Jump to content

தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுக்கான பயணம் குறித்து சுமந்திரனின் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுக்கான பயணம் குறித்து சுமந்திரனின் கருத்து

(ஆர்.யசி)

ஒரு நாட்டிற்குள் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு, நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.  அன்று சிங்களவர்களுக்கு தேவைப்பட்ட சமஷ்டி இன்று ஏன் பிடிக்கவில்லை என்பதே எமது கேள்வியாக உள்ளதென தமிழ் தேசிய கூட்டமைபின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார்.

கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எமது அரசியல் இலக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக கூறியுள்ளோம். இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தையின் மூலமாக சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தான் எமது அரசியல் தீர்வு அமையும் என்பதையும் சிங்கள மக்களின் முதுகுக்கு பின்னால் எதனையும் செய்யத் தயாரில்லை என்பதையும் , அவர்களும் சர்வசன வாக்களிப்பில் எமக்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வரும் தீர்வு தான் பலமான அரசியல் தீர்வாக இருக்கும் என நாம் பல தடவைகைகள் கூறிவிட்டோம். நாம் எந்த திசையில் பயணிக்கின்றோம் என்பது குறித்து மக்களை வீணாக குழப்பம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நானும் சம்பந்தனும் நாட்டினை பிளவுபடுத்த போவதாக கூறுகின்றனர். நாம் நாட்டினை பிளவுபடுத்தவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக இதுவரை செய்துள்ளதை எடைபோட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர கடுமையாக பாடுபட்டோம். எமது முயற்சியினால் இடைக்கால அறிக்கை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். சமஷ்டி அலகுகளை நாம் எவ்வாறு உருவாக்க நினைகின்றோம் என்பது அதில் தெளிவாக உள்ளது.

 முதலில் அதனை படியுங்கள். அதன் பின்னர் எம்மிடம் கேள்வி கேளுங்கள். சிங்கள மக்களின் இணக்கத்துடன் எவ்வாறு அரசியல் தீர்வை பெறுவது என்பது குறித்து நகர்ந்துள்ளோம் என்பது தெளிவாக தெரியும். இந்த வழிநடத்தல் குழுவில் தமிழ கூட்டமைப்பின் சார்பில் இருவர் மட்டுமே இருந்தோம். அதுமட்டும் அல்ல தென் பகுதி சிங்கள முதலமைச்சர்கள் ஏழு பேரின் முன்மொழிவுகளையும் நாம் உள்ளடக்கியுள்ளோம். ஆனால் இதில் வடக்கு முதலமைச்சர், கிழக்கு முதலமைச்சர்கள் பங்குபற்றவே இல்லை. தென்னிலங்கை முதல்வர்கள் ஏழு பேரும் அதிகார பகிர்வு வேண்டும் எனவும் ஆளுநர் வேண்டாம் எனவும் கேட்டனர். 

எவ்வாறு இருப்பினும் நாம் உருவாக்கிய வரைபை தடுக்க இடை நடுவே ஆட்சியை குழப்பினர். வரைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிங்கள தலைமைகள் எம்மை குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் எமது தரப்பும் எம்மையே குற்றம் சுமத்துகின்றனர். இது ஒற்றையாட்சி, அதற்குள்ளேயே எம்மை முடக்கி விட்டனர் என கூறுகின்றனர். முதலில் அரசியல் அமைப்பு வரைபை தமிழர்கள் படியுங்கள்.

சமஷ்டி என்றால் பிரிவினை என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. நாம் சமஷ்டி கேட்டால் அது பிரிவினை என்ற பிரசாரம் செய்யப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்கள தலைமைகளே ஆரம்பத்தில் சமஸ்டியை அறிமுகப்படுத்தினரே தவிர தமிழர்கள் அல்ல. தமிழர்கள் ஆரம்பத்தில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள தலைவர்கள் தமிழர்களை இணக்க அரசியலில் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் தமிழர்கள் இணைக்கவே இல்லை. 

முதலாவது சட்ட  சபை தேர்தலையே எமது தலைவர்கள் பகிஸ்கரித்தனர். கண்டிய பிரதானிகள் மீண்டும் சமர்டியை கேட்டனர் அப்போதும் எமது தலைவர்கள் வேண்டாம் என்றனர். இலங்கை கொமியுனிச கட்சி ஒரு தீர்மானம் எடுத்தனர், அப்போதும் சமஷ்டி வேண்டும் என்றனர். தொடர்ச்சியாக சிங்கள தலைமைகள் தான் சமஷ்டி என்பதை கேட்டனர். 

ஆகவே அப்போது சிங்கள தலைவர்களுக்கு சரியாக தென்பட்ட சமஷ்டி  இப்போது ஏன் தவறாகின்றது என்கின்ற கேள்வியை நாம் சிங்கள தலைமைகளிடம் கேட்கிறோம். அதில் என்ன தவறு உள்ளது. இந்த விடயத்தில் நியாயமாகவும் பக்குவமாகவும் பேசி தீர்க்க வேண்டும். நாம் தனிநாடு  கேட்கவில்லை, நாம் நியாயமான கோரிக்கைகளை கேட்கிறோம் என்பதை அவர்களுடம் எடுத்துரைக்க வேண்டும். இதனை நாம் முயற்சிக்கின்ற நேரத்தில் சிங்கள அரச ஊடகங்கள் எம்மை விமர்சித்து பொய்யான செய்திகளை பிரசுரித்து வருகினன்ர்.

பொய்யான செய்திகளை சிங்கள ஊடகங்கள் பரப்பி வருகின்ற நிலையில் அதனையும் நம்பிக்கொண்டு எமது தரப்பு காவித் திரிகின்றார். இதுதான் கவலைக்கிடமான விடயமாகும். வருகின்ற ஆட்சி எப்படி அமைப்பும் என்பது எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் தலைமைகள் இன்றும் ஒரே நோக்கத்தில் ஒரு கொள்கையில் உள்ளனர் என்பதை பறைசாற்ற வேண்டிய கடமை தமிழ் மக்களின் கைகளில் உள்ளது. 

தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு, நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும். 20 ஆசனங்களுடன் நாம் பாராளுமன்றத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு 100 ஆசனங்களாக தென்படும். அந்த பலத்தை எமக்கு வழங்குவதற்கு தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அரசியல் பலத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. நாம் பலத்தை கேட்பது எமக்காக அல்ல உங்களுக்காக என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

மீண்டும் எமது அடையாளங்களை நாம் காண்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் தமிழர்கள் சுதந்திரமாக சுவாசிக்க கூடிய சூழல் இருந்தது. அடக்குமுறை ஆட்சியில் இருந்து எமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகியது. இராணுவம் கையகப்படுத்தி இருந்த நிலங்கள் பல விடுவிக்கப்பட்டது. 

இன்னமும் பல நிலங்களை விடுவிக்கப்பட வேண்டியுள்ளது, இன்று மீண்டும் அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் அன்று உயர் பாதுகாப்பு வலயமாக கூறியஇடங்களில் 80 வீத காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பும் அன்பர்கள் பெரும்பான்மை கைதிகள் விடுவிக்கப்பட்டது தெரியாது கேட்கின்றனரா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது. பலர் விடுவிக்கப்பட்டனர், எஞ்சியுள்ள  அரசியல்  கைதிகள் குறித்து இந்த ஆட்சியாளர்களிடமும் நாம் பேசியுள்ளோம். அவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 84 பேரின் பெயர்களை  சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகளை நான் பார்த்தேன். அந்த முயற்சி கைவிடவில்லை என்றார். 

 

https://www.virakesari.lk/article/85809

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சமஷ்டி என்றால் பிரிவினை என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. நாம் சமஷ்டி கேட்டால் அது பிரிவினை என்ற பிரசாரம் செய்யப்படுகின்றது.

யாரோ சொன்னார்கள், சிங்களம் சமஷ்ட்டி தர தயாராய் இருந்தது. தலைவர் தான் எதிர்த்தவர் என்று. பத்து ஆண்டுகள் கடந்தும் தாறோம் எண்டதை காணோம். சிங்களவன் சொல்லுறதெல்லாம் வேதவாக்கு  எண்டு காலை நக்குகிறவர்கள் நம்பலாம். அவனே தான் சொன்னதை  சொன்னதென்று ஏற்றுக்கொள்ள மாட்டான்.

 

4 hours ago, கிருபன் said:

பெரும்பான்மை கைதிகள் விடுவிக்கப்பட்டது தெரியாது கேட்கின்றனரா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது

 விடுவிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பாதுகாப்புக்காக இருமடங்கு இளைஞர் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் வைக்கப்படுபவர். தங்கள் முகவருக்கு முன் ஆயத்த  பாதுகாப்பாய். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.