Jump to content

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

 

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.


அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது.

ஆனால் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.<

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார்.

தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27085046/Biden-holds-daunting-lead-over-Trump-as-US-election.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

நிச்சயம் தொடர்ந்து யாழுடன் இணைந்திருப்பேன். சாத்திரத்தில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில விடயங்கள் சொல்லி வச்ச மாதிரித்தான் நடக்குது. தற்போது  நிறைய கிரக மாற்றங்கள் நடக்கும்  காலகட்டம். நீங்கள் எங்கு இடம் மாறினாலும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுகிறேன்.
நியூசிலாந்து திரும்பி போகும் நோக்கத்துடனேயே 20 வருடங்களுக்கு முன்பு  இங்கு வந்தோம். பல காரணங்களால் போக முடியவில்லை. Auckland  இல் வீடு வாங்குவதற்கு உரிய வேலைகள் தொடங்கியாச்சு. யாழ் வீடும் வேலைகள் நடக்குது. இனி என்ன மாறி மாறி இரண்டு  இடத்துக்கும் சென்று ஆக வேண்டிய விஷயங்களை பார்க்கவேண்டியது தான் அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

ஓமோம் அண்ணா  இப்ப கோரோனோ பிரச்சனையால் எங்கும் போக முடியாது. அது இல்லாவிட்டாலும் எமது நாட்டு நிலைமை தமிழ் மக்களுக்கு எப்பவுமே ஒரு நிச்சயமற்றது தான். அத்துடன் UK  இல் இருந்தால் பயணம் இலகு . இங்கிருந்துகொண்டு போவதென்றால் தூரம் கூடிப்போய்விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 23:10, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 03:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 05:37, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

tenor.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

நன்றி குமாரசாமி அண்ணா. 

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

சிரிப்பெல்லாம் பார்த்தேன் புரட்சி. சும்மாவே அமெரிக்கா மிகவும் பிஸியான நாடு. stress உம்  கூட. இந்தாள்  இன்னும் அறுக்குது . நற்புக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி உதயகுமார். உண்மைதான் எம்மை மட்டும் சார்ந்த சந்தோசங்கள் நீடிப்பதில்லை. அப்பப்போது வந்து போகும். அண்ணல் பிறரையும் முக்கியமாக  ஆதரவற்றவருக்கு, தேவையான நேரத்தில் சந்தோசப்படுத்தி அதனால் கிடைக்கும் சந்தோசம் பன்மடங்கானது. தேவையான நேரத்தில்தான் உதவி செய்யவேணும். காலங்கடந்த உதவிகள் பிரயோசனம் அற்றவை. அதுதான் எனது கொள்கை. தானம், தர்மம், பிறருக்காக ஒரு சில நேரங்களையாவது சிலவழித்தல் போன்றவற்றை நிறையபேர் நினைப்பதில்லை. தனக்குப்பின் தான் தானம் என்பதை பலர் தமது தேவைகள், ஆசைகளை கூட்டிக்கொண்டே  போவதால் அவர்களுக்கு தமது தேவைகளை நிறைவேற்றத்தான் பணமும் நேரமும் போதுமாக இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

சிறிலங்கா-அமெரிக்கா-நியூசிலாந்து.
ஏதோ கரவெட்டிக்கும் துன்னாலைக்கும் போய் வாற மாதிரி கதைக்கிறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிலாமதி said:

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

வேலைகள் தலைக்கு மேல் போகும்போதும் மனம் கவலைப்படும்போதும் யாழ் தான் மனதுக்கு உற்சாகம் தரும். மறக்கவே முடியாது. எல்லாப்பதிவுகளுக்கும் பதில் போடாவிட்டாலும் பொதுவாக எல்லாமே வசித்து அறிந்து கொள்வேன். முக்கியமா நகைச்சுவையாக எழுதும் குமாரசாமி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா , சிறி அவர்களது பதிவுகள் மனம் விட்டு சிரிக்க வைப்பவை. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு

வணக்கம் நில்மினி.
நியூசிலாந்தில் எனது மனைவியின் மச்சான் பேரின்பநாயகம்(பேராசிரியராக இருக்கலாம்)என்பவரைத் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

 

உங்களது எழுத்துக்களை  அடிக்கடி  வாசித்தாலும் 

உங்களது பதிவுகள் சார்ந்து

இன்றைய சூழ்நிலையில் (கொரோனா) அதிகம்  எழுதமுடியவில்லை

தொடர்ந்து  இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சரியாத்தான்  குத்தாட்டம் போடுறார் போல கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சிங்கனுக்கு தனியா ஆடிப் பழக்கமில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 19:40, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

 

On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி, 
யாழ். களத்தில்... உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளில் எல்லாம் இருந்து,
அங்கத்தவர்கள்   கருத்து எழுத தினமும் வருகின்றார்கள்.
ஆனால்... நியூசிலாந்தில் இருந்து, ஒருவரும் வருவதில்லை என நினைக்கின்றேன்.

நீங்கள்... நியூசிலாந்துக்கு  சென்றால்,
ஒரு ஐந்து பேரையாவது... யாழ். களத்தில் இணைத்து விடும் படி வேண்டுகின்றேன். :)

மனிதர், தனக்குப் பிடித்தவற்றை  செய்யும் போதுதான்... மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல்... உங்களுக்குத் பிடித்த, நியூசிலாந்துக்கு செல்வது எமக்கும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.