Jump to content

இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும்  ஈழத்தமிழனை-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் 
ஈழத்தமிழனை-பா.உதயன் 

தேர்தல் வருகிறது 
தினம் ஒரு பொய் சொல்வர் 
கையில் பூக்களோடு 
காலையில் புத்தனுக்கு 
பூசை செய்வர்

அறமோ கருணையோ 
இல்லாத மனிதர்கள் எல்லாம் 
அந்த புத்தனிடத்திலும் போய் 
பொய் உரைப்பர் 

இனவாதம் பேசுவர் 
இது சிங்கள தேசம் என்பர் 
தமிழர் அதில் படரும் 
கொடி என்பர் 

இனவாதம் என்றொரு
பெரும் பூதம் 
இராணுவத்துணையோடு 
இலங்கையை ஆள்கிறது 
எப்பவும் இது சொல்வதே சட்டம் 

ஐக்கியத்துக்கு குந்தகம் 
அந்த தமிழரே காரணம் என்று 
அந்த தமிழரோடு சேர்ந்து 
ஒப்பந்தம் செய்வோர் 
ஒருமித்த எம் தேசத்தின் 
இறைமைக்கு எதிரி என்பர் 

குடும்ப அரசியல் வாதிகள் 
பதவிக்கும் பணத்துக்குமாய் 
பாலும் தேனும் ஓடவைப்போம் 
பஞ்சம் எல்லாம் 
தீர்த்து வைப்போம் என 
பல கதை விடுவார் 

இடது சாரிகள் என்ற பெயரில்
சிவப்புச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் 
போலி சோசலிசவாதிகள் எல்லாம் 
இனவாதிகளோடு சமரசம் செய்வர் 
பிழைப்பு வாதிகளாக 

உழைப்பவன் வியர்வையை 
திருடியவன் பக்கம் நின்று 
ஊரையே ஏமாத்துவார் 

மனிதநேயம் தெரியாதவன் எல்லாம் 
மாக்சியவாதிகள் நம் நாட்டிலும் 
வெளிநாட்டில் நம்மவர் சிலரும் 

வியர்வை சிந்தி உழைப்பவனுக்கும் 
விடுதலைக்காய் போராடுபவனுக்கும் 
காலம் முழுக்க குரல் கொடுக்கும் 
உண்மையான சோஷலிசவாதிகளை 
கண்டு கொள்ள யாரும் இல்லை 

எங்களிலும் சிலர் 
என்னமோ கதை சொல்லி 
இருந்ததையும் குழப்பி விட்டு 
குரங்கு பித்த அப்பமாய் 
அண்ணன் தம்பிக்கு இடையே
ஆளுக்கு ஒரு கட்சி என்று 
அரசியல் நாடகம் வேற 

அண்ணன் தம்பிக்கு இடையே 
ஏதோ அரசியல் பிரிவினையாம் 
அந்தக்கதிரைக்காய் 
அடி பிடிகள் நடக்கிறது 

அரை நூற்றாண்டுக்கு மேலாய் 
அந்தப் பாராளுமன்றம் 
சிங்களம் கட்டிய 
கோட்டையை போலே 
எந்தத் துரும்பயும் 
எமக்காய் தந்ததில்லை 

இணக்க அரசியல் என்று 
எத்தனையோ செய்து பார்த்தும் 
எதைத் தான் தந்தார்கள் 
அவர்களுக்காய் கோட்டுக்கு போய் 
முண்டு குடுத்து தூக்கியும் விட்டோம் 

தீர்மானிக்கும் சக்தியாகவும் 
இருந்தோம் 
எந்த ஒரு கோரிக்கையும் 
வைக்க மறந்தோம் 

ஒற்றுமையே பலம் என்று 
ஒருத்தனுக்கும் விளங்கவில்லை 
இலக்கு ஒன்று என்றால் 
இவர்களுக்கு ஏன் 
இத்தனை கட்சி 

அந்த சிங்களத்துக்கு 
பால் வார்த்தது போல்
பலம் இழந்து நிலம் இழந்து 
நாம் பானையை போட்டு உடைக்க 
புரையோடிய புண்ணுக்கு 
புலத்திலும் நிலத்திலும் 
புதுசாய் ஏதும் மருந்து இல்லை 

அந்த சிங்கள தேசியமோ 
அவன் பாட்டன் கொடுத்த 
ராஜதந்திரத்தோடு 
அரை நூறு ஆண்டுக்கு மேல் 
எம்மையும் உலகையும் 
ஏப்பம் விட்டபடி

இந்தியாவையும் சீனாவையும் 
வளைச்சுப் போட்டு 
எம்மைப் போட்டு 
மிதிச்சுப் போட்டு 

இப்போ இன்னும் ஒரு 
தேர்தலோடு 
அது தாறம் இது தாறம்  
அந்த 13க்கு மேல் தாறம் என்றோர் 
அது எல்லாம் முடியாது என்பர் 

அதன் பின் அபிவிருத்தி மட்டும் 
காணும் என்பர் 
அதற்காக எம்மில் 
சிலரை வேண்டவும் பார்ப்பர் 

எம் தம்பிமாரும் தமிழர் நலனே 
தம் பணி என்று சொல்லி 
தமிழ் அரசில் ஜெயித்து விட்டு 
காசே தான் கடவுள் என 
கட்சி தாவ காத்திருப்பர்
இது காலம் காலமாய் 
எம்மை சூழ்ந்த வரும் நோய் போல 

புலம் பெயர் சில தம்பிமாரும் 
புதுசாய் சில கதை சொல்லுவார் 
நாட்டுக்குள் போய் பார்த்து வந்தோம் 
நல்லா தான் நாடு இருக்கு என்பர் 

காட்டிக் கொடுக்கவும் கழுத்து அறுக்கவும் 
காசு அடிக்கவும் வியாபாரிகள் வருவார்கள் 
மனிதாபிமானம் அபிவிருத்தி 
என்ற மாய மானோடு

சொந்தச்சகோதரர்கள் 
துன்பத்தில் உழல்கள் கண்டு 
வச்சனை செய்யும் 
வாய்ச்சொல்லில் வீரர்கள் போல் 

மொழி இனம் அடையாளம் 
இல்லா தமிழனாய் 
வேரோடு பிய்த்து எறிந்த 
வாழ்வு உனக்காய் 

கடைசியில் சிங்களம் 
இனவாத துரும்புச்சீட்டை 
எடுத்த வைப்பார் மேசையிலே 
ஏதேதோ பொய் பேசி ஏமாத்தி  
காட்டிக் கொடுத்து விட்டனர் 
எங்கள் படை வீரர்களை என்று 
பதவிக்காய் பேசுவார் 

மீண்டும் பதவிக்காய் 
நாட்டையே நாசம் செய்வர்
புத்த பிக்கு பிரித் ஓத 
இது ஒரு சிங்கள தேசம் என்று 
இன்னும் ஓர் சிங்க கொடியை 
ஏற்றி வைக்கும் இனவாதம்

எழுதுவதும் கிளிப்பதுமாய் 
ஏமாத்தும் இனவாதம் 
எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 
இனி என்ன செய்ய 
நினைத்திருக்கும் எம் இனம்

இனி இறைவன் தான் 
காப்பாத்த வேண்டும் என 
எப்பவோ கேட்ட குரல் 
நினைவிருக்கு

அரை நூற்றாண்டாய் 
நாம் அழுகிற குரல் 
அவனுக்கும் கேக்கலையே.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 23:39, uthayakumar said:


எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 

இல்லை கயவர்கள் எட்டப்பர்கள் காட்டிகொடுப்போர் இனம் தான் தமிழ் இனம், மற்றவனுக்கு சோப்பு போடுவதில் வல்லவர்கள்.

ஒற்றுமை என்பது ? தமிழனத்தை யார் ஏமாற்ற தமிழனைவிட?

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

தேர்தல் நேரத்தில் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

 

4 hours ago, உடையார் said:

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

நியி,உடையார், உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.தமிழர்கள் ஒன்று பட வேண்டும்.ஒற்றுமையே பலம் என்பதை உணரவேண்டும்.
எமக்கானதோர் நிரந்தரமான அரசியல் தீர்வுக்காய் எல்லோரும் உழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 12:54, suvy said:

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

நீங்கள் சொல்லுவது போல் சுவி அவர்களும் தமிழர் பலத்தை பல வழிகளில் உடைத்திருக்கிறார்கள்.அதேபோல் நாமும் ஒரே பலத்தின் பின் இன்று வரை ஒற்றுமைப்படவில்லை.இனி வரும் காலங்களும் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.எதிர் காலத்தில் நிகழவிருக்கும் உலக மாற்ரத்தோடு பல படிப்பினைகளோடு எமது போராட்டத்தை நகர்த்த வேண்டியவராய் இருக்கிறோம்.நன்றி உங்கள் கருத்துக்கு சுவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.