Jump to content

விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன- பேர்ள்

July 23, 2020

பேர்ள்- இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவராணத்திற்கான மக்கள்

கறுப்பு ஜுலையின் போது- அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் பதிவிடுகின்றோம்.
1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்விளைவே என்ற கட்டுக்கiதை தொடர்ந்து சொல்லப்பட்டுவருகின்றது.
இது பொய்

blavk-july1-300x169.jpg

அரசாங்கத்தை சேர்ந்தவர்களின் வன்முறைகள் ஜூலை மாததத்துக்கு முன்னரே அதிகரித்து வந்தன.தமிழர்களை தங்கள் விருப்பம் போல கொலை செய்தனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
சட்டடே ரிவியூ உட்பட உள்ளுர் செய்தித்தாள்கள் அந்த வன்முறைகளை பதிவு செய்திருந்தன.

1983 ஏப்பிரலில் காந்திய இயக்கத்தின் எஸ்ஏ டேவிட்டும் ராஜசுந்தரமும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.
அவர்கள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டனர்.

ghandia1-300x277.png

 

காந்திய இயக்கம் ஒரு சாத்வீக அமைப்பு அந்த அமைப்பு பண்ணைகளை ஏற்படுத்துவதன் மூலம் அகதிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

குருநகர் இராணுவமுகாமில் ஏப்பிரல் 10 ம் திகதி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார் அதுகுறித்து இடம்பெற்ற விசாரணைகளின் போது உயிரிழந்தவரின் உடலில் 35 காயங்கள் காணப்பட்டன.
திருகோணமலை கிளிவெட்டியை சேர்ந்த 28 வயது நவரட்ணராஜா பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

3-295x300.png

 

மே 18 ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் விடுத்த அழைப்பு விடுத்தனர், பின்னர் இடம்பெற்ற மோதலொன்றில் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், இதன் பின்னர் வெறியாட்டத்தில் இறங்கிய படையினர் யாழ்ப்பாணத்தை தீ மூட்டி எரித்தனர்.
கடைகள்,வீடுகள் வாக னங்களை தீ மூட்டி எரித்த படையினர் சூறையாடலிலும் ஈடுபட்டனர்.

இலங்கையின் தென்பகுதியில் தமிழர்கள் அதிகளவு பாரபட்சம்,துன்புறுத்தல், வன்முறைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.
பல்கலைகழங்கள்,மருத்துவமனைகள் அரச அலுவலகங்கள் போன்றவற்றில் இந்த போக்கு காணப்பட்டது.
1983 ம் ஆண்டு ஐந்தாம் மாதம் 30 திகதி
வல்வெட்டித்துறையை சேர்ந்த சபாரட்ணம் பழனிவேல் என்பவர் டவுன் இராணுவமுகாமுக்குள் இழுத்து கொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர்கள் பார்த்துக்கொண்டிருக்க அவரது உடலின் மேல் இராணுவவீரர் ஒருவர் டிரக்கினை செலுத்தினார்.

8-300x259.png7-300x275.png

இதேவேளை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணமடைந்த கிளிவெட்டியை சேர்ந்த கதிர்காமத்தம்பி நவரட்ணராஜா( 28)இரட்ணசிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா(25)ஆகிய இருவரினதும் மரணம் குறித்த தீர்ப்புகள் வெளியாகின- இருவரும் படையினரால் கொல்லப்பட்டனர்.
ஜூன் மாதம் முதலாம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.இதனை தொடர்ந்து கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டன படையினர் கட்டிடங்களை எரித்ததுடன் தமிழர்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
காந்திய இயக்கத்தின் அலுவலகமும் பண்ணைகளும் தாக்கப்பட்டன.
ஆறாம் மாதம் மூன்றாம் திகதி அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

9-298x300.png

இந்த சட்டம் நீதிபகுப்பாய்வு இன்றி பிரேத பரிசோதனையின்றி கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவதற்கு படையினருக்கு அனுமதி வழங்கியது.

10-287x300.png

இரு தமிழ் இளைஞர்களை படையினர் கொலை செய்தனர் என்பது நீதி விசாரணைகளின் மூலம் தெரியவந்ததன் பின்னரே இந்த சட்;டம் நடைமுறைக்கு வந்தது.
ஆறாம் மாதம் முழுவதும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே இனவன்முறைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்களை கொலை செய்த இராணுவம் அவர்களின் உடல்களை ஒப்படைக்க மறுத்தது.
திருகோணமலையில் வீடுகளும் வர்த்தகநிலையங்களும் எரிக்கப்பட்டன.
ஊரடங்கு வேளையின் போது சம்பந்தனின் வீட்டின் மீது குண்டுகள் எரியப்பட்டன.
திருகோணமலை,யாழ்ப்பாணம்,நீர்கொழும்பு, இரத்மலானை,குருநாகல் உட்பட பல பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்,தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன.

குருநாகலில் ஒரு அரசதொழிற்சாலை தாக்கப்பட்டது.பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது இடம்பெற்றது.
புதிய சட்டங்களின் கீழ் விசாரணைகள் அவசியமில்லை.
மே 18 ம் திகதிக்கு பின்னர் தமிழர்களுக்கு எதிராக ஒரு தாக்குதல் கூட இடம்பெறாத நாள் இல்லை என லண்டனை சேர்ந்த தமிழ் டைம்ஸ் ஜூன் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த இரு முக்கிய செய்தித்தாள்களான சட்டடே ரிவியு மற்றும் சுதந்திரனை அரசாங்கம் தடை செய்ததது.

இதன் பின்னர் கடும் தணிக்கை நடைமுறைக்கு வந்ததால் புலம்பெயர் செய்தித்தாள்கள் மாத்திரம் தகவல்களை வெளியிட்டன.
ஜீலை 20 ம் திகதி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்த செய்திகளை

வெளியிடுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு செய்தித்தாள்களுக்கு தடை விதித்தது.
ஜூலை மாதம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து காணப்பட்டன,22 ம் திகதி இராணுவம் மூன்று தமிழ் யுவதிகளை கைதுசெய்து முகாமுக்கு கொண்டு சென்றது.
அவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பரவியது.

23 ம் திகதி விடுதலைப்புலிகள் அதுவரையில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகவும் வெற்றிகரமானதாக்குதலை நடத்தினார்கள்.தின்னவேலியில் இடம்பெற்ற தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கை முழுவதும் பரவின,முன்கூட்டியே திட்டமிட்ட வன்முறைகள் காரணமாக கொழும்பிலும் சிங்களவர்கள் வாழும் ஏனைய பகுதிகளிலும் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்களின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டது.

black-july-1-300x216.jpg

 

இனக்கலவரம்குறித்த செய்தி வெளியே தெரியவரத்தொடங்கியதும்.அந்த வன்முறைகள் அரச பாதுகாப்புபடையினரின் ஆதரவுடனேயே இடம்பெற்றன- அவை முன்னரே நன்கு திட்டமிடப்பட்டவை என்பது தெளிவாகியது.
யூரர்களின் சர்வதேச ஆணைக்கு 1983 டிசம்பரில் இவ்வாறு தெரிவித்தது.
சிங்கள காடையர்களின் தமிழர்கள் மீதான வன்முறை இனப்படுகொலை என கருதத்தக்க விதத்தில் காணப்படுகின்றது என்பதை ஆதாரங்கள் புலப்படுத்துகின்றன
கறுப்பு ஜூலையில் சிங்கள கும்பல்கள் இழைத்த பயங்கரங்களும் தீமைகளும் ஈழத்தமிழ் மக்களிடம் ஆழமான காயங்களாக பதிந்துள்ளன.
அதற்கு காரணமாக பலர் இன்னமும் உயிருடன் உள்ளனர்.
இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

ஆவணங்கள் – நூலகம்.நெட்

 

http://thinakkural.lk/article/57277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 300க்கு மேட்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்  இவ்வளவு பேரும் 7 mp  பதவிக்கு போட்டியிடுனம் 

இதில் ஒருவர்கூட 1983ல் நடைபெற்ற யூலை படுகொலைகள் குறித்து ஒரு அஞ்சலி வார்த்தைகூட நினைவு கூரவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

அதுதான் தமிழ் சிங்கள முதலாவது இனக்கலவரமாய் பதிவுகளில் உள்ளது ஆனால் அதுக்கு முதலும் பலஇடங்களில் இனமுறுகள் நடைபெற்று உள்ளன 2009நந்திக்கடலுக்கே விளக்கு கொழுத்த எத்தனை அரசியல் நடக்குது . கணக்க  வேண்டாம் ஊரெல்லாம் வாக்கு பிச்சை கேட்க்கும் சுமத்திரன் பக்கத்தில் உள்ள நவாலி தேவாலய படுகொலைகள்  சம்பந்தமாக ஏதாவது சொன்னாரா ?

எல்லாம் சொத்து சேர்ப்பதில்  நிக்கினம் .

கொஞ்சம் இனக்கலவர தரவுகள் உங்களுக்காக 

1956 இல் கலோயாவில் சிங்கள-தமிழ் மோதல்

1956 ஆம் ஆண்டில், சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, சிங்களத்தை ஆங்கிலத்திற்கு பதிலாக உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது, அந்த நேரத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. அதன்படி, சிங்கள அதிகாரப்பூர்வ மொழிச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் குறித்த விவாதம் ஜூன் 4, 1956 அன்று தொடங்கியது. கொல்வின் ஆர். டி சில்வா ஆட்சேபித்தபோது, ஒரு மொழி கொள்கையின் மூலம் நாடு பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும், இலங்கை தமிழ் கூட்டணி (இளங்கை தமிழ் அராசு கச்சி) அல்லது கூட்டாட்சி கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.சல்வனாயகம் தமிழ் மக்களை தனி மாநிலத்தை கோரும் நிலையில் வைக்கக்கூடாது என்றும் கூறினார். என்று மற்ற அரசியல் தலைவர்களிடம் கேட்டார். ஜூன் 05 அன்று, செல்வநாயகம் தலைமையில் சுமார் 200 பேர் காலே முகத்தில் அமைதியான சத்தியாக்கிரகத்தை நடத்தினர். அரசாங்கத்தின் இளைய மந்திரி ஒருவர் சத்தியாக்கிரகத்தைத் தாக்கி நாசப்படுத்திய பின்னர், கொழும்பில் ஒரு கடை திருட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜூன் 11, 1956 அன்று, கலோயா இயக்கத்தின் கீழ், புதிய குடியேறிகள் குழு மாகாண குண்டர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைத் தாக்கி, சிறுபான்மையினரைச் சேர்ந்த 150 இலங்கையர்களைக் கொன்றது, மற்றும் ஏராளமான சொத்துக்களை சூறையாடியது. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும். இதன் விளைவாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 150 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெரிய அளவில் கொள்ளை மற்றும் சொத்துக்கள் தீப்பிடித்தன. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும். இதன் விளைவாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 150 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெரிய அளவில் கொள்ளை மற்றும் சொத்துக்கள் தீப்பிடித்தன. பின்னர் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். சுதந்திர இலங்கையில் அறிவிக்கப்பட்ட முதல் இனவெறி எழுச்சி இதுவாகும்.

1958 இலங்கை முழுவதும் சிங்கள-தமிழ் மோதல்கள்

ஜூலை 26, 1957 அன்று, சிங்கள மொழி எழுப்பிய இனவெறி பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் பண்டாரநாயக்க எஸ்.ஜே.வி.க்கு அழைப்பு விடுத்தார். ஒரு பெரிய தமிழ் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் தமிழ் மொழியை நியாயமாகப் பயன்படுத்த அனுமதிக்கவும், தமிழை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கவும் செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், மற்ற தமிழ் மற்றும் இடது கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் உடன்படவில்லை. இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், யு.என்.பி 1957 செப்டம்பரில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, கொழும்பிலிருந்து கண்டிக்கு அணிவகுத்து, பல் கோயிலில் இருந்து அதன் போராட்டத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதாக அறிவித்தது. இந்த அணிவகுப்பை அரசாங்கம் தடை செய்தது. இந்த அணிவகுப்பை கொழும்பு, கெலானியா மற்றும் கம்பாஹாவில் உள்ள கிராண்ட்பாஸில் எஸ்.எல்.எஃப்.பி உறுப்பினர்கள் தாக்கினர். அணிவகுப்பு தொடர முடியாததால், அவர்கள் வாகனங்களில் கண்டிக்குச் சென்று பல் கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் மொழி உரையை அழிக்க கொழும்பில் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், மட்டக்களப்பில் ஒரு ரயில் தாக்கப்பட்டது. பொலன்னருவாவில், பண்ணைகளில் இருந்த தமிழ் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்-சிங்கள மோதல்கள் நடந்தன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனது. ஆயிரக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

மூலம் https://www.lankanewsweb.net/sinhala/94-featured-news/44442-නිදහසින්-පසු-ලංකාවේ-ඇතිවූ-ජාතීන්-අතර-ගැටුම්

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

58ம் ஆண்டு இனக்கலவரம் என்ன மாதிரி?

கட்டுரை 83 இனக்கலவரத்திற்கான கொதிநிலை திருநெல்வேலியில் நடந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே அந்த ஆண்டில் ஆரம்பித்துவிட்டது என்பதை பத்திரிகை ஆதாரங்களுடன் தருகின்றது.

இனக்கலவரங்களின் வரலாறு 58 க்கு முன்னர் ஆரம்பித்துவிட்டது.

1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.  கடைசியாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் வந்து முடிந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.