Jump to content

யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?

July 17, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

kumara.jpg

பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத் தன்மை இல்லாதிருக்கத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளார்.

 

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராகத் தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும் தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியைத் தர மாட்டாது என்றும் கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

http://thinakkural.lk/article/55522

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?

July 17, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

kumara.jpg

பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத் தன்மை இல்லாதிருக்கத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளார்.

 

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராகத் தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும் தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் ஊடாட்டமும் தனது ஆசிரியப் பணியில் இணை பிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியைத் தர மாட்டாது என்றும் கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

http://thinakkural.lk/article/55522

ஆம் அவர் இனிமேல் சட்டதரணியாய் மட்டும் இருக்கப் போறாராம் ...இவரை போல படித்தவர்கள் நாட்டை விட்டு ஓடாமல் இருந்தால் சரி...விரிவுரையாளருக்குரிய சம்பளம் இவருக்கு போதாது என்று நினைக்கிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இறங்கி கப்பலை தள்ளாத வரைக்கும் சந்தோசம் 

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

அரச வேலை பாப்பவர்கள்  நீதிமன்றில் வாதாட முடியாது என்ற அடிப்படை  சட்ட அறிவு  கூட இல்லாமல் குருபரன் இருக்கின்றர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

1) அரச வேலை பாப்பவர்கள்  நீதிமன்றில் வாதாட முடியாது என்ற

2) அடிப்படை  சட்ட அறிவு  கூட இல்லாமல் குருபரன் இருக்கின்றர்.  

1) எதனை அடிப்படையாக வைத்துக் கூறுகிறீர்கள் 🤔

2) அவருக்குச் அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லை என்று கூறுவது சரியான அளவீடாகத் தெரியவில்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார்!

InShot_20200718_125442358-960x1200.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர் குருபரன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தான் யாழ் பல்கலைக்கழக உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் அவர்தெரிவித்துள்ளதாவது:

 

“யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்தின் பேரில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பல்கலைக்கழக பேரவை தடை விதித்தமை காரணமாக, அவர் தன்னுடைய விரிவுரையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விமானாக நான் அவருக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன்.

உயர்கல்வி அமைச்சரை சந்தித்து எனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதுடன் கலாநிதி குருபரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

கல்விமானொருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு எப் யு ரி எ போன்ற இயக்கம் மௌனமாக இருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், கல்விமான்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/விரிவுரையாளர்-குருபரன்-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

குருபரன் ,காணாமற் போனோருக்கான வழக்கில் அவர்களுக்கு ஆதரவாய் வாதாட போன படியால் தான் நீதிமன்றத்தால் அண்மையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசால் சொல்லப்படுவது கடமை நேரத்தில் இப்படியானவர்கள் கேஸ்,அது,இது என்று மினக்கெட்டு மாணவர்களுக்கு ஒழுங்காய்  படிப்பிக்க மாட்டார்கள்...இது ஒரு விதத்தில் உண்மை .
குருபரனுக்கு கீழ் இருக்கும் சிலர் தான் அவரை போட்டு கொடுத்தது என்றும் சொல்கிறார்கள்.
குருபரன் சொல்வது தான் வெளியில் போய் நடைமுறையில் நீதின்றங்களில் நடப்பது தெரிந்தால் தான் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் எடுக்க முடியும் என்கிறார்.
அதில் எந்தளவிற்கு உண்மை இருக்குது என்று தெரியாது ?
அவர் கோட்டுக்கு போய் தான் நாளாந்தம் என்ன நடக்குது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.
அவர் சிறந்த கல்விமான் ,தனது ஆற்றலை எமது வருங்கால சமூகத்திற்கு பயன்படுத்தாமல்  வக்கீல் தொழில் செய்யப் போவது என்பது ஏற்று கொள்ள கூடியதில்லை .
இதற்கு  அவரது உரிமை மறுக்கப்பட்டமை போன்ற சில காரணங்கள் இருந்தாலும் பணம் தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் .
முக்கியமாய் அவருக்கு மட்டும் இந்த சட்டம் போடப்படவில்லை ...அவரை போல சட்ட விரிவுரையாளர்களாய் இருக்கும் எல்லோருக்கும் சேர்த்து தான் இந்த சட்டம் போடப்பட்டது.
இவரை தவிர வேறு எந்த விரிவுரையாளராவது இந்த சட்டத்திற்கு எதிராய் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களா? அல்லது இவரோடு இணைந்து இருக்கிறார்களா?

நான் குருபரனாய் இருந்தால் விரிவுரையாளர் பதவியை கை  விட்டு இருக்க மாட்டேன்....அதே நேரத்தில் காணாமற் போனோர் போன்ற தமிழர் நலன் போன்ற முக்கிய வழக்குகளிற்காய் வாதாட எனது நம்பிக்கைக்குரிய சீடரை தேர்ந்தெடுத்து  அவர்கள்  அந்த வழக்குகளில் வெல்லக் கூடிய வழிமுறைகளை சொல்லி கொடுப்பேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

****

குருபரன் ,காணாமற் போனோருக்கான வழக்கில் அவர்களுக்கு ஆதரவாய் வாதாட போன படியால் தான்

2) நீதிமன்றத்தால் அண்மையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசால் சொல்லப்படுவது கடமை நேரத்தில் இப்படியானவர்கள் கேஸ்,அது,இது என்று மினக்கெட்டு மாணவர்களுக்கு ஒழுங்காய்  படிப்பிக்க மாட்டார்கள்...இது ஒரு விதத்தில் உண்மை .
குருபரனுக்கு கீழ் இருக்கும் சிலர் தான் அவரை போட்டு கொடுத்தது என்றும் சொல்கிறார்கள்.
குருபரன் சொல்வது தான் வெளியில் போய்  

3) நடைமுறையில் நீதின்றங்களில் நடப்பது தெரிந்தால் தான் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் எடுக்க முடியும் என்கிறார்.
அதில் எந்தளவிற்கு உண்மை இருக்குது என்று தெரியாது ?
அவர் கோட்டுக்கு போய் தான் நாளாந்தம் என்ன நடக்குது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.
அவர் சிறந்த கல்விமான் ,தனது ஆற்றலை எமது வருங்கால சமூகத்திற்கு பயன்படுத்தாமல்  வக்கீல் தொழில் செய்யப் போவது என்பது ஏற்று கொள்ள கூடியதில்லை .
இதற்கு  அவரது உரிமை மறுக்கப்பட்டமை போன்ற சில காரணங்கள் இருந்தாலும் பணம் தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் .
முக்கியமாய் அவருக்கு மட்டும்

4) இந்த சட்டம் போடப்படவில்லை ...அவரை போல சட்ட விரிவுரையாளர்களாய் இருக்கும் எல்லோருக்கும் சேர்த்து தான் இந்த சட்டம் போடப்பட்டது.
இவரை தவிர வேறு எந்த விரிவுரையாளராவது இந்த சட்டத்திற்கு எதிராய் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களா? அல்லது இவரோடு இணைந்து இருக்கிறார்களா?

நான் குருபரனாய் இருந்தால் விரிவுரையாளர் பதவியை கை  விட்டு இருக்க மாட்டேன்....அதே நேரத்தில் காணாமற் போனோர் போன்ற தமிழர் நலன் போன்ற முக்கிய வழக்குகளிற்காய் வாதாட எனது நம்பிக்கைக்குரிய சீடரை தேர்ந்தெடுத்து  அவர்கள்  அந்த வழக்குகளில் வெல்லக் கூடிய வழிமுறைகளை சொல்லி கொடுப்பேன் 

****

2) சட்டம் ஆக்கப்பட்டுவிட்டதா ? எப்போது ? 

3) அவரது கூற்றில் உண்மை உள்ளது. 

4) சட்டம் ஆக்கப்படவில்லை என்பது எனது நிலைப்பாடு. தவறு இருப்பின் சுட்டிக் காட்டலாம், ஆதாரங்களோடு. 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி சில விடயங்களை 4 வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். ஆதாரங்களுடன் அவைபற்றி அறிந்தேன்.  அவற்றை பற்றி இன்று பதிவிடுகிறேன். எனது மாமாவுக்கு வழக்கு பேசுகிறேன் என்று சொல்லி ஒன்றும் ஒழுங்காக செய்யவும் இல்லை. ஆக வழக்கு வேலையின்போது தான் பல்கலை கழகத்தில் பிசி என்றும் படிப்பிக்கும்போது வழக்குகளில் பிசி என்று ஒன்றும் உருப்படியாக செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்களில் வேலைபார்ப்பது ஒன்றும் அரசாங்க வேலை கிடையாது, பல்கலக்கழகங்களது விரிவுரையாளர்களை துணைவேந்தர்களை நியமிப்பது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு என நம்புகிறேன் ஒரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணக்குழு தேவைப்பட்டால் ஒரு ஊழியரை வேலையைவிட்டு விலத்திவைக்கலாம், ஆனால் குருபரன் விடையத்தில் பிரச்சனை வேறு அவர்சார்ந்த அரசியல் அவரை வேறுவிதத்தில் கையாளுவதற்கு முயல்கிறது அதாவது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஆளும்கட்சி சார்பிலானதாக இருப்பதாலும் உள்ளூர் அரசியலும் அதில் இணைந்துள்ளதாலும் பிரச்சனை இந்த அளவுக்கு வந்து நிற்கிறது. 

மேலும் இவர் விக்கி ஐயாவின் கட்சியில் கொள்கை விளக்கத்தைத் தயாரிப்பதில் துணையிருந்தவராவார்.

விக்கி ஐயா தற்போது இந்தியாவின் முழுமையான நிகழ்சிநிரலுடன் பயணம்செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அதலால் தென்னிலங்கைக்கு இவர்கள் வேண்டாதவராகிவிட்டனர்.

இதற்கு முன்பு யாழில் வந்த ஒரு பத்தியில் எரிக் சொல்கெய்ம் ஜஸ்வந் சிங்கா பற்றிக் கூறியதையும்  சம்பந்தர் இந்தியாவை விட்டு விலகி வெகுதூரம் சென்று ரணிலது நிகழ்சிநிரலுக்குள்  சுமந்திரனால் உள்வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துகிறேன்.

மேலதிகமாக ஒரு செய்தி விக்கியருக்கு வெட்டி விளயாடி அரசியல் செய்யத்தெரியாது இந்த விடையத்தில் அவர் வெள்ளேந்திரி ஆகையால்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் "கஜன் ஏன் இந்தியாவுக்கு உம்க்களைத் துண்டறப் பிடிப்பதில்லை" எனக்கேட்டவர் வேறு யாருமென்றால் இதை மறைத்திருப்பார்கள் அந்த ம்னிசன் இதைச் சொல்லப்போய் கஜன் பொன்னர் அன்றோடு விட்டதாம் நரி கொண்டலடி எனக் கழண்டுட்டார்.

இன்னுமொரு விடையம் இந்தியா எதிர்காலத்தில் இன்னும் பல பத்துவருடங்களுக்கு ஈழத்தமிழர்க்கு எதுவித தீர்வும் கிடைக்காது பார்த்துக்கொள்ளும். 

இதில் ஜஸ்வன் சிங்கா எரிக் சொல்கெய்ம் சந்திப்பு ஒரு சிறிய உதாரணம்.

தவிர 

இந்தியா அமைதிப்படை எனும் பெயரில் ஒரு ஆக்கிரமிப்பைச் செய்ததுபோல் இப்போது யாழ் குடாநாட்டில் இந்திய துணைத்தூதரகம் ஒன்றை நிறுவி அமைதிப்படை காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பைவிட பலமடங்கு வீரியமான ஆக்கிரமிப்பை தமிழர் நிலத்தில் தற்போது செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இவரைப்பற்றி சில விடயங்களை 4 வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். ஆதாரங்களுடன் அவைபற்றி அறிந்தேன்.  அவற்றை பற்றி இன்று பதிவிடுகிறேன். எனது மாமாவுக்கு வழக்கு பேசுகிறேன் என்று சொல்லி ஒன்றும் ஒழுங்காக செய்யவும் இல்லை. ஆக வழக்கு வேலையின்போது தான் பல்கலை கழகத்தில் பிசி என்றும் படிப்பிக்கும்போது வழக்குகளில் பிசி என்று ஒன்றும் உருப்படியாக செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன். 

ஆனால் யாழ்  மாவட்டத்தில் கோவில்கள் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள சாராய கடைகளை எதிர்த்து வாதாடி மூட வைத்தவர்  ஒரு சத  காசு வாங்காமல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

பல்கலைக்கழகங்களில் வேலைபார்ப்பது ஒன்றும் அரசாங்க வேலை கிடையாது, பல்கலக்கழகங்களது விரிவுரையாளர்களை துணைவேந்தர்களை நியமிப்பது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு என நம்புகிறேன் ஒரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணக்குழு தேவைப்பட்டால் ஒரு ஊழியரை வேலையைவிட்டு விலத்திவைக்கலாம், ஆனால் குருபரன் விடையத்தில் பிரச்சனை வேறு அவர்சார்ந்த அரசியல் அவரை வேறுவிதத்தில் கையாளுவதற்கு முயல்கிறது அதாவது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஆளும்கட்சி சார்பிலானதாக இருப்பதாலும் உள்ளூர் அரசியலும் அதில் இணைந்துள்ளதாலும் பிரச்சனை இந்த அளவுக்கு வந்து நிற்கிறது. 

மேலும் இவர் விக்கி ஐயாவின் கட்சியில் கொள்கை விளக்கத்தைத் தயாரிப்பதில் துணையிருந்தவராவார்.

விக்கி ஐயா தற்போது இந்தியாவின் முழுமையான நிகழ்சிநிரலுடன் பயணம்செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அதலால் தென்னிலங்கைக்கு இவர்கள் வேண்டாதவராகிவிட்டனர்.

இதற்கு முன்பு யாழில் வந்த ஒரு பத்தியில் எரிக் சொல்கெய்ம் ஜஸ்வந் சிங்கா பற்றிக் கூறியதையும்  சம்பந்தர் இந்தியாவை விட்டு விலகி வெகுதூரம் சென்று ரணிலது நிகழ்சிநிரலுக்குள்  சுமந்திரனால் உள்வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துகிறேன்.

மேலதிகமாக ஒரு செய்தி விக்கியருக்கு வெட்டி விளயாடி அரசியல் செய்யத்தெரியாது இந்த விடையத்தில் அவர் வெள்ளேந்திரி ஆகையால்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் "கஜன் ஏன் இந்தியாவுக்கு உம்க்களைத் துண்டறப் பிடிப்பதில்லை" எனக்கேட்டவர் வேறு யாருமென்றால் இதை மறைத்திருப்பார்கள் அந்த ம்னிசன் இதைச் சொல்லப்போய் கஜன் பொன்னர் அன்றோடு விட்டதாம் நரி கொண்டலடி எனக் கழண்டுட்டார்.

இன்னுமொரு விடையம் இந்தியா எதிர்காலத்தில் இன்னும் பல பத்துவருடங்களுக்கு ஈழத்தமிழர்க்கு எதுவித தீர்வும் கிடைக்காது பார்த்துக்கொள்ளும். 

இதில் ஜஸ்வன் சிங்கா எரிக் சொல்கெய்ம் சந்திப்பு ஒரு சிறிய உதாரணம்.

தவிர 

இந்தியா அமைதிப்படை எனும் பெயரில் ஒரு ஆக்கிரமிப்பைச் செய்ததுபோல் இப்போது யாழ் குடாநாட்டில் இந்திய துணைத்தூதரகம் ஒன்றை நிறுவி அமைதிப்படை காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பைவிட பலமடங்கு வீரியமான ஆக்கிரமிப்பை தமிழர் நிலத்தில் தற்போது செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக .....

1) இந்திய RAW பரந்தன் இராஜனை முன்னிலைப்படுத்தி முன்னாள் ஆயுததாரிகளை(புலிகள் அல்ல) ஒன்று சேர்க்கும் நடவடிக்கையை மிகத் தீவிரமாக , வேகமாக மேற்கொண்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் Tele conference ஊடாக நடந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், கனடாவிலிருந்து பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுள் நாடுகடந்த அரசின் சில பிரதிநிதிகளும் அடங்குவர். (கோட்டாபயவின் ஆட்களும் இதற்குள் இருந்ததாகத் தகவல் 😀)

2) இவர்களின் நோக்கம்(RAW), தேவை ஏற்படின் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதலை ஆரம்பித்து வைத்தல்.

3) சீனா வடக்கில், குறிப்பாக காங்கேயன்துறையை அண்டிய பகுதிகளில் மிகப் பெரும் கட்டுமான வேலைகளை (முதலீடு) உ+ம் Colombo Fort City ஆரம்பிக்க அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டது. இதனால் கோபமடைந்த இந்தியா அனுமதியை இரத்துச் செய வைப்பதற்காக மிகத் தீவிரமாக முனைகிறது.

(நீண்டகால நோக்கில் இந்தியா, தேவை ஏற்படின் வடக்கு-கிழக்கை தன்னுடன் இணைக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இவைகளாகும்)

3) பூனகரி வடக்கில் 2500 Acre உரிமை கோரப்படாத காணிகளை அரசாங்கம் சிங்களக் குடியேற்றத்திற்காக ஒதுக்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு Acre விகிதம் வழங்கப்பட உள்ளது. 

4)  பூனகரி வடக்கின் மொத்த சனத்தொகை 400 பேர். பூனகரிச் சந்தியில் தொடங்கி கல்முனை கடற்கரை வரை வீதி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. Covid -19 காரணமாக வீதியை அமைக்கும் வேலைகள் பிற்போடப்பட்டுள்ளன. வீதிக்கான நிதி ஒதுக்கீட்டு உபயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா . (சற்று கற்பனை செய்து பாருங்கள்- நாவற்குழிச் சந்தியிலிருந்து தொடங்கும் சிங்களக் குடியேற்றம் (உபயம் டக்ளஸ் தேவானந்தா) பூனகரி ஊடாக கல்முனை வரை பரந்திருக்கும். அடுத்ததாக நைனாதீவில் சிங்கள பெளத்த அடையாளம் - அப்படியே மாதகல் வரை தொடர்ந்திருக்கும்.

இந்தக் குடியேற்றம் நடக்குமானால் வடக்கு கிழக்குத் தமிழரின் தமிழ்நாட்டிற்கான நீட்சி துண்டாடப்படும்.

5) பூனகரி வடக்கில் அதன் புவியியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கைக்கும் தடைவிதிக்கும்படி நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை முன்னிலைப் படுத்தியது TNA யின் சுமந்திரன். இவ் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.

 

கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும்.  😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும்.  😡

ரிஷியின் பரபரப்பு செய்திகளாக இருக்கின்றதே. இவ்வளவு உள்வீட்டு தகவல்கள் தெரிந்துள்ளீர்கள்😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, zuma said:

அரச வேலை பாப்பவர்கள்  நீதிமன்றில் வாதாட முடியாது என்ற அடிப்படை  சட்ட அறிவு  கூட இல்லாமல் குருபரன் இருக்கின்றர்.  

அப்படியே ஜனாதிபதி சட்டத்தரணியாக இருப்பவர் தேர்தலில் நிட்க்க  முடியாது என்றும் ஒரு சட்டத்தை கொண்டுவாங்க  வடகிழக்கு தமிழர்கள்  நிம்மதியாய் இருப்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

ரிஷியின் பரபரப்பு செய்திகளாக இருக்கின்றதே. இவ்வளவு உள்வீட்டு தகவல்கள் தெரிந்துள்ளீர்கள்😮

என்னிடம் ஆதாரங்கள் உண்டு. நான் பரபரப்புக்காக இதனைப் போடவில்லை 😀

நாங்கள் ஒன்றுக்கும் பிரயோசனமற்ற விடயங்களில் கவனத்தை செலுத்துகிறோம். விடயங்களோ வேறு எங்கோ போய்க்கொன்று இருக்கின்றன. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

****

2) சட்டம் ஆக்கப்பட்டுவிட்டதா ? எப்போது ? 

3) அவரது கூற்றில் உண்மை உள்ளது. 

4) சட்டம் ஆக்கப்படவில்லை என்பது எனது நிலைப்பாடு. தவறு இருப்பின் சுட்டிக் காட்டலாம், ஆதாரங்களோடு. 

👍

மருத்துவ விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு படிப்பித்து கொண்டு வைத்தியராகவும் அரச வைத்தியசாலையில் பணி  புரிய வேண்டும்... ஒரு கிழமைக்கு குறிப்பிட்டு இவ்வளவு மணித்தியாலங்கள் பணி புரிய வேண்டும்...எனக்குத் தெரிந்த வரையில் இப்படியான விரிவுரையாளர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுவது குறைவு[காசுக்காய் வேலை செய்ப்பவர்களும் இருக்கலாம்.] காரணம் இவர்களுக்கான நேரம் போதாமை ....ஆனால் அவர்கள் விரும்பினால் கடமை நேரம் தவிர்த்து பிரைவேட்டாய் வேலை செய்யவும் தடை இல்லை.
இவர் சட்ட விரிவுரையாளர் என்பதால்,  அத்தோடு துறை சார்ந்த தலைவராகவும் இருந்திருக்கிறார்...திங்களில் இருந்து வெள்ளி வரை யூனி இருக்கும் . அதே நேரத்தில் தான் கோட்டும் நடக்கும் ..அவர் ஒன்று வகுப்பை மிஸ் பண்ணுவார் அல்லது கோட்டை மிஸ் பண்ணுவார் ...இவர் தலைவர் இவரே இப்படி அலைந்து கொண்டு திரிந்தால் இவருக்கு கீழ் பணி  புரிபவர்கள் தாங்களும் அப்படி செய்ய பார்ப்பார்கள்.
அரசு இவருக்கு சம்பளமும் கொடுத்து ,கடமை நேரத்தில் போய் பிரைவேட்டாய் உழை என்று சொல்லி விடுமா? ...யாருக்கு நட்டம்? இவருக்கு முன் இவரை மாதிரியான விரிவுரையாளர்கள் இப்படி இரு வேலைகள் செய்திருந்தால் , இவர் இதைக் காட்டியே இன்னொரு கேஸ் போட்டு இருக்க மாட்டாரா?

என்னுடைய கணிப்பு இவரை பின்னால் இருந்து யாரோ தூண்டுகிறார்கள் ...அது கஜேந்திரகுமாராகவும் இருக்கலாம்...அரசியலில் சேர போறாரோ தெரியாது . 
பி;கு ; 4,5 நாட்களுக்கு முன்பு இவரை போன்ற சட்ட விரிவுரையாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசித்தேன் . அதில் கடமை நேரத்தில்  வேறு இடத்தில் வேலை செய்யக் கூடாது என்று இருந்தது .. இன்று போய் பார்த்தேன் அந்த பதிவை நீக்கி விட்டார்...அது சட்டமாய் இருக்குதா என்றால் எனக்குத் தெரியாது ...இது பற்றி குருபரனுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்..இன்று அவர் மு.பு போய் பார்த்தேன் ...அதில் அவர் சொல்லியிருக்கார் .யாரோ ஒரு சட்ட வல்லுனரின் பெயரை சொல்லி அவர் சொல்லியிருக்கார் ஒரே நேரத்தில் இரு இடத்திலும் வேலை செய்யலாம் என்ட மாதிரி எழுதியிருக்கார் ..இலங்கையில் இது தொடர்பான சட்டங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்...பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்களுக்கு என்று ஒரு ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன்ஸ் இருக்குமல்லவா ? அதற்கு கட்டுப்பட்டு தானே பதவி ஏற்று இருப்பார் 
எது எப்படியாயினும் அவரது வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டியது அவர் தான்...தேசியத்தை நேசிக்கும் ஒருவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்தது கொஞ்சம் அதிர்ச்சி தான்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உங்கள் கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக .....

1) இந்திய RAW பரந்தன் இராஜனை முன்னிலைப்படுத்தி முன்னாள் ஆயுததாரிகளை(புலிகள் அல்ல) ஒன்று சேர்க்கும் நடவடிக்கையை மிகத் தீவிரமாக , வேகமாக மேற்கொண்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் Tele conference ஊடாக நடந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், கனடாவிலிருந்து பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுள் நாடுகடந்த அரசின் சில பிரதிநிதிகளும் அடங்குவர். (கோட்டாபயவின் ஆட்களும் இதற்குள் இருந்ததாகத் தகவல் 😀)

2) இவர்களின் நோக்கம்(RAW), தேவை ஏற்படின் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதலை ஆரம்பித்து வைத்தல்.

3) சீனா வடக்கில், குறிப்பாக காங்கேயன்துறையை அண்டிய பகுதிகளில் மிகப் பெரும் கட்டுமான வேலைகளை (முதலீடு) உ+ம் Colombo Fort City ஆரம்பிக்க அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டது. இதனால் கோபமடைந்த இந்தியா அனுமதியை இரத்துச் செய வைப்பதற்காக மிகத் தீவிரமாக முனைகிறது.

(நீண்டகால நோக்கில் இந்தியா, தேவை ஏற்படின் வடக்கு-கிழக்கை தன்னுடன் இணைக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இவைகளாகும்)

3) பூனகரி வடக்கில் 2500 Acre உரிமை கோரப்படாத காணிகளை அரசாங்கம் சிங்களக் குடியேற்றத்திற்காக ஒதுக்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு Acre விகிதம் வழங்கப்பட உள்ளது. 

4)  பூனகரி வடக்கின் மொத்த சனத்தொகை 400 பேர். பூனகரிச் சந்தியில் தொடங்கி கல்முனை கடற்கரை வரை வீதி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. Covid -19 காரணமாக வீதியை அமைக்கும் வேலைகள் பிற்போடப்பட்டுள்ளன. வீதிக்கான நிதி ஒதுக்கீட்டு உபயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா . (சற்று கற்பனை செய்து பாருங்கள்- நாவற்குழிச் சந்தியிலிருந்து தொடங்கும் சிங்களக் குடியேற்றம் (உபயம் டக்ளஸ் தேவானந்தா) பூனகரி ஊடாக கல்முனை வரை பரந்திருக்கும். அடுத்ததாக நைனாதீவில் சிங்கள பெளத்த அடையாளம் - அப்படியே மாதகல் வரை தொடர்ந்திருக்கும்.

இந்தக் குடியேற்றம் நடக்குமானால் வடக்கு கிழக்குத் தமிழரின் தமிழ்நாட்டிற்கான நீட்சி துண்டாடப்படும்.

5) பூனகரி வடக்கில் அதன் புவியியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கைக்கும் தடைவிதிக்கும்படி நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை முன்னிலைப் படுத்தியது TNA யின் சுமந்திரன். இவ் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.

 

கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும்.  😡

கபிதான் கூறிய விடையங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன் ஆனால் அதிகப் பிரசங்கித்தனமாக அதை நான் கூற விரும்பவில்லை. இதை விட மேலும் சில விடையங்கள் கபிதானுக்குத் தெரிந்திருக்கலாம் அதைக் கூறுவதை நான் தவிர்கிறேன் ஆனால் ஒரு விடையம் மட்டும் கூறுகிறேன் ஒரு முக்கியமான விடையத்துக்குத் தமிழர் தரப்பில் ஒரு  குழு  இந்தியாவின் உதவியை நாடியது  இந்தியா அதற்கு மறுத்து ஆனால் கொஞ்சம் வீரியம் குறைந்த ஒரு நடவடிக்கைக்குத் தாங்கள் உதவிபுரிவதாகக் கூறியது ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. தவிர அனைத்தையும் பரந்தன் இராஜன் தலைமையிலேயே நடாத்தப்படல்வேண்டும் என்பதே இந்தியாவின் அறிவுறுத்தல். அதற்கு புலம்பெயர் தேசங்களிலுள்ள முக்கால்வாசிப்பேர் ஒத்துவந்தாலும் முக்கியமாக தாமே இப்போதும் "அது" எனக்கருதும் ஒருபகுதி அதை நிராகரித்துவிட்டது. 

இப்போதும் இந்தச் சிக்கல் நீடிக்கிறது. 

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம சொன்னால் பாவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Elugnajiru said:

கபிதான் கூறிய விடையங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன் ஆனால் அதிகப் பிரசங்கித்தனமாக அதை நான் கூற விரும்பவில்லை. இதை விட மேலும் சில விடையங்கள் கபிதானுக்குத் தெரிந்திருக்கலாம் அதைக் கூறுவதை நான் தவிர்கிறேன் ஆனால் ஒரு விடையம் மட்டும் கூறுகிறேன் ஒரு முக்கியமான விடையத்துக்குத் தமிழர் தரப்பில் ஒரு  குழு  இந்தியாவின் உதவியை நாடியது  இந்தியா அதற்கு மறுத்து ஆனால் கொஞ்சம் வீரியம் குறைந்த ஒரு நடவடிக்கைக்குத் தாங்கள் உதவிபுரிவதாகக் கூறியது ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. தவிர அனைத்தையும் பரந்தன் இராஜன் தலைமையிலேயே நடாத்தப்படல்வேண்டும் என்பதே இந்தியாவின் அறிவுறுத்தல். அதற்கு புலம்பெயர் தேசங்களிலுள்ள முக்கால்வாசிப்பேர் ஒத்துவந்தாலும் முக்கியமாக தாமே இப்போதும் "அது" எனக்கருதும் ஒருபகுதி அதை நிராகரித்துவிட்டது. 

இப்போதும் இந்தச் சிக்கல் நீடிக்கிறது. 

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம சொன்னால் பாவம்.

இதைக் கூறுவது அதிகப்பிரசங்கித்தனமல்ல. தெரிந்தவர்கள்தான் கூறமுடியும். தெரியாதவர்களால் கூற முடியாதல்லவா ? 😀

ஆனால், இந்தியாவால் இன்னுமொரு பேரழிவு தமிழர்க்கு   நிச்சயம் என்று என்னால் உறுதிபடக் கூற முடியும்.☹️

நாங்களோ வடக்கு -கிழக்கு, சாதி, சமயம் என்று பிரிந்து நின்று அடிபடுகிறோம். ☹️

எச் சொல் யார் யார் வாய்க் கேட்பினும் அச் சொல் மெய்ச் சொல் காண்பது அறிவு.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

3) பூனகரி வடக்கில் 2500 Acre உரிமை கோரப்படாத காணிகளை அரசாங்கம் சிங்களக் குடியேற்றத்திற்காக ஒதுக்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு Acre விகிதம் வழங்கப்பட உள்ளது.

பகிரங்கமாக வந்த செய்தி.

 

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39877

 

After Naavat-kuzhi, Colombo targets Poonakari for Sinhala colonisation across Jaffna lagoon

[TamilNet, Friday, 03 July 2020, 19:28 GMT]
Strategically located Naavat-kuzhi in Jaffna peninsula and Poonakari across the Jaffna lagoon at the entrance to the peninsula in the mainland were systematically targeted for Sinhalicisation by occupying Colombo during the previous Rajapaksa regime. Politicians, including Rajapaksa family members, were directly involved in grabbing lands and farms in Poonakari. Sinhala colonists were brought to Naavat-kuzhi in Jaffna. The colonisation of Naavatkuzhi carried out clandestinely during the Rajapaksa rule gained “legal” status under the Sirisena-Wickramasinghe rule that followed. Sections of Sinhala nationalists who joined the US bandwagon, such as Patali Champika Ranawake, allocated lands and housing schemes to the colonists. They also completed a Buddhist stupa. Now, the Rajapaksa regime is back in business escalating the project into Poonakari, informed Tamil officials in Jaffna said.

 

 

A secret move to identify 2,500 acres of lands along Kauthaari-munai and other areas of Poonakari (Pooneryn) is being schemed, the officials who didn’t wish to be named due to security reasons, said.

Two thousand five hundred acres of lands were being targeted for transformation into state-lands to be handed over to 250 families, at one-acre per family. Sinhala families from the South are also going to be among the beneficiaries, the officials said.

A team of five persons are involved in the Colombo-based move. Former Ki'linochchi District Secretary Suntharam Arumainayakam is a prominent member of this team, the officials said. Some officials in Jaffna have declined to take part.

SLFP politician Angkayan Ramanathan who collaborates with the Rajapaksa regime is also involved in the move, the officials said. Ramanathan has however not revealed any details of Sinhala colonisation.

The SL Forest Conservation Department has seized vast tracts of lands that belonged to private people. These lands are going to be alienated to create a Sinhalicised urban colony in the long run at Poonakari.

The scheme also includes areas where Tamils are already engaged in cultivation, according to the informed officials. There have been reports of Tamil landowners protesting against SL Forest Department officials who were claiming the lands as coming under the domain of their department.

SL Archaeology Department is also planning to enter the area in an attempt to depict the ancient Tamil heritage artefacts found in the area as belonging to “Sinhala Buddhist heritage,” the officials further said.

The Eezham Tamil legacy of Poo-nakari (meaning the town of flowers) and the region around it is of much antiquity going back to the times of proto-history and Tamil Brahmi inscriptions.



Subramaniyam Baskaran, an independent journalist from the region, when contacted by TamilNet, said the SL Forest conservation department and the Fisheries and the SL Department of Fisheries & Aquatic Resources, as well as influential politicians in Colombo, were involved in robbing the resources of Tamils.

More than 115 Tamil families are residing in Kauthaari-munai area, he said. The people lack the necessary facilities. There were also cases of traders from South buying lands from poverty-stricken Tamils.

The journalist said the people were generally opposed to the so-called “development,” which is used as the official explanation to accomplish the scheme.

The SL authorities were targeting Ponnaa-ve'li agricultural tract in addition to the coastal stretches of Kauthaari-munai and Ma'n'nith-thalai, Mr Baskaran said.
 

Poonakari, KKS & Palaali
[Satellite Image Courtesy: NASA, Visible Earth. Details & Legend: TamilNet]
 


 

Chiruththeevu
Kauthaari-munai and the borders of LTTE and SL military controlled areas in 2008
 


 

Ma'n'niththalai sand dunes
The Ma'n'niththalai sandbar showing sand deposited by the Southwest Wind. This sand largely comes from disintegrated coral of Adams Bridge reef and is white in colour. [Satellite Image Courtesy: Google Earth]
 
 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

பகிரங்கமாக வந்த செய்தி.

 

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39877

 

After Naavat-kuzhi, Colombo targets Poonakari for Sinhala colonisation across Jaffna lagoon

[TamilNet, Friday, 03 July 2020, 19:28 GMT]
Strategically located Naavat-kuzhi in Jaffna peninsula and Poonakari across the Jaffna lagoon at the entrance to the peninsula in the mainland were systematically targeted for Sinhalicisation by occupying Colombo during the previous Rajapaksa regime. Politicians, including Rajapaksa family members, were directly involved in grabbing lands and farms in Poonakari. Sinhala colonists were brought to Naavat-kuzhi in Jaffna. The colonisation of Naavatkuzhi carried out clandestinely during the Rajapaksa rule gained “legal” status under the Sirisena-Wickramasinghe rule that followed. Sections of Sinhala nationalists who joined the US bandwagon, such as Patali Champika Ranawake, allocated lands and housing schemes to the colonists. They also completed a Buddhist stupa. Now, the Rajapaksa regime is back in business escalating the project into Poonakari, informed Tamil officials in Jaffna said.

 

 

A secret move to identify 2,500 acres of lands along Kauthaari-munai and other areas of Poonakari (Pooneryn) is being schemed, the officials who didn’t wish to be named due to security reasons, said.

Two thousand five hundred acres of lands were being targeted for transformation into state-lands to be handed over to 250 families, at one-acre per family. Sinhala families from the South are also going to be among the beneficiaries, the officials said.

A team of five persons are involved in the Colombo-based move. Former Ki'linochchi District Secretary Suntharam Arumainayakam is a prominent member of this team, the officials said. Some officials in Jaffna have declined to take part.

SLFP politician Angkayan Ramanathan who collaborates with the Rajapaksa regime is also involved in the move, the officials said. Ramanathan has however not revealed any details of Sinhala colonisation.

The SL Forest Conservation Department has seized vast tracts of lands that belonged to private people. These lands are going to be alienated to create a Sinhalicised urban colony in the long run at Poonakari.

The scheme also includes areas where Tamils are already engaged in cultivation, according to the informed officials. There have been reports of Tamil landowners protesting against SL Forest Department officials who were claiming the lands as coming under the domain of their department.

SL Archaeology Department is also planning to enter the area in an attempt to depict the ancient Tamil heritage artefacts found in the area as belonging to “Sinhala Buddhist heritage,” the officials further said.

The Eezham Tamil legacy of Poo-nakari (meaning the town of flowers) and the region around it is of much antiquity going back to the times of proto-history and Tamil Brahmi inscriptions.



Subramaniyam Baskaran, an independent journalist from the region, when contacted by TamilNet, said the SL Forest conservation department and the Fisheries and the SL Department of Fisheries & Aquatic Resources, as well as influential politicians in Colombo, were involved in robbing the resources of Tamils.

More than 115 Tamil families are residing in Kauthaari-munai area, he said. The people lack the necessary facilities. There were also cases of traders from South buying lands from poverty-stricken Tamils.

The journalist said the people were generally opposed to the so-called “development,” which is used as the official explanation to accomplish the scheme.

The SL authorities were targeting Ponnaa-ve'li agricultural tract in addition to the coastal stretches of Kauthaari-munai and Ma'n'nith-thalai, Mr Baskaran said.
 

Poonakari, KKS & Palaali
[Satellite Image Courtesy: NASA, Visible Earth. Details & Legend: TamilNet]
 


 

Chiruththeevu
Kauthaari-munai and the borders of LTTE and SL military controlled areas in 2008
 


 

Ma'n'niththalai sand dunes
The Ma'n'niththalai sandbar showing sand deposited by the Southwest Wind. This sand largely comes from disintegrated coral of Adams Bridge reef and is white in colour. [Satellite Image Courtesy: Google Earth]
 
 

 

 

 

 

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் நிலைபற்றிய ஒரு செய்தி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு-கிழக்குச் சமூகம், கலாநிதி குமார வடிவேல் குருபரனை, ஒரு மனித உரிமைப் பாதுகாவலனாகவே பார்க்கிறது.

July 20, 2020

1 Min Read

Dr.-Jeyaseelan.jpgமுது நிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன்.

வடக்கு கிழக்குச் சமூகம் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை  ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார். எனவே அவருக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க பல்கலைக்கழக பேரவையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் எமது கல்விச் சமூகம் கோருகிறது என யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

-அவர் இன்று திங்கட்கிழமை(20) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வறியவர்களுக்காக சட்டப்பூர்வமாக போராடும் ஒரு மனித உரிமை வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

இலங்கை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக செயற்பட அனுமதிக்கப்பட முடியாது என்று யாழ் பல்கலைக்கழக பேரவை 2019 கார்த்திகை 9 அன்று அவருக்கு அறிவிக்கும் வரை அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைவராக இருந்தார்.

பேரவையானது பல்கலைக்கழக மானிய ஆணையம் எடுத்த முடிவை எந்த விதமான மீளாய்வும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது. இதன் மூலம் இலங்கையில் சுயாதீன உயர் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பின் தன்மையை இழக்கும் நிலையை நோக்கி நகர்கிறது.

பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் உறுதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் பேரவை கவனம் எடுக்க வேண்டும்.

அவரது அமைதியான மனித உரிமைப் பணிகளில் இருந்து அவரை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளி சக்திகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

அவர் நிறுவிய மனித உரிமை அமைப்பாக செயல்படும் யாழ்ப்பாணத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் மையத்தின் நிர்வாக இயக்குநராக இருந்ததாலும் இது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை எரிச்சலூட்டியிருக்கலாம்.

புரட்டாதி 2011 முதல் அவர் ஒரு மூத்த விரிவுரையாளர் பதவியையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைமையையும் கொண்டிருந்தமை நாட்டில் மனித உரிமைகளை உயர்த்துவதில் அவருக்கு பலமாக இருந்தது.அவர் சட்டத்துறையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க துறைசார் நடைமுறைகள் ஏற்கனவே இருக்கின்றன.

பேரவையானது பல்கலைக்கழக விவகாரங்களில் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அல்லது எந்த ஒரு அதிகாரமும் தலையிட அனுமதிக்க கூடாது.

ஆயினும்கூட 2019 புரட்டாதி 19 அன்று அவரை நீதிமன்றங்களில் வழக்காடும் செயற்பாட்டிலிருந்து தடை செய்யப்பட்டமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பேரவைக்கு உறுதிப்படுத்திய போது அதற்கு பேரவை அடி பணிந்தது. 9 ஆம் திகதி கார்த்திகை 2019 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்டது.

இருப்பினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவுக்கு எதிராக போராட பேரவைக்கு அதிகாரம் இருக்கிறது. ஏனெனில் இது ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறுகிறது.

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நிறுவனத்திற்கு வெளியே ஆலோசனை மற்றும் சமூகத்திற்கான சேவைகளை மேற்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பீடங்களின் கல்விசார் ஊழியர்கள் வைத்திய ஆலோசகர்களாக செயற்படுகின்றனர்.

மற்ற அனைத்து துறைகளிலும் உள்ள பிற கல்விசார் ஊழியர்களும் கூட தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆலோசகர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலதிக கள அனுபவம் இல்லாமல் கல்வி சேவை அல்லது கற்பித்தல் என்பது கேலிக்குரியது. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ‘புத்தகப் பூச்சிகள்’ ஆகிவிடுவார்கள்.

பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படி ஆக வேண்டும் என்று நாடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும் பல்கலைக்கழகமும் விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இப்போது பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலையற்றவர்களாகவும் படைப்பாற்றல் மற்றும் திறனாய்வு திறன் அற்றவர்களாகவும் மாறுவது குறித்து கடும் விமர்சனங்கள் உள்ளன.

உண்மையான கள அனுபவம் என்பது நமது ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆக்கபூர்வமான ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் மாற்றுவதற்கான உறுதியான வழியாகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழக அமைப்பில் இந்த வெற்றிட நிலை குறித்து புலம்பி வருகின்றன.

உண்மையான கல்வி, நிர்வாக உரிமை மற்றும் சுயாதீனம் ஆகியவற்றைக் கொண்ட பேரவையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த கல்விசார் முடிவினுடைய சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பல உயர் மட்ட சட்ட வழக்குகளை அவர் கையாண்டு வருகிறார் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள பலர் உட்பட நாம் அனைவரும் அறிவோம்.

விசேடமாக வடக்கு-கிழக்கு பகுதியில் பல குடிமக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்களுக்கான குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட அவர் அயராது முயன்று வருகிறார் என்பது வெளிப்படை.
இதன் விளைவாக அவர் நீதி மற்றும் நியாயத்திற்கான தனது சட்ட போராட்டத்திற்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் எதிர் கொள்கிறார்.

நீதிமன்றங்கள் மூலம் குற்றங்களுக்கு எதிரான நியாயம் வழங்கும் அவரது போராட்டத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கான ஒரு முயற்சியே இதுவாகும். இது கலாநிதி குருபரன் மீதான துன்புறுத்தலாகவே தீவிரமாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் அவரது கல்விசார் பதவி துறத்தல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அது நிறுவனத்தின் ஒரு பாரிய இழப்பாகவே அமையும். அவர் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வடக்கு கிழக்குச் சமூகம் அவரை ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார்.

அவருக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க பல்கலைக்கழக பேரவையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் எமது கல்விச் சமூகம் கோருகிறது.

இதனால் அவர் சட்டத்தில் ஒரு மூத்த கல்வியாளராக கற்பித்தல் மற்றும் வழக்காடுதல் ஆகியவற்றில் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி தேடுவதில் அவர்களுக்கு உதவும் ஒரு மூத்த வழக்கறிஞராக செயல் படவும் வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2020/147066/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

109703143_10157727915949141_2628091756429305750_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=knQIIatHu0MAX8pwHBG&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=3ea327f13d71fb61001f574169ee0f8f&oe=5F3940A7

சிங்களக் குடியேற்றம் பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் தரவுகளை தூக்கிப் போட்டால் இந்த  மனிதன்  .... 😧

""காகத்திற்கு கனவிலும் .....தின்னும் எண்ணம்"" என்று கூறுவது அடிக்கடி நினைவிற்கு வந்து தொலைக்கிறது. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்துறை 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 

16.07.2020 

தகுதி வாய்ந்த அதிகாரி 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 

 

ஊடாக: 

கலைப்பீடாதிபதி 

தலைவர், சட்டத்துறை 

ஐயா, 

முதுநிலை விரிவுரையாளர் பதவியை துறத்தல் தொடர்பாக 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக அறிவித்தலை வழங்கும் நோக்கில் இந்த மடலை வரைகிறேன். நான் இம்முடிவை எடுக்க நேர்ந்த நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளால் இம்மடலை மிகுந்த மன வேதனையுடனும் வலியோடும் எழுதுகின்றேன்.

நான் இப்பதவியை துறப்பதற்கு தள்ளப்பட்டமைக்கான காரணம் இப்பல்கலைக்கழகத்தின் பேரவையால் 09.11.2019 அன்று தனது 441ஆவது கூட்டத்தில் என்னை சட்டத்தொழிலில் ஈடுபட தடை செய்து வந்த தீர்ப்பினாலாகும். 

இந்த தடைக்கு முன்பதாக பேரவை என்னிடம் இவ்விடயம் தொடர்பில் ஆலோசிக்கவில்லை என்பது நீதி மற்றும் நியாயவாத கோட்பாடுகளுக்கு முரணானது. என்னைப் பொறுத்தவரையில் மேற்குறித்த பேரவையின் முடிவானது பல்கலைக்கழகத்தின் முறையான இயங்குகைக்கு அடிப்படையான பல்கலைக்கழக ஆசிரியர்களின் புலமைத்துவ சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிறுவன சுயாட்சியை தாரை வார்த்துக் கொடுத்த செயலாகும்.  

23.12.2019 அன்று மேற்குறித்த பேரவையின் முடிவுக்கு எதிராகவும் அது தங்கி நின்ற பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முடிவிற்கு எதிராகவும் நான் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேற்படி வழக்கானது வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான முடிவு தொடர்பிலும் இடைக்காலக் கட்டளைகள் தொடர்பிலும்  இன்னும் நிலுவையில் உள்ளது. ஏறத்தாழ எட்டு மாதங்களாக எனது வழக்கை உயர் நீதிமன்றம் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன். எனது கட்டுப்பாட்டிற்கு மீறிய காரணங்களினால் அது இன்னும் கை கூடவில்லை. துரதிட்டவசமாக நான் பொறுமை இழந்து வருகிறேன். நான் செய்வது தொடர்பில் ஒரு நிச்சயத்தன்மையை விரும்புகிறேன். தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கான காலம் வந்துவிட்டதால் இந்த கடிதத்தை அனுப்ப வேண்டி வந்தது.  

ஐயா, கற்றல், கற்பித்தல், புலமைத்துவ ஆராய்ச்சி மற்றும் சட்டம் மற்றும் நீதி தொடர்பிலான பொது மக்களின் விளங்கிக்கொள்ளலை சாத்தியப்படுத்தல் போன்ற விடயங்களில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாக நான் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். எனது சட்டமானி பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் எனது இரண்டு ஈடுபாடுகள் தொடர்பில் நான் முடிவெடுக்க வேண்டியிருந்தது. ஒன்று சட்டத்தை கற்பித்தல் இன்னொன்று சட்டத்தை உரைத்தல். இரண்டாவதாக சொல்லப்பட்ட ஆர்வத்தை முழுமையாக கைவிட வேண்டிய சூழல் வராது என்ற நம்பிக்கையில் நான் முந்தைய ஆர்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 

ஒரு சட்ட மாணவனாக இருந்த காலப் பகுதியில் இந்த நாட்டின் மேனிலை நீதிமன்றங்களில் வழக்குகளை பார்க்க நான் செல்வதுண்டு. அந்த அனுபவத்தின் வழியாக சட்டம் எங்ஙனம் பயிலப்படுகின்றது என்பது – சட்டம் எப்படி வாழ்கின்றது என்பது – சட்டத்தை அதன் சூழமைவிலும் ஆழமாகவும் விளங்கி கொள்ள அவசியமானது என நான் கருதினேன். இதனை நான் ‘நடைமுறை சார் அறிவின்’ பாற்பட்டது என விளிக்க தயங்குகிறேன். சட்டக் கல்வியில் அறிமுறையையும் செயன்முறையையும் இரு துருவப்படுத்திப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

இந்த காரணத்தினால் தான் 2011இல் நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைத்து இரண்டு வாரத்துக்குள்ளேயே எனது ஆசிரிய பணிக்கு இடையூறு இல்லாமல் பேரவைக்கு சட்டத்தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை நான் கோரினேன். பேரவை அந்த அனுமதியை எனக்கு வழங்கியது. எனது விளங்கிக்கொள்ளலில் எனக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தில் அதுவும் ஒரு பகுதி. ஒரு தசாப்தத்தை நெருங்கிய எனது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சட்டத் தொழிலில் ஈடுபடுவதானதுசட்டம் தொடர்பிலான எனது விளங்கிக்கொள்ளலை பல வழிகளில் விரிவுபடுத்தியு ள்ளது. எனது சட்டத் தொழிலாற்றுகை எனது ஆய்வுப் புலத்திலும் சட்டம், நீதி தொடர்பிலான பொது மக்களின் விளங்கிக் கொள்ளலை பரவலாக்கும் எனது செயற்பாட்டிலும் நேரடியான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த ஊடாட்டம் என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டுள்ளமையானது சட்ட ஆசிரியராக எனது வகிபாகத்தை அடிப்படையில் சீர்குலைக்கின்றது. 

ஐயா, சட்டத் தொழிலில் பங்குபற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பானது சிறு சிறு வழிகளில் எனது சேவையை நாடி வந்தவர்களது வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் நான் முக்கியமானதாக கருதும் அறக் கோட்ப்பாடுகளை நிலைநாட்டுவதற்கும் எனக்கு வாய்ப்பளித்திருந்தது. சட்டத்தில் எனது ஆர்வத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த ‘திருப்தி’ எனக்கு தேவையாக இருந்தது. அயல்வீட்டுக்காரரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கருக்கலைப்பு செய்ய விரும்பிய 13 வயது பெண் பிள்ளையின் வழக்கு, அபிவிருத்திக்காக கால்வாயை மூடியமையை எதிர்த்த வழக்கு, தனியார் கம்பனி ஒன்று கழிவொயிலை வெளியேற்றி சூழலை மாசடைய செய்தமையை எதிர்த்த வழக்கு, போருக்கு பிந்திய சூழலில் நினைவு கூறுவதற்கான உரிமையை நிலைநாட்டும் வழக்குகள், பேச்சு மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு எதிரான தடைகளுக்கு எதிரான வழக்குகள் மற்றும் இரண்டு தசாப்தங்களாக தமது பிள்ளைகளை தேடும் இரண்டு தாயமாரினதும் ஒரு தந்தையினதும் வழக்கு என்பன எனக்கு இந்த திருப்தியை தந்த சந்தர்ப்பங்கள். சட்டத்த்தினூடு நான் செய்யும் சமூக ஊடாட்டம் என்னைப் பொறுத்த வரையில் சமூக கரிசனையுள்ள பல்கலைக்கழக ஆசிரியனின் பணிகளில் ஒன்று.  சட்டத்தொழில் மூலம் எனக்கிருந்த சமூக ஊடாட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவனாக என்னால் எனது சட்ட ஆசிரியர் தொழிலை செய்ய முடியாது.  

பல்கலைக்கழகத்தின் சுயாதீனம், புலமைத்துவ சுதந்திரத்தை பாதுகாத்தல் என்ற விடயங்களை முன்னிறுத்திய எனது செயற்பாடுகள் தொடர்பில் கலைப்பீட சபையிலும், மூதவையிலும் என்னோடு பணியாற்றியவர்கள் அறிவார்கள். இது எனக்கு ஏற்படுத்தப்பட்ட தடையின் பின்னர் புதிதாக நான் கண்டுபிடித்த ஆர்வமல்ல. எனது தந்தை இந்த பல்கலைக்கழகத்தோடு வைத்திருந்த நீண்ட கால நெருக்கத்தால் அந்த வெளியோடு நீண்ட கால பரிச்சயமுள்ளவன் என்ற வகையில் இந்த பல்கலைக்கழகத்தில் நுழைந்ததே இந்த ஆர்வத்தோடு தான். கல்வி வழியே சமூக முன்னேற்றம் காணும் அவாவை கொண்ட சமூகத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் மிகவும் முக்கியமான வகி பாத்திரத்தை அறிந்தே இந்

த நாட்டின் மற்றைய சட்டம் போதிக்கும் பல்கலைக்கழகங்களில் சேராது இந்த பல்கலைக்கழகத்தில் நான் என்னை இணைத்துக் கொண்டேன். நான் வளர்ந்த சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் இந்த பல்கலைக்கழகம் ஆற்றக் கூடிய பணிகளை அதன் வகிபாத்திரம் சார்ந்த ஒரு புரிதலோடு இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் எண்ணத்தோடு நான் என்னை இணைத்துக் கொண்டேன். அந்த வகையில் தான் நான் எப்போதும் இந்த பல்கலைக்கழகத்தில்  வெளிப்படைத்தன்மைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், நல்லாட்சிக்கும் குரல் கொடுத்துள்ளேன்.    

ஐயா, எனது குறுகிய கால அனுபவத்தில் இந்த பல்கலைக்கழகம்  சட்டத்தின் ஆட்சிக்குட்படாத, நல்லாட்சி தத்துவங்களை பின்பற்ற தெரியாத, புலமைத்துவ சுதந்திரம் தொடர்பில் கரிசனை இல்லாத, அடிப்படை சுயமரியாதை விழுமியங்களை கூட மதிக்காத  ஓர் இடமாகவே எனக்கு தெரிகின்றது என்பதை கூற எனக்கு அனுமதி தாருங்கள். இது தொடர்பில் இந்த மடலில் விரிவாக பேசுவதை தவிர்க்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் கூற அனுமதியுங்கள்: தம்மை உயர்த்தும் நோக்கமன்றி வேறொன்றையும் அறியாத சுயநல நிகழ்ச்சி நிரல்களின் வலைப்பின்னல்களுக்குள் இந்த பல்கலைக்கழகம் தள்ளாடுகிறது.  ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற மகுடவாசத்திற்கும் இந்த பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை. இந்த நிலையானது பல்கலைக்கழகத்தை நல்லாசிரியர்களை தன்னிடத்து தக்கவைத்திருக்கவும் விடாது நல்லாசிரியர்களை ஈர்க்கவும் தவறும்.  

முடிவாக, மேல்சொன்ன காரணங்களுக்காக, சட்டத் தொழிலில் ஈடுபட என் மீது விதிக்கப்பட்ட தடை காரணமாக இந்த மிக அடிப்படையான மட்டுப்படுத்தலோடு என்னால் சட்ட ஆசிரியராக இந்த பல்கலைக்கழகத்தில் கருமமாற்ற முடியாது. நான் சட்ட ஆசியர் தொழிலை துறப்பதற்கு காரணம் சட்டத்தொழிலில் கூடுதல் வருமானம் காணலாம் என்பதற்காகவல்ல என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்.. அது தான் பிரதானம் என்றால் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் எடுத்த 2010யிலேயே அந்த முடிவை எடுத்திருப்பேன்.  கற்பித்தலே எனது முதல் காதலாக தொடர்ந்து இருக்கும். ஆனால் அதற்காக என்னை ஒரு வகுப்பறையில் பூட்டி வைக்க அனுமதிக்க மாட்டேன்.   

உயர்நீதிர்மன்றினால் நான் கோரும் இடைக்காலக் கட்டளை வழங்கப்பட்டாலோ அல்லது இறுதி விசாரணையில் என் சார்பில் தீர்க்கப்பட்டாலோ நான் மீள இந்த பல்கலைக்கழகத்தில் உள்நுழைய முயற்சிப்பேன். எனது பிரதான ஆர்வம் கற்பித்தலாகவே தொடர்ந்தும் இருக்கும். எனது சுதந்திரம், சுயமரியாதை, தனித்துவம் மதிக்கப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கத்திற்கு மீளத் திரும்ப எப்பொழுதும் தயாராகவே இருப்பேன். 

சட்டத்துறையில் எனது சகாக்களுக்கு உதவியாக எப்பொழுதும் இருப்பேன் என்றும் சட்டத்துறையின் கற்றல் கற்பித்தலுக்கு உறுதுணையாக என்னால் செய்ய முடிந்தவற்றை செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன். நான் கடந்த 18 மாதங்களாக தலைமைத்துவம் வழங்கும் தொழில் சார் கல்வி போதனையை உள்வாங்கும் பாடவிதான மறுசீரமைப்பு முயற்சியை  எனது பதவி துறப்பு அமுலுக்கு வரும் இன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குள் செய்து முடிக்க முயற்சிப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். 

நன்றி. 

கலாநிதி. கு. குருபரன் 

மூலம் முகப்புத்தகத்தில் சுட்டது 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.