசமான இனதுவேசம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பர்கள் மீதான எங்கள் மக்களின் வித்தியாசமான பார்வையென்பது மற்றவர்களை கொஞ்சம் எங்களை விடக் குறைவாகப் பார்க்கும் ஒரு பொதுவான மனநிலையின் அங்கம் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் ஜோர்ஜ் fப்லொய்ட் கொலைக்கான துலங்கலைக் கூட சிலர் நக்கலாக cynical ஆகப் பார்த்ததைக் கண்டேன். 

தோல் நிறம் முக்கியம் என்று நம்பும் ஒரு முட்டாள் வெள்ளைக்காரன், எங்கள் மண்ணிறத்தோலைப் பார்த்து எமக்கும் அநீதி செய்வான் என்று புரிந்து கொள்வது எவ்வளவு கடினமானது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2020 at 03:45, ரதி said:

அவர்களில் பெடியங்களை விட பெண்கள் பொல்லாதவர்கள் அத்தோடு உடல் வலிமை ,மன வலிமை கூடியவர்கள் 

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. 

எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl ,  The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

 

நீங்கள் சொல்வது உண்மை தான். நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...நான் எழுதியது எனக்கு தெரிந்த இங்கிருக்கும் கறுப்பினத்தவரை பற்றித் தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 16:25, tulpen said:

 ஆனால் 2014 ல் நான் அங்கு சென்ற போது கண்ட விடயங்கள் எதிர் மாறாக இருந்தது.

முந்தைய யுகோஸ்லேவியாவின் எந்த பகுதி?

 

On 14/7/2020 at 16:25, tulpen said:

சுவிற்சர்லாந்தில்  யூகோஸலாவியரை தங்களை விட இழிந்தவர்கள் என்பதே இங்குள்ள தமிழர்கள்களின்  நினைப்பு. 

 

நான் அறிந்த வரை சுவிஸ் இல் உள்ள தமிழர்கள், யுகோ என்று தள்ளிவைப்பது அவர்களின் (அருவருக்க வைக்கும்) பழக்க வழக்கங்களினால், தம்மிலும் குறைவு அல்லது இழிந்தவர்கள் என்பதால் அல்ல.   

உ.ம். swiss நாட்டவரிடம் ஓர் பொதுவான பார்வை உண்டு, தமிழர்கள் சுவிஸ் கலாசாரத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் சில விதி விலக்குகள் உடன்.

ஆனால், யுகோ பிரிந்து வாழ்கிறார்கள்.

சுவிஸ் இல் உள்ளூர் மற்றும் கிராம நிகழ்வுகள் ஓர் கலாசாரமாக உண்டு. அவற்றில் தமிழர்கள் பிரசன்னமும் பங்கும் இருக்கும், யுகோ ஐ தேடியும் காணமுடியாத நிலை என்று.

நீங்கள் சுவிஸ் இல் இருப்பவர். உங்களின் புரிதல் இந்த அடிப்படையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 17:38, விசுகு said:

மேலே நீங்கள்  எழுதியுள்ள  கருத்துடன்  உடன்படும்  அதேவேளை இது  தமிழர்களிடம்  மட்டுமே  இருக்கிறது என்பது  தவறு

ல  சப்பல்  வந்த  நீங்கள் அடுத்தமுறை என்னை  அழையுங்கள் 

2 நிமிட  நடையில் BARBES உட்பட  சில  பகுதிகளை  காட்டுகின்றேன்

விசுகர்! யூகோஸ்லாவியாவிலும் பல பின் தங்கிய இடங்கள் உண்டு.எமது ஊர்களை விட மோசமானதாக இருக்கும்.சில  இடங்களில் கால் வைக்கவே கூசும்.

வெளியிலை பாக்க எல்லாம் பியூட்டி புஃல். உள்ளுக்கு போனால்தான் தெரியும் கூத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.