Jump to content

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .

seranb-1200x826.jpg

உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

‘இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது’ எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக " கடவுள் துகள் "  எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. விஞ்ஞானிகள் இங்குள்ள, வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவியில் நேர் மின் தன்மைகொண்ட புரோட்டான் துகள்களை அதிவேகத்தில் மோதவைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்தத் துகள் மோதல் கருவி 2009 – 2013 வரையிலும் பிறகு 2015 – 2018 வரையிலும் செயல்பட்ட போது கிடைத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்த போதுதான் ’டெட்ரா குவார்க்’ எனப்படும் புதிய துகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் எது?’ எனும் கேள்விக்கான பதிலைத் தேடிச் செல்வதில் விஞ்ஞானிகள் ஒரு படி முன்னேறியுள்ளனர். ன்களை மேலும் பகுத்தால் குவார்க் எனப்படும் நுண்ணிய துகள்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது.

இதுவரை நடந்த ஆய்வு அடிப்படையில், இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து மெசான்வகை ஹெட்ரான்களும்; மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பேர்யான் வகை ஹெட்ரான்கள் மட்டுமே இருப்பது உறுதிபடுத்தப்பட்டன. ஆனால், கணக்கீடு அடிப்படையில் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான்கள் துகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

https://www.vanakkamlondon.com/பிரபஞ்சம்-உருவான-ரகசியத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிந்து என்ன செய்யப்போகிறார்கள் இந்த விஞ்ஞானிகள்....? புதிதாகப் பிரபஞ்சங்களை உருவாக்கப் போகிறார்களா...?? அப்போ அந்தப் பிரபஞ்சங்களுக்குக் கடவுள்கள் யார்...??? என்னையும் ஒரு பிரபஞ்சத்துக்கு கடவுளாக்கும்படி விண்ணப்பிக்கலாமா....???? 

மனிதரை மனிதர் தீண்டமுடியாது அவதிப்படும் நிலையில் அதற்கொரு தீர்வைத் தேடமுடியாத மூஞ்சூறுகள் விளக்குமாற்றைத் தேடுகின்றன.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ்   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

சிலருக்கு இப்ப இதுதான் வேலை எது கெடுத்தாலும் போலி / மூடநம்பிக்கை என்ற சுலோகலங்களுடன்  சாரத்தை மடித்துக்கட்டிக்கிட்டு திரிகினம்😎

 

51 minutes ago, பெருமாள் said:

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

நல்லது இப்படியாவது அவர்களை சிந்திக்க வைக்கின்றதே

Link to comment
Share on other sites

இவ்வாறான ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து  புதிய அறிவியல் கண்டு பிடிப்புக்களை  மேற்கொண்டு நிறுவினால் தானே அதை வைத்து   எதற்கும் வக்கற்ற மூடக்கூட்டம் பின்னர்  வந்து இதை எங்க முன்னோர் எப்பவோ கண்டு பிடித்தது தான் என்று போலி அறிவியல் பசப்பு கதைகளை கூறி எங்கள்  காலில் பூ சுற்ற முனைந்து அத்துடன் தங்களுக்குள்ளையே மெய்சிலிர்தது சுய இன்பம் காண முடியும்.

அதற்காகவாவது இயற்பியலாளர்கள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளட்டும். அது பற்றிய அறிவு அற்றவர்கள் ஒதுங்கி வடிவேலு, கவுண்டன்  நகைச்சுவையை ரசித்துக்கொண்டு  இருப்போம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா?

 

 

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

spacer.png

புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.

இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.

அதில் முதல் காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் வாழும் இந்தப் பேரண்டம் எதனால் ஆனது என்ற கேள்வி பயணித்து வந்தப் பாதை மிகவும் முக்கியம். 

 

பேரண்டக் கட்டடத்தின் செங்கல் எது?

 

இந்த உலகம், இந்தப் பேரண்டம், எதனால் ஆனது என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தைத் துளைத்துக்கொண்டுள்ள கேள்வி. 

spacer.png

Getty Images

 

அணுத் துகள்களில் செய்யப்படும் ஆராய்ச்சி என்பது அந்த துகள்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்வதாக இருக்கிறது.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள், நம்பினார்கள். இந்த ஐந்து பூதங்களை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல்கூட ஒன்று உண்டு. 

spacer.png

Getty Images

பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன. 

ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. 

பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.

ஹெட்ரான் என்னும் பெரிய துகள்களை மேலும் பிரித்தால்...

ஆனால், பயணம் அத்தோடு முடியவில்லை. அணுவுக்குள் இருக்கும் துகள்களிலும், அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என்று இருவகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மிக மிகச் சிறியதான எதிர் மின் சுமையுடைய எலக்ட்ரான் போன்றவை பகுக்கமுடியாத துகள்களாக - ஆங்கிலத்தில் எலிமென்டரி பார்ட்டிகிள் - இருக்கின்றன. ஆனால், நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் தம்மினும் நுண்ணிய வேறு பொருள்களால் ஆனவை என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அணுவுக்குள் இருக்கிற துகள்களும் அடிப்படைப் பொருள்கள் அல்ல. அவற்றிலும் வேறொன்றால் செய்யப்பட்டவை உண்டு என்று ஆனது. அணுவுக்குள் இருக்கும் துகள்களில் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால் அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று தெரியவந்தது. 

குவார்க்கில் ஆண் பெண் - ஒரு சின்ன கற்பனை

அதாவது நாம் கண்ணால் காணும் பொருள்களைப் பகுத்தால் தனிம மூலக்கூறுகள் வரும், அவற்றைப் பகுத்தால் அணுக்கள். அணுக்களைப் பகுத்தால், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள், அவற்றில் பெரிய துகள்களான ஹெட்ரான் வகைத் துகள்களைப் பகுத்தால், குவார்க்குகள். இதுதான் புரிதல்.

இந்த குவார்க்குகளில் அப் - டவுன், சார்ம்-ஸ்ட்ரேஞ்ச், டாப்-பாட்டம் ஆகிய மூன்று ஜோடிகளாக, ஆறு வகை உண்டு. தவிர, இந்த ஆறிலும் குவார்க் - எதிர் குவார்க் என்ற முரண்பட்ட மின்சுமை உடைய வகையும் உண்டு. அதாவது ஆறு இனத்திலும் ஆண்-பெண் இருப்பது மாதிரி. 

இது வரையில், இரண்டு குவார்க்குகள் சேர்ந்து உருவான மெசான் வகை ஹெட்ரான்களும், மூன்று குவார்க்குகள் சேர்ந்து உருவான பேர்யான் வகை ஹெட்ரான்களும் மட்டுமே பொதுவாக காணப்பட்டன. ஆனால், கணித கணக்கீடுகள் மூலம் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்தார்கள். 

அப்படி நான்கு, ஐந்து குவார்க் கொண்ட கற்பனையில் மட்டுமே கண்ட அரியவகை ஹெட்ரான்களை எக்ஸோடிக் ஹெட்ரான் என்று அழைத்தார்கள். 

கற்பனையாகவே இருந்து வந்த இந்த நான்கு, ஐந்து குவார்க் கொண்ட அரிய வகை ஹெட்ரான்களை கடந்த சில ஆண்டுகளில் சில முறை ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள். 

ஆனால், அப்படிக் கண்டுபிடித்தவற்றில் எவையும், இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே வகை குவார்க்குகளைக் கொண்டவையோ, நான்குமே வலுவானவையோ இல்லை.

 

நான்கும் பெரிய குவார்க் - புதிய கண்டுபிடிப்பு

 

இந்நிலையில், செர்ன் நிறுவனத்தின் எல்.எச்.சி.பி. (LHCb) எனப்படும் ஆய்வுத் திட்டம் கடந்த மாதம் இரண்டு சார்ம் வகை குவார்க்குகளையும், இரண்டு சார்ம் வகை எதிர் குவார்க்குகளையும் கொண்ட ஒரு அரிய ஹெட்ரான் துகளை கண்டுபிடித்தது. இத்தகவலை செர்ன் தனது இணைய தளத்திலேயே அறிவித்துள்ளது. முன்னெப்போதும் நான்கும் ஒரே வகையை சேர்ந்த, வலுத்த வகை குவார்க்குகளைக் கொண்ட துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செர்ன் செய்தித் தொடர்பாளர் கியோவானி பசலேவா தெரிவித்தார். 

செர்ன் நிறுவனத்துக்கு நிலத்துக்கடியில் 27 கி.மீ. நீளமுள்ள வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவி இருப்பது பிரபலம். கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசானைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி இங்குதான் நடக்கிறது. லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும் இந்த துகள் மோதல் கருவி 2009 முதல் 2013 வரையிலும், பிறகு 2015 முதல் 2018 வரையிலும செயல்பட்டபோது கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இப்படிப் புதிய வகை டெட்ராகுவார்க் என்னும் துகள் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது என்று இந்த மாதம் முதல் தேதி அறிவித்தது செர்ன். 

spacer.png

Getty Images

புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்' என்பதை ஆராய்வதற்கான 'ஆராய்ச்சிக்கூடமாக' இந்த புதிய, அரிய வகை ஹெட்ரான்கள் இருக்கும் என்றும் செர்ன் அறிவித்துள்ளது. 

 

புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி - அமோல் திகே

 

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றி மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் அமோல் திகே-விடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம். 

'குவான்டம் குரோமோடைனமிக்ஸ்' எனப்படும் முழுமையான ஸ்ட்ராங் இன்டராக்ஷன் கோட்பாட்டின் கீழ் இப்படி, நான்கு, ஐந்து குவார்க்குகளைக் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்கலாம் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கணிப்பை மெய்யாக்கியது மட்டுமல்ல, அந்தக் கோட்பாடும் சரி என்று நிரூபித்துள்ளது. அந்த வகையில் இது முக்கியமானது. நான்கும் பெரிய குவார்க்குகள் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படி ஆனாலும், புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி இது என்றார் அவர்.

இரண்டு குவார்க் உள்ள ஹெட்ரான்களை மெசான் என்றும், மூன்று குவார்க் உள்ளவற்றை பேர்யான் என்றும் அழைக்கிறார்கள். இப்போது, நான்கு, ஐந்து உள்ளவற்றை கண்டுபிடித்தால், அதற்கும் புதிய வகை உருவாகுமா? என்று அவரிடம் கேட்டோம். இப்போதைக்கு புதிதாக கண்டுபிடிக்கும் இத்தகைய நான்கு குவார்க் கொண்ட டெட்ராகுவார்க்குகள், 5 குவார்க் கொண்ட பென்டா குவார்க்குகளுக்கு x, y, z என்று பெயர் வைத்துக்கொண்டு போவார்கள், நிறைய வந்த பிறகு ஒருவேளை புதிய வகைகளுக்குப் பெயர் சூட்டலாம் என்றார் திகே. 

இது ஒருவேளை உண்மையிலேயே நான்கு குவார்க்குகள் வலுவாக பிணைந்து உருவான டெட்ரா குவார்க் ஆகவும் இருக்கலாம், அல்லது இரண்டு மெசான்கள் வலுவற்ற முறையில் இணைந்து இப்படி ஒரு தோற்றம் தரலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. இன்னும் கூர்ந்து கவனித்து இதற்கான சாத்தியக்கூற்றை ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் திகே. 

கோட்பாட்டைத் தெளிவுபடுத்த உதவும் - அர்ச்சனா ஷர்மா

செர்ன் ஆய்வகத்தில் பணியாற்று மூத்த துகள் இயற்பியலாளரான அர்ச்சனா ஷர்மாவுடன் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம். எக்ஸோடிக் ஹெட்ரான் எனப்படும் அரிய வகை ஹெட்ரான்கள் தொடர்பான மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடக்கின்றன. இது போன்ற அரிய வகை ஹெட்ரான்களை பலமுறை பார்க்க நேர்வது இந்த மாதிரிகளை தெளிவுபடுத்தி உரைக்க உதவியாக இருக்கும் என்கிறார். புதிதாக கண்டறியப்பட்ட துகளில் நான்கும் பெரிய வகை குவார்க்காக இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் அர்ச்சனா. 

பேரண்டம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காண்பதற்கான பயணத்தில், இந்த கண்டுபிடிப்பு அறிவியலை ஒரு படி அருகே நகர்த்திச் சென்றதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு, ஆம் என்கிறார் அமோல் திகே. 

 

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது?

spacer.png

Getty Images

 

பெருவெடிப்புக்குப் பிறகு எப்படி இந்தப் பேரண்டம் விரிவடைந்தது என்பது குறித்த கோட்பாட்டை விளக்கும் வரைபடம்.

குவார்க் துகள் வகைகளில், குவார்க் - எதிர் குவார்க் (ஆங்கிலத்தில் ஆன்டி குவார்க்) என்று முரண் வகை இருக்கிறது என்று மேலே பார்த்தோமில்லையா. அதைப் போல அணுத் துகள் அனைத்துக்கும் கூட எதிர் துகள்கள் உண்டு. அணுவிலும் எதிர் அணு உண்டு. அணுக்களால் ஆன பொருளிலும் எதிர்ப் பொருள்கள் இருக்கவேண்டும் என்று 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டைராக் கணித்தார்.

ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறிவிடும். 

ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பால் இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது. 

ஆனால் பல லட்சம் கோடி விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், அண்டசராசரம் அத்தனையும் வெறும் பொருள்களால் ஆனவை மட்டுமே. எதிர்ப் பொருள் எங்குமே இல்லையே ஏன்?

அல்லது சம எண்ணிக்கையில் எதிர்ப் பொருள், எதிரணு இருந்து பொருளை, பொருளணுவை அழித்திருந்தால், இந்தப் பேரண்டத்தில் எந்தப் பொருளுமே, விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், சூரியனும், பூமியும் எதுவுமே இருந்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் இருக்கிறன்றனவே ஏன்? இந்தக் கேள்விதான் இன்றைய உலக இயற்பியலின் அதிமுக்கியமான கேள்வி. விண்வெளி அறிவியல் முதல், துகள் அறிவியல் வரை எல்லாவற்றையும் குடையும் அதிமுக்கியப் பிரச்சனையாக இதுதான் இருக்கிறது. 

பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை. 

தற்போது நான்கு 'சார்ம்' வகை குவார்க்குகள் கொண்ட முக்கியமான இந்த டெட்ராகுவார்க் கண்டுபிடிப்பை நிகழ்த்திய LHCb திட்டத்தின் முழுப்பெயர் Large Hadron Collider beauty என்பதாகும். இந்த ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கமே பெருவெடிப்புக்குப் பிறகு, எதிர்ப்பொருள்களால் அழிக்கப்படாமல் பொருள்கள் தப்பிப் பிழைத்து நமது இந்தப் பேரண்டத்தை உருவாக்கியது எப்படி என்பதை ஆராய்வதுதான்.

தமது அடிப்படை நோக்கமான இந்த ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு எல்.ஹெச்.சி. பியூட்டிக்கு எப்படி உதவி செய்யப்போகிறது என்பதுதான் இப்போது ஆர்வமூட்டும் கேள்வி.

 

 

https://www.bbc.com/tamil/science-53410739

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரம

 

 

 

ஓம் கோட் செய்யாததால் இப்போதுதான் கவனித்தன் தோழர் .. இது மொத்தமாக ctrl +a , ctrl + c , ctrl + v போல தெரிய வில்லை.. உள்ளடக்கத்தில் மாறுபாடு தெரிகிறது..👍

அதிலும் பார்க்க..,

வணக்கம்லண்டன் ..

<time class="entry-date published updated" datetime="2020-07-16T17:09:28+00:00">July 16, 2020</time>

பிபிசிதமிழ்..

பேரண்டம்+உருவானதன்+ரகசியம்+என்ன?+புது+வகை+அணுத்+துகள்+கண்டுபிடித்த+செர்ன்+ஆய்வகம்+-+BBC+News+தமிழ்]&amp;x11=[2020-07-16T05:51:04.000Z]&amp;x12=[2020-07-16T10:29:52.000Z]&amp;x13=[Science~Physics~Nuclear+power]&amp;

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

தோழர், 

பிபிசி சுட்டமாதிரி தெரியவில்லை.  பிபிசி தமிழ் நிருபர் இந்தியாவில் சிலருடன் உரையாடிய தகவல் கட்டுரையில் உள்ளது. பிபிசியின் கட்டுரையை அப்படியே வெட்டி ஒட்டினால் பிபிசி ஆக்கம் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும் என்று வணக்கம் லண்டன்காரர்கள் முக்கியமான பகுதியை மாத்திரம் போட்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விவசாயி விக் said:

எமது சாதுக்கள் சித்தர்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்து எல்லாவற்றையும் கண்டார்கள்.   கடவுள் இல்லை என்று விட்டு கடவுள் துகள் என்று பேரையும் வைத்து நடராசாரையும் வாசலிலே வைத்திருக்கிறார்கள்.  

இதுதான் உலகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா , கொரோனா எண்டு பொத்திக் கொண்டிருந்து விட்டு எழும்பி வந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரன் எல்லையைக் கொஞ்சம் தள்ளி அடைச்சிருப்பான்.  அதை தவிர்க்க முயல்பவர்களின் முயற்சியே தவிர கொள்ளிக்கட்டை மாதிரி தெரியவில்லை .

எதை செய்தாலும் ,ஏதாவது இசகுபிசகாக சொல்லுவதே வாடிக்கையாக போய் விட்டது . பின் நிலைமை கை மீறியவுடனும் “ஆத்தர பீத்தர”  என்று ‘மல்லாத்தும்’  போது கத்த வேண்டியது….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது முதலே தெரிந்தபடியால் ஒரு தகவலுக்காக மாத்திரம் இங்கே பதிகிறேன்: Leon Lederman என்ற விஞ்ஞானி 90களில் தனது புத்தகத்தில் இந்த ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) துகளுக்கு ஆரம்பத்தில் வைத்த செல்ல பெயர் "God Damn Particle". இந்த துகளை இப்பிடி, இப்பிடி இருக்க வேண்டும் என்று முதலே வரையறை செய்துவிட்டார்கள், ஆனால் இதை தேடுவதில் அல்லது உருவாக்குவதில் உள்ள கஷ்டத்தை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக அவர் இவ்வாறு "God Damn Particle" என்று பெயர் வைத்தார், இந்த புத்தகத்தை வெளியிட முன்வந்த publisher இந்த பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த பெயர் வாசிப்பவர்களுக்கு நன்றாக இருக்காது என்பதால், இதை "God Particle - கடவுளின் துகள்" என்று மங்களகரமாக மாற்றினார்கள். மற்ற துகள்கள் போன்று இதுவும் ஒரு அடிப்படை துகள், வேறு விசேசம் ஒன்றும் கிடையாது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் பலர் கடவுளின் துகள் (God Particle) என்ற பெயரையும்  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சொல்லியது போல் பின்னாளில் இந்த துகள் தேவை அற்ற முறையில் கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு ஆரம்பத்தில் சேர்ன் (CERN) என்ற இடத்தில் (ஜெனிவாவுக்குள் சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை அண்டி.. இருக்கும் ஓர் இடத்தின் பெயர் தான் CERN.) உள்ள large Hadron collider இருக்கும் ஆய்வகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்த ஆய்வின் தொடக்கம்.. தற்போதைய நிலை வரை விளக்கி இருந்தார்கள். எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை. சொல்லப்பட்டிருக்கும் விடயம்.. அணுவை..உடைக்க உடைக்க புதிசு புதிசா வந்து கொண்டிருக்கிறதே தவிர.. முடிவாக ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதே. அங்கும் முடிவிலி தான் கதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

பல பில்லியன்கள் செலவழித்து படிப்படியாக நடந்து கண்டுபிடிப்பவற்றை எல்லாம் வெறும் “பாங்க்” ஐ உருட்டி வாயில் போட்டு சித்தர்கள் அப்போதே ஞானக்கண்ணால் பார்த்துச் சொல்லிவிட்டார்கள். 

இந்தப் பூமியில் இருக்கும் மனிதன் பூமி அழியமுதலே அருகிக் காணாமல் போவான். அப்படி இருக்க ஏன் இப்படி பணத்தை வாரி இறைத்து இப்படி ஆராய்ச்சி செய்கின்றார்கள் என்பதும் நியாயமான கேள்விதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

இன்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் உள்ள பிரதேசம்... சுற்றயல் எல்லாமே.. CERN என்று தான் அழைக்கப்படுகிறது. 

ஊரில் அறிவியல் நகர் என்ற ஒன்று கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டது போன்று. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்த யுகம் சமன்பாடுகளுக்கானது. எனக்கு தெரிந்த வகையில்இ பௌதிகவியலில் இரண்டே இரண்டு முறைதான் எமது புரிதல்கள் இருவேறு தளங்களுக்கு உந்தித்தள்ளப்பட்டன. 

முதலாவதாக சேர் ஐசாக் நியூட்டன் தன் இயக்க விதிகளை தந்தபோது
இரண்டாவது ஆல்பேட் ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கொள்கைகளை வெளியிட்டபோது

இரண்டுக்கும் கிட்டத்தட்ட 200 வருடங்கள் இடைவெளி. இந்த காலவெளியில் தரப்பட்ட கொள்கைகளை வைத்து சமன்பாடுகள்மூலம் இயந்திரங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வது வியாபாரமாக்குவதாக உலகம் அசைந்து வந்திருக்கிறது. இதுவும் தொடரும். வியாபார உத்திகள் மட்டும் மாறும்.

இவை அனைத்தையும் கடந்து ஒவ்வொருகணமும் இயங்கியபடி ஏதோவொன்று உயிர்ப்புடன் இருக்கிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் அதை அறிய முனைகின்றன.

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eelathirumagan said:

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

யார்கண்டது  cyborg கிழும்  மேம்பட்ட தலைமுறை  குடுவையொன்றினுள் நமது எண்ணம்களும் நினைவுகளும் அடைபட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இருக்கலாம் அப்போதும் யாழை மறக்காது நினைவு மீட்டல்களுக்கு குடுவையான பாதி சிப்கள்  கொல்லுப்படலாம் 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.