Jump to content

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

china-2-720x450.jpg

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தடை!

பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு சில தடையுத்தரவுகளை அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் உத்தரவின் படி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவல் பிரவுன்பேக், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ஸ்மித், செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோருக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், ‘அமெரிக்காவின் செயற்பாடுகள் இரு நாட்டு உறவை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. சீன இறையாண்மையை மீறி உள்நாட்டு விவகாரங்களில் யார் தலையிட்டாலும் அதனை ஏற்க முடியாது. சீன உள்விவகாரங்கள் குறித்தும், சீனாவுக்கு எதிராகவும் பேசிய நால்வருக்கு சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது’ என கூறினார்.

அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறு சீனா தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/அமெரிக்காவின்-முக்கிய-அர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங்குக்கு அமெரிக்கா வழங்கிவந்த சிறப்புரிமைகளை இரத்துச் செய்தார் ட்ரம்ப்.!

1594791071_1.jpg

தன்னாட்சிப் பிராந்தியம் என்ற வகையில் ஹொங்கொங்குக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த சிறப்புரிமைகளை இரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஹொங்கொங்கை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்திருத்தத்தை அமெரிக்கா நிறைவேற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

புதிய சட்டத்தால் சீனாவின் ஒரு அங்கமாகவே இனி ஹொங்கொங்கும் நடத்தப்படும் என வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் தெரிவித்தார்.

பிரிட்டனில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையின் கீழ் ஹொங்கொங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருந்தன.

ஆனால் சீனா அண்மையில் நிறைவேற்றிய புதிய பாதுகாப்புச் சட்டம், 1984 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹொங்கொங்க்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

சமீபத்திய பாதுகாப்பு சட்டம் 1997ஆம் ஆண்டு ஹொங்கொங் பிரிட்டனால் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

இந்தச் சட்டம் ஹொங்கொங்கில் இயங்கும் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்குக்கு தற்போது அமெரிக்கர்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் புதிய பாதுகாப்பு சட்டத்தால் இனி அவர்கள் சீனாவின் கடுமையான விசா விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஹொங்கொங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இனி அமெரிக்காவின் வரி விகிதம் அதிகரிக்கப்படும் .

இந்நிலையில் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் இடையே நடக்கும் பல நூறு கோடி டொலர் மதிப்பிலான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கும் எனவும் கருதப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே தன்னாட்சிப் பிராந்தியம் என்ற வகையில் ஹொங்கொங்குக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த சிறப்புரிமைகளை இரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

http://aruvi.com/article/tam/2020/07/15/14464/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.