Jump to content

பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.!

comet01-1594804548.jpg

டெல்லி: உலக விஞ்ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு மிக அருகில் வந்து இருக்கிறது.

நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்த இரண்டு மாதமாக சூரியன் அருகே சுற்றி வந்துவிட்டு, சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்து தப்பித்து அசாத்திய பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தை அங்கேயே முடித்துக் கொள்ளாமல், நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் அதன்பின் புதன் கிரகத்தை நோக்கி சென்றது.

இடையில் வெள்ளி கிரகத்தின் சுற்று பாதையை கடந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமியை நோக்கி வந்துள்ளது. இதன் அசாத்திய பயணத்தை நாமே இனி கண்கூடாக பார்க்க முடியும் என்கிறார்கள்.

பூமியை நெருங்கிவிட்டது

கடந்த 13 அல்லது 14ம் தேதிகளில் இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் மிக சரியாக நேற்று காலை இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியை நெருங்கியது. பூமிக்கு மிக அருகில் இது தற்போது கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இதை நம்முடைய வெறும் கண்களால் பார்க்க முடியும்.

எப்போது வரை

ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இதை காண முடியும். இரவு நேரங்களில் இதை எளிதாக பார்க்கப்படுகிறது. தினமும் மாலை நேரத்தில் 7 மணிக்கு பிறகு 20 நிமிடங்கள் வரை பார்க்க முடியும். சில இடங்களில் பைனாகுலர் வைத்து இதை பார்க்க முடியும். இந்தியாவில் இருந்தும் கூட இதை பார்க்க முடியும்.

பூமியில் விழாது

இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் பூமியில் விழ வாய்ப்பு இல்லை. பூமியை கடந்து இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் செல்லும். செவ்வாய் கிரகத்தை நோக்கி இந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் செல்லும் என்றது எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் சூரியனுக்கு மிக அருகில் சி/2020 எப்3 (C/2020 F3) என்ற வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இதற்கு நியோவைஸ் (NEOWISE) என்று பெயர் வைக்கப்பட்டது.

வீடியோ வெளியிட்டது

தற்போது விண்வெளியில் இருக்கும் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இதை புகைப்படம் எடுத்துள்ளது. அதோடு பூமிக்கு அருகே நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்து செல்லும் வீடியோவையும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது. முதலில் இது பூமியில் இருந்து 200 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

மிக பெரியது

 இந்த வால் நட்சத்திரம் வைஸ் (Wide-field Infrared Survey Explorer - WISE) எனப்படும் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பூமிக்கு எந்த விதமான ஆபத்தும் கிடையாது. சூரிய ஒளியில் கூட அழியாத அளவிற்க்கு இது சக்தி வாய்ந்தது ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களில் இதுதான் மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட வால் நட்சத்திரம் ஆகும் ஆகும்.

https://tamil.oneindia.com/news/delhi/neowise-comet-is-already-close-to-the-earth-and-you-can-see-it-391413.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பார்க்கத் தவறினால் இனி 6,800 வருடங்களின் பின்னரே இந்த வால் நட்சத்திரம் வரும்.!

107664220_2559887277557291_8904881361821

உலகம் முழுக்க தற்போது தெரிந்து கொண்டிருக்கும் NEOWISE எனும் வால் நட்சத்திரம் வடமேற்கு திசையில் ஜூலை 14 முதல் அடுத்த 20 நாட்களுக்கு சூரியன் மறைந்த பின் தென்படுவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இதனை இன்னும் 6,800 ஆண்டுகளுக்கு பார்க்கவே முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.

அதன் சுற்றுவட்டப்பாதை மிக நீளமானதால் 6800 வருடங்களின் பின்னர்தான் அதனை மீண்டும் காண முடியும்.

வானில் வடமேற்குப் திசையில் சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இந்த வால் நட்சத்திரம் கடந்த ஜூலை 3 ஆம் திகதியில் இருந்து பூமிக்கு அருகே மிக வேகமாக வரும் என்று ஏற்கனவே நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

வெறும் கண்ணில் பார்க்கும்போது உங்களுக்கு அருகில் எங்கும் விளக்கு எரியக் கூடாது. வெளிச்சம் இருக்கக்கூடாது. சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் காத்திருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண வேண்டும்.
வெறும் கண்ணில் பார்க்கும்போது தெளிவாக தெரியாது. டெலஸ்கோப்பில் பார்க்கும்போது மிக தெளிவாக அதனை பார்க்க முடியும்.

இந்த வால் நட்சத்திரம் பாதி நீராலும், பாதி தூசுனாலும் ஆனது. 13 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் அளவிற்கு இந்த நட்சத்திரத்தில் தண்ணீர் இருக்கும்.
இது பூமியில் இருந்து சுமார் 70 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. ஒரு வினாடிக்கு 40 மைல் தூரத்திற்கு இது பயணிக்கும். இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நீங்களும் இன்னும் சில நாட்களுக்கு நவீன கமெராக்கள் அல்லது டெலஸ்கோப் மூலம் இதனை கண்டு ரசிக்க முடியும்.்

http://www.pagetamil.com/135856/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.