Jump to content

எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

writer-kovai-gnani-passed-away  

மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார்.

‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். 

கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி - இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

நீரிழிவு பாதிப்பு காரணமாகக் கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி அவரது பிறந்த நாளைப் போற்றும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடுப்பக்கத்தில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் சாதனையாளர் விருது பெற்றவர் கோவை ஞானி. உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் தன் உதவியாளருடன் வந்திருந்து முழு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565831-writer-kovai-gnani-passed-away.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார்

gani.jpg

கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

கோவையைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் கோவை ஞானி.  கி.பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி  தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். 1935ல் பிறந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர்.

கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததுடன், தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்து கீழை மார்க்சியத்தைப் படைத்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை கோவை ஞானி எழுதியுள்ளதோடு, தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை அவர்  வெளியிட்டிருக்கிறார். தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

கண்பார்வை குறைந்த போதும் அனைத்து நூல்களையும் பிறர் துணையுடன் வாசித்து விடும் பழக்கம் கொண்டவர் கோவை ஞானி. தவறுகள் நடக்கும் போது அறச்சீற்றத்துடன் அவற்றை  விமர்சிப்பவர். நிகழ் என்ற  இலக்கிய இதழை நடத்தி வந்ததுடன் பல்வேறு இலக்கியக் குழுக்களையும் உருவாக்கி அதை வழிநடத்தியவர் கோவை ஞானி.

ஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார்.

புலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.

வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். கோவை ஞானிக்கு பாரிவள்ளல், மாதவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கோவை ஞானியின் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.

https://www.vanakkamlondon.com/kovai-gani-23-07-2020/

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4CB95C97-3C1E-4B4B-9BEA-6F95C173EE12.jpeg
 
 

ஆர். அபிலாஷ்

கோவை ஞானி: “ “மதம் நாம் நினைக்கிற அளவுக்குவெறுக்கத்தக்கது இல்லை. (...) “மதத்தின் மேலடுக்குபூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம்இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்தஉள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமுதாயத்தில்ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மைதேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும்சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும்.”

(கோவை ஞானியை சமஸ் எடுத்த பேட்டி)

இரண்டு கேள்விகள்: (1) மதம் மக்களுக்கு போலியான ஆறுதலைக்கொடுத்து அவர்களை அந்த சீரழிவுக்குள்ளே மயக்கிநிலைகொள்ள வைக்கிறது என கார்ல் மார்க்ஸ் சொல்கிறார். கோவை ஞானி இதையே தனக்கேற்ப திரித்து ஒடுக்கப்படும் சூழல்நிலவும் காலம் முழுவதும் மதம் உயிருடன் இருக்கும் என்கிறார்”. எனில் மதம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது, தனக்கு அதன்உள்ளடுக்கான தீர்க்க தரிசனமே பிரதானம் எனச் சொல்லும் ஞானிமறைமுகமாய் மதத்தைக் காப்பாற்றுவதற்காக எப்பாடு பட்டாவாதுஒடுக்கப்படும் சூழலும் தழைக்கட்டும் என்கிறாரா ஒடுக்கப்படும்மக்களிடையே அதிகமாய் மதுப்பழக்கமும் உண்டு. இங்குஞானியின் லாஜிக் படியே வருவோம்: ஒடுக்கப்படும் சூழல் நிலவுகிறவரை போதை, கஞ்சா போன்ற பழக்கங்களும் இருக்கும். ஆகையால் சாராயம் அவசியமானது, அதை மக்களிடம் இருந்துதடை செய்யக் கூடாது எனப் பேசலாமா?

எப்படி சாராயம் என்பது முதலீட்டியத்தின் கோர முகத்தைக்காட்டாமல் மறைக்கும் ஒரு கருவியோ மதமும் அப்படியே - அதுசமூக ஏற்றத்தாழ்வுகளை, அபத்தங்களை, போதாமைகளைநேரடியாய் நாம் காணாமல் நம்மைத் தடுக்கிறது. இங்குஏற்றத்தாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாப்பதோ ஆறுதல்அளிப்பதோ அல்ல மதம், ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆதாரமானசக்தியாகவே இந்து மதம் செயல்படுகிறது. இதைப் பற்றிஅம்பேத்கரில் இருந்து பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால்ஞானியோ போதை வஸ்து எனும் உவமையை எடுத்துக் கொண்டுஅதையே இந்து மதத்தின் சிறப்பு எனப் பேசுகிறார். ஏற்றத்தாழ்வைசகித்துக்கொள்ள மதம் அவசியம் என்கிறார். எதற்கு சகித்துக்கொள்ள வேண்டும்? இது என்ன சமூகநல நோக்கு ஐயா

மக்களில் ஒரு சாரார் இந்து பெருமதத்தின் புனிதங்களில் இருந்துவிலக்கப்படுவது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இதைத் தாங்கிப் பிடிக்கும் சிலர் தீண்டாமை தவறு, ஆனால்அதற்காக மதத்தை ஒட்டுமொத்தமாய் தாக்குவதை அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். விலக்கி வைப்பது என்பது இந்துவைதிக மதத்தின் அடிப்படையான கருத்தியல், அங்கிருந்தேசாதியம் தோன்றுகிறது என இவர்கள் பேச மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொள்ள நேரடியான அனுபவம் வேண்டும்: எனக்குசிறு வயதில் இருந்தே என் ஊனம் காரணமாய் கோயில்களில்இருந்து வெளியேற்றப்பட்ட பல அனுபவங்கள் உண்டு. இவற்றில்இரண்டு என் மனத்தில் இன்றும் தங்கி இருப்பவை. ஒன்று எட்டுவயதிருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீலகண்டஸ்வாமி கோயிலில் இருந்து என்னையும் அம்மாவையும் பூசாரிஒருவர் பிற பக்தர்கள் முன்னிலையில் அவமதித்து வெளியேபோகுமாறு சொன்னது. நாங்கள் அமைதியாக வெளியே வந்தோம். இது நடந்து 26 வருடங்களுக்குப் பிறகு எனக்கு சாகித்யஅகாதெமியின் யுவ புரஷ்கார் வழங்கப்பட்ட போது ஊர் மக்கள்திரண்டு பாராட்டு விழா எடுப்பதாகச் சொல்லி என்னைஅழைத்தார்கள். நான் அங்கு செல்ல மறுத்து விட்டேன். என்னைவெளியேற்றிய அந்த கோயிலை மையமிட்ட ஊர் எங்களுடையது. அங்குள்ள சில வெறியர்கள் வெள்ளைக்காரர்களைக் கூடகோயிலுக்குள் அனுமதிக்காமல் துரத்தியதை நான்பார்த்திருக்கிறேன். நான் எப்படி அங்கு செல்ல முடியும்

அடுத்த அனுபவம் கர்நாடகாவின் எல்லையில் உள்ள ஒரு புராதனகோயிலில் நடந்தது. அன்று என் குடும்பத்தினர் அனைவரும்கோயிலுக்குள் சென்று சுற்றிப் பார்க்க நான் மட்டுமே பலமணிநேரம் வெளியேயே மனம் கசந்து நின்றிருந்தேன். நான் என்னதொழுநோயாளியா? என்னை ஏன் வெளியே நிறுத்த வேண்டும்எனப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. (இதைப் பற்றிஉயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.) 

நான் இந்த அனுபவங்களில் இருந்தே தேரைத் தொட்டு இழுக்கஅனுமதிக்கப்படாத மக்களின் வலியைப் புரிந்து கொள்கிறேன். இதை வைதீக இந்து மதத்தில் உள்ள ஒரு சிலரின் தவறாக நான்பார்க்கவில்லை, கோவை ஞானியைப் போல இந்து மதத்தில்கண்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறு பகுதியாக நான் காணவில்லை(ஏதோ ஆப்பிளின் ஒரு பகுதி மட்டுமே அழுகி இருக்கிறது, வெட்டிஎறிந்து விட்டு சாப்பிடுங்கள் என்பதைப் போல). வைதீக மதத்தின்சாரமே இந்த வெளியேற்றத்தில் தான் இருக்கிறது, அதுதான்வரலாறு, அதுதான் அதன் தத்துவம். கோவை ஞானிக்குவைதீகத்தின் மீதிருந்த மிதமிஞ்சிய சிலாகிப்பால், மனமயக்கத்தால் இது ஒரு தவிர்க்கக் கூடிய பிரச்சனை, இதையும்வைதீகத்தையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் எனமுட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரும் இளவயதில்இருந்து கோயிலில் இருந்து பலர் முன்னிலையில் தொடர்ந்துவெளியேற்றப்பட்டிருந்தால் இந்த மனமயக்கம் அவருக்குஏற்பட்டிருக்காது. கோவை ஞானிக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும்உங்களில் பலருக்கும் நேரடியான இத்தகைய அனுபவங்கள்இல்லையெனில் நான் பேசுவது புரியாது அல்லது அது ஒரு சிறியபிரச்சனை எனும் எண்ணம் ஏற்படும்.

 

 

 வைதீக இந்து மதத்தை உள்ளிருந்து சீர்திருத்துவோம்என்கிறார்கள். இது ஒரு வைரஸிடம் பேரம் பேசி நீ  பேஷாஉள்ளே இருந்துக்கோ, ஆனால் எங்களுக்கு நோய் தராதே எனச்சொல்வதைப் போன்றது. நோயை ஏற்படுத்துவது வைரஸின்அடிப்படை இயல்பு. “எங்களுக்கு இந்து வைதிக மதத்தின் சிலகூறுகள் பிடித்தமானவை, அதனால் சில அசௌகரியங்களைப்பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் எனும் சப்பைக்கட்டுஇது.

 

வைதீக மதத்தை தாங்கிப் பிடிக்க அவர் முன்வைக்கும் அடுத்தவாதத்தைப் பார்ப்போம்:

மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப்பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும்பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்துஅதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? (...) ஆழ்ந்துபார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையானபண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார்.”

 

மதத்தை புறக்கணித்து விட்டு புறவயமாக பக்தி இலக்கியத்தை, அத்வைத தத்துவத்தைப் படிக்க முடியுமே. நான் அவ்வாறு தான்கம்ப ராமாயணம், திருவாய்மொழி, ஆண்டாள் பாசுரங்களை என்பதின்வயதில் படித்தேன். அவ்வாறுதான் கல்லூரிகளில் பக்திஇலக்கியத்தை தத்துவார்த்தமாக கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவ்வாறே பல ஆய்வுகள் பக்தி இலக்கியங்களின் பால்நடந்துள்ளன. இதில் எந்த சிக்கலும் இல்லையே. இருந்தும் ஏன்கலாச்சார பொக்கிஷங்களையும்” “மதத்தையும் கோவை ஞானிஒன்றாக பாவிக்கிறார்? இது ஒரு தந்திரம்: பக்தி இலக்கியத்தைக்காட்டி வைதீக கட்டுமானங்களை நியாயப்படுத்துவது. இன்னொருபார்வை பக்தி இலக்கியத்தை கோயில் கலாச்சார சூழலில், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் மனம்உருக பாடியபடியே அணுக வேண்டும், அப்போதே அதன் சாரம்கிடைக்கும் என்பது. அது மற்றொரு கற்பிதம். பக்தி உணர்வையும்பக்தி இலக்கியத்துடன் பொட்டலம் கட்டுவது. காதல்இலக்கியத்தை காதலியின் மடியில் படுத்தபடி தான் படிக்கணுமா? போர் இலக்கியத்தை யுத்த களத்தில் நின்றபடியேகுண்டுவெடிப்புகளின் மத்தியில் படிக்க வேண்டுமா? வைதீக மதம்வீழ்ந்தால் நம் பண்பாடு செத்து விடும் என்பது சுத்த அபத்தம்

 

கோவை ஞானி வைதீக மதம் பற்றி எழுதியவன, பேசியுள்ளவைஆகியவற்றை படிக்கும் போது வைதீக இந்து மத கட்டமைப்பைபாதுகாக்க வேண்டும் என்பதே அவரது பிரதான நோக்கம் என்பதுதெரிகிறது. அதற்கு அவர் தனது தியான அனுபவம், தேடல், தரிசனம், மக்களின் விடுதலை, கலாச்சார பொக்கிஷத்தைப்பாதுகாப்பது என பல எடுபடாத நியாயங்களை வழங்குகிறார். இதனாலே அவர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்களைப் பாராட்டி ஒரு பேட்டியில்பேசுகிறார். (அதே பேட்டியில் நித்தியானதா குறித்த கேள்விக்குபதில் சொல்லாமல் தவிர்க்கிறார்.) ஶ்ரீஶ்ரீ போன்றவர்கள் நவீனகாலத்தில் பெரும் கார்ப்பரேட் கட்டமைப்புகளை உண்டு பண்ணிஇந்துக்களை வைதீகக் குடையின் கீழ் திரட்டுகிறார் எனும்பெருமிதமே இதற்குக் காரணம். ஞானி எப்போதுமே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவர் (அவருக்கு ஒரே சமயம்மார்க்ஸியவாதியாகவும் வைதீக ஆதரவாளராகவும் வேண்டுமே!). தனக்கு மதத்தின் பிடிப்பில்லை என்றுவிட்டே, மதவாதத்தைஎதிர்க்கிறேன் எனப் பதிவு செய்து விட்டே, வைதீக மதத்தைபெரும் செல்வத்தைத் திரட்டி முன்னெடுப்பவர்களை பாராட்டிஉச்சிமுகரவும் செய்வார். இதையே நான் மென் இந்துத்துவா, கலாச்சார இந்துத்துவா என்கிறேன்.  

 

2) “‘மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்குஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.’ என்னைப் பொறுத்தஅளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன்.” - ஞானி

 

ஒரு பக்கம் இந்த பூசாரித்தனத்தையே கார்ப்பரேட் சாமியார்கள்பண்ணும் போது ஞானி புளகாங்கிதம் அடைந்தார் என்பதைவிடுவோம். கருத்துக்கு வருவோம். மதத்தை இரண்டாக இப்படிப்பிரித்துப் பார்ப்பது ஒரு பழைய காந்திய நோக்கு. இது வைதீகஇந்து மதம் அதன் சாரத்தின் பரிசுத்தமானது, வேதங்களில்ரிஷிகள் எப்படியெல்லாம் எல்லைகளைக் கடந்து மானுடத்தைமுன்னெடுக்கிறார்கள் பாருங்கள், சில பிற்போக்காளர்கள் தாம்இந்து மதத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள் என திசை திருப்பும்வாதம் இது. ஆனால் சமகாலத் தத்துவங்கள் இந்த உள்-வெளிதர்க்கத்தை நிகாரிக்கின்றன. எதார்த்தத்தில் உள்ளும் புறமும்ஒன்றே. மதத்தின் சாரம் என ஒன்று தனியாக இல்லை. அதுநிகழ்த்துததிலேயே பல துண்டுகளாக பல கால வெளிகளில்தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாய் சமூகத்தின் அனுபவத்தில்அனுதினமும் அது எப்படியாக இருக்கிறது என்பதை வைத்தேவைதீகம் எப்படியானது எனத் தீர்மானிக்க வேண்டும். பலரைவிலக்கி விட்டு சிலரை மையத்தில் வைப்பதே அந்த நிகழ்த்துதல். அனைவரையும்  ஒன்றாக ஏற்றுக்கொள்வது சில கவிகளின்பாடல்களில் இருக்கலாம், ஆனால் எதார்த்தத்தில் இல்லை. வைதீகத்தின் வெளிப்பாடாக சாதியம் உள்ளதே நிகழ்த்துததில்உள்ளது. அதையும் சேர்த்ததே மதத்தின் தரிசனம். இது ஏன், வைதீகம் மட்டும் ஏன் இருக்கிறது எனக் கேட்க வேண்டும். ஒருவர்கடவுள் நம்பிக்கையாளராக இருக்கலாமா, இந்து மதவழிபாட்டாளராக இருக்கலாமா, அதன் தத்துவார்த்தப் பிரச்சனைஎன்ன எனக் கேட்க வேண்டும். கோவை ஞானி ஒரு போதும் வைதீகமதத்தை நோக்கி கேட்டிராத கேள்வி இது.

இந்த விசயத்துக்குள் இன்னும் ஆழமாக செல்வதானால்நாகார்ஜுனர் மூலமத்யமகாகாரிகையில் சொல்வதைப் போலபிரம்மம் என்றும், பேருண்மை என்றும் ஒன்றை வாழ்வின் சாரமாகவேதங்கள் பார்ப்பதில் இருந்தே அனைத்து பிரச்சனைகளும்ஆரம்பிக்கின்றன. இதற்கு பின்னர் அத்வைதம் வாழும் பிரம்மம் எனஒரு புதிய வடிவம் அளிக்கிறது. இது கேட்க நன்றாக இருந்தாலும்நடைமுறையில் சிலரை கடவுளைப் போன்றவர், பரப்பிரம்மம், தெய்வாதீனம் பொருந்தியர்கள் என உயர்த்தி பிடித்து, பிறரைத்தாழ்த்தவே உதவுகிறது. ஏன்? பிரம்மம் என ஒரு இருப்பைஅடையாளப்படுத்தி, இறை என்பது சாரமானது எனும் போது அதுமறுக்க முடியாத பேருண்மையாகிறது’. (தந்தைப் படிமம், சடங்குகளில் ஈடுபடும் துறவிகள், மக்களை ஆளும் அரசியல்தலைவர்கள் போன்றோரின் அதிகாரமும், இந்திய சூழலில் சாதியமேலாதிக்கமும் இப்படியே இங்கிருந்தே தோன்றுகிறது. லக்கான்இதையே Symbolic என்கிறார்). அதை வைத்து ஒரு அதிகாரப்படிநிலை, கட்டமைப்பு தோன்றுகிறது. அது ஏற்றுத்தாழ்வுகளுக்குஅதனாலான துன்பங்களுக்கு வழிவகுக்கிறது.

அதாவது சுருக்கமாக எதையொன்றை சாரம் கொண்டதாக, மறுக்க இயலாததாக நாம் கருதினாலும் அது நம்மைஅடிமையாக்கி பெரும் அறியாமை இருளில் தள்ளி விடும். (அதுஎங்கும் நிறைந்தது, முக்காலமும் உள்ளது என்றெல்லாம்ஜல்லியடிப்பதால் அர்த்தமில்லை.) இதை உணர்ந்துகொண்டததாலே, துக்கம் என்பது சாரம் குறித்த நம்பிக்கையில்இருந்து தோன்றுகிறது எனப் புரிந்து கொண்டே புத்தர்வைதீகத்தை எதிர்த்தார். இறை சாரமானது எனும் தரப்பைஎதிர்த்தார். வைதீகத்தின் இந்த அதிகாரவர்க்ககருத்தாக்கத்துக்கு மாற்றாகவே நாகார்ஜுனர் பிரம்மம் என்பதும்வெறும் கட்டமைப்பு, சாரமற்ற வெறும் மொழி அமைப்பு எனநிறுவுகிறார். இப்போது யாரையும் சாமி என அழைக்கமுடியாமல் ஆகிறது. ஆனால் கோவை ஞானி இளமையில் இருந்துஇந்த அபத்தக் கட்டமைப்புகளில் இருந்து மீளவில்லை. திரும்பத்திரும்ப பிரம்மம் அது இதுவென அவர் பேட்டிகளில் குறிப்பிடுவதுவைதீகப் பார்வையில் ஒரு சாரத்தைக் கண்டுபிடிக்கவே. ஒருகட்டத்தில் இது முடியாது எனும் போது அவர் தடுமாறுகிறார். அவருக்கு  சாய்ந்து கொள்ள வைதீக பெருநிறுவனங்களின்ஆறுதல் தேவைப்படுகிறது. எளிய ஜனங்களுக்கான பெருமதம்என இன்றை வைதீக கார்ப்பரேட்டுகளை நியாயப்படுத்துகிறார்(இதையே ஜெ.மோவும் ஜக்கி பற்றின கட்டுரையில் செய்கிறார்என்பதை கவனிக்கலாம்.) ஆனால் இந்த பெருமதம், வைதீகம்தான் எளிய மக்களை பல துன்பங்களில் தள்ளுகிறது, அவர்களைஒடுக்குகிறது என்பதை வசதியாகப் பேசாமல் விடுகிறார். அந்தளவுக்கு மத வெறி கண்ணை மறைக்கிறது. இதை நான்சொன்ன அடுத்த நொடியே ஞானியின் எனக்கு மத அமைப்பிலோகடவுளிலோ நம்பிக்கை இல்லை எனும் ஒரு வாக்கியத்தைநீங்கள் இதே ஞானியின் பேட்டியில் இருந்து எடுத்து என்னிடம் தரமுடியும். அதுதான் ஞானி - இந்த முரண்-பார்வை அவர் வசதியாகஎடுத்தணியும் ஒரு முகமூடி. இதைக் கண்டு பலரும் ஏமாந்துவிடுகிறார்கள். (மோடி மித்ரோ என மனமுருக அழைக்கும் போதுநாம் உருகி விடுவதைப் போல. இது ஒரு அடிப்படையானஉளவியல் உத்தி - நீங்கள் உங்களைப் பற்றி வெளிப்படையாகஎன்ன சொல்கிறீர்களோ அதை வைத்தே மக்கள் எளிதாகஉங்களைப் புரிந்து கொள்வார்கள்.) ஆனால் அவர் அதிகம்உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது வைதீக மத அமைப்புகளைக்காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றியே. இதை வைத்தே அவரதுஅரசியல் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு நம்மால் வர முடிகிறது.

 

இறுதியாக ஒரு கேள்வி: ஒருவர் இந்து மத நம்பிக்கையாளராகஇருப்பது தப்பா? நான் என் பாட்டுக்கு கோயில், புனஸ்காரம் எனவாழக் கூடாதா? நான் எனக்குப் பிடித்த தெய்வத்தை நம்பக்கூடாதா? ஆம் தப்பே. எதையொன்றையும் சாரம் கொண்டதாகநம்புவது தப்பே. ஏனென்றால் அங்கிருந்தே, அத்வைதத்தில்இருந்தே நமது அத்தனை துன்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும்ஆரம்பிக்கின்றன. இதற்கு மாற்று சாரமின்மையை முன்வைக்கும்(நாகார்ஜுனரின்) தத்துவம்.

கோவை ஞானியின் மென் இந்துத்துவாவை இதை விடத்தெளிவாக விளக்க முடியாது. இப்போதே டயர்டாக இருக்கிறது!

 

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_23.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.