Jump to content

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

சண்முகவடிவேல்  

பாராளுமன்ற  தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை நோக்கி நகர்கிறது. நீதியரசர் தலைமையிலான அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. வலிகாமம் பிரதேசத்திலும் வடமராட்சியிலும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் தேசிய மட்டத்தில் போட்டியிடும் கட்சிகளும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் வடமாகாணத்தில் அதிக நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றன.

பொதுவெளியில் அல்லது தென் இலங்கையில் ஜனநாயகம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் மையவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியும் தமக்கு அத்தகைய ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைத்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிக அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.முடிந்த வாரத்தில் புலி எதிர்ப்பு வாதியும் அவரது தோழரும் மிருசுவில் பகுதியில்  நடத்த முயன்று இடைவழியில் கூடியிருந்த மக்களிடம் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி கூட்டத்தினை கைவிட்டு வந்ததிலிருந்து நிலமை தலைகீழாகிவருவதனை அவதானிக்க முடிகின்றது.  அவ்வாறே அரியாலைக்குள்ளும் ஒரு சம்பவம் இரு வேட்பாளருக்கும் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பொது வெளியில் ஒரு கூட்டத்தினை நடாத்த முடியாத நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கடசியை பாராளுமன்றத்தில் தூக்கி நிறுத்த முயன்ற போது காணப்பட்ட ஒற்றுமையும் ஆலோசனையும்  தேர்தலில் காணமுடியாதுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான தேர்தலிலும் அத்தகைய ஒருமைப்பாடு இல்லாதுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அதில் நிகழும் பிழைகளையும் தவறுகளையும் வஞ்சகமான சுயநல அரசியலையும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இவர்கள் எப்படியெல்லாம் செயல் பட்டிருப்பார்கள் என்பது முக்கியமானது. விடுதலைப் புலிகள் தமது அமைப்புக்குள்ளேயே நிகழ்ந்த தவறுகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த விடயம். அத்தகைய பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேற்கொள்ள அவர்கள் இல்லாத போது அதனை தமிழ் மக்களே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை விடுதலைப் புலிகள் போல் தமிழ் மக்கள் செய்ய முடியாது. அதற்காகவே வாக்குச் சீட்டு உள்ளது.

wig 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எந்த விடயம் ஆதிக்கம் செய்கிறது என்பதுவும் தமிழ் மக்களுக்கு தெரியும்.முக்கிய காரணம் அவர்களுக்குள் எழுந்துள்ள போட்டி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை மீதிக் காலத்தில் எழுச்சி பெறாது எப்படி அழிப்பது என்பதற்கான போட்டியாகும். அது மட்டுமன்றி ஒரு கூட்டமைப்பாக அது செயல்பட முடியாது திண்டாடுகிறது. கடந்த இரு தசாப்த காலம் என்பது அதன் தலைமையிலும் பங்காளிக் கட்சிகளதும் பலவீனத்தை கோடிட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் உருவாக்கியது என கூக்குரல் இடும் தரப்பினருக்கு தெரியவில்லை கூட்டமைப்பு புலிகளால் எடுத்துவந்த இலட்சியத்தினை எப்படிச் சிதைத்துள்ளார்கள் என்பது. அது மட்டுமல்ல அவர்கள் உருவாக்கும் போது அதில் அங்கம் பெற்றவர்கள் எப்படி பிரிந்து தனியன்களாகவும் மாற்று என்றும் செயல்பட வேண்டிய நிலைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினர் எனத் தம்மை அழைத்துக் கொள்வார்கள் என்று. வெளியே கூறிக் கொள்ளலாம் நாம் அவர்களை வெளியேற்றவில்லை தாமாகவே வெளியேறினார்கள் என்று. அதற்கான உண்மைக் காரணத்தை கூட்டமைப்பின் ஆதிக்கவாதிகள் சொல்லாது விட்டால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைக்கிறார்கள்.

இதேநேரம் மாற்று என தம்மை அழைத்துக் கொண்டு அதன் ஊடாக வலுவான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளார் நீதியரசர் விக்னேஸ்வரன். அவர் ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து ஓர் உடன்பாட்டை வரைந்து அதன் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து ஆரோக்கியமாக முரண்பாடோ குழிபறிப்போ இன்றி பயணிக்கின்றார். அது மட்டுமல்ல தனது தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட துணிச்சலுடன் முன்வந்ததுடன் எல்லோரையும் அரவணைத்து பயணிக்கின்றார். அத்துடன் வடக்கையும் கிழக்கையும் ஒருங்கு சேர பயணிக்கும் தமிழ் மக்களது நீண்ட அபிலாசைக்குள் இயங்கும் அணியாக தம்மை வடிவமைத்து செயல்படுவது வியப்பாக உள்ளது.

வேறு எந்தத் தரப்பு குறிப்பிட்டாலும் மாற்று அணி என்பது விக்னேஸ்வரன் தலைமையிலான அணி என்பதற்கு அதிக உள்ளடக்கங்கள் அவ்வணியிடம் காணப்படுகிறது. வேறுபட்ட சக்திகளை ஒன்றிணைத்திருகிறது. வேறுபட்ட ஆளுமைகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களை தனிப்பட்ட நலனுக்கு அப்பால் களத்தில் நிறுத்தியுள்ள அணியாகவும் விளங்குகிறது.ஏனைய கட்சிகள் தமது பிரதான வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமே பெண்களை நிறுத்துகின்ற சந்தர்ப்பத்தில் பெண் தலைமைத்துவத்தினை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி பெண் வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நிதி கோரும் ஐரோப்பிய நாடுகள் போன்று செயல்படும் விக்னேஸ்வரன் தமது வேட்பாளர்களது சொத்து விபரத்தையும் காட்டிவருவது அதன் சிறந்த அரசியல் கலாசார பண்பினைக் காட்டுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக இருந்தாலும் சரி- வேறு தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் விருப்பு வாக்குக்காக தமக்குள்ளே சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.காட்டிக் கொடுப்புகளையும் குழிபறிப்புகளையும் பார்க்கும் போது இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் ஏதாவது பெற முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே தெரிகிறது. பிற கட்சிகளை குற்றம்சாட்டும் மாற்று அணி என தம்மை தாமே அழைத்துக் கொள்ளும் கட்சியினர் போடும் சண்டை அவர்களது கொள்கை வழித் தோன்றல்கள் என்பதன்  போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. இவர்களிடம் காணப்படும் கொள்கை பற்றுதல் கட்சிக்கானதா ? தமிழ் மக்களுக்கானதா? அல்லது விருப்பு வாக்குகளுக்கானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரை உடன்பாட்டுடனும் நட்புடனும் புரிந்துணர்வுடனும் செயல்படுகின்றனர். தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படும் போக்கு அவ்வணியிடம் காணப்படுகிறது.

எனவே தமிழ் மக்கள் கூட்டணியினரே மாற்று அணியாகவும் தெளிவான கொள்கை உறுதிப்பாடு உடையவர்களாகவும் காணப்படுவதுடன் கட்டுக் கோப்புடனும் ஒழுங்குடனும் பயணிக்கின்றனர். அவர்களது தலைமையிடம் காணப்படும் உண்மையும் அரசியல் அபிலாசையும் அவ்வணிக்கு மூன்றுக்கு மேற்பட்ட ஆசனத்தை கொடுக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய யாழ்ப்பாணத் தேர்தல்’ மாவட்டதிலேயே மூன்று ஆசனம் கிடைக்குமாயின் வடக்கு கிழக்கில் அதிக ஆசனத்திற்கு அவ்வணிக்கு வாய்ப்புண்டு. மக்கள் சரியானதை தேர்தெடுக்கும் திறன் உடையவர்கள் என்பது தேர்தலுக்கு பின்பாவது ஏனைய தரப்புக்கள் புரிந்து கொள்வார்கள்.

 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாணத்தில்-சூடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சமகாலம் இணையத்தளப் பத்திரிகை இந்திய ஆதரவுப்பத்திரிகை என் காரணம் இதேஎ பத்திரிகை சம்பந்தன் இந்தியாவை ஒதுக்கி ரணிலுடன் அரசியல் செய்ததி இன்னுமொரு கட்டுரையில் விபரிக்கிறது. தவிர விக்கியரை இப்போது இயக்குவது இந்தியா என்பது அனைவர்க்கும் தெரிந்தவிடையம்.

அதன் ஒரு பகுதியாகவே சென்னையில்  நடிகர் ரஜனியுடனான சந்திப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.