Jump to content

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!

வாய்ப்புகள் மறுப்பு


டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார்.

இசை அமைப்பாளர் ரகுமான் இசை அமைப்பாளர் ரகுமான் அளித்த பேட்டியில், இந்தி படங்கள் பெரிய அளவில் எனக்கு சமீப நாட்களாக வரவில்லை. இது தொடர்பாக யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் டில் பேச்சாரோ இயக்குனர் சொன்ன பின்தான் எனக்கு இதற்கான காரணமே தெரியும். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் வருவதற்கு முன் பலர் என்னை பற்றி அவரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். ரகுமானிடம் செல்ல வேண்டாம் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் பலர் கூறி இருக்கிறார்கள்.

வேண்டாம் என்று சொன்னார்கள் ரகுமான் வேண்டாம். அவர் சரியில்லை. வேறு இயக்குனரிடம் செல்லுங்கள் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன பின்தான் எனக்கு பட வாய்ப்பு வரமால் போனதற்கு காரணமே தெரிந்தது. எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு குழு இயங்குகிறது.

வாய்ப்புகள் மறுப்பு எனக்கு வாய்ப்புகளை வர விடாமல் தடுப்பதற்கு என்றே ஒரு குழு பாலிவுட்டில் இயங்குகிறது. எனக்கு கவலை இல்லை. எனக்கு கடவுள் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். எல்லாமும் கடவுளிடம் இருந்துதான் வருகிறது. எனக்கு தேவையான, தகுதியான வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை, என்று இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன காரணம் முன்னதாக டில் பேச்சாரோ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது, அது தொடர்பாக ரகுமான் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். ரகுமான் சுஷாந்த் சிங் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். முன்னதாக சுஷாந்த் சிங் மரணத்திற்கு இதேபோல் வாய்ப்பு மறுக்கப்ட்டதும், அதன் மூலம் அவர் கடும் அழுத்தத்திற்கு உள்ளானதும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/delhi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

Link to comment
Share on other sites

ஸாருக்கான் போன்றவர்களும் பின்னணியில் செயல்படுவதாக எங்கோ வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

22 minutes ago, nunavilan said:

ஸாருக்கான் போன்றவர்களும் பின்னணியில் செயல்படுவதாக எங்கோ வாசித்தேன்.

மதராசி எண்டால் கிந்தியன்களுக்கு அலர்ஜியாம்.
கிட்டத்தட்ட இதே பிரச்சனை கமலகாசனுக்கும் நடந்தது.
பின்னணியில் சல்மான்கான் எண்டும் ஒரு கதை உலாவுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மதராசி எண்டால் கிந்தியன்களுக்கு அலர்ஜியாம்.
கிட்டத்தட்ட இதே பிரச்சனை கமலகாசனுக்கும் நடந்தது.
பின்னணியில் சல்மான்கான் எண்டும் ஒரு கதை உலாவுது

 

அங்கிருந்தான் இந்த தமிழ்நாட்டு இளிச்ச வாய்கள் நடிகைகளை இறக்குமதி செய்வார்கள், எம்மினத்தில் எத்தனை அழுகுள்ளவர்கள்  திறமையுடன்  இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

அங்கிருந்தான் இந்த தமிழ்நாட்டு இளிச்ச வாய்கள் நடிகைகளை இறக்குமதி செய்வார்கள், எம்மினத்தில் எத்தனை அழுகுள்ளவர்கள்  திறமையுடன்  இருக்கின்றார்கள்

தமிழ் பெண்கள் நடிக்க போவதில் பல இடையூறுகள் இருப்பதாக 
நடிகைகள் பலர் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் அதனால்தான் யாரும் நடிக்க போவதில்ல்லை 
படவாய்ப்பு கிடைக்கு முன்பு படுக்கைக்கே அழைக்கிறார்கள் 
அதனால்தான் கேரளா மும்பையில் இருந்து நடிகைகள் வருகிறார்கள் 
இதை நிறுத்துவது கடினம்.

ஆதாரமாக பல தொலைபேசி உரையாடல்கள் யூடூப்பில் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஹிந்தியனுக்கு.... தமிழனைக் கண்டால், அலர்ஜி (ஒவ்வாமை) என்பது தெரிந்த விடயம் தானே....

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

வாழ்க்கை ஒரு வட்டம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

1995  கால கட்டத்தில் நெற்றியில் விபூதி வைக்காமல் இருந்தால் பாடல் எழுதும் வாய்ப்பு தருவேன் என கூறியதால்
எனக்கு பாடலை விட என்னுடைய மரபு வழி வாழ்வியலே முக்கியமென பாடலாசிரியர் பிறைசூடன் கூறி ரகுமானை அசிங்கப்படுத்தி வெளியேறினார்  என்றொரு செய்தியும் உலாவியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

சரக்கு குறைந்து விட்டது போல் தெரிகின்றது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 13:07, Maruthankerny said:

தமிழ் பெண்கள் நடிக்க போவதில் பல இடையூறுகள் இருப்பதாக 
நடிகைகள் பலர் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் அதனால்தான் யாரும் நடிக்க போவதில்ல்லை 
படவாய்ப்பு கிடைக்கு முன்பு படுக்கைக்கே அழைக்கிறார்கள் 
அதனால்தான் கேரளா மும்பையில் இருந்து நடிகைகள் வருகிறார்கள் 
இதை நிறுத்துவது கடினம்.

ஆதாரமாக பல தொலைபேசி உரையாடல்கள் யூடூப்பில் இருக்கு 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா ,
ந‌டிப்பை விடுவோம் , த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் அதிக‌ பாட‌ல்க‌ளை பாடிய‌வ‌ர்க‌ள் கேர‌ளாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ,
ஜ‌யா இளைய‌ராஜாவும் ச‌ரி அண்ண‌ன் ர‌குமானும் ச‌ரி , கூட‌ கேர‌ளா பெண்க‌ளுக்கு தான் பாட‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் குடுத்து இருக்கின‌ம் த‌மிழ் பெண்க‌ளுக்கு இல்ல‌ /


2004ம் ஆண்டுக்கு பிற‌க்கு நான் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்க்கிறேல‌ , பாட‌ல்க‌ள் கேட்பேன் இடைக்கால‌ பாட‌ல் தொட்டு புதிய‌ பாட‌ல் வ‌ரை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்திக்கு போன பிறகு இவரின்ட தமிழ் இசை சொல்லி கொள்ளும் படி இல்லை.. சரக்கு தீர்ந்து "பியூஸ்" போய் விட்டதா அல்லது ஈடுபாடு இல்லாமல் இசை அமைக்கிறாரா தெரியவில்லை.. ஒரு உயிர்ப்பும் இல்லை..😢

ர‌குமான் 12வ‌ருட‌ம் இசையில் பெரிய‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் , 

1993ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவ‌ர‌ த‌ன‌க்கென்று இசை உல‌கில் இட‌ம் பிடித்த‌வ‌ர் , ர‌குமானின் இசையில் வ‌ந்த‌ ப‌ல‌ பாட‌ல்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்க‌லாம் ,  அப்ப‌டி அருமையான‌ பாட‌ல்க‌ள் ப‌ல‌ 

த‌மிழீழ‌ உண‌ர்வு ர‌குமானிட‌ம் அதிக‌ம் ,  

 

இந்த‌ பாட்டு கேக்கும் போது க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தான் செய்யும் ,

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர் ,  ஜீவி பிர‌காஸ்சும் ந‌ல்ல‌ இசை அமைப்பாள‌ர் , ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு அவ‌ரின் இசையும் வேறு மாதிரி போய் விட்ட‌து ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

நல்ல இசை கோர்வை தோழர்.. மிஸ்ரர் மெட்றாஸ் படத்தில் கவுண்டர் இன்றோ சீனுக்கு சுட்டு வைத்து இருக்கினம்(1.44) .. மேலும் மகாபிரபு பகிடி ... இன்னும் சொல்லி கொண்டே போகலாம் ..😢

16 minutes ago, பையன்26 said:

ர‌குமான் 12வ‌ருட‌ம் இசையில் பெரிய‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் , 

1993ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவ‌ர‌ த‌ன‌க்கென்று இசை உல‌கில் இட‌ம் பிடித்த‌வ‌ர் , ர‌குமானின் இசையில் வ‌ந்த‌ ப‌ல‌ பாட‌ல்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்க‌லாம் ,  அப்ப‌டி அருமையான‌ பாட‌ல்க‌ள் ப‌ல‌ 

த‌மிழீழ‌ உண‌ர்வு ர‌குமானிட‌ம் அதிக‌ம் ,  

 

இந்த‌ பாட்டு கேக்கும் போது க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தான் செய்யும் ,

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர் ,  ஜீவி பிர‌காஸ்சும் ந‌ல்ல‌ இசை அமைப்பாள‌ர் , ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு அவ‌ரின் இசையும் வேறு மாதிரி போய் விட்ட‌து ,

ஆளாளுக்கு ரசனை வேறுபடும் .. இளையராஜா அளவுக்கு இவர் பிடிப்பதில்லை..மெலடி ஓகே.. ஒப்பீட்டளவில் இவரிண்ட இசையில் கொஞ்சம் இரைச்சல் , உச்சஸ்தாயி (உச்ச குரல் ) அதிகம் தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

ர‌குமானின் ம‌ரும‌க‌ன் ஜீவி பிர‌காஸ் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ர்

இவர் ஒரு பேட்டியில் அடுத்த பிறவியில் தேசியத்தலைவர் பிரபாகரன் மாதிரி பிறக்கவேண்டும் என கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இவர் ஒரு பேட்டியில் அடுத்த பிறவியில் தேசியத்தலைவர் பிரபாகரன் மாதிரி பிறக்கவேண்டும் என கூறியிருந்தார்.

Slumdog Millionaire இந்த‌ ப‌ட‌த்தின் மூல‌ம் த‌மிழ‌னின் புக‌ழை இசை மூல‌ம் உல‌குக்கு எடுத்து சொன்ன‌வ‌ர் ,

இந்த‌ ப‌ட‌த்துக்கான‌ பெரிய‌ விருதை , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ம‌ர்பிக்கிறேன் என்று ஒரு வ‌ரியில் சொல்லி விட்டு பேசாம‌ இருந்தார் ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இசை  அமைப்பதில் இருந்து இசை கோர்வைகளை அமைப்பதில் வெற்றிகண்டவர் தமிழில் ஹீட்  ஆன பாடல்களை கேட்டு பிடித்து போய்  ஹந்தி படவுலகினர்  இவரின் வாசல் தேடி வந்தார்கள் அப்படியே ஒஸ்கார் அவார்ட் ம் தேடிவந்தது .இந்திய இசைஅமைப்பாளர்களில் சொந்த சரக்கை கூடின மட்டும் உபயோகப்படுத்தி வெற்றி  அடைந்தவர்கள் .

ஹொலிவூட்டில்  Ennio Morricone, James Horner and Hans Zimmer மூன்று இசை சக்கரவர்த்திகள் உள்ள இடம்போல் இந்திய இசையில் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் உள்ள ராஜதர்பார் வேறு யாரும் நினைத்துப்பார்க்க முடியாது .அதிலும் என்னியோ மோரிகோன்ஒஸ்கார் அவார்ட் எடுத்த வயது ரகுமான் வயது வித்தியாசம் தஞ்ஜை  ஈஸ்வரர் கோவிலுக்கும் சாய்ந்துகொண்டு இருக்கும் பைசா நகர கோபுரத்து விடயம் போல் தமிழர்கள் நாங்கள் அறிந்தும் பெருமைப்படாமல் ஒதுக்கி செல்லுகிறம் காரணம் மதவாதமோ தெரியலை .ஜெர்மனியை சேர்ந்த ஹன்ஸ் ஜிம்மரரின்  இசைவடிவங்கள் தெலுங்கு கன்னடா ஹிந்தி படங்களில் வரும் இசையமைப்பாளர்கள் சுட்டு கடைவிரித்து இருக்கினம் .என்னைப்பொருத்தவரை  ரகுமானிடமும் இளையராஜாவிடம் இன்னும் இருக்கு தமிழர்கள் நாங்கள் குடுக்கும் மதிப்பில் இருந்து வெளிவருவார்கள் .

என்னியோ மோரிகோன் புகழ் பெற்ற இசைக்கோர்வை .

 

என்ன செய்வது பெருமாள் எங்களுக்கு எதிரிகளை சம்பாதித்து பழகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.