Jump to content

பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை – என்.சரவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை – என்.சரவணன்

July 16, 2020

1956-7-banda-change.jpgகாலனித்துவ காலத்தில் மதம் மாற்றவர்களை மீண்டும் பழையபடி பௌத்தத்துக்கு வந்து சேர்க்கும் பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் நடத்தி முடித்தவர் அநகாரிக்க தர்மபால. மீண்டும் பௌத்தத்துக்கு மாறுவது மட்டுமன்றி பழைய கிறிஸ்தவ பெயர்களைக் கலைந்து பௌத்தப் பெயர்களை மீண்டும் சூட்டிக்கொள்ளும் ஒரு வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. அநகாரிக்க தர்மபால கூட தனக்கு சூட்டப்பட்டிருந்த காலனித்துவ அந்நியப் பெயரான டொன் டேவிட் ஹேவாவித்தாரன என்கிற பெயரை தர்மபால என்று மாற்றிக்கொண்டார். மற்றவர்களை மாற்றச்சொல்லி வற்புத்தினார். கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டிருப்பவர்களை கேலியும் செய்தார்.

கிறிஸ்தவ பெயர்களை மாற்றிக்கொள்வதும், மீண்டும் பௌத்தத்தை தழுவிக்கொள்வதும் ஒரு பேஷனாக மாறிய காலம் அது. அதன் மூலம் தம்மை சிறந்த தேசியவாதியாக காட்டிக்கொள்ளும் அடையாளமாக ஆகியிருந்த காலம். எனவே புதிதாக அரசியலுக்கு வந்து தேசியவாத அரசியலை மூலதனமாக ஆக்கிக்கொண்ட பண்டாரநாயக்க மாத்திரம் இதில் இருந்து எப்படி விலகிநிற்க முடியும். அவரும் மதத்தையும் மாற்றிக்கொண்டார். பண்டாரநாயக்க அங்கிலிக்கன் மதத்தைச் சேர்ந்தவர். பெயரில் சிங்களத்தனமும் இருந்தபடியால் பெயரை மாற்றிக்கொள்ள அவருக்கு அத்தனை அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவரின் உடை கலாசாசாரத்தையும் மாற்றிக்கொண்டார்.

 

லண்டனிலிருந்து வந்ததன் பின்னர் அவரின் அரசியல் நடவடிக்கைகளின் போது பௌத்த மத பெரும்போக்கு தேசிய அரசியலுடன் அவர் படிப்படியாக கலக்கத் தொடங்கினார்.

அவர் பௌத்த மதத்துக்கு மாறிவிட்ட தகவலை அவரது தகப்பானார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க கூட பின்னர் தான் அறிந்துகொண்டார். பண்டாரநாயக்க சில காலமாக கிறிஸ்தவ தேவாலயத்துக்குப் போகாமல் தவிர்ப்பதை அடையாளம் கண்டதன் பின்னர் தான் அறிந்துகொண்டார். ஒரு முறை தேவாலயத்தில் முக்கிய நிகழ்வொன்ருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்கவை அழைத்தபோது தான் பண்டாரநாயக்க

“டாடி, மன்னியுங்கள். நான் இப்போது ஒரு பௌத்தன்.” என்று பதிலளித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும் 1930களில் அவர் “நான் ஏன் பௌத்தனானேன்” (Why I became a Buddhist) என்கிற தலைப்பில் விரிவான கட்டுரையொன்றையும் எழுதி வெளியிட்டார்.

பண்டாரநாயக்க தேசிய வெள்ளை ஆடை அணியத் தொடங்கிய கதையும் சுவாரசியமானது.

“நமது நாட்டில் பருத்தி உற்பத்தி செய்து நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் இதன் மூலம் நமது ஆடை நுகர்வுக்காக அந்நிய நாட்டுக்கு செல்லும் அதிகப்படியான பணத்தை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்கமுடியும்.”

 

8f63b40fb6.jpgஇப்படி கூறிய இளம் பண்டாரநாயக்க தனது கோர்ட், காற்சட்டை, டை, சப்பாத்து, தொப்பி மட்டுமன்றி அவர் தனது உணவு மேசையில் பயன்படுத்திவந்த கத்தி, முற்கரண்டி என்பவற்றை கைவிட்டுவிட்டு தேசிய உடையாக வெள்ளை வேஷ்டி சட்டையை அணியத் தொடங்கினார்.

கதருக்கு

வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த ஜெயராம்தாஸ் ஜயவர்த்தன என்கிற ஒரு மனிதரை அவர் சந்தித்தது பண்டாரநாயக்காவில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவதந்து. கதர் வேட்டியும் வெள்ளை பனியனும் உடுத்திக்கொண்டு வந்து சந்தித்த அவரிடம்,
என்ன இப்படி ஒரு விசித்திரமான உடையை அணிந்து வந்திருக்கிறீர்கள்.”
எனக் கேட்டார் பண்டாரநாயக்க

“நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நீங்கள் ஒரு தேசிய உணர்வுள்ளவர் என்பதால் உங்களை சந்திக்க ஆவலாக வந்தேன்… வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மகாத்மாகாந்தியின் ஆயுதங்களில் ஒன்றாக இந்த ஆடையை அவர் பயன்டுத்தினார். தமது நாட்டிலியே, சுதேசியர்களாலேயே கைத்தறியில் நெய்த கதர் உடையை பயன்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கினார். அவருக்கான உடையைத தயாரிக்க அவரே இராட்டினத்தில் நூல் நூற்தார். உள்நாட்டில் அதை தயாரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கைத்தறிகளை ஊக்குவித்தார்.”
என்றார் ஜயவர்தன.

முன்னர் அரச சேவையில் தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு கல்கத்தாவுக்கு சென்று மகாத்மா காந்தியின் பேச்சுகளைக் கேட்டு அங்கே ஆசிரமத்தில் இருந்து 1925 நாட்டுக்குத் திரும்பியதும் ஜயவர்தன ஒரு கைத்தறி நெசவாலையை ஆரம்பித்திருக்கிறார்.

இதெல்லாம் கேட்ட பண்டாரநாயக்க ஜயவர்தனவை ஒரு குருவாக மதித்தார். வெல்லம்பிட்டியவில் ஜயவர்தன நடத்தி வந்த ஆசிரமத்தில் பல இளைஞர் யுவதிகள் சர்வசாதாரண வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துக்கொண்டு பயிற்சிபெற்று வந்ததை பண்டாரநாயக்க கண்டார். அங்கே பண்டாரநாயக்கவும் இராட்டினத்தில் நூல் கோர்ப்பது, கைத்தறி பயன்படுத்தி துணிகள் செய்வதைக் கற்றுக்கொண்டார். இது நிகழ்ந்தது 1930இல். பின்னர் 1933 இல் அவர் “பட்டும் விவசாய உற்பத்தியும்” (චර්කය හා ගොයම් කෙත) என்கிற ஒரு சிறு நூலை எழுதினார். அதை நாடு முழுவதும் இலவசமாக விநியோகித்தார். அன்றிலிருந்து அவர் கோர்ட், சூட், தோப்பி அனைத்தையும் பகிரங்கமாக எரித்தார்.

fb0137975e.jpg

பண்டாரநாயக்க கதர் அணிந்து…

ஒரு முறை இராட்டினத்தில் நூல் நூற்கின்ற ஒரு போட்டியைய ஜயவர்தன நடத்திய போது அந்த நிகழ்வில் பண்டாரநாயக்க மேற்கத்தேய உடைகளை எரித்தது அந்நிகழ்வில் ஒரு அங்கமானது.

1928 இல் தித்தம்பஹுவ என்கிற இடத்தில் ஆரம்பித்த முதலாவது ஜவுளிக்கடை பின்னர் பல இடங்களில் முகவர் கடைகளைத் திறந்தார் ஜயவர்தன. பண்டரநாயக்காவின் தொகுதியில் மாத்திரம் பல கடைகள் திறக்கப்பட்டன. அம்பலங்கொடவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் தொடங்கப்பட்டது.

பண்டாரநாயக்க சில பிரதேசங்களில் கைத்தறி உற்பத்தி நிலையங்களையும் ஆரம்பித்தார். கொட்டால என்கிற கிராமத்தில் உள்ள ஒரு நிலையத்தில் அவர் அடிக்கடி சென்று கைத்தறி நெசவு செய்வது அவருக்கு பிடித்தமானது. இந்த நிலையத்தை ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது அவரால் திறக்கட்டிருக்கிறது.

பண்டாரநாயக்க அதன் பின்னர் சகல நிகழ்வுகளிலும் தேசிய உடையை அணிந்தார். தனது திருமணத்தின் போது இரு மணமக்கள் வீட்டாரும், வந்திருந்த கனவான்களும் மேற்கத்தேய உடையில் காணப்பட்டபோதும் மணமகன் பண்டாரநாயக்க தேசிய உடையில் காட்சியளித்தார்.

729246f54f_o.jpg

16c761df3_o.jpgஆனாலும் உடனடியாக முற்றாக கோர்ட் சூட் உடையை அவரால் கைவிட முடியவில்லை. தனவந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர், தமது குடும்பம் பாரம்பரியமாக கலந்துகொள்ளும் மேட்டுக்குடியினரின் நிகழ்வுகளில் அவர் கோர்ட் சூட்டை அணிந்து தான் சென்றார். அவரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது கோர்ட் சூட் அணிந்து தான் சென்றார். அவருக்கு ஒரு உயர் ரக செல்ல நாய் இருந்தது. வருடாந்தம் அந்த நாயை; தனவந்தர்களின் நாய்களை வைத்து நடத்தப்படும் போட்டியில் பண்டாரநாயக்க அழைத்துச் செல்வார். அப்போதும் அவர் கோர்ட் சூட்டுடன் போவதை தவிர்க்க இயலாததாக இருந்தது. இந்த இரட்டைத் தன்மையை பற்றி நேரடியாகவே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள்.

1959 இல் அவரின் தேசிய உடையை குத்திக்கொண்டு நெஞ்சில் பாய்ந்த தோட்டாக்கள் அவரின் உயிரைப் பறித்தன. அந்த இரத்தக்கரை படிந்த அந்த தேசிய உடை இன்னமும் பண்டாரநாயக்க நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச்சடங்கில் அவருக்கு தேசிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது.

1959.jpg

மொழிக்காக மன்னிப்பு

ஆங்கில மொழியில் உரையாடுவதை தவிர்த்து சிங்களத்தில் உரையாடுவதற்காக சிங்களத்தை வேகமாகக் கற்றார்.

பண்டாரநாயக்க தனது படிப்பை முடித்துக் கொண்டு 24.02.1925 அன்று இலங்கைக்கு வந்த போது அவருக்கு அளிக்கப்பட வரவேற்புக் கூட்டத்தில் அங்கு குழுமியிருந்தவர்களிடம் அவர் தனது சிங்கள மொழிப் பலவீனத்துக்காக வருந்துவதை இப்படி தெரிவித்தார்.

“முதலில் நான் உங்களோடு ஆங்கிலத்தில் உரையாற்ற நேரிட்டிருப்பதற்காக மன்னிப்பைக் கோருகிறேன். நீண்டகாலம் நாட்டைவிட்டு தூரத்தில் இருக்க நேரிட்டிருந்ததால் சிறப்பாக சிங்கள மொழியில் தொடர்ச்சியாக பேச முடியாமல் இருக்கிறது. அந்த குறைபாட்டை நான் கூடியவிரைவில் சரிசெய்துவிடுவேன். நான் உளமார இந்த விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் உங்கள் முன் இன்று சிங்களத்தில் உரையாற்ற முடியாது போனாலும் கூட என்னிடம் இருப்பது முழுமையான சிங்கள இதயமே என்பதை உங்களுக்கு உறுதியாக கூற விரும்புகிறேன்…”

Welcome-at-Horagolla-on-return-from-Oxfo

ஒக்ஸ்போர்ட்டிலிருந்து திரும்பிய போது ஹொறகொல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு

பண்டாரநாயக்கவின் காலத்தில் தேசிய உடை, தேசிய மொழி, தேசிய பண்பாடு, தேசிய மதம், தேசிய உணவு, தேசிய வளம், தேசிய உற்பத்தி என பல மாற்றங்கள் பலப்படுத்தப்பட்டன என்பது உண்மை ஆனால் அந்த தேசியத்துக்குள் சிங்கள பௌத்தர்களைத் தவிர ஏனையோர் உள்ளடக்கப்படவில்லை என்பது தான் இங்கு நாம் கூற வரும் செய்தி. ஆங்கிலம் பேசும் குடும்பத்தில் வளர்ந்து பின்னர் சிங்களத்தில் பேச உறுதிபூண்டு, சிறந்த சிங்களப் பேச்சாளராக உருவானது மட்டுமன்றி, இறுதியில் சிங்கள “மொழித் தேசிய”வாதத்தை நிறுவி, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரும் அளவுக்கு அவர் சிங்களப் பற்றுறுதி கொண்டவராக ஆனார். அந்த மொழிக் குருட்டுத்தனத்தின் விளைவாக சிங்களவர்களுக்கு சிறந்த தேசியவாதத் தலைவராக ஆனார். ஆனால் இலங்கைக்கான தேசியவாதியாகத் தவறினார்.

தேசிய உடையைத் தேடி

இலங்கையர்களின் தேசிய உடை எது என்பது குறித்த தேடல் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியைத் தொடர்ந்து முனைப்பு பெற்றது. ஒருபுறம் சுதேசியம் பேசிய தேசியத் தலைவர்கள் மறுபுறம் ஆங்கிலேய மோகத்தில் இருந்தார்கள். அந்த பிரபுத்துவ குழாமினர் அரசியல் சீர்திருத்தத்தையே வேண்டி நின்றவர்கள். முழுச் சுதந்திரத்தில் நாட்டம் அற்றவர்களாக இருந்தவர்கள். அப்பேர்பட்ட பலர் இங்கிலாந்து சென்று பட்டம் பெற்று திரும்பி ஆங்கிலேய அரசில் சிவில் சேவைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, பேசும் மொழி அனைத்தும் மாறி இருந்தது.

தமது கற்கைக்காக சில வருடங்களையே அவர்கள் இங்கிலாந்தில் கழித்தாலும் அவர்கள் மேற்கத்தேய பாணியில் தமது நடத்தையையே இலங்கை திரும்பியதும் கடைப்பிடித்தார்கள். ஆங்கிலத்தையோ, அல்லது ஆங்கிலம் கலந்த சிங்களத்தையோ, அல்லது ஆங்கில பாணியில் சிங்களத்தை உச்சரிப்பதையும் கோர்ட்டுடன் வலம் வருவதையும் கௌரவமானது என்று தமது நடை உடை பாவனையில் காண்பித்தார்கள். தொப்பி அணிந்தார்கள். சிலர் கோர்ட் அணிந்து, காற்சட்டையும் அணிந்து அதற்கு மேல் வேஷ்டியை அணிந்து கொண்டார்கள். இவர்களைப் பார்த்து மக்கள் “வேஷ்டிக்குள் கனவான்” (රෙද්ද අස්‌සේ මහත්තයා) என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

அரசியலையும், ஜனநாயகத்தையும் மேற்கில் இருந்து கற்றுக்கொண்டு வந்து தமக்கான அரசியலை வகுக்க முயன்றவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் பௌத்த மறுமலர்ச்சிக்காலகட்டத்தைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கதிற்கூடாக சிங்கள பௌத்த தேசிய எழுச்சியோடு தம்மை ஈடுபடுத்தத் தொடங்கினார்கள்.

சிங்கள பௌத்த தேசியத்தை நிறுவும் பணியில் முன்னின்றவர்கள் இந்தியாவை முன்னுதாரணமாக் கொண்டு அங்கு மகாத்மாகாந்தியால் முன்னெடுக்கப்பட்ட சுதேசிய இயக்கத்தால் கைத்தறியில் நெய்த கதர் ஆடையை அணியும்படி ஊக்குவிக்கப்பட்ட காலம். அதையே முன்னுதாரமாகக்கொண்டு சுதேசியத்தை வலியுறுத்திப் போராடிய இந்திய காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த வெள்ளைக் கதர் உடைகளை இலங்கையிலும் உடுக்கத் தொடங்கினார்கள்.

Dharmapala_at_Parliament-edit.jpg

அநகாரிக தர்மபால

அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர போன்றோரும் கதர் ஆடைகளை உடலில் சுற்றிக்கொண்டனர். இதை அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டார்கள். 1893 இல் அமெரிக்காவில் சிக்காகோ மாநாட்டுக்கு விவேகானந்தர் சென்று அங்கு நடத்திய உரையைப் பற்றி அறிவோம். அந்த மாநாட்டுக்கு அநகாரிக தர்மபாலவும் சென்றிருந்தார். அவரின் உரையும் சிங்களத்தில் இன்றும் பேசப்படுகிறது. அந்த மாநாட்டுப் படத்தில் அநகாரிக தர்மபால வெள்ளைக் கதர் உடையை சுற்றிக்கொண்டபடி தான் கலந்து கொண்டிருந்தார் என்பதை அங்கு பிடிக்கப்பட்ட படத்தில் காண முடியும். அந்தப் புகைப்படத்தில் விவேகானந்தருக்கு பின்னால் அநகாரிக தர்மபால அமர்ந்திருப்பார். பிற்காலத்தில் பௌத்த காவி உடுக்கும்வரை வெள்ளைக் கதரைத் தான் தர்மபால அணிந்தார்.

Worlds-Parliament-of-Religions-in-Chicag

தேசிய உடை இயக்கம்

அநகாரிக தர்மபாலாவின் சிந்தனைகளால் உந்தப்பட்டு பல்வேறு சிங்கள பௌத்த தொடங்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்த வரிசையில் “தேசிய உடை இயக்கம்” (ජාතික ඇඳුම් ව්‍යාපාරය National dress movement) என்கிற ஒரு இயக்கத்தை 1921இல் ஆரம்பித்தார் பீ.டீ.எஸ்.குலரத்ன. குலரத்ன அப்போது ஆனந்த மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்தார். இதே 1921 இல் தான் மகாத்மா காந்தியும் அரை உடை உடுத்த ஆரம்பித்தார்.

இந்த இயக்கம் குறித்து 31.05.1921 இல் வெளியான “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

vali.jpg

 

“தேசத்தின் புத்தெழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதை தாமதப்படுத்தவோ, பழைய நிலைக்கு கொண்டுசெல்லவோ முடியாமல் இல்லை. இன்றைய நிலையில் சிங்களவர்கள் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க முடியுமா?

நமக்கு தேசிய உணர்வுகள் இல்லாவிட்டால், சிங்கள இரத்தம் கொஞ்சம் கூட நமக்கு கலக்கவில்லை என்று பொருள். சிங்களவர்களின் இரத்தத்தில் கொஞ்சமாவது கலந்திருப்பதால் தான் இன்று தேசிய உணர்வு வளர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. தேசிய உணர்வு எழும் பொது தேசிய உடையும் அவசியம். பலர் இதைப் பற்றி நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர்.
ஐரோப்பாவிற்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாவை நாம் ஏன் கொடுக்க வேண்டும்? இது நமது தேசத்திற்கு பொருத்தமற்றது, ஆரோக்கியத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது, மற்ற நாடுகளிலிருந்து கேலி செய்யும் முட்டாள்தனமான வேடதாரிகளை உருவாக்குகின்ற விரும்பத்தகாத ஐரோப்பிய ஆடை.
காலுறை, டை, கொலர், டை பின், பூட் போலிஷ் கேட்டர், தொப்பிகள், காற்சட்டை, கோட்டுகள், வெஸ்ட் கோட், பொத்தான்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக நம் சிறிய நாட்டிலிருந்து 100 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலவிடப்படுகிறது. இதுவும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நாட்டின் மேட்டுக்குடிகளும், படித்தவர்க்களும் போடும் வேடத்தை நாட்டு மக்களும் கவர்ந்து நாடு முழுவதும் ஐரோப்பிய ஆடையால் புத்திஜீவிகள், படித்தவர்களே பீடிக்கப்படும் போது நாட்டு மக்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே பல்வேறு வகையான உடைக் கலாசாரம் பரவி நம்மை மேவுமலவுக்கு வளர்ந்து முழு நாடும் அதில் சிக்கியிருக்கிறது. இந்தச் சுமையிலிருந்து விடுதலையாவது நம்மெல்லோருடைய பொறுப்பு.”

இதற்கு குலரத்ன எழுதிய பதில் யூன் 14 அன்று வெளியானது. அதில் அவர்

“நமது முன்னோர்கள் அணிந்த பல்வேறு உடைகளில் இதைத் தான் அணியவேண்டும் என்று நம்மால் கூறமுடியாது. எனவே அதில் இதுதான் தேசிய உடை என்று தெரிவு செய்வது சிரமம். இப்போது பரிந்துரைத்திருக்கும் உடை தான் தேசிய உடை என்று உறுதியாக நான் கூறவரவில்லை. ஆனால் இது தேசிய உடையாக கருதக்கூடிய அளவுக்கு பொருத்தமான உடை என்றே கருதுகிறேன். காலப்போக்கில் மக்கள் மத்தியில் இது படிப்படியாக பாவனைக்கு வரலாம்.”
அதே பத்திரிகையில் “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் சிறிசேன இப்படி கூறுகிறார்.

“அந்நிய உடைகளில் திரிவது, அந்நிய பொருட்களை உபயோகிப்பது, அந்நிய மொழியைப் பேசுவது, அந்நிய தெய்வங்களை வைத்திருப்பது போன்ற செயல்கள் நமது சுதேசியம் பற்றிய நினைவுகளை மறக்கடிக்கச் செய்கின்ற காரணிகள். இந்தக் காரணிகளைப் பேணிக்கொண்டே நாம் தேசிய எழுச்சி, தேசிய உணர்வு, தேச பக்தி என்பவற்றை முன்னெடுக்கலாம் என்பது சரியாக கொள்கையாக இருக்க முடியாது. உடை, நடை, தோற்றத்தில் அந்நிய உருவத்தில் இருந்துகொண்டு வீழ்ந்திருக்கும் ஒரு இனத்தின் தேசபக்தியை ஒருபோதும் தூண்டமுடியாது.”

இதற்கு அடுத்த வாரம் யூன் 21 அன்று அநகாரிக தர்மபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதம் பிரசுரமானது.

“பிரியமுள்ள சிறிசேன,
மக்களின் விருப்புக்கேற்ப ஒழுகுதலே பண்டைய மரபு. அதை மீறிய ரஷ்யா, ஜெர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளின் அரசுகள் வீழ்ந்தன. துணியணியும் சிங்களவர்கள் கலிசம் அணியும் சிங்களவர்களை விட அதிகம் என்பதால் மக்களின் அபிலாஷயின் பிரகாரம் கலிசம், தொப்பி போன்ற ஐரோப்பிய ஆடைகள் புறக்கணிக்கப்படவேண்டும். சிங்கள மக்களின் கருத்துக்கு செவிகொடுப்பது சிறியளவிலான கலிசம்காரர்கலின் பொறுப்பு. மக்கள் சபையை அமைத்து கலிசம்களை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்….
சிங்கள இளைஞர்களுக்கு நேர்த்தியான மார்க்கத்தை வழிகாட்டும் பண்டிதர் குலரத்னவை சிங்கள இளைஞர்கள் முன்னுதாரணமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்….
அன்புடன் அநகாரிக்க தர்மபால”

“சிங்கள ஜாதிய” பத்திரிகை தொடர்ச்சியாக “தேசிய ஆடை இயக்கத்தை” ஆதரித்து படைப்புகளை வெளியிட்டது. ஐரோப்பிய ஆடைகளை புறக்கணித்து நமது சுதேசிய ஆடைகளை அணிந்து உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தியது. யூன் 21 அன்று ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“தேசிய உடை குறித்து கசப்புடன் பார்க்கும் போக்கையும் நாம் காண்கிறோம். இதில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர். அவர் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து சிறிசேன எழுதிய எதிர்ப்புக் கட்டுரையை எதிர்த்து அவரைப் பழிவாங்குவதற்காக 5000 ரூபாவுக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் பிரேசர். நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமாதானமாக தீர்க்கப்பட்டபோதும். வழக்குச் செலவாக 300 ரூபாவை சிறிசேன செலுத்த பணிக்கப்பட்டார்.”

இந்த இயக்கத்தை ஆதரித்து அப்போது டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட பல தலைவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். டீ.எஸ்.சேனநாயக்க சாகும்வரை கோர்ட் சூட்டுடன் தான் வலம்வந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமரான அவரின் மகன் டட்லி செனநாயக்கவும் இறுதிவரை மேற்கத்தேய உடையுடன் காணப்பட்டார். ஆனால் மத நிகழ்வுகளில் மாத்திரம் டீ.எஸ். சேனநாயக்காவும், டட்லியும் தேசிய உடை அணிந்தார்கள். டீ.எஸ். சேனநாயக்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதும் கண்டி தலதா மாளிகைக்கு தேசிய உடையில் தான் சென்றார். அந்த வரிசையில் சுதந்திர இலங்கையின் தலைவர்களிலேயே முதலாவதாக தேசிய உடையை அணிந்து முன்னுதாரணமாக ஆனவர் பண்டாரநாயக்க.

ஆரம்பத்தில் தேசிய உடை அணிந்த முன்னோடித் தலைவர்களாக கலாநிதி ஈ.அதிகாரம், ஆதர த சில்வா, சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர, எச்.எல்.டீ.மெல், டபிள்யு.ஏ.டீ.சில்வா இடதுசாரித் தலைவர்களான எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பிலிப் குணவர்த்தன போன்றோரை குறிப்பான உதாரணங்களாகக் குறிப்படலாம். பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எப்போதும் வெள்ளை வேட்டியும், பனியனுமாக காட்சியளித்தார்.

தேசிய உடை இயக்கத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்து வந்த பிரபல சிங்கள தேசியவாத இலக்கியவாதியான ஜி.பீ.மலலசேகர பல்கலைக்கழக பேராசியராக இருந்த காலத்திலும், ரஷ்யா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இலங்கைப் பிரதிநிதியாக இருந்த காலத்திலும் கூட வெளிர்நிறத்தில் தேசிய உடையையே அணிந்துவந்தார்.

இதேவேளை 1920 களின் பிற்பகுதியில் யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸ் வேஷ்டியும், கோர்ட்டையும் உடுத்தும்படி ஆசிரியர்களை வேண்டிக்கொண்டது. 1931 இல் யாழ்நகர் ஆசிரியர் சங்கம் (Jaffna Town Teachers Association) அந்நிய ஆடைகளை களைந்துவிட்டு தேசியத்தின் சுயகௌரவத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணியும்படி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தியாவில் அணியப்பட்ட சுதேசிய உடைகளான வெள்ளை நிற வேஷ்டியும், நீளமான சட்டையையும் கண்டு அவர்களும் தொடர்ச்சியாக அணியத் தொடங்கினார்கள். அவர்களின் அடியொற்றியவர்களும் அதே உடைகளை முக்கிய நிகழ்வுகளில் இலங்கையில் உடுக்கத் தொடங்கினார்கள்.

சுதேசியத்தைத் தேடும் நீட்சியில் 1940 களில் “சுதேசியமே சுகம் தரும்” (“සියරට දේ සිරි සැප දේ”) என்கிற சுலோகம் வலுக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாக இந்த கோஷம் தலைதூக்கியது. காற்சட்டையும், கோர்ட்டையும் அணிந்தவர்கள் தமது தேசிய உடை என்ன என்கிற தேடலைத் தொடங்கினார்கள். சிங்களவர்களின் தேசிய உடை கோவணம் தான் என்று அப்போது சிலர் கூறினார்கள்.

இதே காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரசுக்குள்ளும் தேசிய உடை பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. 1941 இல் தேசிய உடையைத் தெரிவு செய்வதற்காக ஒரு ஆடை அணிவகுப்பை ஒழுங்கு செய்தது காங்கிரஸ். இதன் நடுவர்களாக G.C.S.கொறயா, H.W.அமரசூரிய, Dr.R.சரவணமுத்து, J.R.ஜெயவர்தன, M.D.A.விஜேசிங்க கடமையாற்றினர். அதன்படி வெள்ளை நிறத்தில் முழங்காலுக்கு சற்று மேலே வரை இருக்கும் வகையில் அந்த சட்டையின் அமைப்பு இருக்கும் வகையில் சட்டையில் இடுப்புப் பகுதியில் இருபுறமும் சட்டைப்பை வைக்கப்பட்டு இருந்த உடை தெரிவானது. பெண்கள் சிங்கள (கண்டிய சிங்கள), தமிழ், முஸ்லிம் பெண்கள் அவரவர் கலாசாரத்து ஆடைகளை அணிகின்ற வழக்கம் உருவானது. ஆனாலும் இலங்கையில் ஆண்கள் அணியும் தேசிய உடை என்பது சிங்கள ஆண்கள் அணிகின்ற உடையாகவே பின்னர் வழக்கத்துக்கு வந்தது.

சிங்களப் பெண்களில் ஒரு பகுதியினர் சாதியின் பேரால் மேலாடை அணிய உரிமையற்றவர்களாக இருந்தனர். மார்புகளை வெளிக்காட்டிக்கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். தமிழ்ச் சூழலிலும் கச்சை அணிவது உயர்சாதியினருக்கு உரிய ஒன்றாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அது மறுக்கப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. அப்படி மீறி அணிந்தவர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய உடையென்பது வெள்ளை வேஸ்டியும், வெள்ளை பனியனும் என்கிற நம்பிக்கை இருந்தது. 1952இல் நிலவிய அரசியல் சூழலில் பௌத்தத்தை அரவணைத்து இருப்பதும், தேசிய உடையை உடுப்பதும் இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான தகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டது. 1948 சுதந்திரத்தின் பின்னர் காலனித்துவ வெள்ளையினத்து கோர்ட்டும் சூட்டும் போதும் போதும் என்றாகியதுடன் தேசிய உடைக்கு அதைவிட அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவானது.

இதே வேளை 1956 அரசியல் மாற்றத்தோடு ஏற்பட்ட கலாசார மாற்றத்தின் போது சாதாரணமாக ஆண்கள் அணிகின்ற சுதேசிய தேசிய உடையாக வெள்ளை வேஷ்டியுடன் (சரம்), மேலே வெள்ளை பனியனும் அணிவது பிரபல்யமாக ஆனது.

cabinet-1947.jpg1947 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்

cabinet-1948-e.jpg“சுதந்திர இலங்கையின்” 1948 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்

banda.jpg

1956 பண்டாரநாயக்க “தேசிய உடை” அமைச்சரவை

img365.jpg1960 சிறிமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவை

1956 ஆம் ஆண்டு பண்டரநாயக்காவின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வில் ஒருவரைத் தவிர அனைவரும் தேசிய உடையில் தான் காணப்பட்டார்கள். அன்றைய ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலக்க மேற்கத்தேய அந்நிய உடையிலும் பண்டாரநாயக்க தேசிய உடையிலும் பல நிகழ்வுகளில் ஒன்றாக காட்சியளித்தார்கள். அது இருவேறு அரசியலை அப்பட்டமாக பிரதிபலித்துக்கொண்டிருந்தன.

1962 ஆம் ஆண்டு வில்லியம் கொபல்லாவ ஆளுநராக தெரிவாகி பின்னர் 1972இல் முதலாவது ஜனாதிபதியாக அவரின் பதவி தொடர்ந்தது. 1962 தொடக்கம் சமீபத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வரை தேசிய உடையை தேசத்தின் கௌரவத்தை பிரதிபலிக்கும் உடையாக அணிந்து வந்திருக்கிறார்கள். அதை முதலாவது தடவை மீண்டும் மாற்றி தேசிய உடையணியாமல் மேற்கத்தேய ஆடையை மீண்டும் அணிந்தவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, இலங்கை ஜனாதிபதியாக ஆன கோத்தபாய ராஜபக்ச தான்.

தேசிய உடை இப்படி சமூகத்தில் ஜனரஞ்சகமானாலும் அது அரசியல்வாதிகள் அணிகின்ற உடையாக மட்டும் சுருங்கியுள்ளது. அல்லது சில பாரம்பரிய, மத, கலாசார, வைபவ நிகழ்வுகளில் மாத்திரம் காண முடிகிறது. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் கூட தேசிய உடை அணிகின்ற வழக்கம் புழக்கத்தில் இருக்கவே செய்தது. இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தியின் ஆதர்சத்தால் உள்வாங்கப்பட்ட இலங்கையின் தேசிய உடை இப்போது அதே இந்தியாவிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட பல மோஸ்தர்களில் சேலைகள், பஞ்சாபிகள், சுடிதார்கள், வேஷ்டிகள், குர்தாக்கள் எல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் தேசிய உடையின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.

 

http://thinakkural.lk/article/55158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்த கதை ஒன்றும் உண்டு.

இவர் தெலுங்கு நாயக்கர் வம்சாவளி.

சுதந்திரத்துக்கு முன்னர், வெள்ளையர்கள், அரச வேலைகளுக்கு தமிழர்களையே விரும்பினார்கள் என்பதால்,  தமிழ் பேசுபவராக கெத்தாக இருந்த குடும்பம்.

சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்பதை அறிந்ததும், சிங்கள பௌத்த வேடம் போட்டு கொண்டது. அதனாலேயே சூடும் விழுந்தது.

"நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி

நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழி அறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்து உழல அகப்பட்டீரே".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இவர் தெலுங்கு நாயக்கர் வம்சாவளி.

சுதந்திரத்துக்கு முன்னர், வெள்ளையர்கள், அரச வேலைகளுக்கு தமிழர்களையே விரும்பினார்கள் என்பதால்,  தமிழ் பேசுபவராக கெத்தாக இருந்த குடும்பம்.

சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்பதை அறிந்ததும், சிங்கள பௌத்த வேடம் போட்டு கொண்டது

ஆக, தெலுங்கரின் வழிவந்து தமிழராக மாறிப் பின்னர் ஆங்கிலேயத்தனத்தைப் பின்பற்றி முழுச் சிங்கள பெளத்தனாக தன்னை மாற்றிய பண்டாரநாயக்காவால் தமிழர்கள் பட்டினத்தார் சொல்லும் இழிநிலையில் வந்து சேர்ந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

ஆக, தெலுங்கரின் வழிவந்து தமிழராக மாறிப் பின்னர் ஆங்கிலேயத்தனத்தைப் பின்பற்றி முழுச் சிங்கள பெளத்தனாக தன்னை மாற்றிய பண்டாரநாயக்காவால் தமிழர்கள் பட்டினத்தார் சொல்லும் இழிநிலையில் வந்து சேர்ந்துள்ளார்கள்.

எல்லா கூத்தும் ஆடி, பிள்ளைகள் யாருக்குமே, நல்ல வாழ்க்கை அமையவில்லை. அநுரவின் வாழ்வு.... இந்தியாவில் நேரு குடும்பத்தாருக்கும் இதே அவல நிலை.

‘பெற்றோர் செய்த புண்ணியம் தான் பிள்ளைகளை சேருமடி’ என்றான் இன்னும் ஒரு கிறுக்கன்.

மகிந்தவும் தனது பிள்ளைகளுக்காக, முக்கியமாக நாமலுக்காக, கோத்தா என்ற நச்சுப்பாம்பை வைத்து செய்யும் அரசியல், அவரையே காவுகொள்ளும்.

கோத்தாவுக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

எல்லா கூத்தும் ஆடி, பிள்ளைகள் யாருக்குமே, நல்ல வாழ்க்கை அமையவில்லை. அநுரவின் வாழ்வு.... இந்தியாவில் நேரு குடும்பத்தாருக்கும் இதே அவல நிலை.

‘பெற்றோர் செய்த புண்ணியம் தான் பிள்ளைகளை சேருமடி’ என்றான் இன்னும் ஒரு கிறுக்கன்.

மகிந்தவும் தனது பிள்ளைகளுக்காக, முக்கியமாக நாமலுக்காக, கோத்தா என்ற நச்சுப்பாம்பை வைத்து செய்யும் அரசியல், அவரையே காவுகொள்ளும்.

கோத்தாவுக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த பாவம் புண்ணியம் பணியாரத்திலெல்லாம் நம்பிக்கை வைக்கலாம், தப்பில்லை! "எங்கள்" பக்கம் எப்படி இது இருக்கிறது என்றும் சொல்லுங்கள் கேட்கலாம்! நல்லா இருக்கிறோமா, அல்லது நாசமாப் போயிற்றமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இந்த பாவம் புண்ணியம் பணியாரத்திலெல்லாம் நம்பிக்கை வைக்கலாம், தப்பில்லை! "எங்கள்" பக்கம் எப்படி இது இருக்கிறது என்றும் சொல்லுங்கள் கேட்கலாம்! நல்லா இருக்கிறோமா, அல்லது நாசமாப் போயிற்றமா? 

ஐயா... வரலாறில் எதுவுமே நிரந்தரம் இல்லை...

உலகை கட்டியாண்ட பிரித்தானியாவினால், தனது நாட்டில் இருந்து போனவர்களின் முன்னெடுப்பால் உருவான அமெரிக்காவின் சுதந்திர வேட்க்கையை தடுக்க முடியவில்லை. இன்று அதே பிரித்தானிய துண்டாக உடைய பார்க்கிறது.

என்ன... நாம் இந்த சிங்களவனுக்கு கீழே வாழக்கூடிய காலப்பகுதியில் வாழ்கிறோம்...

நம்மைப்போல ஒரு காலத்தில், சோழ அரசனின் கீழ் சிங்களவன் வாழ்ந்த காலமும், புழுங்கி துட்டகெமுனு கிளம்பிய காலமும் இருந்துது தானே.

அதே போல நமக்கு உரிய காலமும் வரும். தளர்வடையாமல் இருந்தாலே போதும்.

மேலும் நான் சொன்னது தனிப்பட்ட குடும்பங்கள் தொடர்பானது. நீங்கள் கேட்பது ஒரு சமூகம் தொடர்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஐயா... வரலாறில் எதுவுமே நிரந்தரம் இல்லை...

உலகை கட்டியாண்ட பிரித்தானியாவினால், தனது நாட்டில் இருந்து போனவர்களின் முன்னெடுப்பால் உருவான அமெரிக்காவின் சுதந்திர வேட்க்கையை தடுக்க முடியவில்லை. இன்று அதே பிரித்தானிய துண்டாக உடைய பார்க்கிறது.

என்ன... நாம் இந்த சிங்களவனுக்கு கீழே வாழக்கூடிய காலப்பகுதியில் வாழ்கிறோம்...

நம்மைப்போல ஒரு காலத்தில், சோழ அரசனின் கீழ் சிங்களவன் வாழ்ந்த காலமும், புழுங்கி துட்டகெமுனு கிளம்பிய காலமும் இருந்துது தானே.

அதே போல நமக்கு உரிய காலமும் வரும். தளர்வடையாமல் இருந்தாலே போதும்.

மேலும் நான் சொன்னது தனிப்பட்ட குடும்பங்கள் தொடர்பானது. நீங்கள் கேட்பது ஒரு சமூகம் தொடர்பானது.

நானும் குடும்பம் பற்றித் தான் கேட்டேன், எங்கள் தரப்பில் இருந்த இளங்குடும்பம்!. பாவ புண்ணிய கர்மவினைகளினால் எதுவும் தீர்மானிக்கப் படுவதில்லை என்று சுட்டிக் காட்டவே கேட்டேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நானும் குடும்பம் பற்றித் தான் கேட்டேன், எங்கள் தரப்பில் இருந்த இளங்குடும்பம்!. பாவ புண்ணிய கர்மவினைகளினால் எதுவும் தீர்மானிக்கப் படுவதில்லை என்று சுட்டிக் காட்டவே கேட்டேன்! 

புரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

புரியவில்லை

தமிழர் தரப்பில் இருந்த தேசியத்தலைவரின் குடும்பம் பற்றிக் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தமிழர் தரப்பில் இருந்த தேசியத்தலைவரின் குடும்பம் பற்றிக் கேட்டேன்

நான் சொல்ல வேண்டியதில்லை.... மேலே எழுதியதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் தனது குடும்பத்தினையே, இனத்துக்காக கொடுத்த வகையில் வேறு படுகின்றார். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நான் சொல்ல வேண்டியதில்லை.... மேலே எழுதியதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் தனது குடும்பத்தினையே, இனத்துக்காக கொடுத்த வகையில் வேறு படுகின்றார். 💐

நாதம், அதில் மாற்றுக் கருத்தில்லை! ஆனால், பாவ புண்ணியத்தால் குடும்பங்கள் தனி மனிதர்களுக்கு பேரழிவு வருகிறது என்ற நம்பிக்கையின் அபத்தத்தைச் சுட்டிக் காட்டவே கேட்டேன்!

தண்ணியடித்தால் ஈரல் போகும், புகை பிடித்தால் சுவாசப்பை போகும்..இதெல்லாம் காரணகாரியங்கள்! அப்பன் செய்தது குடும்பத்திற்கு வரும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கைகள். இதை எடுத்துக் காட்டவே தேசியத் தலைவரின் குடும்பத்தைச் சுட்டிக் காட்டினேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

இந்த பாவம் புண்ணியம் பணியாரத்திலெல்லாம் நம்பிக்கை வைக்கலாம், தப்பில்லை! "எங்கள்" பக்கம் எப்படி இது இருக்கிறது என்றும் சொல்லுங்கள் கேட்கலாம்! நல்லா இருக்கிறோமா, அல்லது நாசமாப் போயிற்றமா? 

நல்ல கேள்வி கேட்டீர்கள். பணியாரம் எவ்வளவோ சுவையானது எமது ஆட்களின் கண்டுபிடிப்பு பாவம் புண்ணியம் முழுமையான வேஸ்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

தண்ணியடித்தால் ஈரல் போகும், புகை பிடித்தால் சுவாசப்பை போகும்..இதெல்லாம் காரணகாரியங்கள்! அப்பன் செய்தது குடும்பத்திற்கு வரும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கைகள். இதை எடுத்துக் காட்டவே தேசியத் தலைவரின் குடும்பத்தைச் சுட்டிக் காட்டினேன்!

ஜஸ்டின் படித்து, அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார். 

கருணா அம்மான் தனது இளவயது கனவு, மருத்துவராவது என்றார்.

இருவரது பாதைக்கும் உள்ள வித்தியாசம் தான், முன்னோர் சொன்ன, முன்பிறப்பில் செய்த, தாய், தந்தை செய்த பாவ, புண்ணியம்.

இவ்வளவு பெண்கள் இருக்க, மதிவதனி என்ற பெண், ஏன் தலைவரை மணந்து.... எவ்வளவு கஷடத்தினையும் தாங்கி... கடைசியில் முழுக்குடும்பத்தினையும் இழந்து... ஏன் என்கிறீர்கள்?

இது குறித்து பல உதாரணங்களை தர முடியும். ஆனாலும் நீங்கள் ஆரம்பத்திலேயே, பணியாரம் என்று தொடங்கி விட்டதால், விவாதம்... பிரயோசனம் இல்லாமல் தான் முடியும் என்பதால்.... வேறு திரியில் பார்க்கலாம்.... 🙏

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

எல்லா கூத்தும் ஆடி, பிள்ளைகள் யாருக்குமே, நல்ல வாழ்க்கை அமையவில்லை. அநுரவின் வாழ்வு.... இந்தியாவில் நேரு குடும்பத்தாருக்கும் இதே அவல நிலை.

‘பெற்றோர் செய்த புண்ணியம் தான் பிள்ளைகளை சேருமடி’ என்றான் இன்னும் ஒரு கிறுக்கன்.

மகிந்தவும் தனது பிள்ளைகளுக்காக, முக்கியமாக நாமலுக்காக, கோத்தா என்ற நச்சுப்பாம்பை வைத்து செய்யும் அரசியல், அவரையே காவுகொள்ளும்.

இது நாத முனியின் பார்வையில்

39 minutes ago, Nathamuni said:

நான் சொல்ல வேண்டியதில்லை.... மேலே எழுதியதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் தனது குடும்பத்தினையே, இனத்துக்காக கொடுத்த வகையில் வேறு படுகின்றார். 💐

இதுவும் நாத முனியின் பார்வையில்.

 

'நாத முனிய பண்டா'  என்ற தென்னிலங்கை நபரின் பார்வையில் இதே விடயம் எதிர்மாறாக இருக்கும். ஆகவே இப்படியான குருட்டு நம்பிக்கைகளை தவிர்ப்போம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஜஸ்டின் படித்து, அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார். 

கருணா அம்மான் தனது இளவயது கனவு, மருத்துவராவது என்றார்.

இருவரது பாதைக்கும் உள்ள வித்தியாசம் தான், முன்னோர் சொன்ன, முன்பிறப்பில் செய்த, தாய், தந்தை செய்த பாவ, புண்ணியம்.

இது குறித்து பல உதாரணங்களை தர முடியும். ஆனாலும் நீங்கள் ஆரம்பத்திலேயே, பணியாரம் என்று தொடங்கி விட்டதால், விவாதம்... பிரயோசனம் இல்லாமல் தான் முடியும் என்பதால்.... வேறு திரியில் பார்க்கலாம்.... 🙏

இதுக்கேன் முற்பிறப்பு மறுபிறப்பெண்டு சுத்திவளைப்பான்? ஜஸ்ரின் தொண்ணூறுகளில் பள்ளிக்கூடத்தை கோட்டைப் பிரச்சினையால் பூட்டி விட இடம்பெயர்ந்து வேறு வழியில்லாமல் கிடைத்த புத்தகத்தையெல்லாம் வாசித்ததால் படிப்பை விரும்பிப் பிடித்துக் கொண்டார்! 

கருணாவுக்கு என்ன நடந்ததென்று கருணாவிடம் தான் கேட்க வேணும்!  

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

ஜஸ்டின் படித்து, அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார். 

கருணா அம்மான் தனது இளவயது கனவு, மருத்துவராவது என்றார்.

இருவரது பாதைக்கும் உள்ள வித்தியாசம் தான், முன்னோர் சொன்ன, முன்பிறப்பில் செய்த, தாய், தந்தை செய்த பாவ, புண்ணியம்.

கருணா அம்மான்  படித்திருந்தால் அவரும் மருத்துவர் ஆகியிருப்பார்.  இதில் என்ன பாவ புண்ணியம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

கருணா அம்மான்  படித்திருந்தால் அவரும் மருத்துவர் ஆகியிருப்பார்.  இதில் என்ன பாவ புண்ணியம்?

முடியல்ல... என்ன ஒரு லாஜிக்... 😄

அது சரி... ஜஸ்டின் ஒரு திரிக்கு வந்தால்... அதுவும் தேசிய தலைவரை குறித்து பேசினால்,  டபக்கெண்டு நீங்களும் வருவது எப்படி? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இதுக்கேன் முற்பிறப்பு மறுபிறப்பெண்டு சுத்திவளைப்பான்? ஜஸ்ரின் தொண்ணூறுகளில் பள்ளிக்கூடத்தை கோட்டைப் பிரச்சினையால் பூட்டி விட இடம்பெயர்ந்து வேறு வழியில்லாமல் கிடைத்த புத்தகத்தையெல்லாம் வாசித்ததால் படிப்பை விரும்பிப் பிடித்துக் கொண்டார்! 

கருணாவுக்கு என்ன நடந்ததென்று கருணாவிடம் தான் கேட்க வேணும்!  

எனது ஒரு நண்பரின் மூத்த அண்ணர்.... தகப்பன் குடி, ஈரல் கருகி இறக்க தாயார் வளர்ப்பு. மகன்  பேராதனை மருத்துவ கல்லூரி போனார். 

தாயார் போன பிறப்பு புண்ணியம் என்றார்...

அங்கே போனவர் குடியினால்.... நாலாம் ஆண்டுக்கு மேல் போக முடியவில்லை. காரணம் பேராசிரியருடன், தண்ணியை போட்டு கொழுவி.... நான் இங்கு இருக்கும் வரை நீ பாஸ் பண்ண முடியாது என்று சொல்ல.... பல வருடம் முயன்று, பிரயோசனம் இல்லாமல்...வெளியே வந்து குடியலே மூன்று வருடங்களுக்கு முன் இறந்தார். 

அதே தாயார் போன பிறப்பு பாவம் என்றார்...

எனது இன்னொரு நண்பர் மச்சான்.... A/L 4A...

ஒரு தாக்குதலுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டவர்.... ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் போது, அந்த வீட்டுக்காரர், குப்பியினை பார்த்து.... வீட்டினை விட்டு வெளியே அனுப்பாமல்... அவருடன் பேசி.... ஒரே வாரத்தில், ஏஜெண்சி மூலம் கனடா போய் விட்டார். இப்போது அமெரிக்காவில் IBM நிறுவனத்தில் வேலை.

இதை என்னென்பது. நீங்கள் கண்டதை படித்தேன்... என்கிறீர்கள்... பாராட்டுக்கள். ஆனாலும்... ஒரு செல் தலையில், விழாமல், சிங்கள போலீசின் கையில், அப்பாவியாக சிக்காமல்..... வெளியே வந்தது... உங்கள் கெட்டித்தனம் இல்லை என்கிறேன்....

இல்லை.... ஒரு பணியாரமும் இல்லை. எனது கெட்டித்தனம் தான் என்றால்.... நான் சொல்ல எதுவும் இல்லை ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த கட்டுரையை வாசிக்க 20 நிமிடம் பிடித்திருந்தது. இந்தத் திரியில் கருத்துக்கள் வைத்த எவராவது அதை மேலோட்டமாகவாவது படித்திருந்தால் நல்லது. அல்லது மாட்டை பிடித்து மத(ர)த்தில் கட்டிய கதையாக்கும் இன்னொரு திரியாகும். 😡

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நான் இணைத்த கட்டுரையை வாசிக்க 20 நிமிடம் பிடித்திருந்தது. இந்தத் திரியில் கருத்துக்கள் வைத்த எவராவது அதை மேலோட்டமாகவாவது படித்திருந்தால் நல்லது. அல்லது மாட்டை பிடித்து மத(ர)த்தில் கட்டிய கதையாக்கும் இன்னொரு திரியாகும். 😡

உண்மைதான் கிருபர்.... திரியை திசைதிருப்பும் வழக்கமான வேலையில்... நானும் பங்குதாரராய் இருந்து விட்டேன். சொரி... கிளம்புகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

எனது ஒரு நண்பரின் மூத்த அண்ணர்.... தகப்பன் குடி, ஈரல் கருகி இறக்க தாயார் வளர்ப்பு. மகன்  பேராதனை மருத்துவ கல்லூரி போனார். 

தாயார் போன பிறப்பு புண்ணியம் என்றார்...

அங்கே போனவர் குடியினால்.... நாலாம் ஆண்டுக்கு மேல் போக முடியவில்லை. காரணம் பேராசிரியருடன், தண்ணியை போட்டு கொழுவி.... நான் இங்கு இருக்கும் வரை நீ பாஸ் பண்ண முடியாது என்று சொல்ல.... வெளியே வந்து குடியலே மூன்று வருடங்களுக்கு முன் இறந்தார். 

அதே தாயார் போன பிறப்பு பாவம் என்றார்...

எனது இன்னொரு நண்பர் மச்சான்.... A/L 4A...

ஒரு தாக்குதலுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டவர்.... ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் போது, அந்த வீட்டுக்காரர், குப்பியினை பார்த்து.... வீட்டினை விட்டு வெளியே அனுப்பாமல்... அவருடன் பேசி.... ஒரே வாரத்தில், ஏஜெண்சி மூலம் கனடா போய் விட்டார். இப்போது அமெரிக்காவில் IBM நிறுவனத்தில் வேலை.

இதை என்னென்பது. நீங்கள் கண்டதை படித்தேன்... என்கிறீர்கள்... பாராட்டுக்கள். ஆனாலும்... ஒரு செல் தலையில், விழாமல், சிங்கள போலீசின் கையில், அப்பாவியாக சிக்காமல்..... வெளியே வந்தது... உங்கள் கெட்டித்தனம் இல்லை என்கிறேன்....

இல்லை.... ஒரு பணியாரமும் இல்லை. எனது கெட்டித்தனம் தான் என்றால்.... நான் சொல்ல எதுவும் இல்லை ஐயா.

இந்த மாதிரியான கதைகள் பல உண்டு, இதெல்லாம் ஆதாரமா? என்னைப் பொறுத்தவரை இல்லை! எல்லாம் ஒரு  random நிகழ்வுகள்! நீங்கள் சொல்வதை நம்பினால் தகப்பன் கொடுமைக் காரனாக இருக்கும் ஒருவன் ஒரு முயற்சியும் எடுக்காமல் சும்மா இருந்தால் நல்லது, ஏனெனில் அவனுக்கு தேப்பனின் முன்வினை எப்படியும் ஆப்பு வைக்கத் தானே போகிறது? பிறகேன் காலத்தை முயற்சியை வீணாக்குவான்?

இதற்கெல்லாம் ஒரே விளக்கம் தான்: "வாழ்க்கை என்று எதுவும் இல்லை..உந்தன் எந்தன் கதையாகும்.." என்ற பாடல் வரி தான் (இதை  இந்தியில் கேட்டால் சுப்பராக இருக்கும்!).

நான் என் கெட்டித் தனம் என்று சொன்னதாக உங்களுக்கு விளங்கியிருக்கிறது! எனக்கே அப்படி நினைப்பில்லை! பல மனிதர்களின் தோள் மீதும் ஏறித் தான் வந்தேன், ஆனால் புண்ணியத்தின் ,விதியின் தோள்களை நம்பி எதுவும் செய்யவில்லை!   

7 minutes ago, கிருபன் said:

நான் இணைத்த கட்டுரையை வாசிக்க 20 நிமிடம் பிடித்திருந்தது. இந்தத் திரியில் கருத்துக்கள் வைத்த எவராவது அதை மேலோட்டமாகவாவது படித்திருந்தால் நல்லது. அல்லது மாட்டை பிடித்து மத(ர)த்தில் கட்டிய கதையாக்கும் இன்னொரு திரியாகும். 😡

 

 

நான் வாசித்து விட்டேன், மிக அரிய தகவல்கள், நன்றி. ஆனால், சும்மா சோளா வாளாக் கருத்துகள் கடந்து போக அனுமதிக்க முடியாததால் நீண்டு விட்டது! மன்னிக்கவும்!  

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன். வாசிக்க வேண்டிய தகவல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்... மிக நல்ல இணைப்பு...

பண்டாரநாயக்கர்.... போட்டு இருப்பது தமிழரின் தேசிய உடை, சால்வை போலவே படுகின்றது.

1529ம் ஆண்டளவில் தமிழகம் விஜய நகர பேரரசின் ஆட்சியின்  கீழ் வந்தது. அந்த காலப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேயர், பின்னர் ஒல்லாந்தர் புகுந்து கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் வரும் வரை, இந்த விஜய நகர பேரரசின் ஆட்சியின்  கீழ் தமிழகம் இருந்தது. அக்காலப்பகுதில் இருந்து, இலங்கையின், அரச குடும்பங்களுக்கு, தென் இந்திய அரச குடும்பங்களுடன் திருமண தொடர்புகள் இருந்தது.

அவ்வகையில், வந்த ஒரு இளவரசி குடும்பத்துடன், 500 தெலுங்கு குடும்பம் வந்து தீவில் குடியேறியது.

மேலும், 1815ல் கண்டி பிரித்தானியரிடம் வீழும் வரை, இந்த கலியாண தொடர்பு இருந்தது. கடைசி தமிழ் நாட்டில் இருந்து வந்த  மன்னன், கண்ணப்பன் என்னும் நாயக்கர், ஸ்ரீ விக்கிரம ராசசிங்கனாக அரசனை ஏறியதன்  காரணம், அவனது அக்காவை கட்டிய, சிங்கள அரச அத்தான் மரணித்ததால், வேறு வாரிசுகள் இல்லாததால்.

இவர், அவரது விருப்பப்படி, வேலூருக்கு அனுப்பப்பட்டு, அங்கே, வேலூர் பிரித்தானியார் கோட்டையில், சிறையில் இருந்து மாண்டார்.

இந்த அக்காவுடன் வந்தவர்களில், மலையகத்தில் செட்டில் பண்ணிய பல குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் வந்தவரே, காமினி திசாநாயக்க.... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்காவுக்கும், ஸ்ரீமாவுக்கும் வயசு வித்தியாசம் 17 வருடங்கள்.

கொலைக்கு வேறு காரணம் என்று வதந்தியும் இருந்தது என்பார்கள். 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.