Jump to content

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்


Recommended Posts

இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், ஒரு புள்ளியையேனும் பெற்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் பட்டியலில் முதலாம் இடத்திலும், 296 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 2 ஆம் இடத்திலும் உள்ளன.

புள்ளிகளுடன், நியூஸிலாந்து அணி 3ஆம் இடத்திலும், 146 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4ஆம் இடத்திலும், 140 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5ஆம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி, 80 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும், தென்னாபிரிக்க அணி 24 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி புள்ளிகள் எதனையும் பெறாமல் 9ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://thamilkural.net/world/51670/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
1.pngENG
(38.1 ov)
94/3 
4.pngWI
 

 

Link to comment
Share on other sites

காதலியை பார்க்காம இருக்க முடியலை.. சைலன்ட்டாக ஆர்ச்சர் செய்த காரியம்.. அதிரடி நீக்கம்.. கசிந்த தகவல்

 

 

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே கடும் விதிகளை பின்பற்றி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணி வீரர்களும் இம்மி அளவும் விதிகளில் இருந்து விலகாமல், வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனிடையே ஜோப்ரா ஆர்ச்சர் தன் காதலியை பார்க்க ரகசியமாக சென்று இருக்கிறார். அந்த தகவல் வெளியான நிலையில் அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளது இங்கிலாந்து. 

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வரும் சூழலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. சௌதாம்ப்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது.

இரண்டாம் டெஸ்ட்

தொடரின் இரண்டாம் டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்தது. அதற்காக வீரர்கள் கடந்த திங்கள்கிழமை வந்து சேர்ந்தனர். அப்போது தான் இடையே ஜோப்ரா ஆர்ச்சர் தன் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. விதிமுறைப் படி இரு அணி வீரர்களும் வெளி உலகத்துடன் தொடர்பின்றி இருக்க வேண்டும்.

தனியாக சென்ற வீரர்கள்

ஆனால், எப்படி ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் தன் வீட்டுக்கு செல்ல முடியும்? இங்கிலாந்து அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தங்கள் கார்களில் சௌதாம்ப்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லுமாறு கூறி இருந்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

ரூட்டை மாற்றிய ஆர்ச்சர்

ஜோப்ரா ஆர்ச்சர் மான்செஸ்டர் வரும் வழியில் பாதையை மாற்றி சுமார் 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தன் காதலியை சந்திக்கவே அங்கே சென்றார் என ஒரு தகவல் வலம் வருகிறது. பின்னர் அங்கே இருந்து மான்செஸ்டர் வந்து சேர்ந்துள்ளார்.

வெளியான உண்மை

திங்கள் முதல் புதன் வரை அவர் வீட்டுக்கு சென்ற விஷயம் இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரியவில்லை. வியாழன் அன்று இரண்டாவது டெஸ்ட் துவங்க இருந்த நிலையில், அதற்கு முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு சென்றது தெரிய வந்துள்ளது.

நீக்கம்

இதை அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாம் கர்ரன் அணியில் இடம் பெற்றார். ஆர்ச்சர் ஐந்து நாள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

வெ.இண்டீஸ் ஒப்புதல்

ஜோப்ரா ஆர்ச்சர் விதி மீறலை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் கூறி, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து போட்டியில் பங்கேற்க ஒப்புதல் வாங்கி உள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். அதனால், இந்த பிரச்சனை பெரிதாகாமல் முடிந்தது.

விமர்சனம்

எனினும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் இங்கிலாந்து அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இரு அணி வீரர்களையும் அவர் ஆபத்தில் சிக்க வைத்து விட்டார் என குற்றம் சாட்டி வருகின்றனர். ஆர்ச்சர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் டெஸ்ட் துவக்கம்

ஆர்ச்சர் விவகாரம் முடிந்து இரண்டாவது டெஸ்ட் சிறிய மழைக்கு பின் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் வென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.mykhel.com/cricket/eng-vs-wi-what-jofra-archer-did-to-breach-biosecurity-protocol/articlecontent-pf68559-020426.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Stumps
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
  • England
    ENG
    469/9d & 37/2 * (8 ov)
  • West Indies
    WI
    287
Day 4: England lead by 219 runs. CRR: 4.62
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
1.pngENG
469/9d & 129/3d
4.pngWI
(15.2 ov, target 312)
287 & 41/4 
Day 5 - Session 2: West Indies need 271 runs. CRR: 2.67
Link to comment
Share on other sites

மேற்கிந்திய தீவுகள் இன்றைய மிகுதி 60 இற்கு மேற்பட்ட ஓவர்களை தாக்குப்பிடிப்பது கடினம். பார்க்கலாம். Blackwood and Holder கைகளில் தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மான்செஸ்டர் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மான்செஸ்டர் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

 

மான்செஸ்டர்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார்.


 
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 
3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

219 ரன்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை விளாசி எடுத்தார்.

3 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 129 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் ஆட்டம் டிராவில் முடியும் என அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி, தோல்வி என முடிவு தெரியும் போட்டியாக அது மாறியது.

2-வது இன்னிங்சில் பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜான் 4 ரன்களிலும், பிராத்வேட் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சாள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். தோல்வியை தவிர்க்க போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் புரோக்ஸ் 62 ரன்களுடனும்,பிளாக்வுட் 55 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் சற்று தாக்கு பிடித்த ஹோல்டர் 35 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் 3-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

 

https://www.maalaimalar.com/news/sports/2020/07/21041943/1725163/England-Beats-West-Indies-by-113-Runs.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் ஒரு நாள் த‌டை ப‌ட்டும் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌ வேண்டிய‌ விளையாட்டு , வெஸ்சீன்டீஸ் விக்கேட் கீப்ப‌ர் சுத‌ப்ப‌ வெற்றி இங்லாந்துக்கு , இர‌ண்டு இனிங்சிலும் 0ரில் வெளியேரின‌வ‌ர் வெஸ்சின்டீஸ் விக்கேட் கீப்ப‌ர் , 😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.