Jump to content

புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு!

IMG-3795.jpg?189db0&189db0

 

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்ட குடியிருப்புக்கள் இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டன.

 

தமிழ் பதிவுக்கு மேல் இரணுவ சின்னம் 😡

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழித்த வடக்கை மீள கட்டி எழுப்புகிறோம் – இப்படி சொல்கிறார் சவேந்திர

2477918a-30fb-41ed-9a88-dda4878fb137-960x720.jpg?189db0&189db0

விடுதலைப் புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவ கட்டளை தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்றையதினம் (18) புங்குடுதீவில் வீடுகள் கையளிப்பு நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை. நான் வடக்கு மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” – என்றார்.

 

https://newuthayan.com/புலிகள்-அழித்த-வடக்கை-மீ/

 

மானங்கெட்டவர்கள் உலக துனையுடன் எமது விடுதலை போராட்டதை அழித்துவிட்டு, உச்சா போன இவர்கள் கதைக்கின்றார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து விட்டு

புங்குடுதீவு ஒன்றியத்திடம் அந்த காணிகளை மேடாக்க நிதியுதவி கேட்கப்பட்டது

அந்தக்காணியில்  வருடத்தின்  பெரும்  பகுதிகளில் உப்பு விளைவதுண்டு

எனவே குடியிருப்புக்கு ஏற்ற பகுதியல்ல என்று மறுத்துவிட்டோம்

வேறு காணிகள்  எவ்வளவோ இருக்க இதுக்குள்ள தான்  கட்:டுவம்  என்று கட்டிக்கொடுத்தவர்கள்

புலிகளுடன்  தமது நிர்வாகங்களை ஒப்பிடுவது தான் தாங்கமுடியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்த  வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து விட்டு

புங்குடுதீவு ஒன்றியத்திடம் அந்த காணிகளை மேடாக்க நிதியுதவி கேட்கப்பட்டது

அந்தக்காணியில்  வருடத்தின்  பெரும்  பகுதிகளில் உப்பு விளைவதுண்டு

எனவே குடியிருப்புக்கு ஏற்ற பகுதியல்ல என்று மறுத்துவிட்டோம்

வேறு காணிகள்  எவ்வளவோ இருக்க இதுக்குள்ள தான்  கட்:டுவம்  என்று கட்டிக்கொடுத்தவர்கள்

புலிகளுடன்  தமது நிர்வாகங்களை ஒப்பிடுவது தான் தாங்கமுடியல

விசுகர்! அந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டுவதற்கான காரணம் என்ன? அதுவும் உப்பு விளையும் பகுதியென வேறு சொல்கிறீர்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! அந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டுவதற்கான காரணம் என்ன? அதுவும் உப்பு விளையும் பகுதியென வேறு சொல்கிறீர்கள்!!!!

என்னத்த சொல்ல  அண்ணா

அவர்களுக்கு எடுத்த முயற்சியை  முடிக்கணும் என்பது  தானே முக்கியம்  தவிர

அது பயன்படுமா? என்பதைப்பற்றியெல்லாம் ஆராயவே இல்லை

மற்றவர் சொல்லும் ஏறவில்லை

அந்த  இடத்தில் மத்தியான  வெய்யிலில்  வெளியில் வரவே  முடியாது

அது மட்டுமல்ல ஒரு செடி கொடி  மரமும் வளராது

 

3 hours ago, உடையார் said:

 

  • IMG-3797.jpg?189db0&189db0
  • 9172b91d-b42e-4fe7-b862-1435c7b7afd8-102

மேலே  உள்ள  படங்களையே  பாருங்களேன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப்பாருங்கள் வீடுகள் மேடைகள்போடப்பட்டு அதன்மீது   கட்டப்படுகின்றன.

காரணம் இது  பள்ளமான  பகுதி

மாரி  காலத்தில்  மேடையையும்  மீறி தண்ணீர்  வீட்டின் உள்ளே வந்து  விடும்

கோடை காலத்தில்  வீட்டைச்சுற்றி  உப்பு  விளையும்

இரு காலப்பகுதியிலும்  மக்கள் வீடுகளில் வாழமுடியாது

Link to comment
Share on other sites

57 minutes ago, விசுகு said:

படங்களைப்பாருங்கள் வீடுகள் மேடைகள்போடப்பட்டு அதன்மீது   கட்டப்படுகின்றன.

காரணம் இது  பள்ளமான  பகுதி

மாரி  காலத்தில்  மேடையையும்  மீறி தண்ணீர்  வீட்டின் உள்ளே வந்து  விடும்

கோடை காலத்தில்  வீட்டைச்சுற்றி  உப்பு  விளையும்

இரு காலப்பகுதியிலும்  மக்கள் வீடுகளில் வாழமுடியாது

மத்தளவில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டிய அறிவாளிகளிடம் இதை விட என்னத்தை எதிர்பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Dash said:

மத்தளவில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டிய அறிவாளிகளிடம் இதை விட என்னத்தை எதிர்பார்க்க முடியும்.

நாங்கள் சிங்களவனை மட்டம் தட்டுவதைவிட்டு அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். எவ்வளவோ இடம் இருக்க ஏன் இதில் கட்டுகிறான் என்று யோசிப்போம். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

நாங்கள் சிங்களவனை மட்டம் தட்டுவதைவிட்டு அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். எவ்வளவோ இடம் இருக்க ஏன் இதில் கட்டுகிறான் என்று யோசிப்போம். ☹️

வேலையை கெதியா முடிக்கத்தான், அதில இருந்து பயன்பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்களா என்று சிந்திக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுவீட்டை எதிர்த்த அல்லது தடுத்த புத்திசீவிகள் உப்பு வீட்டைத் தகர்க்காதுஎங்கே போனார்கள்?

2 hours ago, விசுகு said:

படங்களைப்பாருங்கள் வீடுகள் மேடைகள்போடப்பட்டு அதன்மீது   கட்டப்படுகின்றன.

காரணம் இது  பள்ளமான  பகுதி

மாரி  காலத்தில்  மேடையையும்  மீறி தண்ணீர்  வீட்டின் உள்ளே வந்து  விடும்

கோடை காலத்தில்  வீட்டைச்சுற்றி  உப்பு  விளையும்

இரு காலப்பகுதியிலும்  மக்கள் வீடுகளில் வாழமுடியாது

இங்குதான் சிங்களத்தின் சிந்தனையைப் புங்குடுதீவு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல காணிகள், நாளை கைவிடப்பட்ட காணிகளாக, மக்களற்ற பகுதியாக இனங்காட்டப்பட்டு சிங்களக் குடியேற்றம்  நடாத்துவதற்கான திட்டமிடலை இப்படி நகர்த்துகின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nochchi said:

ஒட்டுவீட்டை எதிர்த்த அல்லது தடுத்த புத்திசீவிகள் உப்பு வீட்டைத் தகர்க்காதுஎங்கே போனார்கள்?

இங்குதான் சிங்களத்தின் சிந்தனையைப் புங்குடுதீவு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல காணிகள், நாளை கைவிடப்பட்ட காணிகளாக, மக்களற்ற பகுதியாக இனங்காட்டப்பட்டு சிங்களக் குடியேற்றம்  நடாத்துவதற்கான திட்டமிடலை இப்படி நகர்த்துகின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு

துப்பரவு செய்யப்பாடாத 

அடைடக்கப்படாத காணிகள் பொதுக்காணிகளாக சுவீகரிக்கப்படத்தொடங்கிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்று முளு தாக சிங்கள குடியமர்வுகளை கொண்டு வருவதன் ஒரு கட்டமே இது.இவ்வாறன செயல் பாடுகளுக்கு அங்குள்ள உறவுகளும் தான் ஒரு காரணம்..வெளி நாடுகளில் உள்ளவர்களின் காணிகள் சொத்துக்களை அங்குள்ளவர்களுக்கு தானம் குடுக்காமல் இருந்தால் கவனிக்க மாட்டார்கள்.அவரகளின் கவலையீனமான விடையங்களே புதுக் குடியேற்றம் ஏற்பட காரணமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு

துப்பரவு செய்யப்பாடாத 

அடைடக்கப்படாத காணிகள் பொதுக்காணிகளாக சுவீகரிக்கப்படத்தொடங்கிவிட்டது

ஆனால் சிங்களவன் குடியேற்ச் வருவானா? நாம் இன்னமும் 50’களின்ண்ட மன நிலையில் தான் இருக்கிறம். சிங்கள தேசம் முன்னரை போல் வறுமை நிலையில் இல்லை குறிப்பாக தென் இலங்கை கடந்த சில வருடங்களில் அபரிதமான பொருளாராதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் கண்டுள்ளது,அப்படி இருக்கும் போது எவனாவது வருவானா. அதே போல் சிங்கள மக்களுக்கு காணி பிரச்சனையும் இல்லை. எந்த ஒரு மனிதனும் தான் தனது ஊரில் தனது மக்களுடன் தான் வாழ விரும்புவான். தனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் குடியிருக்க விரும்ப மாட்டான்.

ஆனால் அங்கு குடியேற்றம் நடக்கலாம் அனால் அது வடக்கின் முன்னாள் அடாவடி மினிஸ்ட்டர் தனது ஆதரவாளர்களை குடியேற்ற சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு

துப்பரவு செய்யப்பாடாத 

அடைடக்கப்படாத காணிகள் பொதுக்காணிகளாக சுவீகரிக்கப்படத்தொடங்கிவிட்டது

தங்களுக்குப் பொருத்தமான வினாவோ தெரியவில்லை. பொருத்தமில்லையெனிற் கடந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1) புலத்திலே இருக்கும் புங்குடுதீவுக் காணி உரித்தாளர்கள்  ஏன் 99 ஆண்டுக் குத்தகை போன்று நீண்டகால அடிப்படையிற் குத்தகைக்குக் கொடுத்தல். 

2) வீடுகளறவர்களுக்கு குறைந்த வாடகைக்கு வீடுகளைக் கொடுத்து அவர்களும் பயனடைவதோடு வீட்டையும் பராமரித்துப் பாதுகாத்தல். 

3) பொருத்தமான வீடுகளைக் கொண்டோர் ஒரு குழுமமாக மாறி  வெளிநாட்டவர்களுக்கான சுற்றுலாத் தங்குமிடமாக மாற்றுதல். இதனால் வேலைவாய்ப்பும் வருமானமும் பெற வாய்ப்பாக மாறும். 

4) புலத்திலே உள்ள ஊர்சார்ந்த ஒன்றியங்கள் மற்றும் ஆலய சபைகள் நீண்டகால அடிப்படையிற் திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

5) புங்குடுதீவின் வரைபடத்தை ஆவணமாக்கி உரித்தாளர்களை காலவாரியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஆவணமாக்குதல்.  

6) தோட்டக்காணிகளை ஒன்றிணைந்த பண்ணைகளாக மாற்றுதல்  போன்றவற்றினூடாகப் பயன்பாட்டினுள் கொண்டு செல்லல்  போன்ற முயற்சிகளை செய்து காக்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

என்னத்த சொல்ல  அண்ணா

அவர்களுக்கு எடுத்த முயற்சியை  முடிக்கணும் என்பது  தானே முக்கியம்  தவிர

அது பயன்படுமா? என்பதைப்பற்றியெல்லாம் ஆராயவே இல்லை

மற்றவர் சொல்லும் ஏறவில்லை

அந்த  இடத்தில் மத்தியான  வெய்யிலில்  வெளியில் வரவே  முடியாது

அது மட்டுமல்ல ஒரு செடி கொடி  மரமும் வளராது

 

மேலே  உள்ள  படங்களையே  பாருங்களேன்??

இவையெல்லாம் வெளிநாடுகளின் உதவிப்பணத்தில் தானே கட்டப்படுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

படங்களைப்பாருங்கள் வீடுகள் மேடைகள்போடப்பட்டு அதன்மீது   கட்டப்படுகின்றன.

காரணம் இது  பள்ளமான  பகுதி

மாரி  காலத்தில்  மேடையையும்  மீறி தண்ணீர்  வீட்டின் உள்ளே வந்து  விடும்

கோடை காலத்தில்  வீட்டைச்சுற்றி  உப்பு  விளையும்

இரு காலப்பகுதியிலும்  மக்கள் வீடுகளில் வாழமுடியாது

இந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற போது.. இதனை தான் நினைத்தேன். எவ்வளவோ வளமான பகுதிகள் இருக்கு.. சேதமடைந்த வீடுகளை திருத்த முடியாமல்.. பகுதி திருத்தி வாழும் மக்கள்.. இப்படி இருக்க வெறும் உப்புச் சதுப்பு நிலத்தில் இதனை கட்ட வேண்டிய தேவை என்ன என்று அப்பவே தோன்றியது. கூட்டிச் சென்றவர்களிடமும் கேட்டேன்.

அவர்கள் சொன்னது.. ஒதுக்கினது 7 இலச்சம் என்றால்.. 4 இலச்சத்தில் வீடு என்ற ஒன்றை மாதிரிக்கட்டிட்டு.. போட்டோ எடுத்துப் போட்டிட்டு.. மிச்சத்தை ஆளாளுக்கு பொக்கட்டுக்குள் போட இதுதான் சரியான இடம். அப்ப தான் களவு காசுக்கு கணக்குக் காட்டிடலாமாம். 

இதுதான் குத்தியர் கூட்டமும்... உந்தக் கொலைகார சிங்கள இனப்படுகொலை இராணுவமும்.. கடற்படையும் திட்டங்களின் பின்னால் உள்ள சூட்சுமம். 

பாவம் அந்த ஏழை மக்கள். எல்லாரும் அவர்களை வைச்சுத்தான் பிழைக்கிறது. அவர்களுக்கோ ஒரு பிழைப்பும் இல்லை. பனங்கிழங்கு அவிச்சு விற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற போது.. இதனை தான் நினைத்தேன். எவ்வளவோ வளமான பகுதிகள் இருக்கு.. சேதமடைந்த வீடுகளை திருத்த முடியாமல்.. பகுதி திருத்தி வாழும் மக்கள்.. இப்படி இருக்க வெறும் உப்புச் சதுப்பு நிலத்தில் இதனை கட்ட வேண்டிய தேவை என்ன என்று அப்பவே தோன்றியது. கூட்டிச் சென்றவர்களிடமும் கேட்டேன்.

அவர்கள் சொன்னது.. ஒதுக்கினது 7 இலச்சம் என்றால்.. 4 இலச்சத்தில் வீடு என்ற ஒன்றை மாதிரிக்கட்டிட்டு.. போட்டோ எடுத்துப் போட்டிட்டு.. மிச்சத்தை ஆளாளுக்கு பொக்கட்டுக்குள் போட இதுதான் சரியான இடம். அப்ப தான் களவு காசுக்கு கணக்குக் காட்டிடலாமாம். 

இதுதான் குத்தியர் கூட்டமும்... உந்தக் கொலைகார சிங்கள இனப்படுகொலை இராணுவமும்.. கடற்படையும் திட்டங்களின் பின்னால் உள்ள சூட்சுமம். 

பாவம் அந்த ஏழை மக்கள். எல்லாரும் அவர்களை வைச்சுத்தான் பிழைக்கிறது. அவர்களுக்கோ ஒரு பிழைப்பும் இல்லை. பனங்கிழங்கு அவிச்சு விற்கிறார்கள். 

இது தான் உண்மை நிலை. ஏற்கனவே இங்கே எனது எல்லையை கடந்து எழுதி விட்டேன். அதனால் தொடரவில்லை. பெரும் கொடிய கரங்கள் இதன் பின்னால் இருக்கின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.