Jump to content

இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையல்ல அதிபரும் வெளிநாட்டுப்பணமும்
*************************************************

இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது.

மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் சுற்றிக் காட்டினார்.

அந்தப் பாடசாலையின் மலசலகூடம், வேறும் பல கட்டங்கள் திருத்த வேண்டிய நிலையிலிருந்தன.

அந்த வெளிநாட்டு நண்பர் தானாக முன்வந்து உதவிகளைச் செய்வற்குத் தயாரானார். அதிபர் மறுத்துவிட்டார். மறுத்துவிட்டதோடு ஆசிரியர் கூட்டத்தில் ஒரு அறிவித்தலையும் விடுத்தார். இனிமேல் யாராவது பழைய மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தாராளமாக பாடசாலையை சுற்றிக் காட்டுங்கள். ஆனால், பாடசாலை நேரத்திலல்ல. பாடசாலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாணவர் கல்விக்கு இடையூறு எற்படாவண்ணம் செய்யுங்கள் என்றார்.

ஆசிரியர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். வெளிநாட்டு பழைய மாணவர்களின் வளங்களை முறையாகப் பயன்படுத்த எங்கள் அதிபருக்குத் தெரியவில்லை என வெளிப்படையாகவே பேசினர்.
அதிபர் நிதானமாகச் சொன்னார். வெளிநாட்டு உதவிகளால் பல பாடசாலை நிர்வாகங்கள் படும் அவலங்களை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த நிலை எமக்கும் வேண்டாம். உதவி அடிப்படையில் அவர்களது தாராள சிந்தைனயும் உதவும் மனப்பாங்கும் உண்மையானதுதான். ஆனால் அதனது பக்கவிளைவுகள் குறிப்பாக குடாநாட்டைச் சீரழிக்கிறது.

பாடசாலை ஒன்றிற்கு ஐம்பதினாயிரம் ரூபா மேலதிக தேவையிருக்க, தாராள மனமுள்ள பழைய மாணவர்களால் சில வேளைகளில் 5 லட்சம் சேர்ந்து விடுகிறது. மிகுதி நாலரை இலட்சத்தையும் என்ன செய்வது என்று திண்டாடும் அதிபரும் பாடசாலை நிர்வாகமும் அதற்கு தேவையில்லாத திட்டங்களை வகுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இதுவே தொடர்ச்சியாகி அவர்கள் ஒரு பொறிக்குள் விழுந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு உதவியில்லாது பாடசாலையை நடத்தவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. இந்த நிலை எங்களுக்கு வேண்டாம். என்றொரு பெரிய வகுப்பே எடுத்துவிட்டார்.

இங்கே உள்ள பாடசாலைகளை வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்கள், ஆர்வக் கோளாறினால் வீங்கச் செய்துவிட்டு, பின் பாடசாலை அதிபர்களும், நிர்வாகமும் திண்டாடும்போது அவர்களை குற்றம் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

ஆசிரியர்களுக்கு, அவர் இன்னுமொரு கோரிக்கையையும் முன்வைத்தார். நீங்கள் வெளிநாட்டு பழைய மாணவர்களிடம் உதவி பெறுவதைவிட உங்கள் வேலைகளை இன்னும் கடமையுணர்வோடு நேர்த்தியாகச் செய்யுங்கள்! எமது பாடசாலை அரச பொதுப் பரீட்சைகளின்போது பெறப்படும் விசேட பெறுபேறுகளுக்கு அரசு விசேட மானியம் வழங்குகிறது. நாங்கள் அந்த மானியத்தில் குறியாயிருப்போம். மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்கு பாடுபடலாம். இன்னும் கல்வியோடு சமுதாய உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதற்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களையும், முதியோர் இல்லங்களையும் கூட்டிச் சென்று காட்டுங்கள்!

பாடசாலை சமூகத்தின் முன்னோடி. சமூக உருவாக்கி. எங்களுடைய ஒவ்வொரு செயலும் பொறுப்பு வாய்ந்தவையாக இருக்கவேண்டும். எமது சமூகத்தில் வளர்ந்து வரும் 'கையேந்தும் கலாச்சாரம்' ஆபத்தானது. அந்த நோய் மாணவர்களில் தொற்றிக் கொள்ளாதிருக்க நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய மாணவர்களே நாளைய உலகம்.

இதேபோல இன்னொரு நண்பரின் அனுபவமும் கவனம் கொள்ள வேண்டியது. அவரும் வெளிநாடொன்றிலிருந்து நீண்ட நாட்களுக்குப்பின் ஊருக்குச் சென்றார். மனிதாபிமானவாதி. அதில் ஐயமில்லை. அவர் உதவும் நோக்கோடு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். இல்லத்தைச் சுற்றிப்பார்த்த அவர் பெரிய மனதோடு தான் வந்த காரணத்தைச் சொன்னார். மிக பொறுமையாய் அதை உள்வாங்கிய நிர்வாகி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு உதவியையும் மறுத்துவிட்டார்.

நாங்கள் பெரிய வசதியாக இல்லாது விட்டாலும் நாங்கள் ஒரு நிறுவனமாக இருக்கிறோம். எங்களால் ஓரளவுக்கு முடியும். முடியாவிட்டாலும் உள்ளதை வைத்து சமாளிக்கும் வலு எங்களிடம் இருக்கிறது. எங்களைப்போல் நிறுவனமயப்படாது உதிரிகளாக தேடுவோரற்று பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தேடி நீங்கள் உதவுவதே முறையானது என்று அனுப்பி வைத்தார்.

இன்னுமொரு சமூகசேவை மனிதரின்ஆதங்கம் இது. நாங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் உறவுகளிடமும் பணம் வாங்குகிறோம் என்பது உண்மை. வெளிப்படையானது. ஆனால் அவர்களில் மட்டும் தங்கியிருக்காது எங்கள் திட்டங்களை நாமே நகர்த்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறோம். அதில் ஒருவகையில் வெற்றியும் கண்டு வருகிறோம். ஆனால் எங்கள் முயற்சிகளை கொச்சைப் படுத்தும் விதமாக 'உங்களுக்கென்ன வெளியில் இருந்து காசு வருகுது. நீங்கள் சும்மா இருந்து செலவு செய்யிறியள்' என்ற கிண்டல்கள் எங்களை வேதனைப் படுத்துகின்றன. நாங்கள் எங்கள் பலத்தில் நிற்கவே விரும்புகிறோம்.

இதையெல்லாம், உங்களைப் போலவே எனக்கும் நம்புவதற்கு கஸ்ரமாகத்தான் இருந்தது. ஆனாலும் இவ்வாறான மனிதர்கள் இன்னும் பலர் அங்கே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நம்புங்கள்!

-மனோ சின்னத்துரை
 

மூலம்: என்வினவி (WhatsApp)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வருடம் சித்திரையில் ஊருக்கு போகும் பொழுது இதைப்பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன்.. இந்த COVIDஆல் எல்லாம் மாறிவிட்டது..

எங்களில் பலர்( உள்நாடு/வெளிநாடு), பல்கலைகழகம் தெரிவான மாணவர்களில் கல்வியை பணபற்றாகுறையால் தொடரமுடியாமல் உள்ளவர்களுக்கு உதவுவது உண்டு.. அது ஒரு வழிப்பயணமாக மட்டுமே இருக்கும்.. ஆனால் கிளிநொச்சியில் இந்த அறக்கட்டளை செய்வது வித்தியாசமானதாக பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்குவதாகவும் தேன்றுவதால் இங்கே இதை இணைக்கிறேன்..

முழுவிபரங்களையும் அறிந்து இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும், ஆனால் இது ஒரு சிந்தனைக்குரிய விடயம்.

கிளிநொச்சி மாணவர்களிற்கு கலங்கரை விளக்கான கல்வி வளர்ச்சி அறக்கட்டளை

January 2, 2020
IMG_9816-696x464.jpg

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் பட்டப்படிப்புக்கான உதவியை பெறுகின்றனர்.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையிடம் 787 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கான உதவியை பெறுகின்றனர். இதில் 609 மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யதுள்ளதோடு. 178 மாணவர்கள் உதவியை பெற்ற கற்று வருகின்றனர்.

கடந்த வாரம் உதவி பெறும் பல்கலைகழக மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே இத தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

IMG_9816-300x200.jpgபுலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற உறவுகள், அமைப்புக்கள், உள்ளுர் தனிநபர்கள் உள்ளிட்ட பல நல்லுள்ளம் கொண்டவர்கள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக இவ்வுதவியை வழங்கி வருகின்றனர்.மாணவர் ஒருவர் உயர்ந்த பட்சம் மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் நிதியுதவியை பெற்றுவருகின்றார். மருத்துவம், பொறியியல் தொடக்கம் கலை வர்த்தக பிரிவுகளில் நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்களி்ல் கல்வி பயிலும் மாணவர்கள் இவ்வுதவியை பெறுகின்றனர்.

IMG_9799-300x200.jpgமாதாந்தம் உதவியை பெற்று தங்களின் பல்கலைகழக கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட உதவியை நிரந்த தொழில் ஒன்றை பெற்றப் பின்னர் மீள கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உதவியை பெறுகின்றனர். இவர்களால் மீளச்செலுத்தப்படும் தொகையானது மறுபடியும் புதிதாக உதவிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வழங்கப்படுகிறது.

IMG_9842-300x200.jpgகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக நிதியை பெற்று தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்த 609 மாணவர்களில் 130 மாணவர்கள் மீளச்செலுத்தி வருகின்றனர். 33 மாணவர்கள் முழுமையாக பெற்ற உதவியை மீளச் செலுத்தியுள்ளனர். அத்தோடு தற்போது தங்களின் பல்கலைகழக க்ல்விக்கான உதவியை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 85 காணப்படுகின்றனர்.

 

IMG_9821-300x200.jpgஇவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவர் அதிபர் பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது இதில் அறக்கட்டளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, மட்டகளப்பு மாவட்ட உளநல வைத்திய அதிகாரி யூடிரமேஸ் ஜெயகுமார், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யோசுவா, அறக்கட்ளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபாலா, ஓய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

https://www.pagetamil.com/97893/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  (WhatsApp) மூலம் மனோ அண்ணரிடமிருந்து இக்கதை  வந்தது

கதையின் கரு உண்மைதான்

அவ்வாற  தான் இனி  இருப்பதும்  நல்லது

ஆனால் பழைய மாணவர்களாலும் புலம் பெயர்ந்த அக்கம் பக்கத்தவர்களின் உதவிகளாலுமே 

அதிகம் பாடசாலைகளும் மாணவர்களும் வளர்ந்திருக்கிறார்கள்

அரசு கூட அடுத்த  படிதான்

எனவே உதவிகளை  பெறுவதோ 

கோருவதோ  நல்லதே

ஆனால் அவை திட்டங்களாக 

தேவை  சார்ந்தவையாக  இருக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ,பிரபா உங்கள் இணைப்புகளுக்கு நன்றி 
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய நாட்டில், இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பது பல வெளிநாட்டு அமைப்புகளினால் பாராடப்பட்டது. நாட்டின் இலவச கல்வியின் தந்தையாக CW கன்னங்கரா இன்றும் மதிக்கப்படுகின்றார். பிரிட்டனில் கூட இல்லாத வகையில், இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. அதுமட்டுமா, மகாபொல மானியமும் கிடைக்கும்.

சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் காட்டினாலும், இலங்கை என்னும் நாட்டின் மீது நான் வைத்திருக்கும் பெருமதிப்பு இந்த கல்வி, மருத்துவ காரணமாகவே. இதனை, ஒரு உறவு நையாண்டி செய்ய முனைந்தார். 

என்னை பொறுத்தவரையில், நாட்டுடன் பகை இல்லை, அரசியல் வாதிகளுடன் தான் என அவருக்கு புரிய வைக்க முனைந்தேன்.

ஆனாலும் நன்றி முக்கியமானது. 🙏


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், பிரபா இருவருக்கும்
தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.