Jump to content

பெருவெளி அகதிமுகாம் படுகொலை 15 யூலை 1986


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெருவெளி அகதிமுகாம் படுகொலை 15 யூலை 1986

On Jul 15, 2020

திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உளள்து. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும்.

1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பாடசாலை தமிழ் மக்களின் அகதி முகாமாக இயங்கிவந்தது. கிராமசபை இயங்கி வந்த காலங்களில் மல்லிகைத்தீவு கிராமசபை பெரும்பான்மையான தமிழ்க் கிராமங்களையும், சில சிங்களக் கிராமங்களையும் உளள்டக்கியிருந்தது. அவற்றில் தெகிவத்தை, நீலாப்பொல போன்ற சிங்களக் கிராமங்களில் இருந்த மக்களில் பலர் ஊர்காவற்படைக்கு இணைக்கப்பட்டு பணிக்கமர்த்தப்பட்டனர். இவர்கள் சிறீலங்கா

இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்கள் அழிப்பில் ஈடுபட்டனர். ஊர்காவற்படையில் அந்தநத்க் கிராமத்தவாக்ள் பணியாற்றினார்கள். இவர்கள் ஆரம்பகாலங்களிலிருந்தே தமிழ் மக்களோடு ஒன்றாகப் பழகியிருந்தமையால் கிராமத்தவர்கள் சம்பந்தமாக பூரணமாக அறிந்திருந்தனர்.

109837444_178546110306335_3855814901264515.07.1986 அன்று தெகிவத்தை, நீலாப்பொல கிராமத்திலிருந்த ஊர்காவற்படையினருடன் இராணுவத்தினர், பொலீசாரும் இணைந்து நள்ளிரவுவேளை பெருவெளி அகதிகள் முகாமைச் சுற்றியிருந்த பகுதிகளில் மறைந்திருந்தனர். முகாமைச் சூழவிருந்த பெருவெளி மணல்வெளிக் குடியிருப்புகள், இரணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டிருந்ததால், இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதில்லை, இதனால் இரவு வந்த இராணுவத்தினரின் நடமாட்டம் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பொழுது புலர்ந்து வந்து கொண்டிருந்த வேளையில் முகாமிற்குள் புகுந்த இராணுவத்தினர் சுடத்தொடங்கினர்கள். அத்தோடு தத்தமது இருப்பிடங்களுக்குக் காலையில் திரும்பிய மக்கள் மீதும் ஒளிந்திருந்த இராணுவத்தினரும் காவற்றுறையினரும் சுட்டார்கள. திகைப்படைந்த மக்கள் நாலாதிசையும் பாய்ந்து ஓடத்தொடங்கினர். பயந்தேடிய மக்களை மறைந்து நின்ற படையினர் சுட்டுக்கொன்றனர். அவ்வாறிருந்தும் பெருமளவு மக்கள் ஓடித் தப்பிக்கொண்டனர்.

குழந்தைகள், பெண்கள், மாணவாக்ள் உட்பட மொத்தமாக நாற்பத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். இருபது பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவிற்குடப்டுத்தப்பட்டனர்.

இந்தப் படுகொலைச் சம்பவம் நண்பகல் ஒரு மணிவரை நீடித்தது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நலன்விரும்பிகளும் தொண்டர் நிறுவனங்களும் காயமடைந்தவாக்ளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போதிருந்த மூதூர் பிரசைகள் குழுத்தலைவர் அமரர் மு.கனகசபையும் வேறு சிலரும் அவ்விடத்திற்கு விஜயம் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மூதூர் அரசினர் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்று மறுநாள் பெருவெளி சேமக்காலையில் அடகக் ம் செய்தனர்.

முருகப்ப்பன் தங்கராஜா (பெருவெளி வட்டட் விதானையார்) இதுபற்றி கூறுகையில்,

“1986ஆம் ஆண்டு பெருவெளியில் அகதி முகாம் ஒன்று இருந்தது. இராணுவத்திற்குப் பயநத் மக்கள் அனைவரும் அங்கு தங்கியிருந்தார்கள். 15.07.1986 அன்றிரவு விடியற்காலை 3.00 மணியளவில் அந்த இடத்தை

இரவோடு இரவாக வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்தார்கள. விடிந்தவுடன் கண்ணிற்பட்ட அனைவரையும் சுட்டுக்கொன்று பல அட்டகாசங்களைச் செய்தனர். நன்கு விடிந்தவுடன் முகாம்களுக்குள் புகுந்து குடிசைகள் அனைத்திற்கும் நெருப்பு வைத்துவிட்டு அந்த வீடுகள் பத்தி எரிந்துகொண்டிருக்கும் பொழுது பொதுமக்களைப் பிடித்துச் சுட்ட பின்னர் காலிலும் தலையிலும் பிடித்து எரியும் நெருப்புக்கு மேல் தூக்கி விசீனர்.

உயிரோடு இருந்தவர்களைக் கூட எரியும் நெருப்பிற்குள் தூக்கி ப்போட்டார்கள். இப்படியாகக் காணும் இடமெல்லாம் எரிந்துகொண்டிருந்தது. அந்த நேரம் வெடிச்சத்தத்திற்குப் பயந்து இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து சில வீடுகளிற் கூடியிருந்தார்கள். அப்படியிருந்தவர்களில் ஆண்களை எல்லாம் பிடித்து அங்கிருந்தோர்க்கு முன்னாலேயே வைத்து சுட்டும் வெட்டியும் கிணற்றுக்குள் போட்டார்கள். அபப்டிச் சுடப்பட்டு இறந்தவாக்ளின் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சடலங்களை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டுபோய் முகங்களிற்கு அசிட் ஊற்றி யாரென அடையாளங் காண முடியாதளவிற்கு அவர்களுடைய முகாம்களுக்குக் கொண்டுபோய் வைத்திருந்துவிட்டு மூன்று நாட்களிற்குப் பின்னர் அச்சடலங்களை உறவினர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்தவேளை இங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்களது சடலங்களைக் கிணறுகள், மதகுகள் போன்ற இடங்களிளெல்லாம் ஆங்காங்கே இராணுவத்தினர் போடடிருந்தார்கள். எத்தனை மக்கள் இறந்தார்கள் என்பதுகூட சரிவரத் தெரியவில்லை. அந்தளவிற்கு காணுமிடமெல்லாம் சடலமாக இருந்தது.

இவற்றுள் வேறு ஊர்களிலிருந்து தொழிலிற்காக வந்தவாக்ளும் இறந்திருந்தர்கள். வழமையாக இராணுவத்தினர் வரும்போது வரும் திசையிலிருந்தே வெடிச்சத்தம்கேடகும். அந்த நேரம் நாங்கள் எல்லோரும் ஓடிச்சென்று காடுகளுக்குள் ஒளிந்துகொள்வோம். ஆனால் அன்றைய தினம் வழமைக்கு மாறாக நடந்ததால்தான் பல மக்கள் அகப்பட்டுக்கொண்டார்கள். இராணுவத்தினர் சென்ற பின்னர் ஊருக்குள் சென்று பார்த்தபோது யார் யாரைச் சுட்டிருக்கிறார்கள், எந்தெநத்க் கிணற்றில் சடலம் இருந்தது எனத் தெரிந்தது. அகதி முகாமில் இருந்தவாக்ளைத் தான் நிறையக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். சுடப்பட்டவர்களைத் தவிர உயிருடன் பிடித்துச் சென்றவர்களை பின்னர் முழுமையாக மனிதர்கள் மாதிரி விடவில்லை. கைகளைக் கால்களை வெட்டி நடமாட முடியாதளவிற்கு கொடுமைப்படுத்தி விட்டிருந்தார்கள்.

அந்தநேரத்திலும் ஊருக்குள் நிற்கப் பயம். திரும்பவும் இராணுவம் வரலாம் என்ற அச்சம் இருந்தது. தனித் தனிக் கிடங்குகள் வெட்டி சடலங்களைப் போட முடியவில்லை. சடலங்கள் கூட பார்க்கமுடியாதளவு அழுகிய நிலையில் இருந்ததால் பெரிய கிடங்கு ஒன்று வெட்டி அத்தனை சடலங்களையும் ஒருமித்துப் போட்டு மூடினோம். இந்த நிலையிலும் கிராமத்தை விட்டு யாரும் வெளியேற முடியாத நிலையிருந்தது. இராணுவத்தினர் கண்டால் உடனே சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருந்தது. நாங்கள் யாராவது வீட்டை விட்டு வெளிகக்ட்டால் திரும்ப வந்தால்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரியும். இல்லாதுபோனால் எந்த முகாமில் பிடித்து வைத்திருக்கிறார்கள், எங்காவது வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா என்று எதுவும் தெரியாத நிலைஇருந்தது.NESOHRத முகாமிற்கு நடந்த கொடுமையைப் போல் நான் எங்கும் பார்த்ததில்லை. இதை நேரடியாகப் பார்த்தவர்களிற் சிலர் பைத்தியமாகக் கூட இருக்கிறார்கள். நாற்பத்தெட்டுப் பேர் வரை கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை விட உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 நூல்.

 

 

https://www.thaarakam.com/news/142231

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.