Jump to content

வரலாறு முக்கியம் அமைச்சரே!


Recommended Posts

‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’

 

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:18 - 0     - 57

AddThis Sharing Buttons

 

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர்.

வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.

வரலாற்றின் பயன்பாடு இந்தளவில் மட்டுப்பட்டிருந்தால், அதற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டிய தேவையில்லை. ஆனால், வரலாறு இதைத்தாண்டிய முக்கியத்துவத்தை மனிதவாழ்வில் பெற்றுவிட்டது. “நாம் யார் தெரியுமா?”, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடிகள்” என்ற பகட்டாரவாரம், ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளத்தினதும், பெருமையினதும் அடிப்படையாகப் பார்க்கப்படும் நிலையில், நிச்சயமாக வரலாறு முக்கியமாகிவிடுகிறது.

இந்த அடிப்படையில்தான், மல்கம் எக்ஸ் “ஓர் இனக்கூட்டமானது, ஒரு தனி மனிதனைப் போன்றது; அது தனது சொந்தத் திறமையைப் பயன்படுத்தும் வரை, அதன் சொந்த வரலாற்றில் பெருமை கொள்ளும், அதன் சொந்த கலாசாரத்தை வெளிப்படுத்தும் வரை, தனது தனித்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, அது ஒருபோதும் தன்னை முழுமைப்படுத்தாது” என்கிறார்.

ஓர் இனத்தினது மட்டுமல்ல, ஒரு தேசத்தினது அடையாளத்துக்கும் நிறுவலுக்கும், கட்டியெழுப்பலுக்கும், நீட்சிக்கும் கூட வரலாறு என்பது முக்கியத்துவமிக்கதொன்றாகவே பார்க்கப்படுகிறது.

“தேசம்” என்பதை புறக்காரணிகள் மூலம் வரையறுக்கும் கொம்யுனிச சர்வாதிகாரி ஜோசஃப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாக கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்கிறார்.

“தேசம்” என்பதை அகக்காரணிகள் மூலம் வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொது வாக்கெடுப்பாகும்” என்கிறார். ஆகவே, ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.   

ஆகவே, தம்மை ஒரு மக்கள் கூட்டமாக, இனமாக, தேசமாக நிறுவிக்கொள்ள விளையும் அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏதோவொரு வகையில் வரலாற்றின் துணையை அதற்காகத் தேடிக்கொள்கின்றன. அந்த வகையில் தமக்கு வசதியானதொரு, தம்முடைய கதைக்குப் பெருமைசேர்க்கும் வரலாற்றைக் கட்டமைக்க முயன்றுகொண்டேயிருக்கின்றன. இதை தமக்கான “பயன் தரு கடந்தகாலத்தின்” தேடல் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையின் வரலாறாக “மஹாவம்சம்” உருவெடுத்ததுகூட “பயன் தரு கடந்த காலத்துக்கான” தேடலின் விளைவு எனலாம். “மஹாவம்சம்” என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை, அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான புராண இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது. ஆனால், அந்தப் புராண இலக்கியமானது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு அவர்கள் தேடும் “பயன் தரு கடந்தகாலத்தை” வழங்குவதாக அமைந்தைமயால், அது வரலாறாகவே சுவீகரிக்கப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டன. அந்தப் புராண இலக்கியம் மீள மீள அம்மக்கள்  கூட்டத்துக்குள் வரலாறாகப் போதிக்கப்பட்டது. அது வரலாறாக ஆக்கப்பட்டது. இது உண்மையான வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாற்றுக்கும் குறித்த மக்கள் கூட்டம் நம்பும் வரலாற்றுக்கும் இடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவான சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம், எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞ்ஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.  

சமகால “சிங்கள-பௌத்த” அடையாளத்தின் தோற்றமும் எழுச்சியும் பிரித்தானியக் கொலனித்துவ காலத்துக்குப் பின்னானது என்பது, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச், லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட பல வரலாற்று,  மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அவ்வாறு உருவான ஒரு மக்கள் கூட்டம் தனக்கென தேடிக்கொண்ட “பயன் தரு கடந்த காலம்தான்” இன்று இலங்கையின் வரலாறாக நம்பப்படும் வரலாறு காணப்படுகிறது. இதனால்தான், அந்த வரலாறு, பல தர்க்கச்சிக்கல்களில் சிக்குண்டு நிற்கிறது. “மஹாவம்சத்தை” வரலாறாக சுவீகரித்துக்கொண்டது, தமிழர்களை “விரும்பத்தகாத அந்நியர்களாக” சித்திரிக்கும் பெரும்பான்மை இனத்-தேசிய பெருந்திரள்வாதத்துக்கு ஏற்புடையதாக அமைந்தாலும் தம்மை அதிகாரம்மிகு பெரும்பான்மை இனத்-தேசியமாக உருவாக்கிக்கொண்டதன் பின்னர், “மஹாவம்சம்” காலத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியிருக்கும் மட்டுப்பாடு பெருங்குறையாக உணரப்படத் தொடங்குவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

“மஹாவம்சத்தை” இலங்கையின் வரலாறாகக் கருதினால், அது “சிங்கள இனத்தின்” வரலாற்றை, விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. ஆனால், விஜயன் இங்கு வரும்போது இங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே, சிங்களவர்களுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்றாகிறது. அம்மக்களைப் பற்றிய வரலாற்றாய்வு பெருமளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை, அது பற்றி அரசாங்கமும் அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் அது பெரும்பான்மை மக்கள் சுவீகரித்துக்கொண்டுள்ள வரலாற்றுக்கு சாதகமானதாக அமையாது.

மறுபுறத்தில், விஜயனின் வருகையிலும் சில நூற்றாண்டுகள் கழித்துதான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால், பௌத்தத்துக்கு முன்பு இங்குள்ள மக்கள் வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இந்த மட்டுப்பாடுகளைக் களைய, “சிங்கள” அடையாளத்துக்கான இன்னொரு “பயன் தரு கடந்தகாலத்தை” தேடும் முயற்சி சமகாலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அதன் ஒரு அங்கம்தான் “இராவணனை” சிங்களவனாக சித்திரிக்கும் முயற்சி. மஹாவம்சத்திலும் பழைய புராண இதிகாசமாக இராமாயணம் இருக்கிறது. இராமாயணம் பாரதக் கண்டத்தில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும்கூட பிரபல்யமான ஒரு புராண இதிகாசமாக இருக்கிறது.

இலங்கை பற்றிய மிகத்தொன்மையான பதிவுகளுள் ஒன்றாக இராமாணயத்தை பலரும் கருதுகிறார்கள். அன்று இலங்கையை ஆண்டவன் இராவணன். இலங்கையை சிங்களவர்களே ஆண்டார்கள் என்ற நம்பிக்கையை பலப்படுத்த வேண்டுமானால், இராவணனை சிங்களவனாக்க வேண்டிய தேவையும் அதனோடு இணைந்து ஏற்படுகிறது. இலங்கை மன்னர்களில் “எல்லாளன்” என்ற “தோற்கடிக்கப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு எதிரியைத்” தவிர மற்ற அனைவரும் சிங்களவர்களே என்றதொரு “கடந்த காலத்தை” கட்டியெழுப்பும் கைங்கரியத்தையே இன்று “சிங்கள-பௌத்த” பேரினவாத சக்திகள் முன்னெடுக்க விளைகின்றன.  

இந்த வரலாறு எழுதும் போட்டியில் தமிழர்களின் நிலை என்ன என்பது பல தமிழர்களிடையேயும் இருக்கும் முக்கிய கேள்வி. தமிழர்கள் வரலாறு பற்றியதும் “பயன்தரு கடந்த காலத்தை” கட்டியெழுப்புவதுமான போட்டியில் பங்கேற்கத்தேவையில்லை என்பது சில தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தாகும். நாம் எப்போது இங்கு வந்தோம் என்பது எம்முடைய இன்றைய தேச அடையாளத்தையும், இருப்பையும் பாதிக்காது, பாதிக்கக்கூடாது என்பது அவர்களது கருத்தாகும்.

மறுபுறத்தில், “தமிழ்க்கடவுள்” முருகன் “கத்தரகம தெவியா” ஆனதும், இன்று திருகோணமலை “கோகண்ண” ஆகிக்கொண்டிருப்பதுமெல்லாம் தமிழர்களின் அடையாளச் சிதைப்புகள் என்று பல தமிழர்கள் கோபம் கொள்கிறார்கள். சிவபக்தனான இராவணன் தமிழனே, அவன் எப்படி சிங்களவனாக முடியும் என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் தமது வரலாற்றை மீட்க வேண்டும் என்பது அவர்களது சூளுரையாக இருக்கிறது.  

வரலாறு பற்றி நாம் சிந்திக்கும் போது, இங்கு ‘புலிகேசிகள்’ தம்முடைய வரலாறு நூறு வருடங்களின் பின்னர் வரப்போகிறவர்களுக்குத் தெரியவா போகிறது என, தாமே மிகைப்படுத்தி எழுதுவதாக நாம் நினைப்பது தவறானதாகும். உண்மையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புலிகேசியின் தேவை ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஏற்படும் போது, அவர்களே புலிகேசி பற்றிய வரலாற்றை தமக்குத் தேவையான விதத்தில் தேடிக்கட்டமைத்துக்கொள்வார்கள். புலிகேசி எப்படி இருந்தான் என்பதை விட, புலிகேசி எப்படி இருந்தான் என்று இருப்பது அவர்களுக்குப் பயனுள்ளதோ, அந்த வகையில் புலிகேசி கட்டியமைக்கப்படுவான். புலிகேசி அவர்களுக்கு பயனுள்ள கடந்த காலத்தை தராத பட்சத்தில், அவன் எத்தகையவனாக இருந்தாலும், அவன் வரலாற்றில் இடம்பெறமாட்டான். இதுதான் வரலாற்றின் யதார்த்தம்.

அதனால்தானோ என்னவோ “வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்கிறார் வோல்டேயர். ஆனால் இதனால் மட்டும் வரலாற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதனை நிராகரித்துவிடவும் முடியாது. ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் ஊற்று அதனுடைய வரலாறாகவே கருதப்படுகிறது. அதனால்தான் மனிதக்கூட்டங்கள் வரலாறு பற்றி பெருங்கரிசனை கொண்டிருக்கின்றன. அதனால்தான் வரலாற்றைப் புனைவதில் அவை சிரத்தை கொள்கின்றன. ஆனால் இந்த வரலாற்றுப் புனைவுச் சண்டைகளுக்குள் வரலாறு சிலவேளைகளில் தொலைந்துதான் போய்விடுகிறது.   

நிகழ்கால வாழ்வுக்கு வரலாற்றின் பங்களிப்பு என்பது குறைவானதே, ஆயினும் இன்றைய மனிதக் கூட்டங்களுக்கு அது இன்றியமையாததொன்றாக இருக்கிறது. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் அது. நாமாக உருவாக்கிக்கொண்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே!”.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாறு-முக்கியம்-அமைச்சரே/91-253149

Link to comment
Share on other sites

On 14/7/2020 at 11:25, nunavilan said:

‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’

 

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:18 - 0     - 57

AddThis Sharing Buttons

 

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர்.

வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.

வரலாற்றின் பயன்பாடு இந்தளவில் மட்டுப்பட்டிருந்தால், அதற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டிய தேவையில்லை. ஆனால், வரலாறு இதைத்தாண்டிய முக்கியத்துவத்தை மனிதவாழ்வில் பெற்றுவிட்டது. “நாம் யார் தெரியுமா?”, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடிகள்” என்ற பகட்டாரவாரம், ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளத்தினதும், பெருமையினதும் அடிப்படையாகப் பார்க்கப்படும் நிலையில், நிச்சயமாக வரலாறு முக்கியமாகிவிடுகிறது.

இந்த அடிப்படையில்தான், மல்கம் எக்ஸ் “ஓர் இனக்கூட்டமானது, ஒரு தனி மனிதனைப் போன்றது; அது தனது சொந்தத் திறமையைப் பயன்படுத்தும் வரை, அதன் சொந்த வரலாற்றில் பெருமை கொள்ளும், அதன் சொந்த கலாசாரத்தை வெளிப்படுத்தும் வரை, தனது தனித்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, அது ஒருபோதும் தன்னை முழுமைப்படுத்தாது” என்கிறார்.

ஓர் இனத்தினது மட்டுமல்ல, ஒரு தேசத்தினது அடையாளத்துக்கும் நிறுவலுக்கும், கட்டியெழுப்பலுக்கும், நீட்சிக்கும் கூட வரலாறு என்பது முக்கியத்துவமிக்கதொன்றாகவே பார்க்கப்படுகிறது.

“தேசம்” என்பதை புறக்காரணிகள் மூலம் வரையறுக்கும் கொம்யுனிச சர்வாதிகாரி ஜோசஃப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாக கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்கிறார்.

“தேசம்” என்பதை அகக்காரணிகள் மூலம் வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொது வாக்கெடுப்பாகும்” என்கிறார். ஆகவே, ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.   

ஆகவே, தம்மை ஒரு மக்கள் கூட்டமாக, இனமாக, தேசமாக நிறுவிக்கொள்ள விளையும் அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏதோவொரு வகையில் வரலாற்றின் துணையை அதற்காகத் தேடிக்கொள்கின்றன. அந்த வகையில் தமக்கு வசதியானதொரு, தம்முடைய கதைக்குப் பெருமைசேர்க்கும் வரலாற்றைக் கட்டமைக்க முயன்றுகொண்டேயிருக்கின்றன. இதை தமக்கான “பயன் தரு கடந்தகாலத்தின்” தேடல் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையின் வரலாறாக “மஹாவம்சம்” உருவெடுத்ததுகூட “பயன் தரு கடந்த காலத்துக்கான” தேடலின் விளைவு எனலாம். “மஹாவம்சம்” என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை, அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான புராண இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது. ஆனால், அந்தப் புராண இலக்கியமானது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு அவர்கள் தேடும் “பயன் தரு கடந்தகாலத்தை” வழங்குவதாக அமைந்தைமயால், அது வரலாறாகவே சுவீகரிக்கப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டன. அந்தப் புராண இலக்கியம் மீள மீள அம்மக்கள்  கூட்டத்துக்குள் வரலாறாகப் போதிக்கப்பட்டது. அது வரலாறாக ஆக்கப்பட்டது. இது உண்மையான வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாற்றுக்கும் குறித்த மக்கள் கூட்டம் நம்பும் வரலாற்றுக்கும் இடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவான சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம், எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞ்ஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.  

சமகால “சிங்கள-பௌத்த” அடையாளத்தின் தோற்றமும் எழுச்சியும் பிரித்தானியக் கொலனித்துவ காலத்துக்குப் பின்னானது என்பது, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச், லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட பல வரலாற்று,  மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அவ்வாறு உருவான ஒரு மக்கள் கூட்டம் தனக்கென தேடிக்கொண்ட “பயன் தரு கடந்த காலம்தான்” இன்று இலங்கையின் வரலாறாக நம்பப்படும் வரலாறு காணப்படுகிறது. இதனால்தான், அந்த வரலாறு, பல தர்க்கச்சிக்கல்களில் சிக்குண்டு நிற்கிறது. “மஹாவம்சத்தை” வரலாறாக சுவீகரித்துக்கொண்டது, தமிழர்களை “விரும்பத்தகாத அந்நியர்களாக” சித்திரிக்கும் பெரும்பான்மை இனத்-தேசிய பெருந்திரள்வாதத்துக்கு ஏற்புடையதாக அமைந்தாலும் தம்மை அதிகாரம்மிகு பெரும்பான்மை இனத்-தேசியமாக உருவாக்கிக்கொண்டதன் பின்னர், “மஹாவம்சம்” காலத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியிருக்கும் மட்டுப்பாடு பெருங்குறையாக உணரப்படத் தொடங்குவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

“மஹாவம்சத்தை” இலங்கையின் வரலாறாகக் கருதினால், அது “சிங்கள இனத்தின்” வரலாற்றை, விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. ஆனால், விஜயன் இங்கு வரும்போது இங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே, சிங்களவர்களுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்றாகிறது. அம்மக்களைப் பற்றிய வரலாற்றாய்வு பெருமளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை, அது பற்றி அரசாங்கமும் அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் அது பெரும்பான்மை மக்கள் சுவீகரித்துக்கொண்டுள்ள வரலாற்றுக்கு சாதகமானதாக அமையாது.

மறுபுறத்தில், விஜயனின் வருகையிலும் சில நூற்றாண்டுகள் கழித்துதான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால், பௌத்தத்துக்கு முன்பு இங்குள்ள மக்கள் வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இந்த மட்டுப்பாடுகளைக் களைய, “சிங்கள” அடையாளத்துக்கான இன்னொரு “பயன் தரு கடந்தகாலத்தை” தேடும் முயற்சி சமகாலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அதன் ஒரு அங்கம்தான் “இராவணனை” சிங்களவனாக சித்திரிக்கும் முயற்சி. மஹாவம்சத்திலும் பழைய புராண இதிகாசமாக இராமாயணம் இருக்கிறது. இராமாயணம் பாரதக் கண்டத்தில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும்கூட பிரபல்யமான ஒரு புராண இதிகாசமாக இருக்கிறது.

இலங்கை பற்றிய மிகத்தொன்மையான பதிவுகளுள் ஒன்றாக இராமாணயத்தை பலரும் கருதுகிறார்கள். அன்று இலங்கையை ஆண்டவன் இராவணன். இலங்கையை சிங்களவர்களே ஆண்டார்கள் என்ற நம்பிக்கையை பலப்படுத்த வேண்டுமானால், இராவணனை சிங்களவனாக்க வேண்டிய தேவையும் அதனோடு இணைந்து ஏற்படுகிறது. இலங்கை மன்னர்களில் “எல்லாளன்” என்ற “தோற்கடிக்கப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு எதிரியைத்” தவிர மற்ற அனைவரும் சிங்களவர்களே என்றதொரு “கடந்த காலத்தை” கட்டியெழுப்பும் கைங்கரியத்தையே இன்று “சிங்கள-பௌத்த” பேரினவாத சக்திகள் முன்னெடுக்க விளைகின்றன.  

இந்த வரலாறு எழுதும் போட்டியில் தமிழர்களின் நிலை என்ன என்பது பல தமிழர்களிடையேயும் இருக்கும் முக்கிய கேள்வி. தமிழர்கள் வரலாறு பற்றியதும் “பயன்தரு கடந்த காலத்தை” கட்டியெழுப்புவதுமான போட்டியில் பங்கேற்கத்தேவையில்லை என்பது சில தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தாகும். நாம் எப்போது இங்கு வந்தோம் என்பது எம்முடைய இன்றைய தேச அடையாளத்தையும், இருப்பையும் பாதிக்காது, பாதிக்கக்கூடாது என்பது அவர்களது கருத்தாகும்.

மறுபுறத்தில், “தமிழ்க்கடவுள்” முருகன் “கத்தரகம தெவியா” ஆனதும், இன்று திருகோணமலை “கோகண்ண” ஆகிக்கொண்டிருப்பதுமெல்லாம் தமிழர்களின் அடையாளச் சிதைப்புகள் என்று பல தமிழர்கள் கோபம் கொள்கிறார்கள். சிவபக்தனான இராவணன் தமிழனே, அவன் எப்படி சிங்களவனாக முடியும் என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் தமது வரலாற்றை மீட்க வேண்டும் என்பது அவர்களது சூளுரையாக இருக்கிறது.  

வரலாறு பற்றி நாம் சிந்திக்கும் போது, இங்கு ‘புலிகேசிகள்’ தம்முடைய வரலாறு நூறு வருடங்களின் பின்னர் வரப்போகிறவர்களுக்குத் தெரியவா போகிறது என, தாமே மிகைப்படுத்தி எழுதுவதாக நாம் நினைப்பது தவறானதாகும். உண்மையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புலிகேசியின் தேவை ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஏற்படும் போது, அவர்களே புலிகேசி பற்றிய வரலாற்றை தமக்குத் தேவையான விதத்தில் தேடிக்கட்டமைத்துக்கொள்வார்கள். புலிகேசி எப்படி இருந்தான் என்பதை விட, புலிகேசி எப்படி இருந்தான் என்று இருப்பது அவர்களுக்குப் பயனுள்ளதோ, அந்த வகையில் புலிகேசி கட்டியமைக்கப்படுவான். புலிகேசி அவர்களுக்கு பயனுள்ள கடந்த காலத்தை தராத பட்சத்தில், அவன் எத்தகையவனாக இருந்தாலும், அவன் வரலாற்றில் இடம்பெறமாட்டான். இதுதான் வரலாற்றின் யதார்த்தம்.

அதனால்தானோ என்னவோ “வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்கிறார் வோல்டேயர். ஆனால் இதனால் மட்டும் வரலாற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதனை நிராகரித்துவிடவும் முடியாது. ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் ஊற்று அதனுடைய வரலாறாகவே கருதப்படுகிறது. அதனால்தான் மனிதக்கூட்டங்கள் வரலாறு பற்றி பெருங்கரிசனை கொண்டிருக்கின்றன. அதனால்தான் வரலாற்றைப் புனைவதில் அவை சிரத்தை கொள்கின்றன. ஆனால் இந்த வரலாற்றுப் புனைவுச் சண்டைகளுக்குள் வரலாறு சிலவேளைகளில் தொலைந்துதான் போய்விடுகிறது.   

நிகழ்கால வாழ்வுக்கு வரலாற்றின் பங்களிப்பு என்பது குறைவானதே, ஆயினும் இன்றைய மனிதக் கூட்டங்களுக்கு அது இன்றியமையாததொன்றாக இருக்கிறது. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் அது. நாமாக உருவாக்கிக்கொண்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே!”.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாறு-முக்கியம்-அமைச்சரே/91-253149

//ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. //

சிறப்பான ஆய்வுக் கட்டுரை .  வரலாறுகள் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுவதும், தொல்பொருள் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதும் இன்றியமையாதது.  வெறும் வாய்வழிச் சொற்களும் புராணங்களும் திரிக்கப்பட்டு வரலாறுகள் மதவாதிகளாலும் இனவாதிகளாலும் மாற்றப்படுவது நடைமுறையில் வந்துவிட்டது துயரமே.

வரலாறு முக்கியம் தான் அமைச்சரே !

Link to comment
Share on other sites

6 hours ago, தோழி said:

//ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. //

சிறப்பான ஆய்வுக் கட்டுரை .  வரலாறுகள் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுவதும், தொல்பொருள் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதும் இன்றியமையாதது.  வெறும் வாய்வழிச் சொற்களும் புராணங்களும் திரிக்கப்பட்டு வரலாறுகள் மதவாதிகளாலும் இனவாதிகளாலும் மாற்றப்படுவது நடைமுறையில் வந்துவிட்டது துயரமே.

வரலாறு முக்கியம் தான் அமைச்சரே !

நீங்கள் கூறியது எமது தமிழர்களை பொறுத்தவரை நிஜமாகி உள்ளது. எமது தமிழர் வரலாறு சரியாக ஆவணப்படுத்தாத தவறை எமது முன்னோர்கள் இழைத்தமையால்,  இன்று பழைய உதாவாக்கரை புராணங்கள் உண்மை வரலாறு 

என்று சில பழமைவாத முன்னோர்களால் கடத்தப்பட்டு,  வாய்வழிக் கதைகள் எல்லாம் வரலாறு என்று பொய்யுரைக்கப்பட்டு,  எமது உண்மையான பெருமைகள் எல்லாம் சிதைக்கப்பட்டு,  இன்றய நிலையில்  வெட்டி பெருமைகள் தான் தமிழர்களின் சொத்து என்ற நிலையை  உருவாக்கியுள்ளார்கள். 

எந்த மடையனோ எமக்குள் திணித்த பக்கா மூடநம்பிக்கைகள் எல்லாம் எமது வரலாறு என்று  அதற்கு முட்டுக்கொடுக்க பொய்களை வாரி இறைக்க வேண்டிய நிலையை எம்மவருக்கு ஏற்படுத்தி சென்றுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்கள் கூறியது எமது தமிழர்களை பொறுத்தவரை நிஜமாகி உள்ளது. எமது தமிழர் வரலாறு சரியாக ஆவணப்படுத்தாத தவறை எமது முன்னோர்கள் இழைத்தமையால்,  இன்று பழைய உதாவாக்கரை புராணங்கள் உண்மை வரலாறு 

என்று சில பழமைவாத முன்னோர்களால் கடத்தப்பட்டு,  வாய்வழிக் கதைகள் எல்லாம் வரலாறு என்று பொய்யுரைக்கப்பட்டு,  எமது உண்மையான பெருமைகள் எல்லாம் சிதைக்கப்பட்டு,  இன்றய நிலையில்  வெட்டி பெருமைகள் தான் தமிழர்களின் சொத்து என்ற நிலையை  உருவாக்கியுள்ளார்கள். 

எந்த மடையனோ எமக்குள் திணித்த பக்கா மூடநம்பிக்கைகள் எல்லாம் எமது வரலாறு என்று  அதற்கு முட்டுக்கொடுக்க பொய்களை வாரி இறைக்க வேண்டிய நிலையை எம்மவருக்கு ஏற்படுத்தி சென்றுள்ளது. 

இன்னும் சில ஆண்டுகளின் பின் ஈழத் தமிழர் போராட்டத்தையும் யார் யாரோ விதமாக பதிவிட்டுள்ளார்களென கூறக் கூடிய கூட்டமொன்று உருவாகும்.

இப்பவே அப்படியொரு கூட்டமிருக்கு என்பது வேதனைக்குரிய விடயம்; அவர்கள் போராட்டதையும் கொஞ்சைப்படுத்த தொடங்கிவிடார்கள் /  போராடியிருக்க தேவையில்லை என்கிறார்கள். தமிழன் என்று சொல்லி திரியும் முதுகெலும்கிள்ளாத சிலர்

எப்படிப்பட்ட ஆவணத்தை ஏதிர்பாக்கின்றீர்கள்.? 

எப்படி ஆவணப்படுத்த வேண்டும்? 

யாரால் இது ஆவணப்படுத்தபட வேண்டும்?

 

 

Link to comment
Share on other sites

21 minutes ago, உடையார் said:

இன்னும் சில ஆண்டுகளின் பின் ஈழத் தமிழர் போராட்டத்தையும் யார் யாரோ விதமாக பதிவிட்டுள்ளார்களென கூறக் கூடிய கூட்டமொன்று உருவாகும்.

இப்பவே அப்படியொரு கூட்டமிருக்கு என்பது வேதனைக்குரிய விடயம்; அவர்கள் போராட்டதையும் கொஞ்சைப்படுத்த தொடங்கிவிடார்கள் /  போராடியிருக்க தேவையில்லை என்கிறார்கள். தமிழன் என்று சொல்லி திரியும் முதுகெலும்கிள்ளாத சிலர்

எப்படிப்பட்ட ஆவணத்தை ஏதிர்பாக்கின்றீர்கள்.? 

எப்படி ஆவணப்படுத்த வேண்டும்? 

யாரால் இது ஆவணப்படுத்தபட வேண்டும்?

உருத்திரகுமாரனால் முடியும், விக்னேசுவரனால் முடியும், தமிநாட்டில் சீமானால் முடியும் என்றால் உங்களால், எங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆவணப்படுத்துவது எங்கள் அனைவரிலுமே தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

உருத்திரகுமாரனால் முடியும், விக்னேசுவரனால் முடியும், தமிநாட்டில் சீமானால் முடியும் என்றால் உங்களால், எங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆவணப்படுத்துவது எங்கள் அனைவரிலுமே தங்கியுள்ளது.

என்னால் ஏற்றுக் கெள்ள முடிகின்றது, ஆனா மற்றவர்களின் அகராதியில் ஆவணப்படுத்திற்கு வேறு வரைவிலக்கனமிருக்கு, ஆதாரங்கள் வேண்டும், ஏன் யாழ்களத்திற்கு கூட அறிவு பூர்வ ஆதரம் வேண்டும், எப்படி அறிவு பூர்வ ஆதாரம் எமது போராட்டத்திற்கு இணைப்பது

இன்னும் சில வருடங்களின்பின் கேட்பார்கள் அறிவுபூர்வ ஆதாரங்கள்

இணைய வழி / பேப்பரில் இருப்பதெல்லாம் கட்டுக்கதையாகும் ஒரு காலத்தில்

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

என்னால் ஏற்றுக் கெள்ள முடிகின்றது, ஆனா மற்றவர்களின் அகராதியில் ஆவணப்படுத்திற்கு வேறு வரைவிலக்கனமிருக்கு, ஆதாரங்கள் வேண்டும், ஏன் யாழ்களத்திற்கு கூட அறிவு பூர்வ ஆதரம் வேண்டும், எப்படி அறிவு பூர்வ ஆதாரம் எமது போராட்டத்திற்கு இணைப்பது

இன்னும் சில வருடங்களின்பின் கேட்பார்கள் அறிவுபூர்வ ஆதாரங்கள்

இணைய வழி / பேப்பரில் இருப்பதெல்லாம் கட்டுக்கதையாகும் ஒரு காலத்தில்

உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் இணைத்து உலகவரலாற்று ஆய்வு சபை ஒன்றை நிறுவவேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சரித்திரத்தில் புலமைபெற்றவர்களை அங்கத்தவர்களாக்க வேண்டும். ஒவ்வொரு இன மக்களின் வரலாற்றுபற்றிய குறிப்புகள் ஆவணங்களை அங்கு சேமித்து, உண்மை, பொய், திரிபுகள் பற்றி ஆராய்ந்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் இடமாகவும், தீர்ப்புகளை உலக நாடுகளின் அரசுகளும் ஏற்றுக்கொள்ள வைக்கும் இடமாகவும் அந்தச்சபை அமையவேண்டும். இது முடியாத காரியமல்ல, ஐ.நா சபை, உலக நீதிமன்றம் போன்றவை உலகில் உருவாகித்தானே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

இன்னும் சில ஆண்டுகளின் பின் ஈழத் தமிழர் போராட்டத்தையும் யார் யாரோ விதமாக பதிவிட்டுள்ளார்களென கூறக் கூடிய கூட்டமொன்று உருவாகும்.

இப்பவே அப்படியொரு கூட்டமிருக்கு என்பது வேதனைக்குரிய விடயம்; அவர்கள் போராட்டதையும் கொஞ்சைப்படுத்த தொடங்கிவிடார்கள் /  போராடியிருக்க தேவையில்லை என்கிறார்கள். தமிழன் என்று சொல்லி திரியும் முதுகெலும்கிள்ளாத சிலர்

எப்படிப்பட்ட ஆவணத்தை ஏதிர்பாக்கின்றீர்கள்.? 

எப்படி ஆவணப்படுத்த வேண்டும்? 

யாரால் இது ஆவணப்படுத்தபட வேண்டும்?

 

 

உடையார், வரலாறு என்பது சம்பவங்களின் தொகுப்புகள் தானே? ஆனால் அந்த சம்பவங்களின் பின்புலம் (context) , வியாக்கியானம் (interpretation) என்பவை எழுதுபவரின் சார்பினால் மாறுபடும். நான் நினைக்கிறேன், தமிழர்கள் தங்களிடையே தம் வரலாறு குறித்து உரையாடும் போது நடந்த சம்பவங்களையே நடந்தவையாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை! இந்த மிக அடிமட்டத்தைத் தாண்டாமல் தமிழர் வரலாற்றை யாரும் நம்பிக்கையாக எழுதும் நிலை வராது! 

மேலே பாஞ்ச் சொன்ன விக்னேஸ்வரன் ஐயாவோ, உருத்திரகுமாரனோ எழுதும் வரலாற்றை நான் சரியாகப் பதிவு செய்யப் படும் வரலாறாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். காரணம், நான் சொன்னது போல சம்பவங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் சார்புடையோர் இவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

உடையார், வரலாறு என்பது சம்பவங்களின் தொகுப்புகள் தானே? ஆனால் அந்த சம்பவங்களின் பின்புலம் (context) , வியாக்கியானம் (interpretation) என்பவை எழுதுபவரின் சார்பினால் மாறுபடும். நான் நினைக்கிறேன், தமிழர்கள் தங்களிடையே தம் வரலாறு குறித்து உரையாடும் போது நடந்த சம்பவங்களையே நடந்தவையாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை! இந்த மிக அடிமட்டத்தைத் தாண்டாமல் தமிழர் வரலாற்றை யாரும் நம்பிக்கையாக எழுதும் நிலை வராது! 

மேலே பாஞ்ச் சொன்ன விக்னேஸ்வரன் ஐயாவோ, உருத்திரகுமாரனோ எழுதும் வரலாற்றை நான் சரியாகப் பதிவு செய்யப் படும் வரலாறாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். காரணம், நான் சொன்னது போல சம்பவங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் சார்புடையோர் இவர்கள்!

Methodology என்கின்ற விஞ்ஞான ரீதியிலான முறையைப் பின்பற்றும்போது தேவையற்ற கேள்விகளோ சந்தேகங்களோ எழுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. 

இங்கே தரவுகள் சரிபார்க்கப்படும். உறுதிப்படுத்தப்படும். விமர்சிக்கப்படும். மிக முக்கியமாக, பிழைகள் அடையாளம் காணப்படுமிடத்து அவை மீளவும் சரிபார்க்கப்பட்டு திருத்தப்படும். 

எமது சமூகத்தில் சமூகவியலுடன் தொடர்புபடும் துறைகளின் முக்கியத்துவம் உணரப்படவில்லை என்பது விசனத்திற்குரியது. ☹️

ஆனால் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

Methodology என்கின்ற விஞ்ஞான ரீதியிலான முறையைப் பின்பற்றும்போது தேவையற்ற கேள்விகளோ சந்தேகங்களோ எழுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. 

இங்கே தரவுகள் சரிபார்க்கப்படும். உறுதிப்படுத்தப்படும். விமர்சிக்கப்படும். மிக முக்கியமாக, பிழைகள் அடையாளம் காணப்படுமிடத்து அவை மீளவும் சரிபார்க்கப்பட்டு திருத்தப்படும். 

எமது சமூகத்தில் சமூகவியலுடன் தொடர்புபடும் துறைகளின் முக்கியத்துவம் உணரப்படவில்லை என்பது விசனத்திற்குரியது. ☹️

ஆனால் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம் 😏

கபிதான், முதல் பகுதியோடு ஒத்துப் போகிறேன். ஆனால், பௌதீகரீதியாக சான்றுகள் உள்ள சம்பவங்களையே தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக் கொள்ளாமல் conspiracy எனும் பாதையில் போகிறார்கள் என்பதற்கு இங்கே நடக்கும் உரையாடல்களே சாட்சிகள். இந்த முதல் படியையே தாண்டாமல் எங்கே சரிபார்ப்பதும், மீட்பதும்?

ஆனால், சமூகவியல் மானுடவியலில் நாம் முன்னேறவில்லை என்பது முழுவதும் சரியல்ல! கலாநிதி முருகர் குணசிங்கம் இன்னும் இருக்கிறார். அண்மையில் கூட தமிழர் வரலாற்றின் இரண்டாம் நூலை வெளியிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவரது முதலாவது நூல் நேரடியாக சார்பின்றி தகவல்களை முன்னிறுத்தும் நூலாக இருந்ததால் அதற்கு எங்களிடம் எவ்வளவு வரவேற்பு இருந்தது எனத் தெளிவில்லை! 

யாழ் பல்கலையில் இன்னும் சிலர் இருக்கின்றனர். எழுதுகிறார்களா என்று தெரியவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

கபிதான், முதல் பகுதியோடு ஒத்துப் போகிறேன். ஆனால், பௌதீகரீதியாக சான்றுகள் உள்ள சம்பவங்களையே தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக் கொள்ளாமல் conspiracy எனும் பாதையில் போகிறார்கள் என்பதற்கு இங்கே நடக்கும் உரையாடல்களே சாட்சிகள். இந்த முதல் படியையே தாண்டாமல் எங்கே சரிபார்ப்பதும், மீட்பதும்?

ஆனால், சமூகவியல் மானுடவியலில் நாம் முன்னேறவில்லை என்பது முழுவதும் சரியல்ல! கலாநிதி முருகர் குணசிங்கம் இன்னும் இருக்கிறார். அண்மையில் கூட தமிழர் வரலாற்றின் இரண்டாம் நூலை வெளியிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவரது முதலாவது நூல் நேரடியாக சார்பின்றி தகவல்களை முன்னிறுத்தும் நூலாக இருந்ததால் அதற்கு எங்களிடம் எவ்வளவு வரவேற்பு இருந்தது எனத் தெளிவில்லை! 

யாழ் பல்கலையில் இன்னும் சிலர் இருக்கின்றனர். எழுதுகிறார்களா என்று தெரியவில்லை! 

முருகரும் புஸ்பரட்ணமும் இல்லை என்றானபின்னர் ? ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

முருகரும் புஸ்பரட்ணமும் இல்லை என்றானபின்னர் ? ☹️

விளங்கவில்லை? என்ன சொல்ல வருகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

விளங்கவில்லை? என்ன சொல்ல வருகிறீர்கள்?

அவர்களின் தொடர்ச்சி .......☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அவர்களின் தொடர்ச்சி .......☹️

சித்தார்த்தன் மௌனகுரு (கிழக்குப் பல்கலை மௌனகுரு தம்பதியரின் வாரிசு) , கம்பன் கழகத்தில் இருந்து இப்போது ஜெயபுர பல்கலையில் இருக்கும் சிறி பிரசாந்தன் ஆகியோர் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், பல தமிழர்களின் காதில் தேன்வார்க்கும் விடயங்களை இவர்களிடமிருந்து கேட்க முடியாது! பேராதனையில் இவர்கள் இருவரோடும் பழகிய அனுபவத்தில் சொல்ல முடியும்! 

51+kl34rB6L._SX331_BO1,204,203,200_.jpg

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

இன்னும் சில ஆண்டுகளின் பின் ஈழத் தமிழர் போராட்டத்தையும் யார் யாரோ விதமாக பதிவிட்டுள்ளார்களென கூறக் கூடிய கூட்டமொன்று உருவாகும்.

இப்பவே அப்படியொரு கூட்டமிருக்கு என்பது வேதனைக்குரிய விடயம்; அவர்கள் போராட்டதையும் கொஞ்சைப்படுத்த தொடங்கிவிடார்கள் /  போராடியிருக்க தேவையில்லை என்கிறார்கள். தமிழன் என்று சொல்லி திரியும் முதுகெலும்கிள்ளாத சிலர்

எப்படிப்பட்ட ஆவணத்தை ஏதிர்பாக்கின்றீர்கள்.? 

எப்படி ஆவணப்படுத்த வேண்டும்? 

யாரால் இது ஆவணப்படுத்தபட வேண்டும்?

 

 

ஆவணப்படுத்தல் என்பது இன்றைய திகதியில் அல்லது இன்றய காலப்பகுதியில் நடந்தவற்றை ஒரு பொது இலக்கிய மையத்தில் எல்லோருக்கும் கிடைக்க கூடியதாய் அழியாமல், எதிர்கால சந்ததிக்காய்  பாதுகாத்து வைப்பது என்பது என் கருத்து.  அண்மைக் காலத்தில் தாயகத்தில்  'நூலகம்' என்னும் ஆவணப்படுத்தும் பொது மைய நிலையம் ஒன்று தமிழீழத்தின் போர் இலக்கியங்கள், சமூக இலக்கியங்கள், புலம் பெயர் மண்ணில் பதிவாக்கப்பட்ட இலக்கியங்களை ஆவணப்படுத்தி வருகிறார்கள் என அறிந்தேன்.
இதை யார் செய்கிறார்கள் என்ற விபரம் சரியாகாது தெரியவில்லை ஆனால் பத்மநாப ஐயா அவர்களும் இதில் பங்காற்றுவதாகக் கூறினார்.  பல நூல்கள் அவர்களிடம் சேர்ந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.