Jump to content

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்

 

நிவேதா உதயராஜன்
 

உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.

பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.

பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.

எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.

கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
 

https://naduweb.com/?p=14998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமானால் காலத்திற்கேற்ப தேவையான கட்டுரை ...அண்மையில் இலங்கையில் கூட ஒரு பத்து வயதுப் பெண் தாயினது கள்ள புருசனால் சீரழிக்கப்பட்டு ,இரத்த போக்கு அதிகமாகி சாகும் தருவாயில் ஆஸ்பத்தியில் பாம்பு கடித்தது என்று சொல்லி சேர்த்திருக்கிறால் அந்த தாய் என்னும் பாதகி ...இதெல்லாம் அந்த பாதகிக்கு தெரிந்தே நடந்திருக்கு ...அந்த **** தப்பிட்டுது ...அந்த பெட்டையின் தம்பிமார் சாட்சி சொல்லி இருக்கினம் ...என்னை  பொறுத்த வரை செய்தவனை தண்டிக்கிறதை விட  அந்த தாய் என்னும் பாதகத்தியை தூக்கில் போட வேண்டும்.

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் இணைப்புக்கு

51 minutes ago, ரதி said:

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

 

38 minutes ago, ரதி said:

 

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

எடுத்தவுடனேயே காசு கொட்டும் என்று  எதிர்ப்பார்க்க கூடாது ...செய்யும் சமையலை எப்படி மற்றவர்களிடம்  இருந்து வித்தியாசமாய் செய்யலாம் என்று யோசியுங்கோ tw_lol:

 

 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

கதையையாவது பஞ்சி பாராமல் நேரத்திற்கு இணையுங்கோ ...இப்ப பாருங்கோ உங்களுக்கு விழ வேண்டிய பச்சையை கிருபன் வெட்கமில்லாமல் தானெடுத்து போட்டார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என உணர்த்தும் ஒரு கட்டுரை. சில விடயங்கள் அடிக்கடி பேசப்படும் பொழுது மக்களிடையே ஓரிரு மாற்றங்களாவது ஏற்படும் என்று நினைப்பதுண்டு. 

சில நாட்களுக்கு முன்பு “ சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு” பற்றிய ஒரு மொழிபெயர்ப்பை சமூக சாளரத்தில் இணைத்திருந்தேன். அந்த கட்டுரையில் இணைத்த இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான படம் ஒன்றை மறுபடியும் இங்கே இணைக்கிறேன். வண்ணத்துப்பூச்சி போன்று பல வர்ணங்களில் பறக்கும் சிறுவர்களை துன்புறுத்தும் மனிதர்களின் பல வடிவங்கள் இவை.

F3-ED0-DAA-B981-4912-85-A3-96-AB2792989-

மேலும் இந்த பெண்கள் சிறுவர்கள் தொடர்பான துன்புறுத்தல்களுக்கு ஒட்டுமொத்தமாக தொழிநுட்ப வளர்ச்சியை கூற முடியாது என நினைக்கிறேன்.. ஒரு சிறு உதாரணம்: 
97/98ல் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி GELT எனும் ஆங்கில வகுப்பில் படித்த பொழுது, அந்த கற்கை நெறி முடியும் தறுவாயில் மாணவர்கள் ஒரு சிறு ஆய்வுக்கட்டுரையை (theory and presentation ) ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனது வகுப்பில் என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றைய அனைவரும் மருத்துவ பீட மாணவர்கள் ஆகையால் நாங்கள் “ கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பெண்களின் உளவள மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஒரு சிறிய ஆய்வை போராசிரியர் தயா சோமசுந்தரம், Dr சிவசங்கர் மற்றும் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் வழிநடத்தலில் மேற்கொண்டோம். அப்பொழுது இந்த பெண்களை பேட்டி கண்டபொழுதுதான் அவர்கள் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்களில் சில பேருடைய கதைகள் இன்னமும் நினைவில் உள்ளது. ஆகையால் இந்த துன்புறுத்தல்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மட்டும் வந்த ஒன்று இல்லை. காலங்காலமாக எங்களது சமூகத்தில் கலந்திருக்கும் சில மூடத்தனமான வழிகளாலும் வந்தவையாகும்.. 

உங்களது பிள்ளைகள் உங்களிடம் நம்பிக்கை வைத்து கதைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், கெட்ட தொடுகை நல்ல தொடுகை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தல். பெண்கள் சரி ஆண்கள் சரி தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான உதவிகளை நாட ஊக்குவிக்குவித்தல் போன்ற வழிகளால் சில துயர் நிகழ்வுகளை தடுக்கலாம்..காயங்கள் மாறினாலும் வடுக்கள் மாறாதவை. 

இந்த கட்டுரையை எழுதிய சுமோ அக்காவிற்கும் இணைத்த கிருபன் அண்ணாவிற்கும் நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 01:03, உடையார் said:

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாததனால் தான் அதிக வன்முறைகள்

On 22/7/2020 at 01:09, குமாரசாமி said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

 

On 22/7/2020 at 09:39, suvy said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

 

21 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

நன்றி குமாரசாமி, நன்றி சுவி, அண்ணா நன்றி சுவைப்பிரியன்.

2 hours ago, பையன்26 said:

யூடுப்பை ப‌ற்றி ர‌திய‌க்காவுக்கு ஒன்றும் தெரியாது என்று இதில் இருந்து தெரியுது ஹா ஹா 😁😀

யூடுப்பில் ச‌ண‌ல் வ‌ள‌ர‌ முத‌ல் காசு வ‌ராது , குறைந்த‌து 20000ஆயிர‌ம் பேர் சுமெ அம்மாவின் யூடுப் ச‌ண‌ல subscribers செய்து இருக்க‌னும் , வார‌ம் ஒரு காணொளி போட்டாலும் குறைந்த‌து 8மாத‌த்துக்கு பிற‌க்கு தான் us dollar 200க்கு உள்ள‌ தான் வ‌ரும் , 

30ல‌ச்ச‌ம் subscribers வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் காசு ம‌ழையில் மித‌ப்பின‌ம் அக்கா 💪
 

நல்ல காலம் நீங்கள் சொன்னது. அல்லது நம்பவும் மாட்டா 😎

1 hour ago, குமாரசாமி said:

அப்பன்!
ரதி உங்களுக்கு அக்கா இல்லை அன்ரி. சுமேயும் அன்ரிதான்😎

தங்கச்சீட்டை நல்ல திட்டு வாங்கப்போறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

நீங்கள் கூறுவதும் சரிதான்.

Link to comment
Share on other sites

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 21:31, கிருபன் said:

இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

கட்டுரையாளர்: மெசொபொத்தேமியா-சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

அவசரத்தில் எழுதியது. நானும் பிறகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என எண்ணினேன்.

9 hours ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

நன்றி வாத்தியார்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

தமிழ்நாடு கொழும்பில் நடந்த அனுபவங்களை பகிர்கின்றார் - எப்படியெல்லாம் சீரழிக்கின்றார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

உங்களை கண்டால் எல்லோரும் பத்தடி தூர ஓடிவிடுவார்கள்😂🤣, அவர்கள் தான் கவனமாக இருக்கனும்

சின்ன பிள்ளைகளுடன் ஊருக்கு போவோர் கவனமாக இருக்கனும் என்று தான் சொல்லவந்தேன், உங்களையால்ல தாயே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Child sexual abuse /சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்/ Part 2

என்ன வாழ்கையடா🤔 :  பிள்ளைகள் செல்வதை காது கொடுத்து கேளுங்கள்;  யாரா இருந்தாலும் தூரவே வைத்திருங்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.