-
Tell a friend
-
Topics
-
6
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
பதிலுக்கு நன்றி. உங்கள் ஈசி சேர் தர்க்கத்துக்குள்ள போக விரும்பவில்லை. இதிலே, சிலர், லைக் வேறு போட்டிருக்கிறார்கள். தயவு செய்து, இந்த வகையான சிந்தனைகளை விடுத்து, அவர் சொல்ல வருவதை கவனியுங்கள். ஒரு முக்கிய கவனிப்பினை சொல்ல விரும்புகிறேன். கறி, தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு மேலான சொத்து. எமது இலக்கியங்களில் கூட, ஏன் பைபிளில் கூட குறிப்புகள் உண்டு. இந்தியன் கறி என்று பிரிட்டனில் புகுந்து கொண்ட. இந்தக்கறியை , தாம் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தினோம் என்று பிரிட்டிஷ்காரரும், தமதே என்று பங்களாதேஷ்காரரும், இல்லை எமதெ என்று தாய், மலே, கரிபியன், ஜப்பானீஸ், சீனா நாட்டவரும் சொல்லி, இன்று பிரிட்டனினின் £4.2பி கறி மார்க்கெட் பெரும் அடையாள சிக்கலில் மாட்டி உள்ளது. இதனை curry crisis என பிரிட்டிஷ் மீடியா சொல்கிறது. சிங்களவர்கள் வேறு, கறி எமதே என்கிறார்கள். இதுக்குள்ள, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடி அமினால் துரத்தப்பட்டு பிரிட்டன் வந்த, குஜராத்தி வம்சாவளி பதக் என்பார், கறி பேஸ்ட் என்னும் ஏதோ ஒரு கோதரியை அறிமுகப்படுத்தி, இப்போது, இந்திய சந்தைக்கு போகிறாராம். அடப்பாவியலே, எமது கறி பேஸ்ட், அம்மியில் இன்றும் அரைக்கப்படும் பத்தியம். இதனை எப்படி நிறுவுவது? எங்களுக்கு சொந்தமானதை, சொந்தமானது என்று சொல்லாமல் இருப்பது கூட பரவாயில்லை. இந்த மாதிரி, நியாங்களை பிளப்பதும், அந்த முயல்வு எடுபவர்களையாவது, நக்கல், கிரந்தம் விட்டு நாமே கல் எறிவது என்ன நியாயம்? ஒடிசா பாலு முடிந்தளவு முயல்கிறார். கோசன், ஆமைகளை பிடித்து, சிப்பினை பொருத்தி, எப்படி நகர்கிறது என்று பார்க்கலாமே என்கிறார். சரியான கருத்து. ஆனால், இது அவருக்கு தெரியாமல் இருக்கலாம், அதுக்கான வசதி இல்லாமல் இருக்கலாம், அதுக்குரிய, தொடர்புகளை உண்டாக்கி, கருத்தாடல் செய்து, பிரச்சனைகளை விளங்கி, உதவிகளை ஒருங்கிணைக்கலாம். தமிழர்கள் கறியினை மீட்டு எடுப்பது எவ்வளவு கடினம் என்று கவனியுங்கள். இந்த மீட்டு எடுப்பில், ஈழ தமிழர்களுக்கு மேலதிக பொறுப்பு இருப்பதனை கவனியுங்கள். காரணம் மிளகாயுடன் வந்த போர்த்துக்கேயர் இந்திய தமிழர்களை ஆளவில்லை. எம்மையே ஆண்டார்கள். இந்திய தமிழர்கள், இந்தியாவினுள்ளேயும், ஈழ தமிழர்கள் இலங்கைக்குள்ளும் சிக்கி கொண்டு விட்டார்கள் என்பதனையும் புரியுங்கள். இந்த போர்த்துக்கேய, டச்சு காரர்களின் யாழ்ப்பாண ராஜ்ய 300 வருட ஆட்சி விபரமே, பிரிட்டிஷ் கார்களின் கறி தாம் அறிமுகப்படுத்தியது என்பதை உடைக்க தேவையானது என்னும் முக்கிய விடயம் என்பதனையும் கவனியுங்கள். இடையே இருந்த சுதந்திர வன்னி ராஜ்யமே, யாழ் ராஜ்ஜியம் தனியாக ஆளப்பட வேண்டிய தேவையாக இருந்தது என்பதை கவனியுங்கள். ஆகவே, நானும் தின்ன மாட்டேன், தின்பவர்களையும் விடமாட்டேன் என்னும் வைக்கோல் பட்டறை நாய்க்குட்டி மன நிலையினை விடுத்தது, ஆகக்குறைந்தது, கடந்தாவது போங்க. இதுக்கு மேல் நான் இங்கே மினக்கடப்போவதில்லை. பதில் போட்டு, பதில் எதிர்பார்க்க வேண்டாமே.
-
By விளங்க நினைப்பவன் · Posted
மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் அயோக்கியர்கள் இவர்கள் என்று Zuma சொன்னது 💯 உண்மை. -
By தமிழ் சிறி · Posted
அந்தம்மாவுக்கு.... பூட்டப் பிள்ளைகளும் இருக்காம், பாஞ்ச் அண்ணே. 🤪 -
இது நேர்மை. பாராட்டுக்கள். 👍
-
By பிழம்பு · பதியப்பட்டது
சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.தி.மு.க கூட்டணி! அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்ற வாக்கு சதவிகிதம் - 43.7. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.ம.மு.க! டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க உடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 சதவிகித வாக்குகள் அ.ம.மு.க பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ம.நீ.ம! நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 0 முதல் 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 6.7 சதவிகித வாக்குகளை ம.நீ.ம கவரும் என்ற தகவலும் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர்! தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது ஏபிபி. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு 36.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு 25.5 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. `தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 166 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளது' என்கிற ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் நோக்கர்களின் பார்வை என்னவாக இருக்கிறது? ``166 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க கூட்டணியில் முக்கிய இடம் பிடித்துள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒருவேளை தி.மு.க தலைமை, கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் 166 இடங்கள் என்பது சந்தேகமே. தி.மு.க - அ.தி.மு.க மேலும், அ.ம.மு.க-வை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி இணைக்கப்பட்டால், அ.தி.மு.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க கூட்டணியின் எண்ணிக்கை குறையும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் நிலவரம் குறித்து, ``மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும். புதிய வாக்காளர்கள் பலரும் ம.நீ.ம-வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், 4 சீட்கள் வரை அக்கட்சி வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு இடத்தை அக்கட்சி கைப்பற்றுவதே சிரமம்தான். அ.ம.மு.க-வுக்கு சசிகலா வருகை பலமாக அமையும். சசிகலா வருகைக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து சிலர் அ.ம.மு.க பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அ.ம.மு.க, நிச்சயம் ஒரு சில இடங்களில் வெற்றிபெறும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில், ``இது தி.மு.க-வின் ஐபேக் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு. இதில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் போலியானது என இன்னும் 3 மாதங்களில் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தைரியமாகச் சவால் விடுகிறார்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?! | ABP Opinion poll and political analyst views on 2021 Tn election (vikatan.com)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.