Jump to content

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

 

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.


அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது.

ஆனால் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.<

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார்.

தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27085046/Biden-holds-daunting-lead-over-Trump-as-US-election.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

நிச்சயம் தொடர்ந்து யாழுடன் இணைந்திருப்பேன். சாத்திரத்தில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில விடயங்கள் சொல்லி வச்ச மாதிரித்தான் நடக்குது. தற்போது  நிறைய கிரக மாற்றங்கள் நடக்கும்  காலகட்டம். நீங்கள் எங்கு இடம் மாறினாலும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுகிறேன்.
நியூசிலாந்து திரும்பி போகும் நோக்கத்துடனேயே 20 வருடங்களுக்கு முன்பு  இங்கு வந்தோம். பல காரணங்களால் போக முடியவில்லை. Auckland  இல் வீடு வாங்குவதற்கு உரிய வேலைகள் தொடங்கியாச்சு. யாழ் வீடும் வேலைகள் நடக்குது. இனி என்ன மாறி மாறி இரண்டு  இடத்துக்கும் சென்று ஆக வேண்டிய விஷயங்களை பார்க்கவேண்டியது தான் அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

ஓமோம் அண்ணா  இப்ப கோரோனோ பிரச்சனையால் எங்கும் போக முடியாது. அது இல்லாவிட்டாலும் எமது நாட்டு நிலைமை தமிழ் மக்களுக்கு எப்பவுமே ஒரு நிச்சயமற்றது தான். அத்துடன் UK  இல் இருந்தால் பயணம் இலகு . இங்கிருந்துகொண்டு போவதென்றால் தூரம் கூடிப்போய்விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 23:10, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 03:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 05:37, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

tenor.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

நன்றி குமாரசாமி அண்ணா. 

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

சிரிப்பெல்லாம் பார்த்தேன் புரட்சி. சும்மாவே அமெரிக்கா மிகவும் பிஸியான நாடு. stress உம்  கூட. இந்தாள்  இன்னும் அறுக்குது . நற்புக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி உதயகுமார். உண்மைதான் எம்மை மட்டும் சார்ந்த சந்தோசங்கள் நீடிப்பதில்லை. அப்பப்போது வந்து போகும். அண்ணல் பிறரையும் முக்கியமாக  ஆதரவற்றவருக்கு, தேவையான நேரத்தில் சந்தோசப்படுத்தி அதனால் கிடைக்கும் சந்தோசம் பன்மடங்கானது. தேவையான நேரத்தில்தான் உதவி செய்யவேணும். காலங்கடந்த உதவிகள் பிரயோசனம் அற்றவை. அதுதான் எனது கொள்கை. தானம், தர்மம், பிறருக்காக ஒரு சில நேரங்களையாவது சிலவழித்தல் போன்றவற்றை நிறையபேர் நினைப்பதில்லை. தனக்குப்பின் தான் தானம் என்பதை பலர் தமது தேவைகள், ஆசைகளை கூட்டிக்கொண்டே  போவதால் அவர்களுக்கு தமது தேவைகளை நிறைவேற்றத்தான் பணமும் நேரமும் போதுமாக இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

சிறிலங்கா-அமெரிக்கா-நியூசிலாந்து.
ஏதோ கரவெட்டிக்கும் துன்னாலைக்கும் போய் வாற மாதிரி கதைக்கிறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிலாமதி said:

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

வேலைகள் தலைக்கு மேல் போகும்போதும் மனம் கவலைப்படும்போதும் யாழ் தான் மனதுக்கு உற்சாகம் தரும். மறக்கவே முடியாது. எல்லாப்பதிவுகளுக்கும் பதில் போடாவிட்டாலும் பொதுவாக எல்லாமே வசித்து அறிந்து கொள்வேன். முக்கியமா நகைச்சுவையாக எழுதும் குமாரசாமி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா , சிறி அவர்களது பதிவுகள் மனம் விட்டு சிரிக்க வைப்பவை. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு

வணக்கம் நில்மினி.
நியூசிலாந்தில் எனது மனைவியின் மச்சான் பேரின்பநாயகம்(பேராசிரியராக இருக்கலாம்)என்பவரைத் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

 

உங்களது எழுத்துக்களை  அடிக்கடி  வாசித்தாலும் 

உங்களது பதிவுகள் சார்ந்து

இன்றைய சூழ்நிலையில் (கொரோனா) அதிகம்  எழுதமுடியவில்லை

தொடர்ந்து  இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சரியாத்தான்  குத்தாட்டம் போடுறார் போல கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சிங்கனுக்கு தனியா ஆடிப் பழக்கமில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 19:40, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

 

On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி, 
யாழ். களத்தில்... உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளில் எல்லாம் இருந்து,
அங்கத்தவர்கள்   கருத்து எழுத தினமும் வருகின்றார்கள்.
ஆனால்... நியூசிலாந்தில் இருந்து, ஒருவரும் வருவதில்லை என நினைக்கின்றேன்.

நீங்கள்... நியூசிலாந்துக்கு  சென்றால்,
ஒரு ஐந்து பேரையாவது... யாழ். களத்தில் இணைத்து விடும் படி வேண்டுகின்றேன். :)

மனிதர், தனக்குப் பிடித்தவற்றை  செய்யும் போதுதான்... மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல்... உங்களுக்குத் பிடித்த, நியூசிலாந்துக்கு செல்வது எமக்கும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.