Jump to content

சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு!

spacer.png

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் பொதுத் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க பத்து நாட்கள் கெடு விதித்துள்ளது டிஜிபி அலுவலகம்.

சமீபநாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை நிலைநாட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார். அப்போது, சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறதா என்று கேட்டுள்ளார். கொரோனா காலத்தில் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடுவது சிரமமாக இருக்கும். அதனால் தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு அரசு செலவில் கூண்டு அமைத்துவிடலாம் என்று ஆலோசனைகளை கூறியுள்ளார்கள் காவல் துறை அதிகாரிகள். இதை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக உளவுத் துறை அதிகாரிகள் மூலமாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் வைத்துள்ள சிலைகள் பட்டியல்களைச் சேகரித்து டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட, மாநகராட்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், ‘தங்கள் மாவட்டம், மாநகரில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் இரும்புக் கம்பியால் பத்து நாட்களுக்குள் கூண்டுகள் அமைக்க வேண்டு. பத்து நாட்களுக்குள் இதை முடிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிலைகளுக்கு இரும்பு கம்பியால் சிறையமைக்க அளவு எடுத்து வருகிறார்கள்.

 

https://minnambalam.com/politics/2020/07/30/11/statues-tamilnadu-will-got-security-edapadi-palanisamy-police

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு அரசு செலவில் கூண்டு அமைத்துவிடலாம் என்று ஆலோசனைகளை கூறியுள்ளார்கள் காவல் துறை அதிகாரிகள். இதை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அட ச்சே.. வேலை மினக்கெட்டு இன்னடா கைபுள்ளக்கு வீரம் வந்துடுச்சு .. அதென்ன இரும்பு முடிவு..? படிச்சு வந்தன் பாரு ..

IMG-20200730-124127.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட ச்சே.. வேலை மினக்கெட்டு இன்னடா கைபுள்ளக்கு வீரம் வந்துடுச்சு .. அதென்ன இரும்பு முடிவு..? படிச்சு வந்தன் பாரு ..

IMG-20200730-124127.jpg

 

எனக்கென்னவோ பழைய படம் ஒன்றில் என்.எஸ்.கே வீட்டுக்கு  ஓடு  மாத்தப் போவார், அதுக்கு முன் அவரது நண்பர் அந்த வீட்டு ஓட்டை  கல்லால் எறிந்து உடைத்து வைப்பார். அதுதான் நினைவுக்கு வருது.....!   😎

இரும்பு கம்பி கான்ராக்ட்டில் எவ்வளவு பணம் புழங்கும்.....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைப்பதில் சிக்கல்!

spacer.png

 

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்குப் பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், பசும்பொன் முத்துராமலிங்கம், திருவள்ளுவர், விவேகானந்தர், மூப்பனார், கலைஞர் போன்ற தலைவர்களின் சிலைகள், அரசு அனுமதி பெற்றும், அனுமதியில்லாமலும், குக்கிராமங்கள் முதல் மாநகராட்சிகள் வரையில் சொந்த இடங்களிலும், அரசு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருசிலர் சிலையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். பெரியார் சிலையைச் சேதம் செய்வது, செருப்பு மாலை அணிவிப்பது, எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துணியை அணிவிப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்தில் சிலர் இவ்வாறு செயல்படுவதால், சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 5,810 சிலைகள் உள்ளது. அதில் 1,915 சிலைகளுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதால் காவல்துறையினருக்கு மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. போலீஸ் பற்றாக்குறையால், முதல்வர் ஆலோசனைபடி சிலைகளுக்கு அரசு செலவில் இரும்பு கம்பியால் கூண்டுகள் அமைக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து மின்னம்பலத்தில், சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முதல்வர் முடிவை அமல்படுத்தி, சிலைகளுக்கு இரும்பு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க அளவெடுத்து வருவதை பார்த்த சில கட்சியினர், கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், முக்குலத்தோர் சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது கூண்டுகள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

https://minnambalam.com/public/2020/08/03/37/Problem-in-setting-up-security-cage-for-statues-of-leaders

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.