Jump to content

நம்பிக்கைகளும் நாங்களும் !


Recommended Posts

"கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ?  "

"சரி சரி நான் கும்பிடேல்லை!"

இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா?  

இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி

I believe a man or woman convinced against his or her will is of the same opinion still.
மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம்.
இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப்பாவிடம் குட்டு வாங்கியபோது எனக்கு ஆறோ ஏழோ வயதிருக்கும்.
ஆனால் அதே அம்மனிடம் சவால் விட்டு, அப்படியொரு மூக்குத்தியை ( அது வைரம் இல்லை என அறிக!😅)பல வருடங்களின் பின் இந்தியாவில் வைத்தே குத்திக் கொள்வதற்கு ஒரு தன்னம்பிக்கை வேண்டியிருந்தது.
அதற்கும் முன் மூன்று வயதிற்கு முன்பே ஒரு கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் அதுவும் இன்னொரு மொழியில் என் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த போது எனக்கு மாதாவை அன்றிலிருந்து இன்றுவரை அப்படிப் பிடித்துப் போயிற்று. அதே வேளையில் சிறிது வளர்ந்த பின் முஸ்லிம் ஆசிரியர்களிடம் தமிழ் கற்கும் அனுபவம் ஏற்பட்டது.
நாட்டின் பிறிதொரு பகுதியில் ஆசிரியையாக இருந்த எனது தாயும், அதே இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த என் தந்தையும் எமக்கு பல மதங்களையும் இனங்களையும் அடையாளம் காட்டி எல்லா மனிதர்களையும் மதிக்கப் பழக்கியிருந்தார்கள். எல்லாவற்றையும் மீறிய ஒரு சக்தியில் நாமும் அதுவாகவே மாறும் உண்மையில், பிரபஞ்ச ரகசியத்தில் கலந்திருக்கிறேன்.
இன்று ஒரு ஆசிரியையாக சகல மதங்களையும் அடையாளப்படுத்தும் சமயக்கல்வியை ஏனைய பாடங்களுடன் நானும் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறேன். இது கட்டாய பாடம். இது தாயகத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிற்க, இங்கு யார் யார் மதவாதிகள்?
என் பெற்றோர், ஐயர்மார், கன்னிகாஸ்திரீகள், என் முஸ்லிம் ஆசிரியை, அதன் பின் உயர்கல்வியில் எமக்கு மதங்களை ஒரு கட்டாய பாடமாக்கிய அரசு, அதைப் போதித்த பாடசாலைகள், கோவில் நிர்வாகங்கள், குடும்ப அமைப்புகள் என வாழ்வின் சகல பாகங்களிலும் மதங்களின் ஆட்சி இருந்திருக்கிறது. இருக்கிறது.
கிராமப்புறங்களில் காட்டுவளவுகளில் கூட வைரவரும் பிள்ளையாரும் தம்மைப் பாதுகாக்கிறார்கள் என நம்பும் வயோதிபர்கள் உண்டு. தமக்கும் தம் குழந்தைகளையும் அழித்தவர்கள் அழிந்தே போவார்கள் என கோவிலில் பழி கிடந்து, கோவில் மண் அள்ளித் திட்டிய தாய்மார்களை நாம் கண்டதில்லையா?
*மதம் ஒரு போதை- ஒத்துக்கொள்கிறேன்.
*மதம் மனிதர்களிடையே வர்க்க வேறுபாடுகளையும் இனத்துவேசத்தையும் வளர்க்கிறது- நிச்சயமாக.
*நாங்கள் சொல்கிறோம் அந்த போதை மருந்தை எடுக்காதீர்கள், நல்லது சொல்லும் எம்மில் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது. -
இங்கு தான் எனது பார்வை வேறுபடுகிறது!
நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சாப்பிட்டு விட்ட போதை மருந்தை இப்பவே வாந்தி எடுத்துக் கையில் கொடுக்க எல்லோராலும் முடியாது. இது ஒரு குறுகியகால சிந்தனை மாற்றமல்ல. முகநூலில் நையாண்டி பண்ணி, நாலே நாளில் நல்ல செய்தி கேட்கத் துடிக்கும் மக்காள், நீங்கள் கல்விப் பரப்பிலும் சமூகக் கட்டுமானத்திலும் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டு அல்லது கொண்டு வர முயற்சித்திருக்கிறீர்கள்? கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
பெரியார் மாமாவையும் மார்க்ஸ் மாமாவையும் எமது சமூகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்?
எடுத்த எடுப்பில் பெரியார் மாமாவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு கந்தசஷ்டிக்கு முன்பதாக இழுத்து வரமுன், எமது கறை படிந்த சமூகத்தில் எப்படி சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என யோசியுங்கள். அன்போடு ஆலோசனைகளையும் திட்டங்களையும் பயன்கொடுக்கக் கூடிய இடங்களில் போதிய பலத்துடன் முன் வையுங்கள். அது தான் ஒரு சமூகத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வரும்.
As Buddha stated, “Hatred is never ended by hatred but by love.”❤️
-தோழி  
 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள். இளைய சமூதாயத்திடம் இருந்து  இவ்வாறான புதிய சிந்தனைகள் எழுவது தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எந்த கேள்வியும் இன்றி முன்னோர் சொன்னதற்காக அனைத்தையும்  தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைந்து புதிய தலைமுறையினர் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதை சமீப காலமாக பல இடங்களில் என்னால்  அவதானிக்க கூடியதாக உள்ளது.  

கால ஓட்டத்தை அனுசரித்து  எம்மை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் புதிய தலைமுறைப் பிள்ளைகள் செல்வதே வெற்றிக்கான வழி.  வாழ்த்துக்கள். தொடருங்கள். 👍👍👍 

Link to comment
Share on other sites

5 hours ago, tulpen said:

சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள். இளைய சமூதாயத்திடம் இருந்து  இவ்வாறான புதிய சிந்தனைகள் எழுவது தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எந்த கேள்வியும் இன்றி முன்னோர் சொன்னதற்காக அனைத்தையும்  தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைந்து புதிய தலைமுறையினர் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதை சமீப காலமாக பல இடங்களில் என்னால்  அவதானிக்க கூடியதாக உள்ளது.  

கால ஓட்டத்தை அனுசரித்து  எம்மை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் புதிய தலைமுறைப் பிள்ளைகள் செல்வதே வெற்றிக்கான வழி.  வாழ்த்துக்கள். தொடருங்கள். 👍👍👍 

உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி. இது ஒரு சிக்கலான விடயம், தனியே பெரியாரது நூல்களை வாசிப்பதால் மட்டும் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. நம்பிக்கைகள் மனம் சார்ந்தவை. 😊😊

Link to comment
Share on other sites

56 minutes ago, தோழி said:

உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி. இது ஒரு சிக்கலான விடயம், தனியே பெரியாரது நூல்களை வாசிப்பதால் மட்டும் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. நம்பிக்கைகள் மனம் சார்ந்தவை. 😊😊

சிந்தனை என்பது அப்படி ஒருவர் பின்னால் போவதாக  மட்டும் இருக்க கூடாது.  சுதந்திரமாக இருக்க வேண்டும். அதை தான் அவரும் கூறினார்.

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

சிந்தனை என்பது அப்படி ஒருவர் பின்னால் போவதாக  மட்டும் இருக்க கூடாது.  சுதந்திரமாக இருக்க வேண்டும். அதை தான் அவரும் கூறினார்.

அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை தோழரே. அன்பும் நன்றியும்! 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை சார்ந்த விடயங்களை நாம் மற்றவர்களுக்கு திணிக்கவே கூடாது. எம்மை நாம் மாற்றமுடிந்தால் மாற்றலாம். அல்லது கடந்து போய்விடுவதே சிறந்தவழியாயினும் அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பிக்கை சார்ந்த விடயங்களை நாம் மற்றவர்களுக்கு திணிக்கவே கூடாது. எம்மை நாம் மாற்றமுடிந்தால் மாற்றலாம். அல்லது கடந்து போய்விடுவதே சிறந்தவழியாயினும் அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

உண்மை. புதிய தலைமுறையினர் சுதந்திரமாக சிந்தித்து அதன் மூலம் அவர்களிடையே நம்பிக்கைகள் என்ற அடிமுட்டள்தனங்கள் குறித்து கேள்விகள்  எழுப்பப்படும் போது அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகள் சிறிது சிறிதாக  தகர்கின்றன.

அவர்களை அப்படி சுதந்திரமாக சிந்திக்க விடாது அடிமுட்டாள்தனமான நம்பிக்கைகளை  சிலர் திணிக்கும் கருத்துக்களை வாசிக்கும் போது கோபப்படமல் அறிவியல் ரீதியில் சிந்திக்கும்   கருத்துக்களை திரும்ப திரும்ப தெரிவிக்க வேண்டும்.

கேள்வி கேட்டகாமல் சொன்னதை எல்லாம் புனிதம் என  ஏற்றுக் கொண்ட காலம் போய் இப்போது தமது மூட நம்பிக்கைகளை நிறுவ விஞ்ஞானத்தை துணைக்கு அழைக்க வேண்டிய நிலையில் மூட நம்பிக்கைகளுக்கு துணை போவோர் உள்ளனர். அதுவே மனித சமுதாயத்திற்கு பெரிய வெற்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தோழி, தற்போதைய காலத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கையிருக்கு, அதை மற்றவர்கள் கேலிக்கு உள்ளாக்கும் போது கோபம்தான் வரும்,

மூட நம்பிக்கைகள் வேறு, கடவுள் வழிபாடு என்பது வேறு இதை உணர்ந்தால் சமுதாயம் முன்னேறும்.

மற்றவர்கள் பதிவிடும்போது யோசிக்கனும், அவர்களின் சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்கனுமென்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.

இதில் கோபப்பட ஒன்றுமில்லை. அடிமுட்டாள்தனம் என்று நீங்கள் நினைப்பதுபோல கருத்தை வைப்பவர் யோசிப்பதில்லை. அப்படித் தெரிந்தே கருத்தைக் கூறினால் அது விதண்டாவாதம்.

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனை நாகரீகமாக முன்னேற உதவியது. நாகரீகமில்லாதவர்களை நாகரீகமானவர்களாக மாற்ற காலனியாதிக்கத்தில் மதமாற்றம் நடந்தது.

ஆனால் மதங்களே பெரும் போர்களுக்கும், அழிவுகளுக்கும் தொடர்ச்சியாகக் காரணமாகவும் உள்ளது. போரில் வென்றவர்கள் தம் மதத்தை தோல்வியடைந்தவர்கள் மீது திணித்தார்கள். 

அதேவேளை, சாதாரண மக்கள் தமது தொன்மம், பண்பாடு, கலாச்சாரம் என்று மதங்களையும், மதச்சடங்குகளையும் காலம் காலமாக பின்பற்றிவருகின்றார்கள்.  சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு மதம் முக்கியம் என்று நம்புபவர்கள்.

அவர்கள் மதங்களின் அரசியலைப் புரிந்துகொள்வதில்லை. பலசமயம் மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களால் பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனது தனிப்பட்ட கருத்து இதுதான்: 

நாம் எமது நம்பிக்கைகளை/செயற்பாடுகளை பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி, மற்றையவர்களின் மேல் திணிக்க கூடாது. அப்படி செய்தால் கூட அது உண்மையான ஒன்றாக இருக்காது.. மனம் ஒன்றுபட்டு நம்பிக்கை வைத்து செய்யும் வழிபாடு/செயலுக்கும்,  விருப்பமில்லாது ஏனோதானோ என செய்யும் வழிபாடு/செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை எல்லோரும் அறிவார்.

நீங்கள் பின்பற்றும் ஒரு செயல்/நம்பிக்கை மீது, கேள்விகள் எழுப்பப்படும் பொழுது உங்களால் சரியான விளக்கத்தை தரமுடிகிறதா? , அப்படியானல் அதை செய்யுங்கள்.. நீங்கள் மாறவேண்டிய அவசியமில்லை. இல்லை உங்களுக்கே உங்களது செயல் மீது கேள்வி எழுந்தால்.. அதற்கான விடையை தேடுங்கள்.. சிந்தனையை எப்படி எவ்வாறு வளர்ப்பது என்பது அவர்வர் தனிப்பட்ட தேடுதல்/முயற்சியில் தங்கியுள்ளது. 

மேலும் வர்க்கவேறுபாடு,  அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் என்பன எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எங்களுடைய சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கலந்துள்ளது. இதில் படித்தவர், பாமரர் என்ற பிரிவு இல்லாது எல்லோரிடமும் உள்ளது என்பதால் இலகுவில் அதை இல்லாதெழிக்க முடியாது.. காலத்திற்கு ஏற்ற முறையான பொறிமுறைகள் ஊடாகவே சில மாற்றங்களை செய்யமுடியும்.. 

உங்களது பகிர்வுக்கு நன்றி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

Link to comment
Share on other sites

5 minutes ago, ரதி said:

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

நன்றி ரதி! உங்கள் அனுபவம் விலைமதிப்பற்றது. அப்படித்தான் ஒரு நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இரவோடிரவாக பெரியார் நூலை வெறுமனே வாசிப்பதால் எந்த பலனும் வராது. இது என்னுடைய கருத்து, இதை நான் எழுதியதற்கு எனக்குள் இது குறித்து எழுந்த ஆதங்கமே காரணம். 🙏

Link to comment
Share on other sites

8 hours ago, உடையார் said:

நல்ல பதிவு தோழி, தற்போதைய காலத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கையிருக்கு, அதை மற்றவர்கள் கேலிக்கு உள்ளாக்கும் போது கோபம்தான் வரும்,

மூட நம்பிக்கைகள் வேறு, கடவுள் வழிபாடு என்பது வேறு இதை உணர்ந்தால் சமுதாயம் முன்னேறும்.

மற்றவர்கள் பதிவிடும்போது யோசிக்கனும், அவர்களின் சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்கனுமென்று 

காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி உடையார்.  ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இதில் கோபப்பட ஒன்றுமில்லை. அடிமுட்டாள்தனம் என்று நீங்கள் நினைப்பதுபோல கருத்தை வைப்பவர் யோசிப்பதில்லை. அப்படித் தெரிந்தே கருத்தைக் கூறினால் அது விதண்டாவாதம்.

மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனை நாகரீகமாக முன்னேற உதவியது. நாகரீகமில்லாதவர்களை நாகரீகமானவர்களாக மாற்ற காலனியாதிக்கத்தில் மதமாற்றம் நடந்தது.

ஆனால் மதங்களே பெரும் போர்களுக்கும், அழிவுகளுக்கும் தொடர்ச்சியாகக் காரணமாகவும் உள்ளது. போரில் வென்றவர்கள் தம் மதத்தை தோல்வியடைந்தவர்கள் மீது திணித்தார்கள். 

அதேவேளை, சாதாரண மக்கள் தமது தொன்மம், பண்பாடு, கலாச்சாரம் என்று மதங்களையும், மதச்சடங்குகளையும் காலம் காலமாக பின்பற்றிவருகின்றார்கள்.  சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு மதம் முக்கியம் என்று நம்புபவர்கள்.

அவர்கள் மதங்களின் அரசியலைப் புரிந்துகொள்வதில்லை. பலசமயம் மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களால் பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

இது தான் யதார்த்தம். நன்றி !

உலக மட்டத்திலும் குறுகிய சமூக மட்டத்திலும் வளர்ந்து வரும் இனப்படு கொலைகளுக்கும் மத வெறிக்கும் மதங்கள் அனைத்துமே ஒரு வகையில் காரணமே.

இன்றும் தாயகத்தில் இருக்கும் இனத்துவேசம், எம்மிடையே காணப்படும் பல் வேறு விதமான வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் தாமே காரணம். இவை சிறிது சிறிதாக தான் மாற்றப்படவேண்டும். எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில்  கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு .
இணைப்பிற்கு நன்றி தோழி 

கடவுள் இல்லையென்றால் விதி எப்படி வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தோழி said:

எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

👍

நல்ல சிறந்த கருத்து.

 

7 minutes ago, குமாரசாமி said:

கடவுள் இல்லையென்றால் விதி எப்படி வந்தது?

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் துன்பம் வரக் கூடாது என்றே இறைவழிபாடு இருந்தது.
இப்போது துன்பம் வரும் போது மட்டும் இறைவழிபாடு தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் துன்பம் வரக் கூடாது என்றே இறைவழிபாடு இருந்தது.
இப்போது துன்பம் வரும் போது மட்டும் இறைவழிபாடு தேவைப்படுகிறது.

மனது சுத்தமாகவும் இதயம் கறை படாமலும் இருக்கும் போது இறை வழிபாடு தேவை இல்லை என்பவர்களும் நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையானது  தன்னம்பிகை மட்டும் சார்ந்தது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

இது தான் யதார்த்தம். நன்றி !

உலக மட்டத்திலும் குறுகிய சமூக மட்டத்திலும் வளர்ந்து வரும் இனப்படு கொலைகளுக்கும் மத வெறிக்கும் மதங்கள் அனைத்துமே ஒரு வகையில் காரணமே.

இன்றும் தாயகத்தில் இருக்கும் இனத்துவேசம், எம்மிடையே காணப்படும் பல் வேறு விதமான வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் தாமே காரணம். இவை சிறிது சிறிதாக தான் மாற்றப்படவேண்டும். எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .  

மிகவும் சரியான கருத்து.  ஆனால் தாயகத்தில் இருக்கும் இனத்துவேச நிலைக்குப் புத்தமதமே கரணியமாக உள்ளது. புத்தர் உண்மையிலே தன்னை யாரும் வழிபடுமாறு சொல்லவில்லை.  பின்வந்தோர் தத்தமது வசதிகருதியும் தம்மை நிலைநிறுத்தும் நோக்கோடும் அதனைப்பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டனர் . அதிலும் குறிப்பாக சிங்கள பெளத்தர்களது தன்மை மிகவும் மோசமானது. பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டே இருக்கின்றனர். இன்று சித்தாண்டிக் கோவிலின் தேங்காய் உடைக்கும் கல்வரை போய்நிற்கின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களைப்போன்ற மதவாதிகளல்ல என்பதாலேயே சிங்கள பெளத்தம் ஆட்டம்போடுகிறது.  இன்றைய தாயகத்தின் அவலநிலைக்குப் பெளத்தமே கரணியம் என்பது குறித்தும் பேசப்பட வேண்டும். 

மதம் மனிதரை ஆட்கொள்வதற்கான அடிப்படை கரணியமாக இருப்பது  அவனைச் சுற்றியிருக்கும் சூழலே.  அன்பு கிடைக்காதவன் எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கே ஐக்கியமாவிடுகிறான். அமைதி கிடைக்காதவன் எங்கே அமைதி கிடைக்கிறதோ அங்கே அவன் ஐக்கியமாகிவிடுகிறான். மதம் ஒரு போதைபோன்றது ஏறினால் தானாக இறங்கும்வரை அது ஓயாது.  அதற்கு இலங்கைத்தீவின் சிங்கள பெளத்தர்களும் சாடசியாக உள்ளனர். இவர்களைப்போன்று இன்னும் பிற நாட்வர்களும் உளர். ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரை புலத்திலே நாம் காணும் இளையதலைமுறையினரிடையே வினாக்கள் எழும்புகின்றன. அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது.  

கடவுள் கோவில் போன்றன ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் இடமாக இருப்பதால் இவற்றை எதிர்காலத் தலைமுறை கடந்துபோய்விடக்ககூடிய வாய்ப்புகளே அதிகம் என எண்ணுகின்றேன்.  சமயங்களைக் கடக்கும்போது சாதிகளும் கடக்கப்படும் சூழல் வரும்போது மொழி முதன்மைப் புள்ளியாகி இனநலன் மேலெழும்போது ஒரு சிறந்த சிந்தனை மிகு மனிதர்களாகத் தமிழர்களும் உலகில் மிளிரக்கூடும். 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் நடாத்த வேண்டிய அவசியமே இல்லாதுபோகும் காலம் வரும். அதுவரை அவரவர் மதங்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் செய்யாது கடந்து போவதே நற்பண்பாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎07‎-‎2020 at 22:21, குமாரசாமி said:

 

 

On ‎25‎-‎07‎-‎2020 at 22:26, விளங்க நினைப்பவன் said:

👍

நல்ல சிறந்த கருத்து.

 

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

Link to comment
Share on other sites

On 25/7/2020 at 23:28, nochchi said:

மிகவும் சரியான கருத்து.  ஆனால் தாயகத்தில் இருக்கும் இனத்துவேச நிலைக்குப் புத்தமதமே கரணியமாக உள்ளது. புத்தர் உண்மையிலே தன்னை யாரும் வழிபடுமாறு சொல்லவில்லை.  பின்வந்தோர் தத்தமது வசதிகருதியும் தம்மை நிலைநிறுத்தும் நோக்கோடும் அதனைப்பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டனர் . அதிலும் குறிப்பாக சிங்கள பெளத்தர்களது தன்மை மிகவும் மோசமானது. பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டே இருக்கின்றனர். இன்று சித்தாண்டிக் கோவிலின் தேங்காய் உடைக்கும் கல்வரை போய்நிற்கின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களைப்போன்ற மதவாதிகளல்ல என்பதாலேயே சிங்கள பெளத்தம் ஆட்டம்போடுகிறது.  இன்றைய தாயகத்தின் அவலநிலைக்குப் பெளத்தமே கரணியம் என்பது குறித்தும் பேசப்பட வேண்டும். 

மதம் மனிதரை ஆட்கொள்வதற்கான அடிப்படை கரணியமாக இருப்பது  அவனைச் சுற்றியிருக்கும் சூழலே.  அன்பு கிடைக்காதவன் எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கே ஐக்கியமாவிடுகிறான். அமைதி கிடைக்காதவன் எங்கே அமைதி கிடைக்கிறதோ அங்கே அவன் ஐக்கியமாகிவிடுகிறான். மதம் ஒரு போதைபோன்றது ஏறினால் தானாக இறங்கும்வரை அது ஓயாது.  அதற்கு இலங்கைத்தீவின் சிங்கள பெளத்தர்களும் சாடசியாக உள்ளனர். இவர்களைப்போன்று இன்னும் பிற நாட்வர்களும் உளர். ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரை புலத்திலே நாம் காணும் இளையதலைமுறையினரிடையே வினாக்கள் எழும்புகின்றன. அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது.  

கடவுள் கோவில் போன்றன ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் இடமாக இருப்பதால் இவற்றை எதிர்காலத் தலைமுறை கடந்துபோய்விடக்ககூடிய வாய்ப்புகளே அதிகம் என எண்ணுகின்றேன்.  சமயங்களைக் கடக்கும்போது சாதிகளும் கடக்கப்படும் சூழல் வரும்போது மொழி முதன்மைப் புள்ளியாகி இனநலன் மேலெழும்போது ஒரு சிறந்த சிந்தனை மிகு மனிதர்களாகத் தமிழர்களும் உலகில் மிளிரக்கூடும். 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் நடாத்த வேண்டிய அவசியமே இல்லாதுபோகும் காலம் வரும். அதுவரை அவரவர் மதங்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் செய்யாது கடந்து போவதே நற்பண்பாகும்.  

//அறிவியல் சிந்தனை மேலோங்குவதால் அதனை ஆய்வுரீதியாக நோக்குகின்றார்கள்.  காலவோட்டத்தில் மதமற்றவர்களாக  மாறினாலும் ஆச்சரியப்படமுடியாது. //

சரியான பார்வை.  சில விசயங்களில், முக்கியமாக மூட நம்பிக்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேணும்.  
 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

 

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

நீங்கள் இது குறித்து சிந்திப்பதே எமக்குள் ஏற்படும் அனுபவம் சார்ந்த மாற்றம் தான் ரதி ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை :unsure:
 

ஒவ்வொருத்தருக்கும் அளந்த அளவுதான் வாழ்க்கை.எம்மைப்போல் மற்றவர்களாலும் வாழ முடியாது.அவர்களைப்போல் எம்மாலும் வாழ முடியாது.
இதுதான் இயற்கையின் நியதி.

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொருத்தருக்கும் அளந்த அளவுதான் வாழ்க்கை.எம்மைப்போல் மற்றவர்களாலும் வாழ முடியாது.அவர்களைப்போல் எம்மாலும் வாழ முடியாது.
இதுதான் இயற்கையின் நியதி.

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தோழி said:

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.