Jump to content

கொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.

இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்.

பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே கொள்முதல் ஆணை தந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-53477212

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இந்தியா பங்குதாரர் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம்மிட்டு உள்ளது விரைவில் உற்பத்தி தொடங்குகிறது.
பதிவு: ஜூலை 21,  2020 06:28 AM
புதுடெல்லி

 இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.


பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது.

இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.அஸ்த்ரா செனிகா, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்று வரும் பெரிய அளவிலான கட்ட 3 சோதனைகளில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறும் போது

சோதனைகள் "நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, அதைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

தற்போதைய நிலைமை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் தவிர, தென்னாப்பிரிக்காவில் 2,000 பேரும், பிரேசிலில் 5,000 பேரும் சோதனைகளில் பங்கேற்பார்கள்.

"நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய ஒழுங்குமுறைக்கு உரிம சோதனைகளுக்கு விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளைத் தொடங்குவோம். கூடுதலாக, விரைவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/21062843/Oxford-Vaccine-Partner-Plans-Trials-In-India-Manufacturing.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.... உலக மக்களுக்கு ஆறுதலான செய்தி. 

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில்...  
கெட்டிக்காரர் தான் படிக்கின்றார்கள், என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

 

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அதிலும் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.

இதை ஆரோக்கியமான 1,107 தன்னார்வலர்களுக்கு போட்டு பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘ஆன்டிபாடி’ என்று அழைக்கப்படக்கூடிய நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டுமல்லாமல், வைரஸ்களை எதிர்த்து போராடும் வலிமை மிக்க ‘டி’ செல்களையும் உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உள்மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனைகள் இதுவரை வெளிப்படையானவை. வரவேற்கத்தக்கவை. உலகளவில் நடத்தப்படும் அனைத்து சோதனைகளிலும், இது அறிவியல் ரீதியில் நடைபெற்றிருக்கிறது, நம்பகமானது” என தெரிவித்தார்.

டாக்டர் லால் பாத் லேப்ஸ் செயல்தலைவர் டாக்டர் அரவிந்த் லால் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் சாதகமானது. இதவரை உலகளவில் நடத்தப்பட்ட மிகச்சிறந்த சோதனை இது. ஆரம்பகட்ட முடிவுகள், இறுதியில் நல்ல முடிவுக்கு வழிநடத்தும். நல்ல பலனையும் தரும்” என்று கூறினார்.

அத்துடன், “இந்த மருத்துவ பரிசோதனை முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்த வல்லது, தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி மிக முக்கியம். நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.

நொய்டாவை சேர்ந்த போர்டிஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் மிருனாள் சிர்கார் கூறும்போது, “ இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் இந்திய செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து செயல்பட்டுள்ளது. நாம் இந்த தடுப்பூசியை உருவாக்கினால், அது இந்தியாவுக்கு உண்மையிலேயே பலனைத்தரும். அது மருத்துவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலன் தரும்” என குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடைந்துள்ளது.

இது தவிர அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடங்கி விடுவோம்.

தற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதம்) தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’கள் தயாரித்து வினியோகிப்பதற்கு நாங்கள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியாவுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள குறைவான வருமானம் உள்ள நாடுகளுக்காகவும்தான், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை அடுத்த மாதம் நடக்க உள்ளதால், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/07/22010033/Coronavirus-vaccine-300400-million-doses-by-December.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.


இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது:-

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு  சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும்.

200 மில்லியன் டாலர்களை சோதிக்கப்படாத இந்த் தடுப்பூசி மருந்துக்கு ஒதுக்க முடிவு செய்ய சரியாக 30 நிமிடங்கள் ஆனது.  மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், முழு பங்கும்  போகும் அபாயங்கள் உள்ளன.

"ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம்.

தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது, எத்தனை பேரை அது பாதுகாக்கும் என்பது தெரியவில்லை என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/22070430/Oxford-University-will-be-in-India-by-November-and.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஓவ்வொரு நாளும் உலக நாடுகளில் புதிய உச்சத்தை தொடுகிற அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. உலகமெங்கும் நேற்று மதிய நிலவரப்படி 1½ கோடி பேருக்கு மேல் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று, ஏறத்தாழ 6¼ லட்சம் பேரை கொன்றிருக்கிறது.

இந்த வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000-க்கு குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் புதன்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரமாக உள்ளது. மும்பையில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரமாக உளள்து. இந்த இரு நகரங்களிலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் பாதி அளவினர் இருப்பார்கள்.

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை தளங்களாக பல்வேறு இடங்களுடன் மும்பை, புனேயையும் பட்டியலிட்டிருக்கிறோம். இந்த நகரங்களில் கொரோனா தீவிர பரவலை கொண்ட பல இடங்கள் (ஹாட்ஸ்பாட்டுகள்) உள்ளன. இது எங்கள் தடுப்பூசியின் செயல்திறனை புரிந்துகொள்ள உதவும்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாத வாக்கில் நடத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, விரைவான ஒப்புதல்களை அளித்து உதவி இருக்கிறார்கள்.

நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.

ஆரம்ப மற்றும் உரிம சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.

அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த மற்றும் மத்திய வருமான நாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும்.

எங்கள் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24023541/covid-19-Measures-to-produce-7-crore-vaccines-daily.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.