Jump to content

அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு

16 ஜூலை 2020
  • பால் ரின்கன் 
  • பிபிசி அறிவியல் பிரிவு 
அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியுள்ள அணு வெடிப்பு

UNIVERSITY OF WARWICK / MARK GARLICK

பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது.

மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும்.

ஒயிட் டார்ஃப் (white dwarf) எனப்படும் இந்த நட்சத்திரம், வேறொரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருந்தது என்றும், அது எதிர் திசையில் பறக்கும் நிலையில் வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விண்வெளியாளர்கள் கருதுகின்றனர்.

இதுபோல இரண்டு நட்சத்திரங்கள் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, அவை ``பைனரி'' எனப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே விண்வெளியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

SDSS J1240+6710 எனப்படும் இந்த விண்பொருள், முன்பு அசாதாரணமாக வான்வெளி சேர்க்கையைக் கொண்டதாகக் கருதப்பட்டது.

இது 2015ல் கண்டறியப்பட்டது. வழக்கமாகக் காணப்படும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் ஆகியவை இதில் இல்லை. மாறாக, ஆக்சிஜன், நியான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் என வழக்கத்திற்கு மாறான கலவையைக் கொண்டதாக இருக்கிறது.

இப்போது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி சர்வதேச குழுவினர் ஆய்வு செய்ததில், கார்பன், சோடியம், அலுமினியம் ஆகியவை அந்த நட்சத்திரத்தின் வான் மண்டலத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சூப்பர்நோவா நிகழ்வில் முதலாவது வெப்ப ஆற்றல் வெளிப்பாட்டில் இவை உருவாகும்.

ஆனால் இரும்பு, நிக்கல், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற ``இரும்பு வகை'' தனிமங்களை அதில் காண முடியவில்லை.

கனமான தன்மை கொண்ட இந்தத் தனிமங்கள், லேசானவற்றில் இருந்து உருவாகக் கூடியவை. சூப்பர்நோவா வெப்ப ஆற்றலின் அம்சங்களைக் காட்டுபவையாக இவை இருக்கும்.

SDSSJ1240+6710 -ல் இரும்பு வகை தனிமங்கள் இல்லாதிருப்பதால், அணு ஆற்றல் எரிப்பு முடிவதற்கு முன்னதாகவே இந்த நட்சத்திரத்தில் பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாசா

NASA

``ஒயிட் டார்ஃப் என்பதன் அனைத்து முக்கிய அம்சங்களும் இருப்பதால், இந்த நட்சத்திரம் தனித்துவமானது. இது மிக அதிகமான வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. குறைந்த நிறை கொண்ட பொருள்களுடன் இணையும்போது வழக்கத்திற்கு மாறான பொருள்கள் அபரிமிதமாக உருவாதல் அதை அர்த்தமற்றதாக ஆக்குகிறது'' என்று பிரிட்டனில் வார்விக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ள போரிஸ் கன்சிக்கே கூறியுள்ளார்.

``அணு ஆற்றல் எரிப்பின் தடயங்களைக் காட்டும் ரசாயனக் கலவை அதில் உள்ளது. குறைந்த நிறை கொண்டதாக, அதிக அளவில் வேகத்தை அதிகரிப்பதாக உள்ளது; அதைப் போன்றே உள்ள வேறொரு நட்சத்திரத்தில் இருந்து இது வெளியேறி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது. 

வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது. இது ஒரு வகையான சூப்பர்நோவா ஆக இருந்திருக்கலாம், ஆனால் நாம் முன்பு பார்த்திராத வகையாக இது இருக்கலாம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்குப் பிறகு தங்களின் சுற்றுப் பாதையில் எதிர்த் திசைகளில் ஈர்ப்புப் பிடிமானத்துடன் இருப்பதால் அதிக அளவிலான வேகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த நட்சத்திரத்தின் நிறையை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். சூரியனின் நிறையில் 40 சதவீதம் அளவுக்கு ஒயிட் ட்வார்ப் நிறை இருக்கும். நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிடாத பகுதியளவு சூப்பர்நோவா பாதிப்பால் ஏற்படுவதாக இது இருக்கும்.

அணுசக்தி நிலையங்கள் அல்லது பெரும்பாலான அணு ஆயுதங்களில் இருந்து வெளியாகும் சக்தியில் இருந்து மாறுபட்டதாக சூப்பர்நோவா பாதிப்பில் இருந்து வெளியாகும் அணு ஆற்றல் எரிப்பின் தன்மைகள் இருக்கும். பூமியில் அணு சக்தியின் பெரும்பாலான பயன்கள் அணு பிளவு மூலம் பெறப்படுகின்றன. கனமான தனிமங்களை லேசானவையாக உடைப்பதாக அது உள்ளது. நட்சத்திரங்களில் நிகழும் அணு சேர்க்கை போல இருக்காது.

``பூமியில் நமது எதிர்கால அணுசக்தி நிலையங்களில் பெறுவதற்கு முயற்சிக்கும் வெப்ப ஆற்றலைப் போன்றதாக, சூப்பர்நோவா வெப்ப ஆற்றல் வெளிப்பாடு தன்மை இருக்கும். லேசான தனிமங்களை அணு சேர்க்கை மூலம் கனமானதாக ஆக்கி, அதில் அபரிமிதமான ஆற்றலைப் பெறுவது என்பது நமது முயற்சியாக உள்ளது'' என்று பேராசிரியர் கன்சிக்கே பிபிசியிடம் கூறினார்.

``அணுசேர்க்கை உலையில், மிகவும் லேசான ஹைட்ரஜன் தனிமத்தை (மிகவும் குறிப்பாக, மாறுபட்ட மணங்கள் அல்லது அதன் ஐசோடோப்புகள்) பயன்படுத்துவோம். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவில், நட்சத்திரத்தின் தின்மை மற்றும் அதில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கனமான தனிமங்களின் சேர்க்கை ஆரம்பமாகும். கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை இதன் `எரிபொருளாக' இருக்கும். கனமான மற்றும் இன்னும் கனமான தனிமங்களின் சேர்க்கை நிகழும்'' என்றார் அவர்.

டைப் லா என்பது தான் மிக சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட வெப்ப ஆற்றல் வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவாக உள்ளது. இருள் எரிசக்தியைக் கண்டுபிடிக்க இது உதவிகரமாக இருந்தது. இப்போது பிரபஞ்சத்தின் அமைப்பை பொருத்திப் பார்ப்பதில் இந்த நடைமுறை வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாக்கள் நிகழலாம் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

இதுவரையில் அறியப்படாத வகையிலான சூப்பர்நோவா வெடிப்புக்கு ஆளானதாக SDSSJ1240+6710 இருக்கும் என்று கருதப்படுகிறது.

டைப் லா சூப்பர்நோவாக்களின் நீண்ட காலம் நீடித்திருக்கும் மிளிர்ச்சியை அளிக்கும் கதிரியக்கத் தன்மை கொண்ட நிக்கல் இல்லாமல், நமது அண்டத்திற்குள் ஒயிட் ட்வார்ப்-ஐ அனுப்பிய வெடிப்பு என்பது கண்டுபிடிக்க சிரமமானதாக இருக்கும், குறுகிய நேர ஒளிக் கீற்றில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை Royal Astronomical Society மாதாந்திர தகவல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

https://www.bbc.com/tamil/science-53422946

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.