Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பாவம் என்ன.....😁

வியாபாரம் கொஞ்சம் ஓடினால் ஆளும் பறந்திடுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 01:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

கேள்வி (23) நீங்கள் பெற்ற விருதுகள் எத்தனை?.எங்கெங்கு அவற்றைப் பெற்றீர்கள்?.

நான் இதுவரை விருதுகள் எவற்றையும் பெறவில்லை. என் நூல்கள் விருதுகளுக்குத் தகுதியானவையா என்பதுக்குமப்பால் நான்குபேரின் முடியில் ஒருவரின் எழுத்துத் தங்கியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு அந்த நான்குபேரின் பரிந்துரைப்பில் எனக்கு விருது கிடைக்கவேண்டும் என்று நான் எண்ணுவதும் இல்லை. அதற்காக உள்ள இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருது வழங்குநர்களுக்கும் என் கதைகளை அனுப்பிக்கொண்டிருப்பதும் இல்லை. நான் யாழ் இணையத்தில் என் கதைகளை பகிர்ந்துகொள்வதுடன் திருப்தியடைகிறேன். சிலர் கேட்டால் மட்டும் சில தளங்களுக்கு என்கதையை அனுப்பிவைப்பது. மற்றப்படி தகுதியே இல்லாத சிலரின் எழுத்துக்கு அவரின் முகத்துக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கிடைத்திருக்கும் விருதுகளை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.

 

நல்லதொரு நேர்காணல், நன்றி பகிர்வுக்கு. 

கேள்வி 8: கேள்வியும் பதிலும் ஒத்துவரவில்லை

கேள்வி 23: மனதிற்கு கஷ்டமாக இருக்கு, யாழ்களம் சார்பாக சுமேக்கு என்ன விருது கொடுக்கலாம் - யாழ்கள உறவுகளிடமிருந்து எதிர்பார்கின்றேன் என்ன விருது கொடுக்கலாமென கூறுங்கள் 

எனது தெரிவு 

யாழ்கள இலக்கியவாதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 21:51, தோழி said:

//இன்னும் சிலர் எப்போதும்போல் தரமான எழுத்துக்கள் மட்டுமே எழுத்துலகில் நிலைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கில் தடைக்கற்களாகவும் உள்ளனர். நாடுப்புறப் பாடல்கள் எப்படி இன்றும் எம் பண்பாட்டு விழுமியங்களை இலகுநடையில் சொல்கின்றனவோ அவ்வாறே அனைத்து புலம்பெயர் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்கூட வருங்காலத்துக்கு எம் வாழ்வியலை, எம் துன்பங்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக இருக்கப்போகின்றன என்பதை உணர்ந்து, பேதமின்றி அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதும் ஏற்குக்கொள்வதும் புலம்பெயர் எதிர்காலச் சமூகத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாகவும் எமக்கான ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் எனலாம்.//

அருமை தோழி ! மிக நேர்த்தியான கேள்விகளும் சிறப்பான பதில்களும் ! பல்வேறு விதமான சமூகம் சார்ந்த சிந்தனைகளை  உங்கள் எண்ணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாராட்டுக்களும் பகிர்ந்தமைக்கு நன்றியும் உரித்தாகட்டும்

நன்றி தோழி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் .

16 hours ago, nige said:

யாழ்களத்தில் எழுதத் தொடங்கி ஒருவர் எழுத்தாளர் ஆனதையிட்டு மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி

10 hours ago, நிலாமதி said:

 நல்லதொரு விளக்கமான பதில் கொடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் .   பாதிக்க படடவர்கள் தாமாக முன் வந்தாலன்றி  அவர்களுக்கு விடுதலை இல்லை . உங்களை து பல  கதைகளில் பல சமுதாய சீர் கேடுகளை சுட்டிக்   காட்டுவதாயிருக்கும் . மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .  

நன்றி அக்கா கருத்துக்கும் வருகைக்கும்.

8 hours ago, குமாரசாமி said:

பாவம் என்ன.....😁

நான் ஒண்டும் வேறை வழியில்லாமல் இங்க இருக்கேல்லை . எனக்குப் பிடிச்சுப் போனதால மட்டும்தான் நிக்கிறன் கண்டியளோ😀 

8 hours ago, ஈழப்பிரியன் said:

வியாபாரம் கொஞ்சம் ஓடினால் ஆளும் பறந்திடுமோ?

சீச்சீ ரதிக்குப் போட்டியா யாழ் இணையத்தை வாங்குவதில் மும்மரமாகத்தான் இருப்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

நல்லதொரு நேர்காணல், நன்றி பகிர்வுக்கு. 

கேள்வி 8: கேள்வியும் பதிலும் ஒத்துவரவில்லை

கேள்வி 23: மனதிற்கு கஷ்டமாக இருக்கு, யாழ்களம் சார்பாக சுமேக்கு என்ன விருது கொடுக்கலாம் - யாழ்கள உறவுகளிடமிருந்து எதிர்பார்கின்றேன் என்ன விருது கொடுக்கலாமென கூறுங்கள் 

 

சரி அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எப்படியாக இருக்கும் என்று கூறுங்கள்.

எனக்கு விருது கிடைக்கவில்லை என்றுநான் எப்போதும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் எழுத்துக்கள் அந்தத் தரத்துக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும். இது என் வீடு போல். அதனால் இங்கு அதை சொல்கிறேன் உடையார். 😀😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரி அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எப்படியாக இருக்கும் என்று கூறுங்கள்.

எனக்கு விருது கிடைக்கவில்லை என்றுநான் எப்போதும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் எழுத்துக்கள் அந்தத் தரத்துக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும். இது என் வீடு போல். அதனால் இங்கு அதை சொல்கிறேன் உடையார். 😀😎

உங்கள் தன்னடக்கத்தால் கோபுரமாக உயர்ந்து கொண்டே போகின்றீர்கள்👍

"ஆமா அது அரசியல் சாராத இலக்கியம்தான்" என கூறியிருக்கலாம் 😂 சும்மா பகிடி எங்கட சுமேயை கலாய்த்தது,  பொழுது போகனுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

உங்கள் தன்னடக்கத்தால் கோபுரமாக உயர்ந்து கொண்டே போகின்றீர்கள்👍

"ஆமா அது அரசியல் சாராத இலக்கியம்தான்" என கூறியிருக்கலாம் 😂 சும்மா பகிடி எங்கட சுமேயை கலாய்த்தது,  பொழுது போகனுமே

ஐயையோ உங்கள் கலாய்ப்பு தாங்க முடியாமல் இருக்கே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நேர்காணல் சிறப்பாக இருந்தது.....பாராட்டுக்கள் சகோதரி......!

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

 

--- இந்தப் பதிலில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு......!

அமரர் கல்கியின் "பொன்னியின்செல்வன்" முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சரித்திர நாவலாகும். அதில் கற்பனை என்பது மிகச் சொற்பமே. அதில் வரும்  முக்கிய பாத்திரங்கள் எல்லோரும்  நிஜமாக வாழ்ந்து மறைந்த அரசர்களே.....!

---- பேரரசர்  சுந்தரசோழன் ..... அவரின் குமாரர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் (பின்னாளில் இராஜஇராஜசோழன் ), மகள் இளவரசி குந்தவை, அவள் கணவன் வாணர்குல வீரன் வந்தியத்தேவன்.... செம்பியன்மாதேவி , சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தகன், வானதி , பாண்டிய உளவாளி ரவிதாசன், நந்தினி, பழுவேட்டரையர்கள், சம்புவரையர்......என்று பலர் நிஜமானவர்களே.....!

--- நாவலை தொய்வில்லாமல் நகர்த்தவும் சுவை கூட்டவும் ஓரிரு  பாத்திரங்கள் உதாரணமாக ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, ராக்காயி போன்றவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்.....!

--- எம் கண்முன் நடைபெறாத என்று சொல்லும்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்றவர்களின் காலங்களும்தான் எமக்குத் தெரியாது. அதற்காக இல்லையென்று ஆகிவிடாதே.....!

நான் இதை எழுதும்முன் நிறைய யோசித்தேன். நீங்களும் முடிந்தால் மேலோட்டமாகவாவது  "பொன்னியின்செல்வனை"படித்து பார்க்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்.தவறான தகவல்களைத் தரக்கூடாது என்றுதான்......!

இந்தக் கதையை வாசித்த கனபேர் களத்தில் இருப்பீர்கள், உங்கள் கருத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்......! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://akkinikkunchu.com/?p=121613

அக்கினிக்குஞ்சு இணையத்தில் என் நேர்காணலுக்காக லிங்க் வேலை செய்யவில்லை என்று கேட்டால் வேறொரு லிங்கில் இப்ப போட்டிருக்கு என்கின்றனர். என்ன நடக்குது என்றே புரியவில்லை. யாழ்களம் யாழ்களம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 19:01, suvy said:

உங்களது நேர்காணல் சிறப்பாக இருந்தது.....பாராட்டுக்கள் சகோதரி......!

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

 

--- இந்தப் பதிலில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு......!

அமரர் கல்கியின் "பொன்னியின்செல்வன்" முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சரித்திர நாவலாகும். அதில் கற்பனை என்பது மிகச் சொற்பமே. அதில் வரும்  முக்கிய பாத்திரங்கள் எல்லோரும்  நிஜமாக வாழ்ந்து மறைந்த அரசர்களே.....!

---- பேரரசர்  சுந்தரசோழன் ..... அவரின் குமாரர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் (பின்னாளில் இராஜஇராஜசோழன் ), மகள் இளவரசி குந்தவை, அவள் கணவன் வாணர்குல வீரன் வந்தியத்தேவன்.... செம்பியன்மாதேவி , சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தகன், வானதி , பாண்டிய உளவாளி ரவிதாசன், நந்தினி, பழுவேட்டரையர்கள், சம்புவரையர்......என்று பலர் நிஜமானவர்களே.....!

--- நாவலை தொய்வில்லாமல் நகர்த்தவும் சுவை கூட்டவும் ஓரிரு  பாத்திரங்கள் உதாரணமாக ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, ராக்காயி போன்றவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்.....!

--- எம் கண்முன் நடைபெறாத என்று சொல்லும்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்றவர்களின் காலங்களும்தான் எமக்குத் தெரியாது. அதற்காக இல்லையென்று ஆகிவிடாதே.....!

நான் இதை எழுதும்முன் நிறைய யோசித்தேன். நீங்களும் முடிந்தால் மேலோட்டமாகவாவது  "பொன்னியின்செல்வனை"படித்து பார்க்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்.தவறான தகவல்களைத் தரக்கூடாது என்றுதான்......!

இந்தக் கதையை வாசித்த கனபேர் களத்தில் இருப்பீர்கள், உங்கள் கருத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்......! 

 

அண்ணா உங்கள் புரிதல் தவறானது. இந்தப் பொன்னியின் செல்வன் வரலாற்றில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வைத்து மிகச் சொற்பமான உண்மையான தகவல்களை வாசிப்பினூடாகப் பெற்றுக்கொண்டு கல்கி அவர்களால் தமிழரின் எழுச்சிமிக்க காலத்தை புனைவுகளினூடாகக் கண்முன்  கொண்டுவந்த ஒரு வரலாறு சார்ந்த படைப்பேயன்றி அது அரசியல் சார்ந்த நாவலே அல்ல.

அரசியல் சார்ந்த என்னும்போது எழுதப்படும் ஒரு நாவலோ கட்டுரையோ கவிதையோ அக்கால அரசியலிலோ, மக்களிடையேயோ ஒரு தாக்கத்தை, அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும். கடந்த 2009 வரையான ஈழத்து இலக்கியங்களை வேண்டுமானால் அரசியல் சார்ந்தது எனக் கொள்ளலாம்.

சாண்டில்யன், அகிலன் இன்னும் பலர்கூட கல்கியைப் போன்று வரலாற்று நாவல்களை எழுதியுள்ளனர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தகவலுக்காகத்தான் எழுதினேன்......விவாதத்துக்காக அல்ல ......!

சாண்டில்யன் கதைகளில் கற்பனைப் பாத்திரங்கள்தான் அதிகம். வர்ணனைகளும் நிறைய நிறைய இருக்கும்.அவர் உலவவிட்ட கதாநாயகர்கள் எங்கும் எதிலும் தோல்வியடைய மாட்டார்கள் நிறைய சண்டை போடுவார்கள் அதைவிட நிறைய காதலிப்பார்கள் எம். ஜி. ஆர் மாதிரி.அதில் வரலாறு சொற்பம்தான். மஞ்சளழகி, காஞ்சனையை இருபது பக்கம் வர்ணித்திருப்பார், வரலாறு நாலுபக்கமும் இருக்காது ஆனால் வாசிக்க சுகமாய் இருக்கும்....!

அகிலன் பெரும்பாலும் சமூகநாவல்கள்தான் எழுதியிருக்கிறார். சரித்திரநாவல்கள் எழுதினாரோ தெரியவில்லை.நான் படிக்கவில்லை.....!

பொன்னியின்செல்வனை இவற்றுக்குள் சேர்க்கமுடியாது.அதன் நாயகன் ஆதித்யகரிகாலனால் அனுப்பப்படும் சிறந்த உளவாளி மட்டுமே. அவர் பெரிதாக சண்டைகள் போடவில்லை.பல இடங்களில் மாட்டுப்பட்டுக்கொண்டு பிறரால்தான் காப்பாற்றி தப்ப வைக்கப் படுகிறார்.சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவை.....!

என்வரை திருப்தி இல்லைதான் , ஆயினும் நீங்கள் ஒரு எழுத்தாளர் + ஆய்வுகள் செய்பவர் அதனால் நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இது ஒரு தகவலுக்காகத்தான் எழுதினேன்......விவாதத்துக்காக அல்ல ......!

சாண்டில்யன் கதைகளில் கற்பனைப் பாத்திரங்கள்தான் அதிகம். வர்ணனைகளும் நிறைய நிறைய இருக்கும்.அவர் உலவவிட்ட கதாநாயகர்கள் எங்கும் எதிலும் தோல்வியடைய மாட்டார்கள் நிறைய சண்டை போடுவார்கள் அதைவிட நிறைய காதலிப்பார்கள் எம். ஜி. ஆர் மாதிரி.அதில் வரலாறு சொற்பம்தான். மஞ்சளழகி, காஞ்சனையை இருபது பக்கம் வர்ணித்திருப்பார், வரலாறு நாலுபக்கமும் இருக்காது ஆனால் வாசிக்க சுகமாய் இருக்கும்....!

அகிலன் பெரும்பாலும் சமூகநாவல்கள்தான் எழுதியிருக்கிறார். சரித்திரநாவல்கள் எழுதினாரோ தெரியவில்லை.நான் படிக்கவில்லை.....!

பொன்னியின்செல்வனை இவற்றுக்குள் சேர்க்கமுடியாது.அதன் நாயகன் ஆதித்யகரிகாலனால் அனுப்பப்படும் சிறந்த உளவாளி மட்டுமே. அவர் பெரிதாக சண்டைகள் போடவில்லை.பல இடங்களில் மாட்டுப்பட்டுக்கொண்டு பிறரால்தான் காப்பாற்றி தப்ப வைக்கப் படுகிறார்.சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவை.....!

என்வரை திருப்தி இல்லைதான் , ஆயினும் நீங்கள் ஒரு எழுத்தாளர் + ஆய்வுகள் செய்பவர் அதனால் நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.......!

 

நான் உங்களுக்குப் பதில் எழுதமுன்னர் ஒரு பேராசிரியரிடம் என் வாதத்தை வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்ட பின்னரே உங்களுக்குத் பதில் எழுதினேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.