Jump to content

இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும்  ஈழத்தமிழனை-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் 
ஈழத்தமிழனை-பா.உதயன் 

தேர்தல் வருகிறது 
தினம் ஒரு பொய் சொல்வர் 
கையில் பூக்களோடு 
காலையில் புத்தனுக்கு 
பூசை செய்வர்

அறமோ கருணையோ 
இல்லாத மனிதர்கள் எல்லாம் 
அந்த புத்தனிடத்திலும் போய் 
பொய் உரைப்பர் 

இனவாதம் பேசுவர் 
இது சிங்கள தேசம் என்பர் 
தமிழர் அதில் படரும் 
கொடி என்பர் 

இனவாதம் என்றொரு
பெரும் பூதம் 
இராணுவத்துணையோடு 
இலங்கையை ஆள்கிறது 
எப்பவும் இது சொல்வதே சட்டம் 

ஐக்கியத்துக்கு குந்தகம் 
அந்த தமிழரே காரணம் என்று 
அந்த தமிழரோடு சேர்ந்து 
ஒப்பந்தம் செய்வோர் 
ஒருமித்த எம் தேசத்தின் 
இறைமைக்கு எதிரி என்பர் 

குடும்ப அரசியல் வாதிகள் 
பதவிக்கும் பணத்துக்குமாய் 
பாலும் தேனும் ஓடவைப்போம் 
பஞ்சம் எல்லாம் 
தீர்த்து வைப்போம் என 
பல கதை விடுவார் 

இடது சாரிகள் என்ற பெயரில்
சிவப்புச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் 
போலி சோசலிசவாதிகள் எல்லாம் 
இனவாதிகளோடு சமரசம் செய்வர் 
பிழைப்பு வாதிகளாக 

உழைப்பவன் வியர்வையை 
திருடியவன் பக்கம் நின்று 
ஊரையே ஏமாத்துவார் 

மனிதநேயம் தெரியாதவன் எல்லாம் 
மாக்சியவாதிகள் நம் நாட்டிலும் 
வெளிநாட்டில் நம்மவர் சிலரும் 

வியர்வை சிந்தி உழைப்பவனுக்கும் 
விடுதலைக்காய் போராடுபவனுக்கும் 
காலம் முழுக்க குரல் கொடுக்கும் 
உண்மையான சோஷலிசவாதிகளை 
கண்டு கொள்ள யாரும் இல்லை 

எங்களிலும் சிலர் 
என்னமோ கதை சொல்லி 
இருந்ததையும் குழப்பி விட்டு 
குரங்கு பித்த அப்பமாய் 
அண்ணன் தம்பிக்கு இடையே
ஆளுக்கு ஒரு கட்சி என்று 
அரசியல் நாடகம் வேற 

அண்ணன் தம்பிக்கு இடையே 
ஏதோ அரசியல் பிரிவினையாம் 
அந்தக்கதிரைக்காய் 
அடி பிடிகள் நடக்கிறது 

அரை நூற்றாண்டுக்கு மேலாய் 
அந்தப் பாராளுமன்றம் 
சிங்களம் கட்டிய 
கோட்டையை போலே 
எந்தத் துரும்பயும் 
எமக்காய் தந்ததில்லை 

இணக்க அரசியல் என்று 
எத்தனையோ செய்து பார்த்தும் 
எதைத் தான் தந்தார்கள் 
அவர்களுக்காய் கோட்டுக்கு போய் 
முண்டு குடுத்து தூக்கியும் விட்டோம் 

தீர்மானிக்கும் சக்தியாகவும் 
இருந்தோம் 
எந்த ஒரு கோரிக்கையும் 
வைக்க மறந்தோம் 

ஒற்றுமையே பலம் என்று 
ஒருத்தனுக்கும் விளங்கவில்லை 
இலக்கு ஒன்று என்றால் 
இவர்களுக்கு ஏன் 
இத்தனை கட்சி 

அந்த சிங்களத்துக்கு 
பால் வார்த்தது போல்
பலம் இழந்து நிலம் இழந்து 
நாம் பானையை போட்டு உடைக்க 
புரையோடிய புண்ணுக்கு 
புலத்திலும் நிலத்திலும் 
புதுசாய் ஏதும் மருந்து இல்லை 

அந்த சிங்கள தேசியமோ 
அவன் பாட்டன் கொடுத்த 
ராஜதந்திரத்தோடு 
அரை நூறு ஆண்டுக்கு மேல் 
எம்மையும் உலகையும் 
ஏப்பம் விட்டபடி

இந்தியாவையும் சீனாவையும் 
வளைச்சுப் போட்டு 
எம்மைப் போட்டு 
மிதிச்சுப் போட்டு 

இப்போ இன்னும் ஒரு 
தேர்தலோடு 
அது தாறம் இது தாறம்  
அந்த 13க்கு மேல் தாறம் என்றோர் 
அது எல்லாம் முடியாது என்பர் 

அதன் பின் அபிவிருத்தி மட்டும் 
காணும் என்பர் 
அதற்காக எம்மில் 
சிலரை வேண்டவும் பார்ப்பர் 

எம் தம்பிமாரும் தமிழர் நலனே 
தம் பணி என்று சொல்லி 
தமிழ் அரசில் ஜெயித்து விட்டு 
காசே தான் கடவுள் என 
கட்சி தாவ காத்திருப்பர்
இது காலம் காலமாய் 
எம்மை சூழ்ந்த வரும் நோய் போல 

புலம் பெயர் சில தம்பிமாரும் 
புதுசாய் சில கதை சொல்லுவார் 
நாட்டுக்குள் போய் பார்த்து வந்தோம் 
நல்லா தான் நாடு இருக்கு என்பர் 

காட்டிக் கொடுக்கவும் கழுத்து அறுக்கவும் 
காசு அடிக்கவும் வியாபாரிகள் வருவார்கள் 
மனிதாபிமானம் அபிவிருத்தி 
என்ற மாய மானோடு

சொந்தச்சகோதரர்கள் 
துன்பத்தில் உழல்கள் கண்டு 
வச்சனை செய்யும் 
வாய்ச்சொல்லில் வீரர்கள் போல் 

மொழி இனம் அடையாளம் 
இல்லா தமிழனாய் 
வேரோடு பிய்த்து எறிந்த 
வாழ்வு உனக்காய் 

கடைசியில் சிங்களம் 
இனவாத துரும்புச்சீட்டை 
எடுத்த வைப்பார் மேசையிலே 
ஏதேதோ பொய் பேசி ஏமாத்தி  
காட்டிக் கொடுத்து விட்டனர் 
எங்கள் படை வீரர்களை என்று 
பதவிக்காய் பேசுவார் 

மீண்டும் பதவிக்காய் 
நாட்டையே நாசம் செய்வர்
புத்த பிக்கு பிரித் ஓத 
இது ஒரு சிங்கள தேசம் என்று 
இன்னும் ஓர் சிங்க கொடியை 
ஏற்றி வைக்கும் இனவாதம்

எழுதுவதும் கிளிப்பதுமாய் 
ஏமாத்தும் இனவாதம் 
எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 
இனி என்ன செய்ய 
நினைத்திருக்கும் எம் இனம்

இனி இறைவன் தான் 
காப்பாத்த வேண்டும் என 
எப்பவோ கேட்ட குரல் 
நினைவிருக்கு

அரை நூற்றாண்டாய் 
நாம் அழுகிற குரல் 
அவனுக்கும் கேக்கலையே.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 23:39, uthayakumar said:


எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 

இல்லை கயவர்கள் எட்டப்பர்கள் காட்டிகொடுப்போர் இனம் தான் தமிழ் இனம், மற்றவனுக்கு சோப்பு போடுவதில் வல்லவர்கள்.

ஒற்றுமை என்பது ? தமிழனத்தை யார் ஏமாற்ற தமிழனைவிட?

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

தேர்தல் நேரத்தில் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

 

4 hours ago, உடையார் said:

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

நியி,உடையார், உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.தமிழர்கள் ஒன்று பட வேண்டும்.ஒற்றுமையே பலம் என்பதை உணரவேண்டும்.
எமக்கானதோர் நிரந்தரமான அரசியல் தீர்வுக்காய் எல்லோரும் உழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 12:54, suvy said:

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

நீங்கள் சொல்லுவது போல் சுவி அவர்களும் தமிழர் பலத்தை பல வழிகளில் உடைத்திருக்கிறார்கள்.அதேபோல் நாமும் ஒரே பலத்தின் பின் இன்று வரை ஒற்றுமைப்படவில்லை.இனி வரும் காலங்களும் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.எதிர் காலத்தில் நிகழவிருக்கும் உலக மாற்ரத்தோடு பல படிப்பினைகளோடு எமது போராட்டத்தை நகர்த்த வேண்டியவராய் இருக்கிறோம்.நன்றி உங்கள் கருத்துக்கு சுவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.