Jump to content

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!

1594753938_sam.jpg

"தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அந்த அரசுடன் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தப் பேச்சு நடத்தப்படும்.

தமிழ் மக்கள் விரும்பும் நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வந்தால் அதை நாம் மனதார ஏற்போம். ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என்பதை கடந்த அரசிடமும் இந்த அரசிடமும் நாம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

எனவே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விரும்பும் தீர்வைத் தந்தே ஆகவேண்டும். இல்லையேல் சர்வதேசம் அடுத்தகட்ட நடவடிக்கைளை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேசைக்குச் செல்ல வேண்டுமெனில் அசைக்க முடியாத பலத்துடன் செல்ல வேண்டும். எனவே, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கடந்த தடவையை விட இந்தத் தடவை மேலும் அதிகரிக்கச் செய்ய நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் 'வீடு' சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/14/14452/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்காக அடிபணியப்போவதில்லை. சலுகைக்காக அடிபணிவோம். என்னே தெளிவு 😏

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனவே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விரும்பும் தீர்வைத் தந்தே ஆகவேண்டும். இல்லையேல் சர்வதேசம் அடுத்தகட்ட நடவடிக்கைளை எடுக்கும்.

ஏன் சும்மிடம் இருந்த நம்பிக்கை சம்முக்கும் போய்விட்டதா...😲

Link to comment
Share on other sites

17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்."

சம்மந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழின விரோதிகளின் அடிமையாக செயற்படாதே வரலாறு!

இப்போது தேர்தலில் ஏமாறக்கூடிய பாமர மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவர இப்படியான தனக்கு சம்பந்தமே இல்லாத பொய்களை தாராளமாக உளறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குதிரை கஜாவை விட மோசமான நிலைக்கு ஐயா போய்விட்டார்,
என்னே பரிதாபம் ..கஜா தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் என்று தமிழர் தலையில் மிளகாய் அரைக்க பார்த்தார், ஐயா சர்வதேச சமூகம் என்று அரைக்க வெளிக்கிட்டிருக்கிறார்,
கூத்தமைப்பு அரசியல்  வங்குரோத்தின் உச்சத்தில், இம்முறை உறைக்க உறைக்க கிழக்கில் பாடம் படிப்பிக்கப்படும்   

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

குதிரை கஜாவை விட மோசமான நிலைக்கு ஐயா போய்விட்டார்,
என்னே பரிதாபம் ..கஜா தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் என்று தமிழர் தலையில் மிளகாய் அரைக்க பார்த்தார், ஐயா சர்வதேச சமூகம் என்று அரைக்க வெளிக்கிட்டிருக்கிறார்,
கூத்தமைப்பு அரசியல்  வங்குரோத்தின் உச்சத்தில், இம்முறை உறைக்க உறைக்க கிழக்கில் பாடம் படிப்பிக்கப்படும்   

குறிப்பாக சம்மந்தன் போன்ற நீண்டகால முட்டுக்கொடுப்பு ஒட்டுண்ணி அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டப்படும் வகையில்  அவர்கள் தோற்கடிக்கப்படாவிட்டால் கிழக்கின் நிலை இன்னமும் மோசமடையும்.

கிழக்கு மக்களின் திருகோணமலை மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியில் இவை தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

குறிப்பாக சம்மந்தன் போன்ற நீண்டகால முட்டுக்கொடுப்பு ஒட்டுண்ணி அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டப்படும் வகையில்  அவர்கள் தோற்கடிக்கப்படாவிட்டால் கிழக்கின் நிலை இன்னமும் மோசமடையும்.

கிழக்கு மக்களின் திருகோணமலை மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியில் இவை தங்கியுள்ளது.

இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலையில் இன்று ஈழத் தமிழ்மக்கள் உள்ளனர். உலகில் தமிழ் என்றுமே அழியாது. ஆனால் தமிழர் நாங்கள், ஈழத்தில் ஒன்றுபடாமல் இருந்து, எங்களை நாங்களே அழித்துக்கொள்வோம் என்பதுமட்டும் நிச்சயம். 😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 10:04, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.!

காசுக்கு அடி பணிவோம் என்கிறாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.