Jump to content

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்! - என்.சரவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(மீள் பதிவு )

1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.
 
பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு 04.02.1982 அன்று உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
 
சிறையில் இருந்த குட்டிமணியை 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடச் செய்வதற்கான நிர்ப்பந்தம் எழுந்திருந்தன. கூட்டணி அதை செய்யாவிட்டாலும் திருநாவுக்கரஸின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு குட்டிமணியை நியமித்து ஏகமானதாக தீர்மானம் கூட கூட்டணி நிறைவேற்றியிருந்தது. வர்த்தமானிப் பத்திரிகையிலும் கூட அந்தத் தெரிவு வெளியானது. ஆனால் குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள விடவில்லை சிறைச்சாலை ஆணையாளர் பிரிய தெல்கொட. அதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதிமன்றம் தமக்கு அதற்கான அதிகாரம் இல்லையென்று தள்ளுபடி செய்தது. பின்னர் குட்டிமணி இராஜினாமா செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.
 
kuttimani-thangadurai.jpg
குட்டிமணி நீதிமன்ற உரை
நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் தனது கருத்தை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் உரை தமிழ் இளைஞர்கள்  ஏன் ஆயுதமேந்த தள்ளப்பட்டார்கள் என்பதை விளக்குகின்ற ஒரு முக்கிய உரையாக அமைந்தது.
 
தமிழ் மக்களின் உணர்வுகளையும், போராட்டத்திற்கான நியாயங்களையும் புரிந்துகொண்ட சிங்கள ஜனநாயக சக்திகள் இந்த உரையை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து பரவலாக பல தேவைகள் வெளியிட்டு வந்திருகிறார்கள்.
“நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.
இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.
இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.
வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடக்காதவை அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார்.
DFePkQ_VYAA19G7%2B%25281%2529.jpg
 
மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார். 
மேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவார்கள். 
எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.
எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள். 
ஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்.
"நாங்கள் இனவாதிகள் அல்லர். நாம் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் நமது போராட்டத்தில் சிங்கள மக்களை அன்புடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நியாயமான போராட்டங்களின்போது நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம். அவ்வாறே நமது விடுதலைப் போராட்டத்துக்குச் சிங்கள மக்கள் ஆதரவு தரவேண்டும். அடுத்தவரின் சுதந்திரம் தொடர்பில் அக்கறையற்ற மனிதன் தனது சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்றான். நமக்கு ஏற்பட்ட அதே நிலை, வேறொரு நாளில் முழு இலங்கை மக்களுக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிரவு வதைமுகாம் ஹம்பந்தொட்டைக்குக் கொண்டுசெல்லப் படலாம். குருநகர் வதைமுகாம், குருணாகலைக்கு எடுத்துச் செல்லப் படலாம். இன்று அவற்றில் சித்திரவதைகளை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன்று சிங்கள இளைஞர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிவரலாம்"
நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்... எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். ”
இதைத் தான் குட்டிமணி தனது கடைசி ஆசையாக தெரிவித்திருந்தார்.
 
3_2.jpg
புத்தரின் முன்னால் குவிக்கப்பட்ட சடலங்கள்
வெலிக்கடை சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
பல மோசமான குற்றச்செயல்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட பல சிங்களக் கைதிகளுடன் இந்த தமிழ் அரசியல் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். 
 
83 யூலை 24 அன்று நாடெங்கிலும் கலவரம் பரவத் தொடங்கியதும் அந்த ஆவேசம் வெலிக்கடை சிறைச்சாலையிலும் எதிரொலித்தது. 25ஆம் திகதியன்று அங்கு குற்றவாளிகளாக இருந்த சிங்கள இனவாதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். 
 
குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கியிருந்த பி 3 என்னும் சிறைப்பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன.  அந்தப் பிரிவில் மரண ஓலங்கள் கேட்டதே தவிர வேறொன்றையும் எங்களால் பார்க்க முடியவில்லை என வேறு பகுதிகளில் இருந்து தப்பிய ஈழப் போராளிகள் பின்னர் கூறினர். 
 
வெலிக்கடை சிறைவாசலுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது எச் மண்டபம். இம்மண்டபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களையும் அரைகுறை உயிருடன் இருந்த இளைஞர்களின் உடல்களையும் இழுத்து வந்து புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி என்பவர் பார்த்து கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததென்றும், அப்போது அவர் அரை உயிருடன் இருந்ததாகவும் ஜெயக்கொடி என்கிற கைதி கூறுகிறார். சோமு என்றழைக்கப்படும் நடராஜா ஜெயக்கொடி ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்தவர். அவர் பின்னர் நேரில் கண்ட இந்த கொடுமைகளை ஒரு நூலாகவே வெளியிட்டிருந்தார்.
 
குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள் குட்டிமணியை புத்தர் சிலையடியில் இழுத்துக் கொண்டு வந்து போடப்பட்டதன் பின்னர் கண்கள் இரண்டும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுத்து கால்களில் போட்டு மிதித்து அழித்தத்தை ஏனைய சிங்களக் கைதிகள் கைதட்டி ஆரவாரித்தனர்.  இன்னொரு கைதி வெறித்தனமாக குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான். ஏனைய கைதிகள் அவரின் உடலை குத்தி கிழித்தனர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கைதிகள் குட்டிமணியின் இரத்தத்தை தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். குவிக்கப்பட்ட உடல்கலில் உயிர்போகாமல் துடித்துக் கொண்டிருந்த உடல்களில் இரும்புக் கம்பிகளைச் செருகிக் கொன்றனர். ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகள் கைகள் கால்கள் என வெட்டிப் புத்தர் சிலையடியில் குவித்தனர் என்பன போன்ற தகவல்களை ஜெயக்கொடி கூறினார். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.
 
%25E0%25AE%259A%25E0%25AF%2587%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%2B%25E0%25AE%258F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595.jpg
இந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சேபால ஏக்கநாயக்க என்பவர். இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கொண்டாடப்படுகிறார். அது இந்தப் படுகொலைகளுக்காக அல்ல. 1982 ஆம் ஆண்டு Alitaliya என்கிற இத்தாலிய விமானத்தைக் கடத்தி பிரசித்தம் பெற்ற குற்றவாளியைப் பற்றி வீரப்பிரதாப கதைகளாக பல சிங்களக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால் சேபால நடத்திய இந்த மிருகத்தனம் பற்றி சிங்களத்தில் எந்தப் பதிவுகளையும் தேடிக் கண்டு பிடிக்கமுடியாது.
 
வெலிக்கடை சிறையின் பி 3 பிரிவிலும், டி 3 பிரிவிலும் இருந்த 35 பேர் 1983 ஜூலை 25ஆம் திகதி கொல்லப்பட்டனர். இந்தளவு கொடூரம் நிகழந்தும் சிறையதிகாரிகளால் அந்தக் கொலைஞர்கள் பாதுகாக்கப்பட்டதால் ஒரு நாள் கழித்து அதாவது 27ஆம் திகதி அடுத்த கட்ட கொலைகள் அரங்கேறின. அதில் காந்தியம் நிறுவனர் டாக்டர் இராஜூசந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 53 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவம் வந்து கைதிகளுடன் மோதி கண்ணீர்புகை எரிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இல்லையென்றால் மேலும் அங்கிருந்த எஞ்சியவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
 
டக்ளஸ் தேவானந்தா உட்பட 19 தமிழ் கைதிகள் மாத்திரமே இந்தப் படுகொலைகளிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
 
 
 
images%2B%25286%2529.jpg
அப்படி தப்பிய எஞ்சிய தமிழ்க் 19 கைதிகள்
1. அந்தோனிப்பிள்ளை (அழகிரி)
2. மாணிக்கம் தாசன்
3. கணேசலிங்கன்
4. ஸ்ரீதரன் 
5. டக்ளஸ் தேவானந்தா
6. தம்பாபிள்ளை மகேஸ்வரன்
7. சிவசுப்பிரமணியம்
8. ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
9. பாபுஜி
10. டேவிட் ஐயா
11. வண .குரு சின்னராஜா
12. கோவை மகேசன்
13. ஜெயகுலராஜா
14. மு.நித்தியானந்தன்
15. ஜெயதிலக்கராஜா
16. டொக்டர் தர்மலிங்கம்
17. வண.பிதா சிங்கராயர்
18. யோகா எனப்படும் எஸ்.யோகராஜா 
19. (பெயர் ஆயியப்படவில்லை)
 
கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உடல்களை அவர்களின் உறவினர்கள் எவரும் பார்ப்பதற்கு அனுமிக்கப்படவில்லை.
 
இன்றுவரை இந்தப் படுகொலைகளை நடத்திய சிங்களக் கைதிகளுக்கு எதிராகவோ, அதனை செய்யத் தூண்டிய, ஒத்துழைப்பு வழங்கிய சிறைப் பாதுகாவலர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த விசாரணையும் மேற்கொண்டதில்லை இலங்கை அரசு.
 
Welikade-prison.jpg
வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டவர்கள்.
ஜூலை 25 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
2. குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
3. ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
4. தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
5. சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
6. செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
7. அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
8. அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
9. ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
10. சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
11. சின்னதுரை அருந்தவராசா
12. தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
13. மயில்வாகனம் சின்னையா
14. சித்திரவேல் சிவானந்தராஜா
15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
16. தம்பு கந்தையா
17. சின்னப்பு உதயசீலன்
18. கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
19. கிருஷ்ணபிள்ளை நாகராஜா
20. கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
21. அம்பலம் சுதாகரன்
22. இராமலிங்கம் பாலச்சந்திரன்
23. பசுபதி மகேந்திரன்
24. கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
25. குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
26. மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
27. ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
28. ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
29. கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
30. யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
31. அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
32. அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
33. அழகராசா ராஜன்
34. வேலுப்பிள்ளை சந்திரகுமார்
35. சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்
ஜூலை 27 அன்று கொல்லப்பட்டவர்கள்.
1. தெய்வநாயகம் பாஸ்கரன்
2. பொன்னம்பலம் தேவகுமார்
3. பொன்னையா துரைராசா
4. குத்துக்குமார் ஸ்ரீகுமார்
5. அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
6. செல்லச்சாமி குமார்
7. கந்தசாமி சர்வேஸ்வரன்
8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
9. சிவபாலம் நீதிராஜா
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம்
13. சோமசுந்தரம் மனோரஞ்சன்
14. ஆறுமுகம் சேயோன்
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. குமாரசாமி கணேசலிங்கன்
DFePkQrU0AA3dv3%2B%25281%2529.jpg
 
குட்டிமணி பற்றிய காலவரிசைப்படி சில குறிப்புகள்
1969 இல் குட்டிமணி தங்கத்துரை தலைமையில் தமிழர் விடுதலை இயக்கம் (Tamil Liveration Organisation) ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வாக ஆனது. அதனைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக குட்டிமணி இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டுவந்து வந்தார்.
 
1973 தமிழகத்துக்கு தப்பியோடியிருந்த வேளை இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க குட்டிமணி 1974இல் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது.
 
1975 இல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி விசாரணையின்றி தொடர்ந்தும் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 47 கைதிகளின் பட்டியலில் குட்டிமணியின் பெயரையும் அறிவித்திருந்தது.
 
1977 குட்டிமணி விடுதலை செய்யப்பட்டார்.
 
25.03.1981 நீர்வேலி வங்கிக் கொள்ளையின் (8 மில்லியன்) பிரதான சூத்திரதாரியாக குட்டிமணியை இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர்.
 
05.04.1981 குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் தப்பிச் படகொன்றின் மூலம் தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.
 
13.08.1982 குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
14.10.1982 குட்டிமணியை வட்டுக்கோட்டைத் தொகுதியின் (மரணமடைந்த திருநாவுக்கரசின் வெற்றிடத்துக்கு) பாராளுமன்ற உறுப்பினராக கட்சி நியமித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார்.
 
16.10.1982 குட்டிமணியை சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கோட அறிவிப்பு
 
17.10.1982 குட்டிமணிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சட்ட ரீதியான தகுதி கிடையாதென அரச தரப்பில் சுட்டிக் காட்டல்
 
24.01.1983 பதவி வெற்றிடமடைந்து மூன்று மாதத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் அற்றுப் போனதால் குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார். 
 
04.02.1983 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன குட்டிமணி உள்ளிட்ட சில கைதிகளுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து தனது அதிகாரத்தின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.
 
25.07.1983 குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ்க் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏனைய சிங்களக் கைதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தான் கொல்லப்பட்டாலும் தனது கண்களை கண்களை இழந்த ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் எதிர்கால தமிழீழத்தைப் காண வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக கூறியிருந்ததால் குட்டிமணியின் கண்கள் இரண்டும் குடைந்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு நசுக்கி அழித்தனர் சிங்களக் கைதிகள்.
 
நன்றி - தினக்குரல்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை படுகொலை சூத்திரதாரி கோணவல சுனில் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 35
Gonawala-sunils.jpg
 
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையுடன் பல பயங்கர முற்றவாளிக் கைதிகள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதையும் சென்ற வாரம் பார்த்தோம். அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களில் இன்னோமொருவர் கோணவல சுனில். 70 கள் 80 களில் நாடுமுழுவதும் பேசப்பட்ட பிரசித்திபெற்ற பாதாள உலக கோஷ்டித் தலைவனாக அறியப்பட்டவன்.
 
அந்தப் படுகொலைகளுக்கு சிறைக்காவலர்கள், அதிகாரிகளின் பக்கபலமும் தாரளமாக இருந்தததை பலர் நிரூபித்துள்ளனர். ஜெயிலர் ரோஜர் ஜயசேகர ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தொகுதியான களனி தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர். சிறைக்கதவுகளை திறந்ததனால் தான் 400 கைதிகளுக்கும் மேற்ப்பட்ட சிங்களக் கைதிகள் தள்ளிக்கொண்டு ஆக்ரோஷமாக வெளியில் வந்தனர்.
 
கோணவல சுனில் என்று அறியப்பட்ட சுனில் பெரேராவும் சிறையில் இருந்த அவனது சகாக்களும் இந்தப் படுகொலைகளில் விகித்த பாத்திரம் குறித்து ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் (R.J.N.Jordan), இந்த உண்மைகளை அரசாங்கப் பத்திரிகையான டெயிலி நியுஸ் பத்திரிகையில் (16.11.1999) வெளிப்படுத்தியதை அப்பத்திரிகை "Gonawala Sunil executed plan to massacre 53 Tamil prisoners in 1983" என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது. ஜோர்டன் அதற்கு முன்னர் 03.09.1999இல் வெளியான “தி ஐலன்ட்” பத்திரிகையில் வேறு பல தகவல்களை விரிவாக வெளியிட்டிருந்தார்.
“அந்தப் படுகொலைகளின் பிரதான சூத்திரதாரி கோணவல சுனில். திட்டமிட்டு தமிழ் கைதிகளை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொல்வதற்கான அனுமதி ஐ.தே.க விசுவாசிகளான சுனில் கும்பலுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் மீது பழி வராதபடி மிகவும் தந்திரமாக திட்டமிடப்பட்ட படுகொலை அது. அவர்களுக்கு தமிழ் கைதிகளின் பெயர்ப் பட்டியக்ளும் கொடுக்கப்பட்டிருந்தது. சுனிலுக்கு நெருக்கமான விசுவாசிகளிடம் அந்தத் தாக்குதல் ஒப்படைக்கப்படிருந்தது அங்கிருந்த உயரதிகாரிகள் அவர்கள் தமிழ்க் கைதிகள் இருந்த சிறைப்பகுதிகளுக்கு அனுப்ப வழி ஏற்படுத்தினார்கள். யூலை 25 மதியம் 2க்கும் 5க்கும் இடையில் இந்தப் படுகொலைகளை தொடங்கின. இரவிரவாக அந்த கொடுமைகள் தொடர்ந்தன.” என்கிறார்.
கோணவல சுனில் மட்டுமன்றி அவனின்  முழுக் கும்பலுமே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ஆதரவாளர்களும் கூட. ஐ.தே.க வின் சிறிய கூட்டங்கள் பலவும், கொணவல சுனிலின் வீட்டில் நடந்திருப்பத்தை பலர் ஆதாரம் காட்டியும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அமைச்சரொருவரின் ஓட்டலை குத்தகைக்கு எடுத்திருந்தவரை வெளியேற்றுவதற்காக அந்த அமைச்சர் கோணவல சுனிலை சிறையிலிருந்து வெளியில் சட்டவிரோதமாக எடுத்து காரியத்தை முடித்துக் கொண்ட கதைகள் கூட பிரசித்தம்.
 
1401547_220729968099145_977869920_o.jpg
83 கலவரக் காலத்தில் மாமனார் ஜனாதிபதி ஜே.ஆரும் மருமகன் கல்வி அமைச்சர் ரணிலும்
 
தேர்தல் காலங்களில் ஐ.தே.கவுக்கு பலமாக செயற்பட்ட முக்கிய பாதாள உலகத் தலைவன்.  கடான தொகுதி இடைத் தேர்தலின் போது, ஐ.தே.க ஆதரவாக செயற்பட்ட போது வாக்குப் பெட்டிகளைக் களவாடியதா கோணவல சுனில் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. வைத்தியர் ஒருவரின் 15 வயது மகளை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்துக்காக சுனிலுக்கு, 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
அதை எதிர்த்து மேன்முறையீடு செய்த சுனிலுக்கு 1982 இல் மேன்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கு கோணவல சுனிலை பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டான். 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த ஒருவனை ஜே.ஆர்.விடுவிக்க வேண்டிய தேவை எதற்கு வந்தது? அந்தளவுக்கு சுனிலின் தேவை ஐ.தே.க.வுக்கு இருந்தது. ஜே.ஆரின் மீது முன்வைக்கப்படும் குற்றப்பட்டியலில் கோணவல சுனில் பற்றிய கதைகளும் உள்ளடக்கம்.
 
அது மட்டுமன்றி 83 வெலிக்கடை படுகொலைகளுக்குப் பின்னர் விடுதலையான சுனிலுக்கு ஜே.ஆர் அரசாங்கம் பரிசு என்ன தெரியுமா? “அகில இலங்கைக்கான சமாதான நீதவான்” பட்டம்.
 
அதுமட்டுமன்றி இன்றைய பிரதமரும், அன்றைய கல்வி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின்  பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தனாக அன்றைய காலத்தில் பணிபுரிந்துமிருக்கின்றான். இந்த விபரங்கள் மிகவும் பகிரங்கமாக தெரியுமளவுக்கு சுனில் பற்றிய கதைகள் சிங்கள சமூகத்தில் பிரசித்தம். சுனில் 1987 இல் பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டான்.
 
 
1999இல் ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் வெளிப்படுத்திய வெலிக்கடை படுகொலை பற்றிய உண்மைகளின் மீது ஒருபோதும் இலங்கை அரசு விசாரணை நடத்த முன்வரவில்லை.
 
83 கலவரத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டது. அங்கிருந்த தமிழ் பெயர்களைக் கொண்ட அதிகாரிகளும், தமிழ்ப் பெயர்களை ஒத்திருந்த அதிகாரிகளும் கூட தாக்குதலுக்கு உள்ளானார்கள். தூதரகத்தின்  முதன்மைச் செயலாளர் எம்.ஜே.ஆப்ரஹாம்ஸின் வாகனம் பம்பலப்பிட்டியில் மறிக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அவரி உதவியாளர் கே.வி.ஐயர் படுகாயமடைந்து ஆச்பத்தியியில் அனுமதிக்கபட்டார். பின்னர் போய் அரச படைகள் தூதரகத்துக்கு பாதுகாப்பளித்தது.
 
தமிழர்களின் வர்த்தகங்களை அழித்தால் அவர்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தலாம் என்கிற அபிப்பிராயத்தை நெடுங்காலமாகவே சிங்கள சக்திகள் பிரச்சாரமாகவே முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். அந்த குரூரக் கனவை இயலுமானவரை நிறைவேற்றியது பேரினவாதம். தமிழர்கள் செறிவாக வாழ்ந்த இடங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் அதிகமாக இருந்த கொழும்பு - செட்டியார்த் தெரு, மெயின் வீதி, மற்றும் அதனை அண்டிய குறுக்குத் தெருக் கடைகள் எரியூட்டப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்டன.
 
அன்றைய மிகப்பெரும் தமிழ் தொழில் அதிபர்களாக அறியப்பட்ட குணரத்தினம் மகாராஜா நிறுவனமும், ஞானம் முதலாளி என்று அறியப்பட்ட A.Y.S.ஞானம் போன்றாரின் நிறுவனங்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் நட்டத்தை அடைந்தார்கள். அன்றைய மதிப்பின்படி 800 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்தார்கள். அவர்களின் நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்த ஒன்றரை லட்ச ஊழியர்கள் வேலையிழந்தார்கள். வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள்.
riots%2Bi%2Bsri%2Blanka.JPG
 
இலங்கையில் பல நூற்றுக்கணக்கான தடவைகள் தமிழர்கள் கூட்டுப் படுகொலைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதப் படுகொலைகள். அவற்றைத் தவிர பல தடவைகள் சிவில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு சிவில் மக்களே சக சிவிலியன்களை இனத்துவ ரீதியில் கொன்றொழித்த சம்பவங்களை இன வன்செயல்களாகக் கொள்ளப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசின் ஆதரவும், அனுசரணையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைத்த போது அவை நாட்டின் பல பகுதிகளிலும் பரவி, தமிழ் மக்களை அநாதரவு நிலைக்கும், அகதி நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சிவிலியன்கள் சம்பந்தப்பட்ட அப்படிப்பட்ட முக்கிய வன்செயல்களை அட்டவணையில் காணலாம். 1983குப் பின்னர் ஆங்காங்கு சிறிய சிறிய சிவில் கலவரங்கள் நிகழ்ந்தபோதும் பெரிய அளவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் அத்தனையையும் அரச படைகளே புரிந்திருக்கின்றன.
 
1983 கலவரத்தில் 3000க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் காயத்துக்கு உள்ளானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள். 3 லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். கொழும்பில் மாத்திரம் ஏறத்தாழ 60,000 பேர் அளவில் பொது இடங்களில் அகதிகளாக இரத்மலானை விமான நிலையம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் தங்கவைக்கபட்டிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் எந்த உத்தியோகபூர்வமான கணக்கெடுப்பும் இன்று வரை இல்லை. தோராயமாக பல்வேறு சுயாதீன அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளில் இருந்து தான் பலரும் அறிந்துகொள்கிறார்கள்.
 
இதனை கலவரம்  என்றும், வன்செயல் என்றும், கருப்பு ஜூலை என்றும் பல்வேறு பெயர்களில் அழைகின்ற போதும் “83 இனப்படுகொலை சம்பவங்கள்” என்றும் அழைக்கப்படுவதற்கான காரணம் அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் அத்தனை கொடூரமானது என்கிற காரணமும் தான். சாதாரண சிவில் வன்செயலுக்கு அரச அதிகாரத்தின் அனுசரணை கிடைக்கும்போது எப்பேர்பட்ட விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக 83 கலவர விளைவுகள் மெய்ப்பித்தன. அரச அதிகாரம் தமக்கானதல்ல என்கின்ற உண்மை தெட்டத்தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட சந்தர்ப்பம் அது. அந்த அரச அதிகாரம் தமிழர்களை பாதுகாக்கவில்லை என்பது அதுவே முன்னின்று இந்த அநியாயங்களை நிகழ்த்தியதை நேரடியாக அனுபவித்தார்கள் தமிழ் மக்கள். ஆகவே தமக்கான பாதுகாப்பையும், அதிகாரத்தையும், ஆதரவையும் நாடி தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான போராட்டம் முதலாவது ஈழப்போராட்டமாக உருவெடுத்தது. சர்வதேச அளவில் அதற்கான ஆதரவும் பெருகியது.
 
இந்தப் படுகொலைகள் நிகழ்வுக்கு பின்னாலிருந்த முன்கதைகளில் ஜே.ஆருக்கும் தமிழ்த் தரப்புக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைப் பற்றி விரிவாக கூறிய ஆக வேண்டும். அது ஒரு வகை பனிப்போராகவே திரைமறைவில் எரிந்துகொண்டிருந்தது. பரஸ்பரம் ஆத்திரங்களையும், அதிருப்திகளையும் பெருக்கிக் கொண்டிருந்தது. இந்த தொடருக்கு மிகவும் அவசியமானதும் கூட அடுத்த இதழில் அதை விரிவாகப் பாப்போம்.
 
துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.