Jump to content

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

 

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார்.


அதையடுத்து அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுரேந்திரனை தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர் ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்தர் ஆஜர் படுத்தப்பட்டார். சுரேந்தரை வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க கடந்த 17 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதே கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் மீதும் இன்று  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/28100226/Black-crowd-On-Senthil-Vasan-Prosecution-under-the.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்து மதம் தொடர்பாக  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தும், இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் பேட்டி அளித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில், வேலு பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைத்திருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து சென்னை மதுரவாயலில் வைத்து இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/31122213/The-struggle-will-continue-until-Hinduism-is-eradicated.vpf

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வேல் பிடித்தால் போதுமா. வேலையும் கொடுக்க வேண்டும் / நாம் தமிழர் / bjp / தமிழ் தேசியன்

பிஜேபி எப்போதும் தமிழர்களை பயன்படுத்த நினைக்குமே தவிர நம்மை வளரவிடாது‌‌..

தமிழ் மண்ணின் வேலை தமிழர்களுக்கே வழங்கவேண்டும்..
 

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.