Jump to content

இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும்  ஈழத்தமிழனை-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் 
ஈழத்தமிழனை-பா.உதயன் 

தேர்தல் வருகிறது 
தினம் ஒரு பொய் சொல்வர் 
கையில் பூக்களோடு 
காலையில் புத்தனுக்கு 
பூசை செய்வர்

அறமோ கருணையோ 
இல்லாத மனிதர்கள் எல்லாம் 
அந்த புத்தனிடத்திலும் போய் 
பொய் உரைப்பர் 

இனவாதம் பேசுவர் 
இது சிங்கள தேசம் என்பர் 
தமிழர் அதில் படரும் 
கொடி என்பர் 

இனவாதம் என்றொரு
பெரும் பூதம் 
இராணுவத்துணையோடு 
இலங்கையை ஆள்கிறது 
எப்பவும் இது சொல்வதே சட்டம் 

ஐக்கியத்துக்கு குந்தகம் 
அந்த தமிழரே காரணம் என்று 
அந்த தமிழரோடு சேர்ந்து 
ஒப்பந்தம் செய்வோர் 
ஒருமித்த எம் தேசத்தின் 
இறைமைக்கு எதிரி என்பர் 

குடும்ப அரசியல் வாதிகள் 
பதவிக்கும் பணத்துக்குமாய் 
பாலும் தேனும் ஓடவைப்போம் 
பஞ்சம் எல்லாம் 
தீர்த்து வைப்போம் என 
பல கதை விடுவார் 

இடது சாரிகள் என்ற பெயரில்
சிவப்புச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் 
போலி சோசலிசவாதிகள் எல்லாம் 
இனவாதிகளோடு சமரசம் செய்வர் 
பிழைப்பு வாதிகளாக 

உழைப்பவன் வியர்வையை 
திருடியவன் பக்கம் நின்று 
ஊரையே ஏமாத்துவார் 

மனிதநேயம் தெரியாதவன் எல்லாம் 
மாக்சியவாதிகள் நம் நாட்டிலும் 
வெளிநாட்டில் நம்மவர் சிலரும் 

வியர்வை சிந்தி உழைப்பவனுக்கும் 
விடுதலைக்காய் போராடுபவனுக்கும் 
காலம் முழுக்க குரல் கொடுக்கும் 
உண்மையான சோஷலிசவாதிகளை 
கண்டு கொள்ள யாரும் இல்லை 

எங்களிலும் சிலர் 
என்னமோ கதை சொல்லி 
இருந்ததையும் குழப்பி விட்டு 
குரங்கு பித்த அப்பமாய் 
அண்ணன் தம்பிக்கு இடையே
ஆளுக்கு ஒரு கட்சி என்று 
அரசியல் நாடகம் வேற 

அண்ணன் தம்பிக்கு இடையே 
ஏதோ அரசியல் பிரிவினையாம் 
அந்தக்கதிரைக்காய் 
அடி பிடிகள் நடக்கிறது 

அரை நூற்றாண்டுக்கு மேலாய் 
அந்தப் பாராளுமன்றம் 
சிங்களம் கட்டிய 
கோட்டையை போலே 
எந்தத் துரும்பயும் 
எமக்காய் தந்ததில்லை 

இணக்க அரசியல் என்று 
எத்தனையோ செய்து பார்த்தும் 
எதைத் தான் தந்தார்கள் 
அவர்களுக்காய் கோட்டுக்கு போய் 
முண்டு குடுத்து தூக்கியும் விட்டோம் 

தீர்மானிக்கும் சக்தியாகவும் 
இருந்தோம் 
எந்த ஒரு கோரிக்கையும் 
வைக்க மறந்தோம் 

ஒற்றுமையே பலம் என்று 
ஒருத்தனுக்கும் விளங்கவில்லை 
இலக்கு ஒன்று என்றால் 
இவர்களுக்கு ஏன் 
இத்தனை கட்சி 

அந்த சிங்களத்துக்கு 
பால் வார்த்தது போல்
பலம் இழந்து நிலம் இழந்து 
நாம் பானையை போட்டு உடைக்க 
புரையோடிய புண்ணுக்கு 
புலத்திலும் நிலத்திலும் 
புதுசாய் ஏதும் மருந்து இல்லை 

அந்த சிங்கள தேசியமோ 
அவன் பாட்டன் கொடுத்த 
ராஜதந்திரத்தோடு 
அரை நூறு ஆண்டுக்கு மேல் 
எம்மையும் உலகையும் 
ஏப்பம் விட்டபடி

இந்தியாவையும் சீனாவையும் 
வளைச்சுப் போட்டு 
எம்மைப் போட்டு 
மிதிச்சுப் போட்டு 

இப்போ இன்னும் ஒரு 
தேர்தலோடு 
அது தாறம் இது தாறம்  
அந்த 13க்கு மேல் தாறம் என்றோர் 
அது எல்லாம் முடியாது என்பர் 

அதன் பின் அபிவிருத்தி மட்டும் 
காணும் என்பர் 
அதற்காக எம்மில் 
சிலரை வேண்டவும் பார்ப்பர் 

எம் தம்பிமாரும் தமிழர் நலனே 
தம் பணி என்று சொல்லி 
தமிழ் அரசில் ஜெயித்து விட்டு 
காசே தான் கடவுள் என 
கட்சி தாவ காத்திருப்பர்
இது காலம் காலமாய் 
எம்மை சூழ்ந்த வரும் நோய் போல 

புலம் பெயர் சில தம்பிமாரும் 
புதுசாய் சில கதை சொல்லுவார் 
நாட்டுக்குள் போய் பார்த்து வந்தோம் 
நல்லா தான் நாடு இருக்கு என்பர் 

காட்டிக் கொடுக்கவும் கழுத்து அறுக்கவும் 
காசு அடிக்கவும் வியாபாரிகள் வருவார்கள் 
மனிதாபிமானம் அபிவிருத்தி 
என்ற மாய மானோடு

சொந்தச்சகோதரர்கள் 
துன்பத்தில் உழல்கள் கண்டு 
வச்சனை செய்யும் 
வாய்ச்சொல்லில் வீரர்கள் போல் 

மொழி இனம் அடையாளம் 
இல்லா தமிழனாய் 
வேரோடு பிய்த்து எறிந்த 
வாழ்வு உனக்காய் 

கடைசியில் சிங்களம் 
இனவாத துரும்புச்சீட்டை 
எடுத்த வைப்பார் மேசையிலே 
ஏதேதோ பொய் பேசி ஏமாத்தி  
காட்டிக் கொடுத்து விட்டனர் 
எங்கள் படை வீரர்களை என்று 
பதவிக்காய் பேசுவார் 

மீண்டும் பதவிக்காய் 
நாட்டையே நாசம் செய்வர்
புத்த பிக்கு பிரித் ஓத 
இது ஒரு சிங்கள தேசம் என்று 
இன்னும் ஓர் சிங்க கொடியை 
ஏற்றி வைக்கும் இனவாதம்

எழுதுவதும் கிளிப்பதுமாய் 
ஏமாத்தும் இனவாதம் 
எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 
இனி என்ன செய்ய 
நினைத்திருக்கும் எம் இனம்

இனி இறைவன் தான் 
காப்பாத்த வேண்டும் என 
எப்பவோ கேட்ட குரல் 
நினைவிருக்கு

அரை நூற்றாண்டாய் 
நாம் அழுகிற குரல் 
அவனுக்கும் கேக்கலையே.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 23:39, uthayakumar said:


எப்பவுமே ஏமாந்த தமிழ் இனமாய் 

இல்லை கயவர்கள் எட்டப்பர்கள் காட்டிகொடுப்போர் இனம் தான் தமிழ் இனம், மற்றவனுக்கு சோப்பு போடுவதில் வல்லவர்கள்.

ஒற்றுமை என்பது ? தமிழனத்தை யார் ஏமாற்ற தமிழனைவிட?

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

தேர்தல் நேரத்தில் நல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

எமக்கு எப்போதும் ஓர் நல்ல தீர்வு கிடைக்கப் போவதில்லை.தமிழரின் அரசியல் எப்போதும் தடுமாறிக் கொண்டே உள்ளது. நல்ல கவிதை. ஆளமான வரிகள்.வாழ்த்துக்கள்...

 

4 hours ago, உடையார் said:

நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒப்பற்ற தலைவனின் பின், இந்த நிலை வந்திருக்குமா.?

நியி,உடையார், உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.தமிழர்கள் ஒன்று பட வேண்டும்.ஒற்றுமையே பலம் என்பதை உணரவேண்டும்.
எமக்கானதோர் நிரந்தரமான அரசியல் தீர்வுக்காய் எல்லோரும் உழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 12:54, suvy said:

ஒற்றுமை பலமே ஆனால் யார் ஒற்றுமையாகப் போகிறார்கள்.......தமிழரின் ஒற்றுமையை உடைக்க அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள்.ஆழ்ந்த சிந்தனையுடன் கவிதை நன்றி உதயகுமார்......! 

நீங்கள் சொல்லுவது போல் சுவி அவர்களும் தமிழர் பலத்தை பல வழிகளில் உடைத்திருக்கிறார்கள்.அதேபோல் நாமும் ஒரே பலத்தின் பின் இன்று வரை ஒற்றுமைப்படவில்லை.இனி வரும் காலங்களும் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம்.எதிர் காலத்தில் நிகழவிருக்கும் உலக மாற்ரத்தோடு பல படிப்பினைகளோடு எமது போராட்டத்தை நகர்த்த வேண்டியவராய் இருக்கிறோம்.நன்றி உங்கள் கருத்துக்கு சுவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.