Jump to content

நம்பிக்கைகளும் நாங்களும் !


Recommended Posts

"கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ?  "

"சரி சரி நான் கும்பிடேல்லை!"

இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா?  

இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி

I believe a man or woman convinced against his or her will is of the same opinion still.
மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம்.
இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப்பாவிடம் குட்டு வாங்கியபோது எனக்கு ஆறோ ஏழோ வயதிருக்கும்.
ஆனால் அதே அம்மனிடம் சவால் விட்டு, அப்படியொரு மூக்குத்தியை ( அது வைரம் இல்லை என அறிக!😅)பல வருடங்களின் பின் இந்தியாவில் வைத்தே குத்திக் கொள்வதற்கு ஒரு தன்னம்பிக்கை வேண்டியிருந்தது.
அதற்கும் முன் மூன்று வயதிற்கு முன்பே ஒரு கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் அதுவும் இன்னொரு மொழியில் என் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த போது எனக்கு மாதாவை அன்றிலிருந்து இன்றுவரை அப்படிப் பிடித்துப் போயிற்று. அதே வேளையில் சிறிது வளர்ந்த பின் முஸ்லிம் ஆசிரியர்களிடம் தமிழ் கற்கும் அனுபவம் ஏற்பட்டது.
நாட்டின் பிறிதொரு பகுதியில் ஆசிரியையாக இருந்த எனது தாயும், அதே இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த என் தந்தையும் எமக்கு பல மதங்களையும் இனங்களையும் அடையாளம் காட்டி எல்லா மனிதர்களையும் மதிக்கப் பழக்கியிருந்தார்கள். எல்லாவற்றையும் மீறிய ஒரு சக்தியில் நாமும் அதுவாகவே மாறும் உண்மையில், பிரபஞ்ச ரகசியத்தில் கலந்திருக்கிறேன்.
இன்று ஒரு ஆசிரியையாக சகல மதங்களையும் அடையாளப்படுத்தும் சமயக்கல்வியை ஏனைய பாடங்களுடன் நானும் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறேன். இது கட்டாய பாடம். இது தாயகத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிற்க, இங்கு யார் யார் மதவாதிகள்?
என் பெற்றோர், ஐயர்மார், கன்னிகாஸ்திரீகள், என் முஸ்லிம் ஆசிரியை, அதன் பின் உயர்கல்வியில் எமக்கு மதங்களை ஒரு கட்டாய பாடமாக்கிய அரசு, அதைப் போதித்த பாடசாலைகள், கோவில் நிர்வாகங்கள், குடும்ப அமைப்புகள் என வாழ்வின் சகல பாகங்களிலும் மதங்களின் ஆட்சி இருந்திருக்கிறது. இருக்கிறது.
கிராமப்புறங்களில் காட்டுவளவுகளில் கூட வைரவரும் பிள்ளையாரும் தம்மைப் பாதுகாக்கிறார்கள் என நம்பும் வயோதிபர்கள் உண்டு. தமக்கும் தம் குழந்தைகளையும் அழித்தவர்கள் அழிந்தே போவார்கள் என கோவிலில் பழி கிடந்து, கோவில் மண் அள்ளித் திட்டிய தாய்மார்களை நாம் கண்டதில்லையா?
*மதம் ஒரு போதை- ஒத்துக்கொள்கிறேன்.
*மதம் மனிதர்களிடையே வர்க்க வேறுபாடுகளையும் இனத்துவேசத்தையும் வளர்க்கிறது- நிச்சயமாக.
*நாங்கள் சொல்கிறோம் அந்த போதை மருந்தை எடுக்காதீர்கள், நல்லது சொல்லும் எம்மில் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது. -
இங்கு தான் எனது பார்வை வேறுபடுகிறது!
நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சாப்பிட்டு விட்ட போதை மருந்தை இப்பவே வாந்தி எடுத்துக் கையில் கொடுக்க எல்லோராலும் முடியாது. இது ஒரு குறுகியகால சிந்தனை மாற்றமல்ல. முகநூலில் நையாண்டி பண்ணி, நாலே நாளில் நல்ல செய்தி கேட்கத் துடிக்கும் மக்காள், நீங்கள் கல்விப் பரப்பிலும் சமூகக் கட்டுமானத்திலும் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டு அல்லது கொண்டு வர முயற்சித்திருக்கிறீர்கள்? கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
பெரியார் மாமாவையும் மார்க்ஸ் மாமாவையும் எமது சமூகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்?
எடுத்த எடுப்பில் பெரியார் மாமாவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு கந்தசஷ்டிக்கு முன்பதாக இழுத்து வரமுன், எமது கறை படிந்த சமூகத்தில் எப்படி சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என யோசியுங்கள். அன்போடு ஆலோசனைகளையும் திட்டங்களையும் பயன்கொடுக்கக் கூடிய இடங்களில் போதிய பலத்துடன் முன் வையுங்கள். அது தான் ஒரு சமூகத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வரும்.
As Buddha stated, “Hatred is never ended by hatred but by love.”❤️
-தோழி  
 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள். இளைய சமூதாயத்திடம் இருந்து  இவ்வாறான புதிய சிந்தனைகள் எழுவது தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எந்த கேள்வியும் இன்றி முன்னோர் சொன்னதற்காக அனைத்தையும்  தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைந்து புதிய தலைமுறையினர் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதை சமீப காலமாக பல இடங்களில் என்னால்  அவதானிக்க கூடியதாக உள்ளது.  

கால ஓட்டத்தை அனுசரித்து  எம்மை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் புதிய தலைமுறைப் பிள்ளைகள் செல்வதே வெற்றிக்கான வழி.  வாழ்த்துக்கள். தொடருங்கள். 👍👍👍 

Link to comment
Share on other sites

5 hours ago, tulpen said:

சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள். இளைய சமூதாயத்திடம் இருந்து  இவ்வாறான புதிய சிந்தனைகள் எழுவது தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எந்த கேள்வியும் இன்றி முன்னோர் சொன்னதற்காக அனைத்தையும்  தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைந்து புதிய தலைமுறையினர் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதை சமீப காலமாக பல இடங்களில் என்னால்  அவதானிக்க கூடியதாக உள்ளது.  

கால ஓட்டத்தை அனுசரித்து  எம்மை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் புதிய தலைமுறைப் பிள்ளைகள் செல்வதே வெற்றிக்கான வழி.  வாழ்த்துக்கள். தொடருங்கள். 👍👍👍 

உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி. இது ஒரு சிக்கலான விடயம், தனியே பெரியாரது நூல்களை வாசிப்பதால் மட்டும் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. நம்பிக்கைகள் மனம் சார்ந்தவை. 😊😊

Link to comment
Share on other sites

56 minutes ago, தோழி said:

உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி. இது ஒரு சிக்கலான விடயம், தனியே பெரியாரது நூல்களை வாசிப்பதால் மட்டும் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. நம்பிக்கைகள் மனம் சார்ந்தவை. 😊😊

சிந்தனை என்பது அப்படி ஒருவர் பின்னால் போவதாக  மட்டும் இருக்க கூடாது.  சுதந்திரமாக இருக்க வேண்டும். அதை தான் அவரும் கூறினார்.

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

சிந்தனை என்பது அப்படி ஒருவர் பின்னால் போவதாக  மட்டும் இருக்க கூடாது.  சுதந்திரமாக இருக்க வேண்டும். அதை தான் அவரும் கூறினார்.

அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை தோழரே. அன்பும் நன்றியும்! 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை சார்ந்த விடயங்களை நாம் மற்றவர்களுக்கு திணிக்கவே கூடாது. எம்மை நாம் மாற்றமுடிந்தால் மாற்றலாம். அல்லது கடந்து போய்விடுவதே சிறந்தவழியாயினும் அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பிக்கை சார்ந்த விடயங்களை நாம் மற்றவர்களுக்கு திணிக்கவே கூடாது. எம்மை நாம் மாற்றமுடிந்தால் மாற்றலாம். அல்லது கடந்து போய்விடுவதே சிறந்தவழியாயினும் அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

உண்மை. புதிய தலைமுறையினர் சுதந்திரமாக சிந்தித்து அதன் மூலம் அவர்களிடையே நம்பிக்கைகள் என்ற அடிமுட்டள்தனங்கள் குறித்து கேள்விகள்  எழுப்பப்படும் போது அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகள் சிறிது சிறிதாக  தகர்கின்றன.

அவர்களை அப்படி சுதந்திரமாக சிந்திக்க விடாது அடிமுட்டாள்தனமான நம்பிக்கைகளை  சிலர் திணிக்கும் கருத்துக்களை வாசிக்கும் போது கோபப்படமல் அறிவியல் ரீதியில் சிந்திக்கும்   கருத்துக்களை திரும்ப திரும்ப தெரிவிக்க வேண்டும்.

கேள்வி கேட்டகாமல் சொன்னதை எல்லாம் புனிதம் என  ஏற்றுக் கொண்ட காலம் போய் இப்போது தமது மூட நம்பிக்கைகளை நிறுவ விஞ்ஞானத்தை துணைக்கு அழைக்க வேண்டிய நிலையில் மூட நம்பிக்கைகளுக்கு துணை போவோர் உள்ளனர். அதுவே மனித சமுதாயத்திற்கு பெரிய வெற்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தோழி, தற்போதைய காலத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கையிருக்கு, அதை மற்றவர்கள் கேலிக்கு உள்ளாக்கும் போது கோபம்தான் வரும்,

மூட நம்பிக்கைகள் வேறு, கடவுள் வழிபாடு என்பது வேறு இதை உணர்ந்தால் சமுதாயம் முன்னேறும்.

மற்றவர்கள் பதிவிடும்போது யோசிக்கனும், அவர்களின் சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்கனுமென்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

இதில் கோபப்பட ஒன்றுமில்லை. அடிமுட்டாள்தனம் என்று நீங்கள் நினைப்பதுபோல கருத்தை வைப்பவர் யோசிப்பதில்லை. அப்படித் தெரிந்தே கருத்தைக் கூறினால் அது விதண்டாவாதம்.

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனை நாகரீகமாக முன்னேற உதவியது. நாகரீகமில்லாதவர்களை நாகரீகமானவர்களாக மாற்ற காலனியாதிக்கத்தில் மதமாற்றம் நடந்தது.

ஆனால் மதங்களே பெரும் போர்களுக்கும், அழிவுகளுக்கும் தொடர்ச்சியாகக் காரணமாகவும் உள்ளது. போரில் வென்றவர்கள் தம் மதத்தை தோல்வியடைந்தவர்கள் மீது திணித்தார்கள். 

அதேவேளை, சாதாரண மக்கள் தமது தொன்மம், பண்பாடு, கலாச்சாரம் என்று மதங்களையும், மதச்சடங்குகளையும் காலம் காலமாக பின்பற்றிவருகின்றார்கள்.  சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு மதம் முக்கியம் என்று நம்புபவர்கள்.

அவர்கள் மதங்களின் அரசியலைப் புரிந்துகொள்வதில்லை. பலசமயம் மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களால் பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனது தனிப்பட்ட கருத்து இதுதான்: 

நாம் எமது நம்பிக்கைகளை/செயற்பாடுகளை பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி, மற்றையவர்களின் மேல் திணிக்க கூடாது. அப்படி செய்தால் கூட அது உண்மையான ஒன்றாக இருக்காது.. மனம் ஒன்றுபட்டு நம்பிக்கை வைத்து செய்யும் வழிபாடு/செயலுக்கும்,  விருப்பமில்லாது ஏனோதானோ என செய்யும் வழிபாடு/செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை எல்லோரும் அறிவார்.

நீங்கள் பின்பற்றும் ஒரு செயல்/நம்பிக்கை மீது, கேள்விகள் எழுப்பப்படும் பொழுது உங்களால் சரியான விளக்கத்தை தரமுடிகிறதா? , அப்படியானல் அதை செய்யுங்கள்.. நீங்கள் மாறவேண்டிய அவசியமில்லை. இல்லை உங்களுக்கே உங்களது செயல் மீது கேள்வி எழுந்தால்.. அதற்கான விடையை தேடுங்கள்.. சிந்தனையை எப்படி எவ்வாறு வளர்ப்பது என்பது அவர்வர் தனிப்பட்ட தேடுதல்/முயற்சியில் தங்கியுள்ளது. 

மேலும் வர்க்கவேறுபாடு,  அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் என்பன எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எங்களுடைய சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கலந்துள்ளது. இதில் படித்தவர், பாமரர் என்ற பிரிவு இல்லாது எல்லோரிடமும் உள்ளது என்பதால் இலகுவில் அதை இல்லாதெழிக்க முடியாது.. காலத்திற்கு ஏற்ற முறையான பொறிமுறைகள் ஊடாகவே சில மாற்றங்களை செய்யமுடியும்.. 

உங்களது பகிர்வுக்கு நன்றி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

Link to comment
Share on other sites

5 minutes ago, ரதி said:

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

நன்றி ரதி! உங்கள் அனுபவம் விலைமதிப்பற்றது. அப்படித்தான் ஒரு நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இரவோடிரவாக பெரியார் நூலை வெறுமனே வாசிப்பதால் எந்த பலனும் வராது. இது என்னுடைய கருத்து, இதை நான் எழுதியதற்கு எனக்குள் இது குறித்து எழுந்த ஆதங்கமே காரணம். 🙏

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

நல்ல பதிவு தோழி, தற்போதைய காலத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கையிருக்கு, அதை மற்றவர்கள் கேலிக்கு உள்ளாக்கும் போது கோபம்தான் வரும்,

மூட நம்பிக்கைகள் வேறு, கடவுள் வழிபாடு என்பது வேறு இதை உணர்ந்தால் சமுதாயம் முன்னேறும்.

மற்றவர்கள் பதிவிடும்போது யோசிக்கனும், அவர்களின் சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்கனுமென்று 

காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி உடையார்.  ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இதில் கோபப்பட ஒன்றுமில்லை. அடிமுட்டாள்தனம் என்று நீங்கள் நினைப்பதுபோல கருத்தை வைப்பவர் யோசிப்பதில்லை. அப்படித் தெரிந்தே கருத்தைக் கூறினால் அது விதண்டாவாதம்.

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனை நாகரீகமாக முன்னேற உதவியது. நாகரீகமில்லாதவர்களை நாகரீகமானவர்களாக மாற்ற காலனியாதிக்கத்தில் மதமாற்றம் நடந்தது.

ஆனால் மதங்களே பெரும் போர்களுக்கும், அழிவுகளுக்கும் தொடர்ச்சியாகக் காரணமாகவும் உள்ளது. போரில் வென்றவர்கள் தம் மதத்தை தோல்வியடைந்தவர்கள் மீது திணித்தார்கள். 

அதேவேளை, சாதாரண மக்கள் தமது தொன்மம், பண்பாடு, கலாச்சாரம் என்று மதங்களையும், மதச்சடங்குகளையும் காலம் காலமாக பின்பற்றிவருகின்றார்கள்.  சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு மதம் முக்கியம் என்று நம்புபவர்கள்.

அவர்கள் மதங்களின் அரசியலைப் புரிந்துகொள்வதில்லை. பலசமயம் மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களால் பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

இது தான் யதார்த்தம். நன்றி !

உலக மட்டத்திலும் குறுகிய சமூக மட்டத்திலும் வளர்ந்து வரும் இனப்படு கொலைகளுக்கும் மத வெறிக்கும் மதங்கள் அனைத்துமே ஒரு வகையில் காரணமே.

இன்றும் தாயகத்தில் இருக்கும் இனத்துவேசம், எம்மிடையே காணப்படும் பல் வேறு விதமான வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் தாமே காரணம். இவை சிறிது சிறிதாக தான் மாற்றப்படவேண்டும். எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

கடவுள் இல்லையென்றால் விதி எப்படி வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தோழி said:

எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

👍

நல்ல சிறந்த கருத்து.

 

7 minutes ago, குமாரசாமி said:

கடவுள் இல்லையென்றால் விதி எப்படி வந்தது?

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் துன்பம் வரக் கூடாது என்றே இறைவழிபாடு இருந்தது.
இப்போது துன்பம் வரும் போது மட்டும் இறைவழிபாடு தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் துன்பம் வரக் கூடாது என்றே இறைவழிபாடு இருந்தது.
இப்போது துன்பம் வரும் போது மட்டும் இறைவழிபாடு தேவைப்படுகிறது.

மனது சுத்தமாகவும் இதயம் கறை படாமலும் இருக்கும் போது இறை வழிபாடு தேவை இல்லை என்பவர்களும் நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையானது  தன்னம்பிகை மட்டும் சார்ந்தது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

இது தான் யதார்த்தம். நன்றி !

உலக மட்டத்திலும் குறுகிய சமூக மட்டத்திலும் வளர்ந்து வரும் இனப்படு கொலைகளுக்கும் மத வெறிக்கும் மதங்கள் அனைத்துமே ஒரு வகையில் காரணமே.

இன்றும் தாயகத்தில் இருக்கும் இனத்துவேசம், எம்மிடையே காணப்படும் பல் வேறு விதமான வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் தாமே காரணம். இவை சிறிது சிறிதாக தான் மாற்றப்படவேண்டும். எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

மிகவும் சரியான கருத்து.  ஆனால் தாயகத்தில் இருக்கும் இனத்துவேச நிலைக்குப் புத்தமதமே கரணியமாக உள்ளது. புத்தர் உண்மையிலே தன்னை யாரும் வழிபடுமாறு சொல்லவில்லை.  பின்வந்தோர் தத்தமது வசதிகருதியும் தம்மை நிலைநிறுத்தும் நோக்கோடும் அதனைப்பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டனர் . அதிலும் குறிப்பாக சிங்கள பெளத்தர்களது தன்மை மிகவும் மோசமானது. பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டே இருக்கின்றனர். இன்று சித்தாண்டிக் கோவிலின் தேங்காய் உடைக்கும் கல்வரை போய்நிற்கின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களைப்போன்ற மதவாதிகளல்ல என்பதாலேயே சிங்கள பெளத்தம் ஆட்டம்போடுகிறது.  இன்றைய தாயகத்தின் அவலநிலைக்குப் பெளத்தமே கரணியம் என்பது குறித்தும் பேசப்பட வேண்டும். 

மதம் மனிதரை ஆட்கொள்வதற்கான அடிப்படை கரணியமாக இருப்பது  அவனைச் சுற்றியிருக்கும் சூழலே.  அன்பு கிடைக்காதவன் எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கே ஐக்கியமாவிடுகிறான். அமைதி கிடைக்காதவன் எங்கே அமைதி கிடைக்கிறதோ அங்கே அவன் ஐக்கியமாகிவிடுகிறான். மதம் ஒரு போதைபோன்றது ஏறினால் தானாக இறங்கும்வரை அது ஓயாது.  அதற்கு இலங்கைத்தீவின் சிங்கள பெளத்தர்களும் சாடசியாக உள்ளனர். இவர்களைப்போன்று இன்னும் பிற நாட்வர்களும் உளர். ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரை புலத்திலே நாம் காணும் இளையதலைமுறையினரிடையே வினாக்கள் எழும்புகின்றன. அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது.  

கடவுள் கோவில் போன்றன ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் இடமாக இருப்பதால் இவற்றை எதிர்காலத் தலைமுறை கடந்துபோய்விடக்ககூடிய வாய்ப்புகளே அதிகம் என எண்ணுகின்றேன்.  சமயங்களைக் கடக்கும்போது சாதிகளும் கடக்கப்படும் சூழல் வரும்போது மொழி முதன்மைப் புள்ளியாகி இனநலன் மேலெழும்போது ஒரு சிறந்த சிந்தனை மிகு மனிதர்களாகத் தமிழர்களும் உலகில் மிளிரக்கூடும். 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் நடாத்த வேண்டிய அவசியமே இல்லாதுபோகும் காலம் வரும். அதுவரை அவரவர் மதங்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் செய்யாது கடந்து போவதே நற்பண்பாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎07‎-‎2020 at 22:21, குமாரசாமி said:

 

 

On ‎25‎-‎07‎-‎2020 at 22:26, விளங்க நினைப்பவன் said:

👍

நல்ல சிறந்த கருத்து.

 

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

Link to comment
Share on other sites

On 25/7/2020 at 23:28, nochchi said:

மிகவும் சரியான கருத்து.  ஆனால் தாயகத்தில் இருக்கும் இனத்துவேச நிலைக்குப் புத்தமதமே கரணியமாக உள்ளது. புத்தர் உண்மையிலே தன்னை யாரும் வழிபடுமாறு சொல்லவில்லை.  பின்வந்தோர் தத்தமது வசதிகருதியும் தம்மை நிலைநிறுத்தும் நோக்கோடும் அதனைப்பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டனர் . அதிலும் குறிப்பாக சிங்கள பெளத்தர்களது தன்மை மிகவும் மோசமானது. பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டே இருக்கின்றனர். இன்று சித்தாண்டிக் கோவிலின் தேங்காய் உடைக்கும் கல்வரை போய்நிற்கின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களைப்போன்ற மதவாதிகளல்ல என்பதாலேயே சிங்கள பெளத்தம் ஆட்டம்போடுகிறது.  இன்றைய தாயகத்தின் அவலநிலைக்குப் பெளத்தமே கரணியம் என்பது குறித்தும் பேசப்பட வேண்டும். 

மதம் மனிதரை ஆட்கொள்வதற்கான அடிப்படை கரணியமாக இருப்பது  அவனைச் சுற்றியிருக்கும் சூழலே.  அன்பு கிடைக்காதவன் எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கே ஐக்கியமாவிடுகிறான். அமைதி கிடைக்காதவன் எங்கே அமைதி கிடைக்கிறதோ அங்கே அவன் ஐக்கியமாகிவிடுகிறான். மதம் ஒரு போதைபோன்றது ஏறினால் தானாக இறங்கும்வரை அது ஓயாது.  அதற்கு இலங்கைத்தீவின் சிங்கள பெளத்தர்களும் சாடசியாக உள்ளனர். இவர்களைப்போன்று இன்னும் பிற நாட்வர்களும் உளர். ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரை புலத்திலே நாம் காணும் இளையதலைமுறையினரிடையே வினாக்கள் எழும்புகின்றன. அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது.  

கடவுள் கோவில் போன்றன ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் இடமாக இருப்பதால் இவற்றை எதிர்காலத் தலைமுறை கடந்துபோய்விடக்ககூடிய வாய்ப்புகளே அதிகம் என எண்ணுகின்றேன்.  சமயங்களைக் கடக்கும்போது சாதிகளும் கடக்கப்படும் சூழல் வரும்போது மொழி முதன்மைப் புள்ளியாகி இனநலன் மேலெழும்போது ஒரு சிறந்த சிந்தனை மிகு மனிதர்களாகத் தமிழர்களும் உலகில் மிளிரக்கூடும். 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் நடாத்த வேண்டிய அவசியமே இல்லாதுபோகும் காலம் வரும். அதுவரை அவரவர் மதங்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் செய்யாது கடந்து போவதே நற்பண்பாகும்.  

//அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது. //

சரியான பார்வை.  சில விசயங்களில், முக்கியமாக மூட நம்பிக்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேணும்.  
 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

 

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

நீங்கள் இது குறித்து சிந்திப்பதே எமக்குள் ஏற்படும் அனுபவம் சார்ந்த மாற்றம் தான் ரதி ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

ஒவ்வொருத்தருக்கும் அளந்த அளவுதான் வாழ்க்கை.எம்மைப்போல் மற்றவர்களாலும் வாழ முடியாது.அவர்களைப்போல் எம்மாலும் வாழ முடியாது.
இதுதான் இயற்கையின் நியதி.

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொருத்தருக்கும் அளந்த அளவுதான் வாழ்க்கை.எம்மைப்போல் மற்றவர்களாலும் வாழ முடியாது.அவர்களைப்போல் எம்மாலும் வாழ முடியாது.
இதுதான் இயற்கையின் நியதி.

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தோழி said:

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.