Jump to content

நம்பிக்கைகளும் நாங்களும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நானும் அதைப் பற்றி கொஞ்ச காலமாய் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன் ...சரியாய் முயற்சி செய்யாமல் தோல்வியடைந்து விட்டு அந்த தோல்விக்கு விதியை காரணமாக்குகின்றேனோ தெரியவில்லை

👍

மிகச் சரியாக சிந்தித்து இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

நல்ல கருத்து  👍

Link to comment
Share on other sites

On 25/7/2020 at 23:26, விளங்க நினைப்பவன் said:

👍

நல்ல சிறந்த கருத்து.

 

எமக்கு வேண்டுமானால் நாம்  தான் கஸ்டப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர் ஏன் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார் என்பது எனக்கும் விளங்கவில்லை.

 

13 hours ago, தோழி said:

இயற்கையை வணங்குவதும் அதில் தெய்வத்தை காண்பதும் கூட ஒரு வித நம்பிக்கை தான்.  எனக்கு பிடித்ததும் கூட, ஆனால் நியதி என்பது கேள்விக்குறியதல்லவா ? அது பற்றிய சந்தேகங்கள் எனக்குண்டு. மற்றவர் போல வாழ வேண்டும் என்று  பேராசைப்படுவதற்கும்  மற்றவர் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, ஊன்று கோலாக நினைப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா ? எல்லாம் நியதி என நினைத்தால் நாம் எந்த நல்ல இலட்சியம்  நோக்கியும் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.  

 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

 

 

அருமையான தெரிவு! 👏🏼👏🏼👏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

 

 

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

 

 

இவையெல்லாம் இருந்தால் மற்றவை தானாக வரும்.:cool:
ஓம் நமச்சிவாய. 🙏🏽

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் இணைத்த பாடல் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்களுக்காகவே.  உங்கள் பாடல் மூட நம்பிக்கைகளை நம்பும் சோம்பேறி பஞ்சபரதேசி களுக்கானது. 

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

 சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?
நம்பிக்கைவாதிகள் இதுவரை செய்யாதது என்ன? யாரை நம்பி வாழ்கின்றார்கள்?  நீங்கள் அவர்களுக்கு சோறு போட்டீர்களா?
நம்பிக்கைவாதிகளும் வேலைசெய்கிறார்கள் தங்கள் பாட்டை தாங்கள் பார்க்கின்றார்கள். அது ஏன் உங்களுக்கு குத்துது குடையுது?

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் உங்கள் எண்ணங்களை யாழ் இணையத்தில் பரிமாறக்கூடியதாக இருப்பது  சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன் இணையத்தை கண்டுபிடித்ததால் உருவானதே.  சிவனே என்று சாப்பிட்டுவிட்டு மடத்தில் தூங்கும் சோம்பேறிகளால் உருவானதல்ல. 

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

Link to comment
Share on other sites

34 minutes ago, குமாரசாமி said:

சிவனே என்று சாப்பிட்டு விட்டு குந்தியிருப்பவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் கேட்கின்றேன்? நீங்கள் ஏதாவது அவர்களுக்கு கொடுக்கின்றீர்களா? அல்லது அவர்கள் உங்கள் கதவை தட்டுகின்றார்களா?

சிந்தனைவாதி   சிந்தனைவாதி என்கிறீர்களே நீங்கள் ஏதாவதை கண்டு பிடித்தீர்களா? அல்லது ஏதாவதை உருவாக்கினீர்களா? 
நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை மற்றவர்கள் கண்டுபிடித்ததின் மூலமாகத்தானே வளர்தீர்கள். அது போல்தான் நானும் என்னைப்போன்ற நம்பிக்கை வாதிகளும்.

நீங்களும் எம்மைப்போல் சாதாரண மனிதர்தான்.சிந்தனைவாதியுமல்ல.விஞ்ஞானியுமல்ல

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

Link to comment
Share on other sites

53 minutes ago, tulpen said:

சிவனே என்று  இருப்பவர்களை பற்றி நான் எதுவும் கூறவில்லையே. சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன், எதிர்காலத்திலும் அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் எங்கள் மத்தியில் அதிகமாக  உருவாக வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லையே.  

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நியதி என்று விட்டு சும்மா குந்தியிருப்பதல்ல மனித வாழ்க்கை.
மற்றவர்களின் படிப்பினைகள் எமக்கு உதவுமே தவிர அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.ஜேர்மனியரைப்போல் என்னால் வாழ முடியாது. என்னைப்போல் ஜேர்மனியராலும் வாழமுடியாது.நாம் எந்த இயற்கையில் எப்படி பிறந்தோமோ அப்படியேதான் வாழமுடியும். ஏனெனில் எமது உடம்புவாகும் அதற்கேற்பவே அமைந்துள்ளது.இதைத்தான் நியதி என்பது.

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தோழி said:

@குமாரசாமி

@tulpen

தற்போதைய இந்திய அரசியல் பின்புலத்தில் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், மதம், கடவுள் நம்பிக்கையுள்ளோருமென்று பாரிய கருத்து முரண்பாடு ஒன்று தோன்றியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணிகளே பலம் சேர்க்கின்றன. இந்த மாற்றங்களை திடீரென நாம் தாயகத்தில் எதிர்பார்க்க முடியாது அல்லவா? 

சிவனேயென்று இருப்பவர்களால், சமூகத்திற்கு தீங்கில்லாதவரை இருந்து விட்டு போகட்டுமே. அவர்களிடம் பெண்ணடிமைத்தனத்தின் மனப்பாங்கோ, வர்க்க பேதங்களோ மூட  நம்பிக்கைகளோ இல்லாதவரை அவர்களால் என்ன கொடுமை ஏற்படப்போகிறது. 

மதநம்பிக்கை அற்ற சமுதாயம் ஒன்று கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அது சிறிது சிறிதாக ஆரம்பக்கல்வி, அடிப்படை சமுதாய மாற்றங்களினால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். இருந்தாலும் நல்லூர்  கந்தசுவாமி கோயிலில் இராணுவத்தை தேர் இழுக்க விட்டவர்கள், எமது சமூகத்திலுள்ள அனைவரையும் தேர் இழுக்க விடுவார்களா என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

 மற்றவர்களை போல வாழோணும் என்று ஆசைப்படவில்லை . ஆனால் ,தகுதியில்லாத சிலருக்கு எதுவும் இருந்த இடத்திலேயே சுலபமாய் கிடைக்கும் போதும்,எங்களுக்கு அப்படி கஸ்ரப்பட்டாலும் கிடைக்காத போது ஒரு வித ஆற்றாமை எழுகின்றது  

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்திற்கு நிறைய எழுதலாம். இருந்தாலும் ஒரு குறுகிய கேள்வி.
இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தோழி said:

நானும் பலவிதமான மத நம்பிக்கைகளினால் வளர்க்கப்பட்டவள் தான். அதில் தவறில்லை. இந்தப்பதிவில் நான் அதை எழுதியிருந்தேன். 

நிற்க, கியூபாவை எடுத்துக்கொள்ளலாம். அவர்களது நாடு சமுதாயத்தின் பல பாகங்களிலும் சமத்துவம் பேணி, உலகிலேயே தரம் வாய்ந்த மருத்துவத்துறையையும், சிறப்பான சமூகக்கட்டுமானத்தையும் கொண்டதை நாம் அறிவோம் அல்லவா? 

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவது என்றால் மதநம்பிக்கை அற்றவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேலும் அந்த தொகை  அதிகமாகி கொண்டே போகும் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுவீடன் அவுஸ்ரேலியா நோர்வே, சவுத் கொரியா, யேர்மனி யப்பான், சுவிட்சலண்ட் போன்றநாடுகளை சொல்லலாம். இந்த நாடுகளில் மத நம்பிக்கையாளர்கள் குறைவாக இருக்கின்றனர் அவர்களை நாம் எம்மவர்களினதும் இந்தியாவின் மதநம்பிக்கைகளுடன் ஒப்பிட முடியாது நாமும் இந்தியர்களும் மோசமான மதநம்பிக்கையாளர்கள். பிரபா சிதம்பரநாதன் இது பற்றி இங்கே சரியாக சொல்லியிருந்தார்.

***அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் என்பன எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எங்களுடைய சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கலந்துள்ளது. இதில் படித்தவர், பாமரர் என்ற பிரிவு இல்லாது எல்லோரிடமும் உள்ளது என்பதால் இலகுவில் அதை இல்லாதெழிக்க முடியாது.***

எனது உறவினர் ஒருவர் படித்தவர் வசதி உள்ளவர் ஆஞ்சநேயர் சக்தி கொண்ட கடவுள் என்று எனக்கு பரிந்துரை செய்கிறார் எனது நண்பரின் தகப்பனார் சேர்ச்சில் முன்பு எல்லாம் இப்படி கடவுள் மயகூத்துகள் நடப்பதில்லை என்கிறார்.சமுதாயத்தில் பெண்கள் பக்திமயமாக மாற்றபடுகிறார்கள் இப்படிபட்ட சமுதாயத்தில் தோழி ரதி போன்றவர்களின் சிந்தனைகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

கியூபா???????
நீங்கள் தெரிந்துதான் எழுதுகின்றீர்களா அல்லது தெரியாமல் எழுதுகின்றீர்களா என தெரியவில்லை. கியூபாவில் சிறந்த மருத்துவமும் கட்டுப்பாடும் இருக்கின்றதுதான். இவை ஒரு நாட்டுக்கு போதுமா? பொருளாதார சீரழிவு நிறைந்த நாடு. எவ்வித அபிவிருத்தியுமின்றி இருந்த மாதிரியே இருக்கும் நாடு அது. உணவுப்பற்றாக்குறை அதிகம். பட்டினியின் கொடுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள். இதே போல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கியூபாவிற்கு சுற்றுலா சென்றவர்களை கேட்டால் அங்கிருக்கும் கஷ்டங்களை சொல்வார்கள்.

Kuba Armut Fassade - Kostenloses Foto auf Pixabay

Oldtimer auf Kuba

Bild: © Jorge Luis Baños/IPS

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

Link to comment
Share on other sites

கியூபாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் அமெரிக்க சந்தைப் பொருளாதாரதில் இணைத்துக் கொள்ளகூடாது என்ற அவர்களின் வைராக்கியமான கம்யூனிச கொள்கைகளே. ஆனால் அதைத்தாண்டி அவர்களின் சாதனைகள் பல உண்டு. குற்றச்செயல்கள் மிக குறைவாக நடைபெறும் நாடு கியூபா எனபதை அங்கு போய் வந்த மக்களிடம் அறியலாம். பக்கத்து கரிபியன் நாடுகளில் Resort ஐ விட்டு வைளியே சென்றாலே உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் கியூபாவில் எந்த இரவிலும் தனியாக எங்கும் சென்று வரலாம். அங்குள்ள உள்ளூர் மக்கள் மிகவும் பண்பாக பழகுவார்கள் என்பது அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்த தகவல். 

 இது இவ்வாறிருக்க மூடநம்பிக்கையை முக்கிய முதலீடாக கொண்டு கட்டி வளர்க்கப்பட்ட இந்து மத நம்பிக்கையாளர்கள் அதிகம் வாழும் இந்தியாவில் தான் பாலியல் தொழில் மிக அதிகமாக உள்ளது மட்டுமல்ல சாதாரணமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிகமாக உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் மத நம்பிக்கை குறைந்த ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகம்.   எமது பெண்பிள்ளைகள் இரவு கடைசி தொடரூந்தில் கூட பாதுகாப்பாக வீடு திரும்பும் சாத்தியம் இங்கு அதிகம். இந்தியாவில் கோவிலுக்கு அண்மையில் கூட இந்த பாதுகாப்பு பெண்களுக்கு கிடையாது என்பதே உண்மை. மத நம்பிக்கை குற்றச்செயல்களை குறைக்கிறது என்று வாதாடுவோர்கள் கூட இந்தியாவில் கோவில்களுக்கு அண்மையில்  கூட தமது பெண்பிள்ளைகளை  தனியே விடமாட்டார்கள். 

கோவில் சுற்றாடலில் கூட மக்களையும்  கோவில் நகைகளையும் கூட அறிவியலாளன் கண்டு பிடித்த கண்காணிப்பு கமராக்கள் தான் பாதுகாக்கின்றன. 

 உத்தியோபூர்வமாக அடையாளத்திற்காக  மதங்கள் இருந்தாலும் மதங்களை intensiv  ஆக நம்பாமல் இருக்கும் மக்களே ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இந்நாடுகளில் உள்ள குற்றச்செயல்களுடன் ஒப்பிடும் போது மதங்களை intensiv ஆக நம்பும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகம்.இந்தியாவில் மதத்தையும்  ஆன்மீகத்தையும் உபயோகித்து  அயோக்கியத்தனமான எத்தனையோ குற்றசெயல்களில் ஈடுபடுவோரைக் கூட தடுக்க சக்தி  கடவுளுக்கு இல்லை. 

மதநம்பிக்கைகளையும் அதன் அடிப்படையாக இருக்கும் மூடநம் பிக்கைகளையும் நான் விமர்சித்தாலும் புராதன சின்னங்கள் என்ற அடிப்படையில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் பேணிப்பாது காக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்து.     

            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலை பற்றி  சொல்லும் போது ஆன்மீகம் தழைத்தோங்கும் இந்தியாவில் பாலியல் தொழில் எப்படி இருக்க முடியும்? AIDS நோய் கொண்டநாடாக உலகத்தில் இரண்டாம் இடத்தில் எப்படி வரலாம்? முதலாம் இடத்தில் இருக்கின்ற ஆபிரிக்க நாடுகளும் இந்தியா போன்று மதநம்பிக்கை கொண்டவை தான்.
Tulpen சொன்னவை மிகச் சரியானவை 👍  
மத நம்பிக்கையுள்ளோர் குறைவாகவும் மதநம்பிக்கை இல்லாதோர் அதிகமாகவும் உள்ள நாடுகளில் வசிக்கின்ற  எமது பெண்களே இரவு வேலை முடிந்து தனியாக சர்வசாதாரணமாக ரெயினில் பஸ்சில் போகிறார்கள். ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் பெண்கள் நிலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 01:51, தோழி said:

உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் எல்லாவற்றிலும் உடன்பாடில்லாமைக்கு வருந்துகிறேன்.
 கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு அதனால் அவர்கள் பெரும்பான்மையான வழங்களைத் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய சரித்திரம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, சீனி, உப்பு போன்றவை தம் நாட்டிற்கு பாவித்து போக அண்டைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  பெற்றோலிய வளத்திலும் இயற்கை அவர்களுக்கு சுய உற்பத்தியை உண்டு பண்ணியிருப்பதால், அவர்கள் வேறு நாடுகளிடம் கையேந்தாத நிலையில் இருக்கிறார்கள். கியூபாவின் இராணுவ வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு கூட ஒருவித பயம் உண்டு என்பதை மறக்க முடியாது.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு வறுமை மட்டும் காரணமில்லை. அது அங்கு உல்லாசத் துறை காரணமாக அங்கு செல்லும் ஆண்களின் பங்களிப்பு எனவும் சொல்லலாம்.  யாழ்ப்பாணத்திலும் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துறையில் ஈடு பட்டிருக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆக கடவுள் நம்பிக்கையுள்ள நாடுகள் , முதலாளித்துவ நாடுகளிலும் இந்தக் கொடுமை இருக்கிறது.  
கியூபாவின் ஒரு சிறிய தீவு (கயகோகோ)  உல்லாசத்துறையினால் அதிகம் பாதிக்கப்படாதது, எனக்கும்  இரு வாரங்களுக்குப்  போகும்  வாய்ப்புக்கு  கிடைத்தது. வெறுமே ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து நேரத்தை ஓட்டாமல் சிறிது தைரியமாக சில மைல்கள் தள்ளியிருந்த ஒரு கிராமத்திற்குப்  போய்அங்குள்ள மக்களின் சராசரி வாழ்வு, வேலை வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், இராணுவப்பயிற்சி போன்ற பலவற்றையும் பார்த்தும் கேட்டும் வந்தோம். பழகுவதற்கு மிக இனிமையான மக்கள்.  வறுமை இருந்தாலும் மக்களிடையே சமத்துவமும் திருப்தியும் நிலவுகிறது.

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

Link to comment
Share on other sites

54 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகளாக செல்லும் கூடுதலான வெளிநாட்டவர்கள் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லையென்றே சொல்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்கின்றார்களாம்.தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.தமிழர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.எல்லோரும் பழகுவதற்கு பண்பானவர்களாக இருக்கின்றார்கள்.அறிவுப்புகள் பாரபட்சம் இல்லாமல் மூன்று மொழிகளும் இருக்கின்றன.முன்னர் இருந்த தமிழ் பயங்கரவாதிகளும் இப்போதில்லை.சிறிலங்கா ஒரு சொர்க்கபுரி என சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தமிழனாகிய நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயம் ஏறுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். 😎

இது போல்தான் உங்கள் கியூபா நல்லெண்ணங்களும்....

எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, பிரச்சனைகள் உண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தை பிரதானமான மதமாகக் கொண்டுள்ள அரசு இயந்திரங்களிலும் பார்க்க மதச்சார்பற்ற ஒரு அரசு இறைமையானது  அறம்  சார்ந்து நடப்பதை நாம் அனுபவத்திலேயே பார்க்கிறோமே.  இதில் சிறிலங்கா மதச்சார்பான அல்லது மதவெறி கொண்டவர்களால் காலம் காலமாக ஆட்சி செய்யப்பட்டு வருவதாலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் நடக்கின்றது. தமது மதத்தை முன் நிறுத்துவதற்காக அவர்கள் எல்லாமே பூசி மெழுகுவார்கள்.

கியூபாவாவில் வறுமை உண்டாயினும் அவர்கள் அதை நிவர்த்தி செய்ய பலவழிகளிலும் முயற்சி செய்வது மட்டுமல்ல அங்கு சமதர்மம் நிலவுகிறது. எல்லோருடைய உரிமைகளும் சமமாகவே மதிக்கப்படுகிறது. இங்கு நாம் வெறுமே உல்லாசப் பயணம் மேற்கொள்ளாதது மட்டுமல்ல அங்குள்ள சில குடும்பங்களுடனான நீண்ட காலத் தொடர்புகள் இருப்பதால் நீங்கள் குறிப்பிட்டதை விடக்  கூடுதலாகவே அந்நாட்டைப் பற்றி அறியக்கூடியதாய் உள்ளது. 

சரி, கியூபா ஒரு உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் மதம், மொழி சார்ந்த அரசுகளைப்  பார்க்கினும் மதத்தை முன் வைத்து நடாத்தப்படும் ஆட்சிகள்  வெறி பிடித்தவை. இந்நாடுகளில்   சாதாரண மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு மனித   உரிமைகள் மறுக்கப்பட்டே வருவது கண்கூடு.

ஸ்ரீலங்காவிலும் சிறுபான்மை மக்களின் இனப்படுகொலை நடந்ததற்கு மிகப் பிரதான காரணமே பெரும்பான்மை மக்களின் மத, மொழி வெறி என்பதையும் தமிழனாகிய நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நானும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 
Link to comment
Share on other sites

34 minutes ago, Sasi_varnam said:
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவரிடம் வாதிட்டு, உங்கள் வாதத்தில் நீங்கள் வெற்றி பெறுவதால் மட்டும் இது சாத்தியமா?
ஒருவருடைய தொண்டைக்குளிக்குள் கையை விட்டு போதை மருந்தைக்காணத் துடிக்கும் நீங்களும் ஏதோ ஒரு போதையில் துடிக்கவில்லையா?
 
..................... I like these lines. :) 

நன்றி.  😀🙏கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லையே தோழர்!  உதாரணமாக நான் மிகவும் ஐதீங்கங்கள் பார்க்கும் ஒரு சைவக்  குடும்பத்தில் பிறந்தாலும் வேறு பல மதங்களின் நம்பிக்கைகளையும் அறிந்தவள். மூட நம்பிக்கைகளும் அதீதமான மத வெறியும் மக்களுக்கு தீமையே விளைவிக்கும் என நம்புகிறவள். அது மட்டுமல்ல பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகள் தமது கருத்தை படிப்படியாக மக்களுக்கு புரிய வைத்தார்கள். பல கேள்விகளை முன் வைத்து பதில்களையும் கொடுத்தார்கள். இன்றைக்கு பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்கள் அதை செய்வதில்லையே. அவர்கள் வெறுமனே ஒரு உதாரணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மத அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நக்கல் நையாண்டி பண்ணுகிறார்கள் என்பதும் எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

இருப்பதை/ கிடைத்ததை வைத்து திருப்திப்படுவதும் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்.
பலர் நல்ல படிப்பு படித்தும் ஒழுங்கான வேலை வந்து அமையாது.சிலர் எட்டாம் வகுப்பு வரை படித்தாலும் சொத்து சுகங்களுடன் டாம்பீகமாக வாழ்வார்கள்.
இதுதான் நியதி.

மற்றவர்களை போல் நாமும் வாழவேண்டும் என நினைத்து மாரடித்தால் நோய் நொடிகள் தான் மிஞ்சும்.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.