Jump to content

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

 

 

Fonseka_Press_Conference-960x1283.jpg?189db0&189db0

கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது”

இவ்வாறு இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் அண்மைக்காலமாக கூறு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும்,

“கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவுமில்லை. பலவீனமடையவுமில்லை. இரண்டு வாரங்கள் மட்டுமே கிழக்கை கருணா கைப்பற்றி வைத்திருந்தார். எனினும் கிழக்கை மீட்க உடனடியாக பிரபாகரன் தாக்குதல் அணி ஒன்றை அனுப்பியிருந்தார்.

வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜூவத்தை பகுதியில் கடல் வழியாக வந்த புலிகளின் தாக்குதல் படையணி, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்களை கொன்றது. இந்த தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆயுதங்களைப் போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியிலுள்ள பிள்ளையானின் முகாமில் தஞ்சமடைந்தார்.

நூற்றி ஐம்பது பேர்தான் இறுதியில் எஞ்சினர். அதிலும் பலர் சிறுவர் போராளிகள். அங்கிருந்தும் கொழும்புக்கு கருணா ஓடிவந்தார். அதன்பின்னர் புலிகளின் மற்றொரு தளபதியான ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் புலிகளின் பலத்தை நிலை நிறுத்தினார். எனவே கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை. அவ்வாறு கூறுவது தவறு” – என்றார்

 

https://newuthayan.com/கருணாவால்-புலிகள்-தோற்கவ/

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் நன்றி மறந்தவர்கள், நவீன போரியலின் கடவுள் எனக்கூறப்படும் நெப்போலியனின் அடிப்படையான கோட்பாடு " அதிகமாக போரிடாதே நீயாகவே உனது உத்திகளை எதிரிக்கு கற்றுக்கொடுத்துவிடுவாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூடியிருந்து பேசி இந்த நாதாரியைப்பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள், பிறகு ஒன்றாகஅறிக்கை விடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர் எப்போ ""இல்லை, என்னால்தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். பொன்சேகா சொல்லுறது முழுப் பொய்"" என்று மறுப்பறிக்கை விடப்போகின்றார் 

😂

Link to comment
Share on other sites

பொன்சேகா வள்ளுவரின் திருக்குறளை எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது. தங்களுடைய மூவாயிரம் இராணுவத்தினரை கருணா கொன்ற தீமையை மறந்துவிட்டுப் புலிகளை அழிப்பதற்கு அவர் உதவிய நன்றியை மறக்கவில்லை.

 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

 

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

 

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

 

இரத்தினச் சுருக்கமாக சொல்வது என்பது இது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

 

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்மானும் கிடையாது இவரும் கிடையாது. இவர் இறுதிப் போரின் போது வெளிநாடுகளில் தான் அதிகம் கிடந்தார்.

ஆனால்.. இராணுவம் கிளிநொச்சியை நெருங்க முடியாமல் தவித்த போது.. சர்வதேச படைத்தளபதிகள் களத்துக்கு விரைந்து திட்டம் வகுத்துக் கொடுத்தவை எல்லாம் நாம் இலகுவாக மறந்து விட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

எப்படி சமப்படுத்துவார் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

எப்படி சமப்படுத்துவார் 🤔

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

அதாவது எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்கிறீர்கள். உங்களுக்கு முரளிதரனைத்தான் தெரியவில்லை என்று நினைத்தேன் சிங்களத்தையும் தெரியவில்லை இசுலாமியர்களின் பலத்தையும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 

நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

அதைப்பற்றி யாருக்கும் கவலை இப்ப? எரியிற வீட்டில் பிடுங்கும் வரைக்கும் லாபமே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 

அஸ்ரப்பானஅஸ்ரப்பையே போட்டு தள்ளியவர்களுக்கு முரளிதரனை போடுவது கஸ்டமா என்ன?

கூட்டணி வருவதை விட முரளிதரன் பரவாயில்லை.
பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/election/01/251774?ref=home-top-trending
 

இந்த தேர்தல் கணிப்பீட்டில் முரளிதரன் வெற்றிக்கு கிட்டவே இல்லையே!

யாராவது முழு கணிப்பீட்டையும் பதிவு செய்ய முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த தேர்தல் கணிப்பீட்டில் முரளிதரன் வெற்றிக்கு கிட்டவே இல்லையே!

யாராவது முழு கணிப்பீட்டையும் பதிவு செய்ய முடியுமா?

கருணாவோ ,குருணாவோ 
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மாற்றுத்தெரிவின் அவசியம் இந்த தேர்தலில்  புரிந்திருக்கிறது.
பிரதிநிதியை கூட்டத்தமைப்பிற்கு கொடுத்தாற்போல என்ன செய்து கிழிப்பினம் ,அங்கே போய் தூங்கி கிடந்து விட்டு வருவினம். வடக்கு மாக்கள் தமது பெருவாரியான வாக்கை கூத்தமைப்பிற்கு வழங்குவதன் மூலம்  அம்பிகாவின் ரிட்டயார்மண்ட்டை  அர்த்தமுள்ளதாக்கி தொடர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு சொருகிக்கொள்ள வேண்டுகிறேன்...ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ போனஸ் முக்கியம்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

தோல்விக்குத்தான் பலர்

ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே

அவன் தெளிவாக  இருக்கிறான்

நம்மவர்கள்  தான் இன்றும்

 கிழக்கை  இசுலாமியரிடமிருந்து 

மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான்  என்ற  கனவில்?????😢

அப்போ அண்ணன் கூட்டமைப்பு மீட்டு தரும் என்று நினைக்கிறாறோ என்னவோ தெரியல😜🤠

கிழக்கை அல்ல வடக்கை கூட மீட்க முடியாது என்று அண்ணனுக்கு விளங்க நாள் எடுக்கும் காரணம் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை அரசின் நிகழ்ச்சி நிரல் வேறு வடக்கில் ஓர் ராணுவ கெப்டன் தேர்தலில் நிற்கிரார் அவருக்கு வடக்கு மக்கள் பிரியாவிடை எப்படி கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது 

13 hours ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

ரதி அண்ணன் இப்பவும் வடகிழக்கு தமிழர் கைகளில்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறார் ஊர்ல நிலவரம் என்ன நடக்கிறது ஒரு வியாபாரத்தை கூட எப்படி தடுக்கிறார்கள் என்று அண்ணனுக்கு தெரியாது குறிப்பா தமிழர் ஒரு கிலோ மரக்கறி 100 ரூபாவுக்கு விற்றால் அதை உடைக்க 50  ருபாய்க்கு விற்கிரார்கள் வியாபார தந்திரமும் நஸ்டம் ஏற்படுத்தி அவர்கள் காலில் வீழ்ந்து கிடக்க வேண்டுமெனவும் இதையெல்லாம் சொல்ல நேரம் எடுக்கும்  விளங்கவும் மாட்டாது 

பழைய புராணத்தை அந்த இடத்திலே நிற்பதை விட புதியதை பயன்படுத்தி செல்ல வேண்டும் இல்லையென்றால் இன்னும் தெருவில்தான் நிற்க வேண்டும் வடகிழக்கு மக்கள் கிழக்கு வீழ்ந்துவிட்டது வடக்கு வெகுதொலைவில் இல்லை 

6 hours ago, ரஞ்சித் said:

அதைப்பற்றி யாருக்கும் கவலை இப்ப? எரியிற வீட்டில் பிடுங்கும் வரைக்கும் லாபமே!!!

கிழக்கு மக்களுக்கு புடுங்கிற வரைக்கும் லாபமே காளிகோவிலை உடைத்து நொருக்கி கடை கட்டுகிறான் , தனக்கு சாதமாக்க வழக்கில் நீதிபதியை மாற்றுகிறான் இதையெல்லாம் தெரிந்தும் கூத்தமைப்பு முதலைமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது இதை பார்ர்த்து கிழக்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் கூத்தமைப்பு கொடுக்கும் அடி  அவர்கள்  உணரவேண்டும் ஆனால் உணர வாய்ப்பில்லை அவர்களுக்கு வடக்கு மட்டுமே வேண்டும் 

நாங்கள் இப்ப எறியிறவன் கையில் பொல்லை கொடுக்கிறோம் கிடைத்தாலும் நன்மை கிடைக்காவிட்டால் பழகிப்போன ஒன்று 

5 hours ago, ஈழப்பிரியன் said:

கூட்டணி வருவதை விட முரளிதரன் பரவாயில்லை.
பார்ப்போம்.

மட்டக்களப்பில் பிள்ளையான் அம்பாறையில் கர்ணா அம்மான் வரலாம் வயது வந்தவர்களை விட பல இளையவர்கள் கர்ணாவை விரும்புகிறார்கள் பழையதை மறந்து 

 

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

கருணாவோ ,குருணாவோ 
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மாற்றுத்தெரிவின் அவசியம் இந்த தேர்தலில்  புரிந்திருக்கிறது.
பிரதிநிதியை கூட்டத்தமைப்பிற்கு கொடுத்தாற்போல என்ன செய்து கிழிப்பினம் ,அங்கே போய் தூங்கி கிடந்து விட்டு வருவினம். வடக்கு மாக்கள் தமது பெருவாரியான வாக்கை கூத்தமைப்பிற்கு வழங்குவதன் மூலம்  அம்பிகாவின் ரிட்டயார்மண்ட்டை  அர்த்தமுள்ளதாக்கி தொடர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு சொருகிக்கொள்ள வேண்டுகிறேன்...ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ போனஸ் முக்கியம்    

எப்பா கல்முனையில் பாண்டிருப்பில் மக்கள் வெள்ளம் பழைய கோட்டை ஆச்சே பாண்டிருப்பு கோமாரு பொத்துவில் அக்கறைப்பற்று கொலனி , பொத்துவில் தம்பிலுப்ல் எல்லாம் சனக்கூட்டம் கூட்ட்மைப்பு அடங்கி விட்டது மக்கள் யார் பக்கம் என தெரிந்து கொண்டு 

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

தாயகத்தில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பேன் யுத்தம் முடிந்த பிறகும் அதனால்தான் பாரிய இடைவெளி நிலவுகிறது இது இன்னும் விரிசல்தான் அடையும் 

10 hours ago, Kapithan said:

நீண்ட கால நோக்கில் கிழக்கு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை 🤔

இதுவரைக்கும் என்ன கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா யாருக்காக திகாமடுல்லையில் தேர்தலில் நிற்கிறான் என்கிற தெளிவிருந்தாலே போதும், நடப்பதை அறிவதற்கு. ஆனால், சிலருக்குத் தெரியாது, யாழ்ப்பாணத்தானிற்குச்  சகுனம் பிழக்க வேண்டும் என்பதற்காக தமது தலையையும் இழக்கத் தயார் சிலர்.

உங்கள் தெரிவு, உங்கள் முடிவு, அனுபவிக்கப்போவதும் நீங்கள். ஏதோ செய்யுங்கள். 

பழதை மறந்துவிட்டார்களாம். நீங்கள் அப்படி இலகுவாக மறந்துவிட்டு துரோகிகளின் பின்னாலும், எதிரியின் பின்னாலும் செல்வதற்கு நடத்தப்பட்டது ஒன்றும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினையில்லை. அது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவிகளினது உயிரும், எமது உயிரிலும் மேலான தாயக விடுதலைப் போராட்டத்தினதும் அழிப்பும், எமக்கு இருந்த ஒரே காவல் அரணின் நிரந்தரமான முடிவும்தான்.

சலுகைகளுக்காகவும், பிரதேசவாதத்திற்காகவும் இனத்தைக் காட்டிக்கொடுத்துச் சோரம்போகும் அடிவருடிகளுக்கு இது புரியப்போவதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

ஓம்....அந்த பெரிய இடை வெளி என்னவெண்டால் நாங்கள் கோப்பை/ கக்கூஸ் கழுவி உழைச்ச காசிலை அவையள் ஜாலியாய் மோட்டச்சைக்கிள் அது இது எண்டு காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம்.
அவையின்ர நக்கல் சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது

கதைப்பதற்கு, கருணாவை, பிள்ளையானை  விட  மாற்று அணி தெரிவு நல்லது. 

எவர் என்றாலும் பலன் இல்லை முடிவெடுத்து விட்டதால். 

கோத்த, மகிந்தவின் திட்டம் பொருளாதார அபிவிருத்தி என்பதால், கருணா, பிள்ளையான்  வந்தால் கதைக்க கூட முடியாமல் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அண்ணா ,உங்களை போன்றவர்களுக்கு ஊர் நிலவரம் விளங்காது ...அதுவும் மட்டு,அம்பாறை  நிலவரம் பூச்சியம்... கிழக்கை சிங்களவர்கள் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் முஸ்லீம்களது கையிற்கு போக கூடாது என்பது தான் அங்குள்ளவர்களது நிலைப்பாடு ....கருணாவும் தான் அது எடுத்துத் தருவேன் ,இது எடுத்து தருவேன் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை ...அந்த மக்களும் அவர் எடுத்துத் தருவார் என்பதற்காக அவர் பின்னால் போகவில்லை...கருணாவால் தான் இரு பக்கத்தையும் சமப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் 

வடக்கு தமிழர்களை விடுங்கள்.

 கிழக்கில் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தேர்தலில்  இரு பக்கத்தையும் சமபடுத்தும்  கருணாவை பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

முதலில் அவர் நேரடியாக தேர்தலில் நிற்கும் வாய்ப்பு இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 19:35, உடையார் said:

கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது”

ணாவால்-புலிகள்-தோற்கவ/

உண்மைதான் , இறுதிபோரில் சிங்களவர்கள் வெற்றி பெற்றதுக்கு கருணா மட்டுமே காரணமல்ல..

இறுதி போரின் வெற்றிக்கு சிங்களத்தின் கனரக ஆயுத பலமும், புலிகளுக்கு வரவிருந்த கனரக ஆயுதங்களின் வழங்கல் தடைப்பட்டதுதான் பிரதான காரணம்.

ஆனால் ஒரு தலைமைபீடத்தின் ரகசியத்தை, அதன் போர் திட்டங்களை கூட இருந்தவனே காட்டி கொடுக்காமல் இருந்திருந்தால்,

போராட்ட யுக்தியை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி ஒரு விடுதலை இயக்கம் எதிரிக்கு எப்போதுமே குடைச்சல் கொடுத்து கொண்டே இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவரைக்கும் என்ன கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்😬

ஆகக் குறைந்தது,  நாங்கள் எல்லோரும் ஒன்றாக, தமிழராக இருந்தோம். (எனது கேள்வியின் அர்த்தம் புரியாத ஆளல்ல நீங்கள். இருந்தும் உங்களால் முன்வைக்கப்பட் வெற்றுக் கேள்விக்கான பதில் மட்டுமே இது) ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.