Jump to content

"கோவிட் - 19 வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகளவில் பரவுகிறது"-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?

கொரோனா தொற்று உள்ளான முதன்மை நோயாளிகள் 5,706 பேரும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 59 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ்: "வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே கோவி 19 அதிகளவில் பரவுகிறது" - புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

 

இதில் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே வெளியாட்களிடம் இருந்து கோவிட்- 19 பரவியது தெரியவந்துள்ளது, பத்தில் ஒருவருக்கு வீட்டில் உள்ள நபர்களிடமிருந்தே கொரோனா பரவி இருக்கிறது.

வயதின்படி பார்த்தால், வீட்டில் பதின்மவயது அல்லது 60 மற்றும் 70 வயதுடையவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களிடமிருந்தே வீட்டில் இருக்கும் பிறருக்கு கொரோனா அதிகளவில் பரவி இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.இதற்குக் காரணம் இந்த வயதுடையவர்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இவர்கள் அதிகம் சார்ந்து இருக்கிறார்கள் என்கிறார் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜாங் என் கியாங். இவர் இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியவர்.

குழந்தைகளின் நிலை

குழந்தைகளின் நிலை

பட மூலாதாரம், Getty Images

 

ஒன்பது வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் இந்த தொற்றுக்கு முதன்மை நோயாளிகளாக இருப்பது மிகவும் குறைவு என்கிறார் மருத்துவர் சோ யங் ஜூன் .

இந்த ஆய்வில் பங்காற்றிய சோ யங் ஜுன் ஹாலிம் மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கோவிட்- 19 நோய்க்குக் குழந்தைகளே அதிகமாக உள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களில் முதன்மை நோயாளிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

இந்த ஆய்வுக்கான தரவுகள் ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை தென் கொரியாவில் சேகரிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் தென் கொரியாவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டது.

தென் கொரியாவில் இப்போது ( புதன்கிழமை மாலை) வரை 13,879 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 297 பேர் பலியாகி உள்ளனர்.https://www.bbc.com/tamil/science-53500754

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.