Jump to content

ஒரு பெண்ணின் அவலம் - நவீன அடிமைத்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவீன அடிமைத்தனம்

2019ம் ஆண்டுஏப்ரல் மாதம் 7ம் திகதி. லண்டன் லூட்டன் விமான நிலையம்.

ரொமானியாவில் இருந்து 20 வயது பெண், தனது குடும்ப கஷ்டம் தீரும் வகையில், தான் காத்திருந்த, நல்ல சம்பளத்துடன், பாக்டரி வேலை கிடைத்து, முதலாளி அனுப்பிய விமானசீட்டில் வந்து இறங்குகிறார்.

வீட்டினை நினைத்து கண்கள் கசிகிறது.

அழைத்துப்போக, வந்தவர்கள் அவர்கள் நாட்டினை சேர்த்த இருவர். இருவரும் அண்ணன், தம்பி.

a group of people posing for the camera

கூட்டிப்போய் லண்டன் ப்ளும்ஸ்டேட் பகுதில் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.  அங்கே இரண்டு ரொமானிய பெணகள் இருந்தனர்.

இவரை பார்த்து விட்டு, தமது அறைகளுக்கு சென்று விட்டனர், எதுவும் பேசாமல்.... என்ன அமைதியாக சென்று விட்டார்களே அன்று ஆதங்கம். அந்த பெண்ணின் கடவுசீட்டினை வாங்கிக் கொண்ட அவர்களுக்கு.... பெண்ணை மறுநாள் வரை காத்திருக்க வைக்க நேரமில்லை. பணம் முக்கியம். 

இன்றிரவு வேலைக்கு தயாராக இரு. கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து கொண்டு வரவேண்டும், என்று சொல்லி, அவர் அணியவேண்டிய உடைகளை கொடுத்து உள்ளனர்.

மாலை வந்த அவர்கள், காரில் செல்லும் போது, ஆணுறைகளை கொடுத்து, இவைகளையும் உனது கைபையில் வைத்து கொண்டு வரவேண்டும் என்று சொல்லி உள்ளனர். 

அதிர்ந்து போன அந்த பெண், தான் அந்த மாதிரி பெண் அல்ல, இப்படி நடந்து கொள்ள தெரியாது என்று சொல்ல, வீதி ஓரமாக காரினை நிறுத்திய, அவர்கள்... மிக கடுமையாக பயமுறுத்தி உள்ளனர். கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

உனக்கு, விமான பயணம், உன்னை அறிமுகப்படுத்தியவருக்கு கொடுத்த பணம் என பெரும்தொகை செலவாகி விட்டது. ஆகவே இன்றிரவு அந்த பணத்தினை உழைத்து திருப்பி தந்து விட்டு நீ போகலாம், இல்லாவிட்டால் இந்த சுத்தியலால் தலையில் ஒரே அடி அடித்து, தேம்ஸ் நதியினில் போட்டால்.... யாருக்கும் தெரியாமல் மாண்டு போவாய் என்று வேறு மிரட்டி உள்ளனர்.

பயந்து போய் விட்டார் அந்த பெண்.

முதல் நாளே அவர்கள் முன்னரே ஏற்பாடு செய்திருந்த வாடிக்கையாளருடன் அவரின் விருப்பத்துக்கு மாறாக உறவுற வைத்தார்கள். அந்த வாடிக்கையாளர் ஆணுறை அணிய மறுத்தனால், அவர் மூலமாகவே கருத்தரித்தார். (என பின்னர் அறிந்து கொண்டார்)

அன்றய வசூல் பணத்தினை அண்ணன், தம்பி வாங்கிக் கொண்டு, அந்த பெண்ணை விடாமல், தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார்கள்.

பயமுறுத்தல் மூலம் தினமும் £1000 வரை உழைத்துக் கொண்டனர். பெண்ணுக்கு சாப்பாடு கூட கொடுக்காமல், தினமும் 10 - 15 வாடிக்கையாளர் வரை சேவை செய்யுமாறு மிரட்டினர்.

பெண்களுக்கான உடல் உபாதைகள் வந்த சமயங்களில், அவர் மறுத்த போதெல்லாம் தடியால், அவரது பின் பக்கத்தில் தாக்கி, இருக்கிறார்கள். வேறு வழி இன்றி கிளம்பி போய் இருக்கிறார். வீட்டில் இருந்து தாம் வெளியே கூட்டிக் கொண்டு போனால் அன்றி, அவளாக போக முடியாதவாறு பயமுறுத்தி உள்ளனர்.

முடிந்த வரை உழைத்துக் கொண்டு, துரத்தி விட்டு, வேறு பெண்ணை இறக்கலாம் என்று இருந்திருக்கிறார்கள்.

ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த போது, அதனை அறிந்து, ஏன் கருத்தடை மாத்திரை பாவிக்கவில்லை என்று தாக்கி, மருந்து, மாத்திரை கொடுத்து, கருக்கலைப்பு செய்ய முயன்று இருக்கின்றனர். குழந்தை வேறு வளர்ந்து கொண்டிருந்தது. 

குழந்தை அசையவில்லை என்று உணர்ந்து, இறந்து விட்டது... நல்லது தான்... தானும் அதனுடன் இறந்து போகலாம் என்று நினைத்து இருக்கிறார்.

ரொமானியாவில் வீட்டுடன் எந்த தொடர்பும் கொள்ள முடியாதவாறு, அண்ணன், தம்பி பார்த்துக் கொண்டனர். கையில் மொபைல் போனும் கொடுக்கவில்லை.

ஒரு வாடிக்கையாளர்... இந்த பெண் கர்ப்பிணி என புரிந்து கொண்டார். ஏன் இந்த நிலையிலும் இந்த வேலை செய்கிறாய் என்று கேட்க, கண்ணீருடன் தனக்கு நடக்கின்ற அவலத்தினை சொல்லி இருக்கின்றார் அவர். நல்ல வேளையாக அவரும் அதே மொழி பேசும், ரொமேனியர்.

தனக்கு ஏதும் சிக்கல் வரும் என்று, அவர் பொலிஸினை அழைக்க விரும்பவில்லை. ஆனால் மீண்டும் சில நாட்களில் சந்தித்த அவர், ஒரு மொபைல் போன் ஒன்றினை கொடுத்து, ரொமேனியாவில் உள்ள குடும்பத்துடன் தொடர்பு கொள்ள சொல்லி உள்ளார். உடனே அவர் தொடர்பு கொண்டு, தனது குடும்பத்துக்கு தனது நிலையினை சொல்லி அழுதுள்ளார்.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி, அவரது குடும்பம் தமது அரசுக்கு முறையிட, ரொமேனிய அரச அதிகாரிகள், லண்டன் மெட்ரோபாலிட்டன் பொலிஸாருக்கு தகவல் தர, அந்த போலீஸ் துறையின், நவீன அடிமைத்துவ, சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவின் அதிகாரிகள் (Modern Slavery and Child Sexual Exploitation Unit (MSCE) )உடனடியாக செயலில் இறங்கினர்.

ரொமேனியாவில் இருந்து விரைந்து வந்த இரு அதிகாரிகளுடன், இந்த துறை அதிகாரிகளும் சேர்ந்து, குறித்த வீட்டினை முற்றுகை இட்டு, அண்ணன், தம்பியை கைது செய்ததுடன், பெண்ணையும் மீட்டனர்.

a bedroom with a bed and desk in a small room: The woman was held in a flat in Plumstead (Met Police)

பெண் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறை

தம்பிக்கு 15 வருடமும், அண்ணனுக்கு 16 வருடமுமாக, இன்று 24ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் கண்காணிப்பாளர் ஆண்டர்சன் இது குறித்து பத்திரிகையாளருடன் இன்று பேசிய போது, "இந்த பெண்ணுக்கு நேர்ந்தது மிக கொடுமையானது. அவலமானது.ஒரு திடகாத்திரமான ஆண் பிள்ளை ஒன்றை பெற்றுள்ள அந்த பெண்ணுக்கு இருக்கக்கூடிய ஒரே மனநிறைவு, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாகியவர்கள், கம்பிகளின் பின்னால் இருக்கிறார்கள் என்பதாகவே இருக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.

இந்த மாதிரியான, நவீன அடிமைத்தனத்தினை களைய நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் மக்கள் இதுகுறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர்.

Streatham High Road incident What to do if you have information about or …

எவ்வாறு அறிந்து கொள்வது?

உங்கள் சமூகத்தில் இந்த நவீன அடிமைத்தனம் இருக்கக்கூடும் என்பதனால் அவதானமாக இருக்குமாறு போலீசார் கோருகின்றனர். பின்வரும் சில அறிகுறிகள் குறித்து கவனமெடுங்கள் என்கிறார்கள் போலீசார்:

1. தன்னில் கவனமின்மை, பொருத்தமில்லாத உடைகளை அணிதல்.
2. உடல் எப்போதும் சோர்வாக, தளர்வாக, கண்ணோடு, கண் பார்ப்பதை தவிர்ப்பவராக இருத்தல்.
3. ஆட்கள் அதிகம் இருக்கும் வீடு ஒன்றில், அறை திரைசீலை எப்போதுமே மூடிய நிலையில் இருத்தல் (எதையோ மறைக்க நிர்பந்திக்க பட்டுள்ளார்கள்)
4. மிக குறைந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலை ஒன்றினை, மிக அதிக நேரம் எடுத்து செய்வது.  தவறான ஆயுதங்களை உபயோகிப்பது. ( காரணம்: நிர்பந்தத்தால் உண்டான அர்வமின்மை).

To report a suspicion or seek advice call the Modern Slavery Helpline confidentially on 08000121700, 24 hours a day.

Source: Evening Stardard, London

யாழுக்காக: அடியேன்

ஒரு தமிழர் அவர் மனைவியுடன், 30 வருடமாக ஒரு பெண்ணை வீட்டு வேலைகாக அடிமையாக வைத்திருந்தனர் என்று சிறையில் அடைக்கப்பட்டார் என்பதால், இது வேறு சமூக பிரச்னை என்று வாசித்து விட்டு போகக்கூடாது என்றுதான் மொழிபெயர்த்து போட்டேன். ஆகவே கவனமாக நமது சமூகத்தினையும் அவதானியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன.. அடிமைத்தனம், என்ற தலைப்பைப் பார்த்தவுடன்..
இங்கு நடக்கும், அடிமைத்தனம்  என்று நினைத்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபுதிதா என்ன?? தெரியாமல் எத்தனையோ நடந்துகொண்டேதானே இருக்கு நாதமுனி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.