Jump to content

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்


Recommended Posts

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

 

 

 

-என்.ராஜ்

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸாரால், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரெனவும் சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோவில்களின் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றாரெனவும் கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடமெனவும் கூறினார். 

“தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோவில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, அவரிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” எனவும், அவர் கூறினார்.

 அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும் சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு, தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

“சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே, சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சவரகள-யரம-சமநதரனகக-வககளகக-வணடம/71-253702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கு... எத்தனை சைவர். 😁

Link to comment
Share on other sites

போலீஸ் விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். சிலவேளைகளில் மத பேதத்தை உருவாக்க யாராவது செய்திருக்கலாம். அல்லது சுமந்திரனின் ஆதரவாளர் செய்திருக்கலாம். எனவே சுமந்திரனின் நோட்டீஸ் ஒட்டியிருப்பதாக கூறி உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. சச்சியும் ஒரு மதவாதி என்று எல்லோரும் அறிந்த ஒன்று. தீர விசாரிப்பது தமிழர்களின் ஒற்றுமைக்கு நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியே ஆள் வைத்து ஒட்டியிருக்கும். 

15 minutes ago, nunavilan said:

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

 

 

 

-என்.ராஜ்

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸாரால், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரெனவும் சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோவில்களின் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றாரெனவும் கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடமெனவும் கூறினார். 

“தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோவில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, அவரிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” எனவும், அவர் கூறினார்.

 அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும் சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு, தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

“சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே, சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சவரகள-யரம-சமநதரனகக-வககளகக-வணடம/71-253702

இவ்வாறு செய்ய இருக்கிறார். இன்னமும் செய்யவில்லை...

மறைமுகமாக சுத்துமாத்திரனுக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சி இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவு சச்சி சுமந்திரனுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும். 

மொந்தையும் பழசு. கள்ளும் புளிச்ச கள். 

இதில்புதிதாக ஏதுமில்லை 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மறவன்புலவும்  சரி சுமத்திரனும் சரி இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்கள் யாழில் சாதிய  சமய வேறுபாடுகளை உருவாக்கி பிளவுபட  வைப்பதே ஒரே நோக்கம் இருவருக்கும் .

மறவன்புலவு முதுகெலும்பு இருந்தால் மன்னாரில் வளைவு உடைக்கப்படும்போது அல்லது கிழக்கில் சைவசமய தலம்கள் பிக்குகளால் உடைக்கப்படும்போது அங்கு போய்  களத்தில்  நின்று இருக்கணும் .

சுமத்திரன் உண்மையான கிருஸ்த்தவனாக இருந்தால் இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார்  நவாலி தேவாலய படுகொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை அவரின் மனைவியின் பெயரில் மூன்று இலட்ச்சம் பணமாக வெளிநாட்டு  அல்லோஉலோயா கூட்டம் ஒன்று மதம் பரப்புதல் சம்பந்தமாக மாதா மாதம் சம்பளமாக கொடுக்கின்றது இது பற்றி சுமத்திரன் வாயே திறப்பதில்லை அப்படி இல்லை என்று மறுப்பு கூட சொல்வதில்லை .வாய் திறந்தால்  உண்மையான கிருத்துவத்துக்கு பதில் சொல்லவேண்டி வரும் என்ற பயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன்

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

இப்படியானதொரு கருத்துடன் ஒதுங்கி போகலாம் என்று இருந்தன்  ஆனால் புது ஐடிகளில் தம்பிமார் யாழில் மறுபடியும் கம்பு சுத்துகின்றனர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை பாவம் அவர்களும் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்தது போல் பழைய துரோகங்கள் தான் எஜமானர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு உள்ளது உண்மைகள் சுடும் இம்முறை சம் சும்  க்கு முக்கிய எதிர்பாளர்களே 

• அரசியல் கைதிகளின் பிரச்சனை
• காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை
• இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றப் பிரச்சனை. இவைகள் தான் அவை அவர்கள் போகுமிடம் எல்லாம் தொடர்ந்தே வரும் என்பதை இலகுவாக மறந்து விடுகின்றனர் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:
17 hours ago, nunavilan said:

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன்

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

சுமந்திரனை வெல்ல வைக்கத் தான் இந்த நாடகமோ தெரியலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3Maha_Uddhav_Thackeray_lauds.jpg

உத்தவ் தாக்ரேக்கு உதவியாளர் தேவையாம் .. குடியுரிமைய மாற்றி மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பி வையுங்கப்பா..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனை வெல்ல வைக்கத் தான் இந்த நாடகமோ தெரியலை.

 வென்றுவிட்டு போகட்டும். தோல்வியடைந்தால் சைவர்கள் வாக்களிக்காத்தால் தோற்றேன் என்றொரு வாக்கியம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

 வென்றுவிட்டு போகட்டும். தோல்வியடைந்தால் சைவர்கள் வாக்களிக்காத்தால் தோற்றேன் என்றொரு வாக்கியம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உண்மை, ஏற்கனவே பல பிரச்சனைகள் அதற்குள் மத ரீதியான பிரிவு என்பது வேண்டவே வேண்டாம்.

Link to comment
Share on other sites

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மை, ஏற்கனவே பல பிரச்சனைகள் அதற்குள் மத ரீதியான பிரிவு என்பது வேண்டவே வேண்டாம்.

ஈழத்தமிழ் அரசியல் என்றுமே சாதி மத பேதங்களை கடந்து தூய அரசியலாகத்தான் இருந்தது
வாக்குக்காக சமயத்தை என்றுமே அரசியலோடு கலக்கக்கூடாது.அது கலவரத்தில் தான் முடியும்.சச்சிதானந்தம் இலங்கை அரசியல் பிரச்சனைக்கு மதத்தை கையில் எடுப்பாரேயானால் நாட்டை விட்டு துரத்துவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
மதங்கள் வழிபாட்டுக்கு மட்டுமே. மோட்டு பிக்குகளை மாதிரி நாமும் இருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, zuma said:

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

சரி நீங்கள்  எல்லாம் உத்தமர் இதே தமிழரசு கட்சியை சேர்ந்த அப்போது நாட்டில் மக்களோடு மக்களாக இருந்தவர்கள்தான் இந்த ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம். அப்போதைய டெலோ பொபி யாட்க்களால்  போட்டுத்தள்ளப்பட்டனர் உங்கள் இப்போதைய தலைவர்கள் இந்தியாவுடனோ அல்லது ரோவுடனே சங்காத்தம் எதுவும் இல்லையென்றால் .இன்னை  வரைக்கும்  சம்பந்தன் கூட இந்த கொலைகளை கண்டிக்கவில்லை ஏன் ?

அடுத்தது விளங்கா  சிங்களகுன்சு சுமத்திரன் அல்பிரட் துரையப்பாவுக்கு இரங்கல் அறிக்கை விடும் ஆள் அவரின் சொந்த கட்சியை சேர்ந்த இந்த மூத்த தலைவர்களுக்கு இரங்கிறார்  இல்லையே ஏன் ?

கேட்டு சொல்லுங்க உங்களுக்கு புரியும் அப்போது யார் றோவின் ஆள் என்று .

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

முதலில் அது என்ன இந்து , சைவம் என்று கூறவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டனத்திற்கரிய கருத்து. தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுப்பதில் கைக்கூலிகள் எல்லாப்பக்கங்களிலிருந்தும்  ஏவுகணைகளை ஏவுகின்றார்கள்.  இது ஆபத்தானது. தமிழர்களாக மட்டுமே சிந்திக்கும் வரைதான் ஒருபலம் வரும். அதனைச் சிதைப்பதற்கு யாருடைய நிகழ்ச்சிநிரலோடு மதவாதக் கூச்சல் போடுகிறார். முதலில் இந்தக் காவிகளைக் குமுகாயத்திலிருந்து களைய வேண்டும்.  அரசியற்கட்சிகள் மெளனம் சாதிப்பது அநாகரிகமானது. கொள்கை முரண் விமர்சனங்கள் வேறு. மதவாதம் நாற்றமடிக்கும் சேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

கனவு காண்பது உங்கள் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது ஆனால் யதார்த்தம் என்றது  உண்மையில் சுடும் . யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்ப்பு யாழ் புத்திஜீவிகள் அமைப்பு எதிர்ப்பு

சொந்தக் கட்சிக்குள் மகிளிர் அணி எதிர்ப்பு
சொந்தக் கட்சியின் சக வேட்பாளர்களே எதிர்ப்பு
இவ்வாறு வெளியே, உள்ளே, எங்கும், எதிலும் எதிர்ப்பு சந்திக்கும் ஒரே வேட்பாளராக சுமந்திரன் இருக்கிறார்.
இத்தனைக்கும் பிறகும் அவர்  அமோக வெற்றி பெறுவாரா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 12:12, nunavilan said:

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

 

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

முதலில் அது என்ன இந்து , சைவம் என்று கூறவும். 

 

இந்து = சைவம்,சாக்தம்,வைணவம் ,கௌமாரம், சாய் பாபா பக்தர்கள், அம்மா பக்தர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

2009 க்கு பின்னர் வளர்ந்து விட்டார்களாம். இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரு வகுப்பினை வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின்னர் வளர்ந்து விட்டார்களாம். இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரு வகுப்பினை வைப்பார்கள்.

அவரவர் வளர்ந்து  விட்டார்கள்

எதையெல்லாம் வளர்க்கணுமோ

அவை  தவிர்த்து

ஊழலை

லஞ்சத்தை

கப்பத்தை

பொய்யான  வாக்குறுதியை....

எப்படி  இருந்த தேசம்????

3 minutes ago, Kapithan said:

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

 

நல்ல விதைகள் காலம் எடுக்கும்

எல்லாம் முளைக்காது

ஆனால்  நச்சு விதைகள் ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

மாவு புளிப்பதற்கு ஒரு துளி மதுவமே சேர்க்கப்படுகிறது, முழு மாவையும் புளிக்கச் செய்து விடுகிறதே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

இந்து = சைவம்,சாக்தம்,வைணவம் ,கௌமாரம், சாய் பாபா பக்தர்கள், அம்மா பக்தர்கள்.

அப்போ குண்டலினி எழுப்பிய எங்க தல நித்தி(குஜிலி)யானந்தா...?
இந்து மத லிஸ்டிலேயே இல்லையா  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.