Jump to content

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்

 

நிவேதா உதயராஜன்
 

உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.

பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.

பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.

எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.

கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
 

https://naduweb.com/?p=14998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமானால் காலத்திற்கேற்ப தேவையான கட்டுரை ...அண்மையில் இலங்கையில் கூட ஒரு பத்து வயதுப் பெண் தாயினது கள்ள புருசனால் சீரழிக்கப்பட்டு ,இரத்த போக்கு அதிகமாகி சாகும் தருவாயில் ஆஸ்பத்தியில் பாம்பு கடித்தது என்று சொல்லி சேர்த்திருக்கிறால் அந்த தாய் என்னும் பாதகி ...இதெல்லாம் அந்த பாதகிக்கு தெரிந்தே நடந்திருக்கு ...அந்த **** தப்பிட்டுது ...அந்த பெட்டையின் தம்பிமார் சாட்சி சொல்லி இருக்கினம் ...என்னை  பொறுத்த வரை செய்தவனை தண்டிக்கிறதை விட  அந்த தாய் என்னும் பாதகத்தியை தூக்கில் போட வேண்டும்.

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் இணைப்புக்கு

51 minutes ago, ரதி said:

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

 

38 minutes ago, ரதி said:

 

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

எடுத்தவுடனேயே காசு கொட்டும் என்று  எதிர்ப்பார்க்க கூடாது ...செய்யும் சமையலை எப்படி மற்றவர்களிடம்  இருந்து வித்தியாசமாய் செய்யலாம் என்று யோசியுங்கோ tw_lol:

 

 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

கதையையாவது பஞ்சி பாராமல் நேரத்திற்கு இணையுங்கோ ...இப்ப பாருங்கோ உங்களுக்கு விழ வேண்டிய பச்சையை கிருபன் வெட்கமில்லாமல் தானெடுத்து போட்டார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என உணர்த்தும் ஒரு கட்டுரை. சில விடயங்கள் அடிக்கடி பேசப்படும் பொழுது மக்களிடையே ஓரிரு மாற்றங்களாவது ஏற்படும் என்று நினைப்பதுண்டு. 

சில நாட்களுக்கு முன்பு “ சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு” பற்றிய ஒரு மொழிபெயர்ப்பை சமூக சாளரத்தில் இணைத்திருந்தேன். அந்த கட்டுரையில் இணைத்த இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான படம் ஒன்றை மறுபடியும் இங்கே இணைக்கிறேன். வண்ணத்துப்பூச்சி போன்று பல வர்ணங்களில் பறக்கும் சிறுவர்களை துன்புறுத்தும் மனிதர்களின் பல வடிவங்கள் இவை.

F3-ED0-DAA-B981-4912-85-A3-96-AB2792989-

மேலும் இந்த பெண்கள் சிறுவர்கள் தொடர்பான துன்புறுத்தல்களுக்கு ஒட்டுமொத்தமாக தொழிநுட்ப வளர்ச்சியை கூற முடியாது என நினைக்கிறேன்.. ஒரு சிறு உதாரணம்: 
97/98ல் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி GELT எனும் ஆங்கில வகுப்பில் படித்த பொழுது, அந்த கற்கை நெறி முடியும் தறுவாயில் மாணவர்கள் ஒரு சிறு ஆய்வுக்கட்டுரையை (theory and presentation ) ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனது வகுப்பில் என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றைய அனைவரும் மருத்துவ பீட மாணவர்கள் ஆகையால் நாங்கள் “ கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பெண்களின் உளவள மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஒரு சிறிய ஆய்வை போராசிரியர் தயா சோமசுந்தரம், Dr சிவசங்கர் மற்றும் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் வழிநடத்தலில் மேற்கொண்டோம். அப்பொழுது இந்த பெண்களை பேட்டி கண்டபொழுதுதான் அவர்கள் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்களில் சில பேருடைய கதைகள் இன்னமும் நினைவில் உள்ளது. ஆகையால் இந்த துன்புறுத்தல்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மட்டும் வந்த ஒன்று இல்லை. காலங்காலமாக எங்களது சமூகத்தில் கலந்திருக்கும் சில மூடத்தனமான வழிகளாலும் வந்தவையாகும்.. 

உங்களது பிள்ளைகள் உங்களிடம் நம்பிக்கை வைத்து கதைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், கெட்ட தொடுகை நல்ல தொடுகை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தல். பெண்கள் சரி ஆண்கள் சரி தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான உதவிகளை நாட ஊக்குவிக்குவித்தல் போன்ற வழிகளால் சில துயர் நிகழ்வுகளை தடுக்கலாம்..காயங்கள் மாறினாலும் வடுக்கள் மாறாதவை. 

இந்த கட்டுரையை எழுதிய சுமோ அக்காவிற்கும் இணைத்த கிருபன் அண்ணாவிற்கும் நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 01:03, உடையார் said:

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாததனால் தான் அதிக வன்முறைகள்

On 22/7/2020 at 01:09, குமாரசாமி said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

 

On 22/7/2020 at 09:39, suvy said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

 

21 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

நன்றி குமாரசாமி, நன்றி சுவி, அண்ணா நன்றி சுவைப்பிரியன்.

2 hours ago, பையன்26 said:

யூடுப்பை ப‌ற்றி ர‌திய‌க்காவுக்கு ஒன்றும் தெரியாது என்று இதில் இருந்து தெரியுது ஹா ஹா 😁😀

யூடுப்பில் ச‌ண‌ல் வ‌ள‌ர‌ முத‌ல் காசு வ‌ராது , குறைந்த‌து 20000ஆயிர‌ம் பேர் சுமெ அம்மாவின் யூடுப் ச‌ண‌ல subscribers செய்து இருக்க‌னும் , வார‌ம் ஒரு காணொளி போட்டாலும் குறைந்த‌து 8மாத‌த்துக்கு பிற‌க்கு தான் us dollar 200க்கு உள்ள‌ தான் வ‌ரும் , 

30ல‌ச்ச‌ம் subscribers வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் காசு ம‌ழையில் மித‌ப்பின‌ம் அக்கா 💪
 

நல்ல காலம் நீங்கள் சொன்னது. அல்லது நம்பவும் மாட்டா 😎

1 hour ago, குமாரசாமி said:

அப்பன்!
ரதி உங்களுக்கு அக்கா இல்லை அன்ரி. சுமேயும் அன்ரிதான்😎

தங்கச்சீட்டை நல்ல திட்டு வாங்கப்போறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

நீங்கள் கூறுவதும் சரிதான்.

Link to comment
Share on other sites

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 21:31, கிருபன் said:

இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

கட்டுரையாளர்: மெசொபொத்தேமியா-சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

அவசரத்தில் எழுதியது. நானும் பிறகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என எண்ணினேன்.

9 hours ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

நன்றி வாத்தியார்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

தமிழ்நாடு கொழும்பில் நடந்த அனுபவங்களை பகிர்கின்றார் - எப்படியெல்லாம் சீரழிக்கின்றார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

உங்களை கண்டால் எல்லோரும் பத்தடி தூர ஓடிவிடுவார்கள்😂🤣, அவர்கள் தான் கவனமாக இருக்கனும்

சின்ன பிள்ளைகளுடன் ஊருக்கு போவோர் கவனமாக இருக்கனும் என்று தான் சொல்லவந்தேன், உங்களையால்ல தாயே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Child sexual abuse /சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்/ Part 2

என்ன வாழ்கையடா🤔 :  பிள்ளைகள் செல்வதை காது கொடுத்து கேளுங்கள்;  யாரா இருந்தாலும் தூரவே வைத்திருங்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.