Jump to content

தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா?

-இலட்சுமணன்

தமிழ்த் தேசிய அரசியலின் கடந்த 65 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் இருந்து, இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்து வந்த பாதைகளை நோக்கும்போது, அவற்றின் எதிர்வினைகள் பற்றி நன்றாகப் புரியும்.

இலங்கைத் தமிழ்க் காங்கிரிஸில் ஆரம்பித்த சமஅந்தஸ்துப் பிரச்சினை, 50க்கு 50. அன்றைய ஆட்சியாளர்கள், 50க்கு 48 தான் தருவதாகச் சொல்ல, 50க்கு 50 தந்தால்தான் தீர்ப்பை ஏற்பேன்; இல்லையேல் அதைப் பெறும் முறையில் பெறுவோம் எனச் சவால் விட்டு, கிடைத்ததையும் இழந்தனர்.

அதன்பின், இலங்கைத் தமிழரசுக்கட்சி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, சமஷ்டி முறையிலான தீர்வை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் களத்தில் இறங்கியது. இந்தப் போக்கும் சாத்தியப்படாது போகவே, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டனர். 

அதன்பின், ஆயுதப் போராட்டம் வலுவடைந்திருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில், அதற்கான அங்கிகாரத்துக்கான தேர்தலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் இடையே ஏற்பட்ட மாற்றுச் சூழல்கள், அயலுறவுக் கொள்கைகள் காரணமாக, 1987இன் பின்னர், மாகாண  அமைப்பு முறை, வடக்கு- கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி பற்றிய கருத்தாடல்களும், அதற்கான தேர்தல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, ஈழக் கோரிக்கையைக் கைவிட்ட ஈபிடீபி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள், இதனை முன்னெடுத்தன. இதனை, அன்று புலிகளும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்த்தன.

அதன்பின், 2,000க்குப் பின் நடைபெற்ற தேர்தலிலும், புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌணிக்கப்பட்ட அறிவிப்பு வரை, ஒரு நாடு; இரு தேசம் கோட்பாடு, சமஷ்டியை அடியொற்றிய பேசுபொருளாக இருந்தது. மேலும், 2008க்கு பின், வடகிழக்கு மாகாணமானது, வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்ட தேர்தல்களின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் போதெல்லாம், அதில் பங்குகொண்ட கட்சிகளைத் துரோகிகள் என்றே குறிப்பிட்டனர். தாம் அதில் பங்கேற்ற போது, இந்த துரோகம் என்ற வார்த்தை காணாமற்போக, மாறாக இருப்பதையாவது பெற்றுக்கொள்வோம்; எமது இருப்பைக் காப்பாற்றுவோம் என்ற வாக்குறுதிகளும் கோரிக்கைகளும், பிரசாரங்களில் முன்நகர்த்தப்பட்டன.

இத்தகையதொரு சூழலில், காலத்துக்கு காலம் தமிழர்த் தரப்பு, ஆட்சி அதிகாரத்துக்காக முன்வைத்த தீர்வுத் திட்டங்களை நோக்கின், 50க்கு ஐம்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது. இது காணாமல் போய்விட, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதுவும் காணாமல் போய்விட, தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவும் போய்விட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உருவான வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணக் கோரிக்கையும் இடைக்காலத்தில் தீர்வாக முன்வைக்கப்பட்டது. 

இடையில், புலிகளின் பலம் ஓங்கிய காலத்தின்போது இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கையும் புலிகள் நலிவடைந்த போது, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணக் கோரிக்கை, இரு தேசம்; ஒரு நாடு, சமஷ்டி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற பேச்சுகளெல்லாம், தேர்தல் பிரச்சாரங்களாக முன்வைக்கப்பட்டன. ஆயினும், எவையுமே நடைபெறவில்லை.

இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் கட்சிகள் விலகியும் புதிய கூட்டுகளையும் புதிய கட்சிகளையும் உருவாக்கி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்கள் அனைவரும், தமிழருக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவுமட கூறுகின்றனர். 

கடந்த 72 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் முன்வத்து, இலங்கை அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுகளை, சர்வதேசமும் இந்தியாவும் எமக்குப் பெற்றுத்தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனேயே, தேர்தலில் தாம் போட்டியிடுவதாகவும் இம்முறை, நிச்சயம் அது சாத்தியப்படும் என ஒவ்வொருவரும் அடித்துக் கூறிவருகின்றனர். இவை, ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லப்படும் தீர்வுகளும் கூத்துகளும்தான். ஆனால், இதை நம்பி இலவு காத்த கிளிபோல் தமிழ் மக்கள் இருப்பது வேதனை தரும் ஒரு விடயமாக இருக்கிறது.

தமிழ்த் தரப்பு அரசியலைப் பொறுத்தவரையில், கடந்த 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், சலுகையா, உரிமையா? என்ற ஒரு பிரசார இறுவட்டை வைத்துள்ளனர். அது, இன்று திரும்பத் திரும்ப போட்டு போட்டுக் கீறல் விழுந்துவிட்டது. அதை, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கேட்ட காதுகள் செவிடாகிவிட்டன என்று, பொதுஜனங்கள் பேசுவதை செவிமடுக்கக் கூடியதாக உள்ளது.

காரணம், எல்லா இனங்களும் அபிவிருத்தி, சலுகைகளைப் பெற்று முன்னேறிவரும் நிலையில், தமிழினம் மட்டும், உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும், இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து, சொத்து இழந்து, உறவு இழந்து, உடமைகள் இழந்து, புலம்பெயர்ந்து அகதிகளாகவும் அங்கவீனர்களாகவும் இயல்பு வாழ்வைப் பெறமுடியாமல் பரிதவிக்கும் நிலையே காணப்படுகிறது. மறுபுறம், சிறைவாசம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், யுத்தத்தின் கோரப்பிடியில் நடந்த இழப்புகள், போராடப் போனவர்களுடைய குடும்பச் சண்டையில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகள், இருந்த இருப்பையும் பொருளாதாரத்தையும், தொழில் வாய்ப்பையும், கல்வியையும் அளித்துவிட்ட அவலங்களும் காணப்படுகின்றன. 

இத்தகைய சூழலில், தமிழினம் மீட்சி பெறுவதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் பற்றிப் பிடிக்காமல், எதற்கெடுத்தாலும் பேரினவாதம், தேசியவாதம், துரோக அரசியல், கபட நாடகம் போன்ற வார்த்தை ஜாலங்களால் தமிழ்த் தேசிய தரப்பினர் அறிக்கையிட்டு, கிடைக்கின்ற ஒன்று, இரண்டையும் இல்லாது செய்துவிடுகின்றன. அபிருத்தி வந்தால் முதல் உரிமை; அதன் பின்பே அபிவிருத்தி என்றார்கள். போர் முடிந்தபின், ஏவுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்றார்கள். 

பலவந்தமாக இராணுவம் ஆக்கிரமித்த காணிகள் விடப்படும்போது, அவர்களை ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள். அறிக்கைப் போர் நடத்துவார்கள். இதன் மூலம், ஆட்சியாளர்கள் செய்வதற்கு முன்வந்ததையும் தடுத்து விடுகிறார்கள். 

குறிப்பாக, மத்திய அரசின் பொருத்து வீட்டுத் திட்டம் வந்தது. அதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சூழலுக்குப் பொருத்தமில்லை என எதிர்த்தனர். அதனால், வந்த வீட்டுத் திட்டமும் நின்றுபோனது.

வன்னிப் போரில், உடலையும் உயிரையும் இழந்து எத்தனைக் குடும்பங்கள் பராமரிப்பின்றி மரங்களின் கீழ் இருப்பதை ஊடகங்கள் இன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர்களுக்குப் பொருத்து வீடாவது கிடைத்திருந்தால், அவர்கள் இப்படி மழையிலும் வெயிலிலும் அல்லல்பட வேண்டிய தேவையில்லை. தமிழ்த் தரப்பு எப்போதுமே எதைக் கொடுத்தாலும், எதையும் ஆராயாமல் சந்தேகக் கண்கொண்டு இனவாத நோக்கில் விமர்சித்து, கிடைத்ததையும் கிடைக்காமல் செய்யும்  அரசியலைச் செய்து வருகின்றனர். 

ஆனால் இதைச் செய்பவர்கள், மக்களுக்கு வரும் உரிமையை, சலுகையாகக் காட்டுகின்றனர். ஆனால், தமக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளை உரிமையாகப் பிரதானப்படுத்துகின்றனர். நாடாளுமன்ற வாகனச் சலுகை,  கூட்டப்பணம், உணவு, மாதாந்தக் கொடுப்பனவான  சம்பளம், ஓய்வூதியம், ஏனைய ஒதுக்கீடுகள் இவையெல்லாம், அரசியலால் வரும் வரப்பிரசாதங்கள். இவற்றை, சலுகை என்றும் உரிமை என்றும் பிரிக்காமல், தீர்வுத் திட்டம் வரும்; அதை நான்தான் பெற்றுத் தருவேன் என்று வெற்றுக் கோஷமிடுவதை நிறுத்திவிட்டு, நடைமுறைச் சாத்தியமானவற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சரி ஏனைய தமிழ்த் தரப்பும் சரி, தமிழ் மக்களுக்கு ஆற்ற முன்வர வேண்டும். ஏனெனில், இந்த கையாலாகாத தனத்தை, தமிழ் மக்கள் இனியும் ஜீரணிக்கத் தயாரில்லை.

இதனால்தான் இம்முறைத் தேர்தலில், பொதுஜனங்கள் ஆர்வமின்றி, வாக்களித்து எதைக் கண்டோம், வாக்களிக்க வேண்டிய தேவை என்ன இருக்கு, ஏன் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், சும்மா விட்டுப்போட்டு அலுவலைப் பார்க்கலாம் என்றெல்லாம் கருத்தாடல்கள் முன்வைப்பதற்குக் காரணமாய் உள்ளன எனலாம்.

அந்தவகையில், வடக்கு, கிழக்குத் தமிழ்த் தேசிய தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், பிரகடனங்கள், பிரசாரங்கள் என்பன, பிசுபிசுத்து, மக்களிடத்தில் எடுபடாமல் போயுள்ளன. ஏனெனில், இவை 72 ஆண்டுகளாகச் சொல்லப்படுகின்ற விடயங்களாகும். உண்மையிலேயே, மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். மனம் வெறுத்துப் போயுள்ளனர்.

தமிழ் தேசியத்துக்காகப் போராடாதவர்கள், தாங்கள் போராடியதாகப் புருடா விடுகின்றனர். புரட்சிப் பாடல்களுக்கும் விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கும், போராளிகள் படங்களுக்கு மாலை அணிவித்தும் படங்களை எடுத்து, நவீன தொழில்நுட்பங்களினூடாகக் கையாண்டு, புதுப்புது படைப்பு செய்துள்ளனர். இவர்களை, வரலாறு தெரியாதவர்கள் நம்பலாம்.

இன்றும் இந்தத் தாயக வேள்வியில் உரிமைக்காகப் பங்காற்றிய 32 இயக்கங்களிலும் போராடியவர்கள், அதன் ஆதரவாளர்கள், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதற்காக அர்ப்பணித்தவர்கள், இந்தப் பேய்த்தனமான கூத்தையும் நாடகத்தையும், நேரடியாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தயவுசெய்து, நீங்கள் போராடாவிட்டால் பரவாயில்லை; போராட்டத்துக்குப் போலியாக உரிமை கோராதீர்கள்.

ஏனெனில், அந்த இழப்புகளையும் வலிகளையும் சுமந்தவர்களுக்கே புரியும். ஆதலில், ஒரு போராளி இன்னொரு சக போராளியைத் துரோகி எனச் சொல்ல மாட்டான். போராடாத நீங்கள், அதை இலகுவாகச் சொல்லிவிடுவீர்கள். உங்களை மக்களுக்கு இலகுவாக அது அடையாளம் காட்டுகிறது.

எனவே, மக்களுக்கு நல்லதைச் செய்யுங்கள். புதிய சிந்தனைகள் பிறக்கட்டும். புதிய வியூகங்கள் மலரட்டும். புதிய பாதை அமைப்போம். எமது மக்களை அந்த வழியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வளப்படுத்துவோம். அது பற்றியதாக உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் அமையட்டும். சிறந்ததுக்கு மக்கள் புள்ளடி இடுவார்கள்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-தரப்பு-புதிய-பாதை-நோக்கி-நகருமா/91-253251

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

ஏனெனில், அந்த இழப்புகளையும் வலிகளையும் சுமந்தவர்களுக்கே புரியும். ஆதலில், ஒரு போராளி இன்னொரு சக போராளியைத் துரோகி எனச் சொல்ல மாட்டான். போராடாத நீங்கள், அதை இலகுவாகச் சொல்லிவிடுவீர்கள். உங்களை மக்களுக்கு இலகுவாக அது அடையாளம் காட்டுகிறது.

எனவே, மக்களுக்கு நல்லதைச் செய்யுங்கள். புதிய சிந்தனைகள் பிறக்கட்டும். புதிய வியூகங்கள் மலரட்டும். புதிய பாதை அமைப்போம். எமது மக்களை அந்த வழியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வளப்படுத்துவோம். அது பற்றியதாக உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் அமையட்டும். சிறந்ததுக்கு மக்கள் புள்ளடி இடுவார்கள்.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பகலவன் said:

இணைப்புக்கு நன்றி கிருபன்.

இந்த கருத்தை குவோட் பண்ணி பச்சை குத்தின நீங்கள் தான்  இரு நாட்களுக்கு முன் நிழலி ஒருவரை துரோகி என்று எழுதினத்திற்கும் பச்சை குத்தினீர்கள்...முதலில் கொண்ட கருத்தில் நீங்கள் உறுதியாய் இருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை  பயனுள்ள கட்டுரை.

On 16/7/2020 at 19:41, கிருபன் said:

மக்களுக்கு நல்லதைச் செய்யுங்கள். புதிய சிந்தனைகள் பிறக்கட்டும். புதிய வியூகங்கள் மலரட்டும். புதிய பாதை அமைப்போம். எமது மக்களை அந்த வழியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வளப்படுத்துவோம். அது பற்றியதாக உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் அமையட்டும். சிறந்ததுக்கு மக்கள் புள்ளடி இடுவார்கள்.

மக்களும் தங்களை வளப்படுத்தும் திட்டங்களுக்கு புள்ளடி இடுவார்களாக மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய தரப்பின்  உரிமையாளர்... யார் 
சம்பந்தனா... சுமந்திரானா ...  ‼️

கீழே உள்ள... இணைப்பை பாருங்கள்.   💥

 

 

Link to comment
Share on other sites

மிக சிறந்த கட்டுரை. தமிழினம் இனியும் உசுபேத்தல் அரசியலில் மயங்கி உள்ளதையும் இழக்கும் நிலையை அடைந்துவிடக்கூடாது.

50 : 50 கேட்டபோது 50:48 தருவதாக கூறியதை நிராகரித்து 50: 50  தந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று எமது முன்னோர்கள் அடம் பிடித்ததை வாசித்த போது எப்படியான மரமண்டை அரசியலை விதைத்துவிட்டு சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது. அதையே  பின்னாள் வந்த ஆயுதப் போராளிகளும் தொடர்ந்தார்கள்.

சூதாட்டத்தில் விட்ட பணத்தை எடுக்க தொடர்ந்து  சூதாடி  மேலதிகமாக உள்ளதையும் இழந்தது போல, இவ்வளவு பேரை இழந்துவிட்டோம் இந்த தீர்வை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற  ரீதியில் தொடர்ந்து அதே பிடிவாத நாசமாய் போன பாதையில் செல்லாமல் புத்திசாலித்தனமான பாதையில் புதிய தலைமுறையாவது பயணிக்க வேண்டும். புதிய தலைமுறையாவது வாழ்வைத் தொலைக்காது  வாழ்வை அனுபவிக்க வேண்டும்.  

அதற்கு உசுப்பேற்றும் பிடிவாத அரசியல் நடத்துபவர்களை தோற்கடித்து ஜதார்தத்ததை உணந்து நடக்கும் வினை திறன் உள்ள வேட்பாளரகளை  தெரிவு செய்ய வேண்டும். அப்படியானவர்கள் களத்தில் உள்ளார்களா என்பது அடுத்த கேள்வி.  

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

தொடர்ந்து அதே பிடிவாத நாசமாய் போன பாதையில் செல்லாமல் புத்திசாலித்தனமான பாதையில் புதிய தலைமுறையாவது பயணிக்க வேண்டும். புதிய தலைமுறையாவது வாழ்வைத் தொலைக்காது  வாழ்வை அனுபவிக்க வேண்டும்.  

ஈழத்தமிழர்களுக்கு முத்தான அறிவுரை 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.