Jump to content

ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா?

spacer.png

 

ராஜன் குறை

ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மனித சிந்தனையின் சாத்தியங்கள்தான். வெகுகாலமாகவே இரண்டும் முரணுற்று விவாதித்து வந்துள்ளன. நல்ல பண்பட்ட சமூகத்தில் இரு தரப்பும் தொடர்ந்து இயங்குவதும், அவை தத்தமது பார்வைகளைத் தடையின்றி வெளிப்படுத்துவதும் அவசியம். அரசியல் நிர்ணய சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் தங்கள் மனத்துக்கு ஒப்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமையும் அடக்கம். அப்படி மத நம்பிக்கைகளை பின்பற்றாமல் அவற்றை கேள்விக்கு உட்படுத்துவதும், நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதும் அந்த உரிமையின் ஒரு பகுதிதான். அதாவது நாத்திகமும் ஒரு நம்பிக்கைதான். ஆத்திகம், நாத்திகம் ஆகிய இரண்டின் அடிப்படைகளையும் புரிந்துகொள்வது அவசியம். ஒரு விதத்தில் இரண்டையும் நாம் தொடர்ந்து பரிசீலிப்பதும் அவசியம். சிந்தனை வளம் பெற இந்த அடிப்படையான முரண் இன்றியமையாதது எனலாம்.

தெய்வம், இறைவன், கடவுள் என்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் மூல முதல் காரணமான சக்தியைப் பற்றிய கற்பிதம், கோட்பாடு, கற்பனைகள் போன்றவை மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவை என்றால் மிகையாகாது. அவை பெரியதொரு ஆறுதலை, ஆற்றலை மனிதர்களுக்கு வழங்கியுள்ளன. காலங்காலமாக மக்கள் தொகுதிகள் தங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ள, தங்களைத் தகவமைத்துக்கொள்ள, ஒருவரோடு ஒருவர் அனுசரித்து வாழ, அறம் பேண இறை நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஏன் இறை நம்பிக்கை இன்றும் செல்வாக்குடன் விளங்குகிறது என்பதற்கு முக்கிய காரணம் அடிப்படையான பல அம்சங்களை இன்னமும் விளக்க முடியாமல் இருப்பதுதான். பிரபஞ்சம் எல்லையற்று விரிகிறது என்பதன் பொருள் என்ன? அது எதிலிருந்து எப்படித் தோன்றியது? அதைவிட பெரிய பிரச்சினை ஏன் தோன்றியது? இப்படியெல்லாம் கேட்க சாத்தியமே தவிர, இதற்கு விளக்கம் எதுவும் கிடையாது. அதைப்போலவே ஜனனம், மரணம் உள்ளிட்ட பலவற்றை முழுவதும் காரண காரியத் தொடர்ச்சியில் விளக்க முடிவதில்லை. இயற்கை திடீரென ஒரு நுண்கிருமியை உருவாக்கி மானுட ஏற்பாடுகளைக் கலங்கடிக்கிறது. பொதுவாக தற்செயல் என்பதை ஏற்பது கடினமாக இருப்பதால் இறை நம்பிக்கை அல்லது கோட்பாடு செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது.

நாத்திகத்தின் தேவை என்ன?

சரி, நம்மால் விளக்க முடியாத இயற்கையின் தற்செயல் நிகழ்வுகளை கடவுளின் திருவிளையாடல் என்று சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்வது நல்லதுதானே என்று தோன்றும். ஆனால், அது மானுடரை அவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கச் செய்துவிடும் அபாயம் தோன்றுகிறது. சமூகத்தில் பலர் செல்வச் செழிப்புடன் இருக்கும்போது சிலர் பட்டினி கிடக்கிறார்களே என்று கேட்டால் அது இறைவன் செயல், தலையெழுத்து என்று பதில் சொல்லும்போது மனிதனின் செயலுக்கு இறைவனைப் பொறுப்பாக்கும் போக்கு தொடங்குகிறது. “பிறவிப்பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவனடி சேராதார்” என்று கூறிய வள்ளுவர்தான் “இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் கெடுக இவ்வுலகியற்றியான்” என்றும் கூறினார்.

இயற்கையின் பிரமாண்டமான புதிர்த்தன்மையை எதிர்கொள்ள இறைவன் என்ற கோட்பாடும் நம்பிக்கையும் மனிதர்களுக்கு உதவலாம். ஆனால், அதே கோட்பாட்டை, நம்பிக்கையை தங்களுடைய செயல்களை விளக்கவும் மனிதர்கள் பயன்படுத்தும்போது இறை நம்பிக்கை அறமற்றதாக, அநியாயமானதாக மாறுகிறது. பெரும்பாலும் மத அமைப்புகள், பூசாரி வர்க்கம் போன்றவை மானுட சமூகங்களில் ஆதிக்க மையங்களைக் கட்டமைக்க கடவுள் என்ற கற்பிதத்தைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளைக் கடவுள் பெயரால் நியாயப்படுத்துகின்றன.

இந்தச் சூழ்நிலை கடவுள் கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கும் தேவையை உருவாக்குகிறது. நம்பிக்கைகள் திறந்த சிந்தனைகளாக இல்லாமல் மூடுண்டு, மூட நம்பிக்கைகளாக, கேள்விகளை அனுமதிக்காத கருத்துகளாக மாறும்போது அந்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து மீண்டும் சிந்தனையை சுதந்திரமானதாக மாற்ற நாத்திகம் தேவைப்படுகிறது.

இந்து மதம் தொகுக்கப்பட்டதில் உருவான பிரச்சினைகள்

இந்து மதத்தைச் சிறந்த மதமாக பேசுபவர்கள்கூட அது ஒரு தொகுக்கப்பட்ட மதம் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அதாவது பல்வேறு தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை கலந்துதான் இந்து மதம் என்ற ஒற்றை பெயரில் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விதம் தொகுத்தபோது பார்ப்பனர்கள் என்ற பூசாரி சமூகத்தை மையப்படுத்தி அது தொகுக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக அவர்கள் கூறிய சாதிபடிநிலை அமைப்பு, தீண்டாமை போன்ற சமூக நடைமுறைகளை சாத்திரங்கள் சார்ந்ததாக, மத நம்பிக்கை சார்ந்ததாக மாற்றிவிடுவது நிகழ்ந்தது. அதனால் இந்து கோயில்கள் என்று சொல்லப்பட்டவற்றின் உள்ளேயே பல இந்து சாதி மக்களை அனுமதிக்க மறுக்கும் நிலை இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டில் சமத்துவ உணர்வு ஏற்பட்டபோதுதான் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்தி தங்கள் மதத்தின் கோயில்களுக்குள் நுழையும் உரிமையையே இந்து மதத்தின் பல சாதிகள் பெற முடிந்தது.

இப்படியான இந்து மதத்தின் சாதி ஏற்றத்தாழ்வு காலங்காலமாக பல சீரமைப்பாளர்களை, புரட்சியாளர்களை உருவாக்கியது. அவர்கள் மத நடைமுறைகளை தொடர்ந்து மாற்றியமைக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஏற்றத்தாழ்வுகளும், விலக்கல்களும் தொடரத்தான் செய்தன. இத்தகைய போக்குகள் இறை மறுப்புக்கும், நாத்திகத்துக்கும் காரணமாயின.

எனவே மற்ற சமூகங்கள் எல்லாவற்றையும் விட இந்து சமூகத்தில் நாத்திகத்துக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது எனலாம். நாத்திகம் தொடர்ந்து நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பது என்பது, சுய சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை, செயலின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும் அவசியமானதாக ஆகிறது.

 

பெரியாரை ஏற்றுக்கொண்ட ஆத்திகர்கள்

தமிழகத்தில் பெரியார் ஈ.வே.ராமசாமி தன்னுடைய சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் கடவுள் மறுப்புக்கும் முக்கிய இடமளித்தார். அவருடைய பிரதான நோக்கம் கடவுள் மறுப்பல்ல என்றாலும், சாதி வேற்றுமையை வலியுறுத்தும் சாத்திரங்கள், சடங்குகள் மதம் சார்ந்து இருந்ததால் அவர் தவிர்க்க இயலாமல் பகுத்தறிவு சார்ந்து கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தினார்.

பெரியாரின் கேள்விகளைப் புரிந்துகொண்ட மக்கள், முற்றிலும் கடவுள் நம்பிக்கையைத் துறக்கவில்லை என்றாலும், அவர் கேட்கும் கேள்விகளின் நியாயத்தைப் புரிந்துகொண்டனர். தங்கள் செயல்களுக்கான எல்லா பழியையும் கடவுள் மேல் போடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டனர். தாங்கள் ஏற்படுத்தும் அநீதியான சமூக அமைப்பைக் கடவுள் பெயரால் நியாயப்படுத்தக் கூடாது என்பதை பெரியாரின் செய்தியாகப் புரிந்துகொண்டனர்.

கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்கள் பலரால் பெரியார் சமூக சீர்திருத்தவாதியாக, சமூகத் தொண்டராக மதிக்கப்பட்டார். அவரும் ஆத்திகர்களுடன் தனிப்பட்ட முறையில் சுமுகமாகவே பழகினார். குன்றக்குடி அடிகளார் போன்ற துறவிகளுடன் பொது மேடையில் தோன்றினார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் பொதுவான சமூக நோக்கத்துக்காக, சமூக நீதிக்காக இணைந்து குரல் கொடுக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.

பெரியாருக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே சித்தர்கள் எனப்பட்ட சைவ மத பெரியோர்கள் சாதி வேற்றுமை, சிலை வழிபாடு, சடங்குகள் போன்றவற்றை ஆன்மிக தளத்திலிருந்தே கண்டித்து உள்ளனர். “நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்?” என்ற சித்தர் கேள்வி அனைவரும் அறிந்தது. இது போன்ற பல எதிர் மரபுகளின் இருப்பை புரிந்துகொள்ளும் ஆற்றல் மக்களுக்கு எப்போதும் இருந்து வந்துள்ளது.

மனம் புண்படுதல் தேவையா?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சமூகத்தில் அறுதிப் பெரும்பான்மையாக உள்ளார்கள். நாத்திகர்கள் சிறுபான்மையினர்தான். ஆத்திகர்களின் செயல்கள் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக நாத்திகர்கள் கூற முடியாது. ஆத்திகர்கள் ஊரையெல்லாம் கூட்டி மிகப்பெரிய திருவிழாக்களை நடத்துகிறார்கள். ஒலிபெருக்கியில் பாடல்களைப் போடுகிறார்கள். தெருவெல்லாம் ஊர்வலம் போகிறார்கள். எனக்கு இறை நம்பிக்கை கிடையாது; பொது இடங்களில் இத்தகைய செயல்கள் என் மனத்தைப் புண்படுத்துகிறது என்று ஒரு நாத்திகவாதி புகார் செய்ய முடியுமா? ஆத்திகர்களின் நம்பிக்கையை நாத்திகர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

நாத்திகர்கள் அவர்கள் அவர்கள் கருத்துகளைப் பதிவேற்றும் தளங்களில் இறை நம்பிக்கையின் வடிவங்களை கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அது அவர்கள் கொள்கை, கோட்பாடு சார்ந்த செயல்பாடு. அவர்கள் ஆத்திகர்களைப் போல ஊரெல்லாம் ஒலிபெருக்கி கட்டி இறை நிந்தனை செய்வதில்லை. அவர்கள் ஒரு பத்திரிகையில், ஒரு யூடியூப் சேனல் எனப்படும் இணைய வெளி சேனலில் சில கருத்துகளை, இறை நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனைகளைப் பதிவு செய்கிறார்கள். ஆத்திகர்கள் அவர்கள் உரிமையை மதிக்க வேண்டும். அதுவே முதிர்ச்சி. அவர்கள் வலைதளத்தை, யூடியூப் சேனலை ஆத்திகர்கள் பார்க்க வேண்டிய தேவை இல்லையே.

இவ்வாறான அணுகுமுறைக்குப் பதிலாக ஒரு மக்களாட்சி அரசு கருப்பர் கூட்டம் என்ற அந்த யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. கந்த சஷ்டி கவசம் என்ற ஒரு வழிபாட்டுப் பாடலை கேலியாகக் கேள்விக்கு உள்ளாக்கியவரை, அவர் கூட்டாளிகளைக் கைது செய்துள்ளது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. நாளை நாத்திகர்கள் பெரும்பான்மையானால் ஆத்திகர்களைக் கைது செய்யலாமா? கோயில்களை பூட்டி விடலாமா? அது பெரும்பான்மைவாதம் ஆகிவிடுமல்லவா? எப்படி அனைவருக்கும் அவரவர் மனத்துக்கு உகந்தபடி வழிபடும் உரிமை இருக்கிறதோ, அதேபோல அந்த வழிபாட்டு முறைகளைக் கேள்வி கேட்கவும் உரிமை இருக்கிறது.

மக்களாட்சி நெறிமுறைகளிலும், முதிர்ந்த சமூக உறவுகளிலும் நம்பிக்கையுள்ள ஆத்திகர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள் கருப்பர் கூட்டத்தின் மீது அரசு எடுத்துள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வர வேண்டும். எந்தச் சூழலிலும் பெரும்பான்மையானவர்களின் கொள்கை சிறுபான்மையினர் மாறுபடும் உரிமையை நசுக்கக் கூடாது. அது மெல்ல மெல்ல அனைவரது உரிமைகளையும் பறிப்பதற்கே வழி வகுக்கும். மாற்றுக் கருத்தால் நம் மனம் புண்படுகிறது என்ற கூற்று சகிப்பின்மைக்கே வழிவகுக்கும். சமூகத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும். புண்படாத மனங்களே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம்,

 

https://minnambalam.com/public/2020/07/27/8/hindu-religion-atheists-periyar-hope-of-god

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.